Friday 6 December 2019

வள்ளி முருகன் திருக்கல்யாணம் --பழமுதிர்சோலையில் செய்தி மடல் ..1

                                                                                      

வள்ளி முருகன் திருக்கல்யாணம் --பழமுதிர்சோலையில்  செய்தி மடல் ..1

                                                                                                     

அன்பர் அய்யப்பன் அவர்களிடமிருந்து வந்துள்ள செய்தி மடல் 



"நமது குருஜியின் அருளாசியாலும் செந்திலாண்டவனின் பெருங்கருணையினாலும் அன்று திருச்செந்தூரில் ஆரம்பித்து, வரிசையாக , அடுத்தடுத்து ஒவ்வொரு ஆண்டுகளிலும் திருத்தணியிலும், சுவாமிமலையிலும், திருப்பரங்குன்றத்திலும் வள்ளி கல்யாணத்தை பாரோர் போற்றும் வண்ணம் அவன் சிறப்பாக நடத்திக் கொண்டான். நீங்கள்மனமுவந்துவழங்கியபொருளுதவியால் தான் இவ்வளவும் இனிதே நடந்திருக்கிறது. ந்த வரிசையை நிறைவு செய்யும் வகையில் இந்த வருடம் சோலை மலையில்,  அவன் சித்தப்படி , 29-12-2019 ஞாயிற்றுக் கிழமை வள்ளி  கல்யாணம் நடக்க இருப்பதை நாம் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறோம். 

அவன் கல்யாணத்திற்காக அதி நவீன குளிர் சாதன வசதியுடன் கூடிய மிகப்பெரிய  கல்யாண மண்டபத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளான். அனைத்து ஏற்பாடுகளுமே செவ்வனே நடந்து வருகின்றன.  இந்த கல்யாணத்திற்கு வழக்கத்தை விட அதிகமான செலவாகும் . நீங்கள் மனமுவந்து செந்திலாண்டவனை மனதில் தியானித்து அவன் உணர்த்திய வண்ணம் பொருளுதவி செய்ய பிரார்த்திக்கிறேன். 

இத்துடன் வழக்கம் போல் நாம் தயாரித்துள்ள கூகில் சீட் இணைத்துள்ளேன். நீங்கள் விரும்பும் பொருளை கூகில் பக்கத்தில் எழுதி,  பொருளை அன்பர் கோபியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

அன்பர் கோபியின் வங்கி விபரம்

P.C.GOPI
STATE BANK OF INDIA 
KALPAKKAM BRANCH
SB/AC. # 10912124541
IFS # SBIN0002219

GOOGLE SHEET

https://docs.google.com/spreadsheets/d/144mqsYfAZkdRVkN3zbYuk1Z2v0wqy3zTQ6o4rEqzyYc/edit#gid=0

முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்"
குருஜி தலைமையில் பழநி  திருத்தலத்தில் விமரிசையாக நடை பெற்ற வள்ளி கல்யாண வைபவத்தை தொடர்ந்து திருச்செந்தூர்,திருத்தணிகை,சுவாமிமலை,திருப்பரங்குன்றம் அறுபடை தலங்களில் அமோகமாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு  "நிறைவு செய்யும் வகையில்"என்ற  பழமுதிர்சோலையில் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார் 

ஆனால் நாம் "நிறைவாக " என்ற சொல்லுக்கு அறுபடை தலங்களில் நிறைவு என்றே கருதுகிறோம்.மற்றும் "மன நிறைவு" என்றும் பொருள் கொள்ளலாம்.நம் பெருமானின் வைபவங்கள்தொடர்ந்துகொண்டேதான்இருக்கும்.
அவ்வகையில் அடுத்து பஞ்சபூத தலங்களில் தொடரவேண்டும் என்ற விண்ணப்பத்தை பெருமானின் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறோம்.

நம் மணி சார் சென்ற ஆண்டு திருப்பரங்குன்றம் வள்ளிகல்யாண வைபத்தில் அழைப்பு விடுத்தார்.சமீபத்தில் நிகழ்ந்த மஹாகந்த சஷ்டி விழாவிலும் மறு  அழைப்பு விடுத்துள்ளார்.செயலில் இறங்க வேண்டியவர்கள் அன்பர்கள்தாம்.

வழக்கம்போல் குடும்ப சகிதமாக.குறிப்பாக தங்கள் அடுத்த வாரிசுகளுடன் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.மற்றும் தங்கள் காணிக்கை ,தங்கள் குடும்பத்தில் கலந்து கொள்ளும் அன்பர்களின் எண்ணிக்கை விபரங்களை முன் கூட்டியே கூகிள் சீட் மூலமாக பதிவு செய்ய வேண்டுகிறோம்.இது விழா அமைப்பாளர்களுக்கு நன்கு திட்டமிட்டு செவ்வனே செயல்பட பேருதவியாக இருக்கும்.



                                                                                  அழைப்பிதழ் 
                                                                                                       

பழநி வள்ளி கல்யாண வைபவத்தில் குருஜியின் அருளுரை 


                                                                                                                               

                                                                                                               

வள்ளி கல்யாண பாடல்கள் (LYRICS)

https://drive.google.com/open?id=1sm-d78-OvkbwEbizjyzTUL6uXvlvSDDY

வள்ளி கல்யாண பாடல்கள் காணொளியில் 

 https://www.youtube.com/watch?v=tmYpnWjdFY4



                                                                                         முருகா சரணம்                                                                                                                                                                                                   

Sunday 1 December 2019

அபிராமி அந்தாதி - 44


                                                அபிராமி அந்தாதி - 44


                                                                                       



அபிராமி அந்தாதி - 44
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே:

அன்பரின் விளக்கவுரை 
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் - 
நமக்குத் தாயான இவளே எங்கள் சங்கரனாரின் மனை மங்கலம் - இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவள்.
பரமசிவத்துக்கு வீடு என்பது அவருடைய மனதே. அதில் அம்பாள் வீற்றிருந்து அவரைத் தொழில்படுத்துகிறாள். சங்கரன் என்ற சொல்லுக்கு ஹிதத்தைச் செய்கிறவன்.
மகிழ்ச்சியைக் கொடுப்பவன் என்று அர்த்தம்.
அபிராமியும் தவமிருந்து நல்ல கணவனை வரித்துப் பெருமை கொண்டாள். அவள் " மாதவள் " - இத் தொடரைப் பதிமூன்றாம் பாடலில் பயன்படுத்தியுள்ளார். பார்வதியாய் இருந்தபோதும், காமாட்சியாய் இருந்தபோதும், தாட்சாயிணியாய் வாழ்ந்த போதும் அவள் சிவனை அடையத் தவம் செய்தாள். எனவே சிறப்பாகத் தவளே எனப்பட்டாள். " அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண் பிள்ளை " . ( 1109) " ஆருயிர் ஆயும் அருந்தவப் பெண் பிள்ளை" ( 1110) என்றெல்லாம் திருமூலர் சக்தி செய்த தவங்களாகக் குறிப்பிடுகிறார்.  
சங்கரனாரது மனையானது ' மங்கலம் ' பெற்றிடவும்,மாட்சி உற்றிடவும், அவர் மனையில் பானைபிடித்தவள் பாக்கியசாலியாக இருத்தல் வேண்டும். அதற்குப் பார்வதி அன்னையைத் தவிர வேறு யார்க்கும் உரிமையும்கிடையாது; தகுதியும் கிடையாது. ஏனெனில் பரமேசுவரனைத் திருமணம் செய்து கொள்ளப் பார்வதிதேவி தவம் செய்தாள். ' அவரே கணவராக வேண்டும் ' என்று தனது ஏழாவது வயதில் தவக்கோலம் மேற்கொண்டு, அவரைப் பெறத்தவம் இயற்றித் தவள் என்ற சிறப்பினைப் பெற்றாள்.   
அம்பிகை உயர் தவம் செய்து, " மாதவள் " என்ற மாண்பினைப் பெற்று, சங்கரனாரின் மனைமங்கலமானாள். இந்த மனைமங்கலம் எவ்வாறு மாட்சிபெற்றுச் சிறப்புடன் நடக்கிறது ? அவர் ஈட்டி வந்ததைக் கொண்டு, தனது தவலிமையினால் எல்லோர்க்கும் உணவளிக்கின்ற தகைமை கொண்டவளே காமாட்சி அன்னை. " ஐயன் அளந்தபடி இருநாழிகொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும் அன்னை " என்று ஐம்பத்தேழாவது பாடலிலே அம்பிகையின் மனைமங்கல மாட்சியை அபிராமிபட்டர் சொல்லப்போகிறார். வீட்டுக்குள்ளே இருப்பவர்க்கு மட்டும் உணவளிக்கும் எல்லைகட்டிய வாழ்வு மட்டும் ஒரு பெண்ணுக்கு உகந்ததாகாது. அந்த எல்லை தாண்டி அவள் அறங்கள் புரிய வேண்டும். ஒன்றல்ல ; இரண்டல்ல - முப்பத்திரண்டு அறங்களைப் புரியவேண்டும். அவளே மனைமாட்சியினள்.காஞ்சிவாழ் காமாட்சியை முப்பத்திரண்டு அறம்புரியும் அன்னையாகச் சொல்வர். 

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் -
அவளே ஆதிபராசக்தி என்னும் உருவில் சங்கரனாருக்கு அன்னையும் ஆயினள்.
தவம் இயற்றிச் சிவனைத் திருமணம் கொண்டவள், இவருக்கு அன்னையும் ஆகின்றாள். குடும்பத்தில், வாழ்வின் ஒரு கட்டத்தில், மனைவியானவள் மக்களைப் பெற்று அவர்களைப் பராமரிக்கும் அன்னையாவது போல், அவள் கணவனையும் குழந்தையாக எண்ணிச் சீராட்டுகின்ற தன்மையாய், கணவனும் குழந்தையாக மாறி, அவளைத் தாயாக்குகின்றான். மனைக்கிழத்தியும் கணவனைக் குழந்தையாகப் போற்றும் தாயாகின்றாள் - என்பது உலகியல் உண்மை.  
திருமூலர் சித்தரில் தலையானவர். அவர்,
 "சக்தியானவள்.
வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் தாரமும் ஆமே. ( திருமந்திரம். 1178)  "


ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் - 
ஆதலால் இவளே கடவுளர் எல்லாருக்கும் மேலான தலைவியானவள்
அப்பைய தீஷீதர் தனது ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதியில்
" யத் பூஜநஸ்துதி நமஸ்க்ருதி பி.ப்பவந்தி
ப்ரீதா : பிதாமஹரமேச ஹராஸ்த்ர யோபி :
தேஷாமபி ஸ்வககுணைர் தததீம் வபூம்ஷி
தாமீச்வரஸ்ய தருணீம் சரணம் பரபத்யே - என்கிறார்.
("அம்பிகையை பூஜிப்பதையும், ஸ்தோத்தரிப்பதையும், மீண்டும்,மீண்டும் நமஸ்காரம் செய்வதையும் கண்டு, பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் மிகவும் ப்ரீதி அடைகிறார்கள். பிரும்மாதி தேவர்களுக்கு அம்பிகையே சத்துவம்,தமஸ், ரஜஸ் ஆகிய தனது முக்கோணங்களால் சரீரங்களை அளித்தாள். )
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே -
 இனி மேல் வேறு தெய்வங்களைத் தொழுது தொண்டு செய்து அயர்சி அடையமாட்டேன்.
நாமும் அந்த ஆதிபராசக்தி தேவியை, சங்கரனாரின் மனை மங்கலமாக திகழும் அபிராமியை, உலகோர் அனைவருக்கும் அமுது செய்விக்கும் அன்னையின் பாதங்களில் சரணாகதி அடைவோமா!!
அபிராமி சரணம்!!
அபிராமி சரணம்!!

Tuesday 19 November 2019

சுப்ரமண்ய புஜங்கம்.... 30



                                                  சுப்ரமண்ய புஜங்கம்....  30



जनित्री पिता च स्वपुत्रापराधं

सहेते न किं देवसेनाधिनाथ ।

अहं चातिबालो भवान् लोकतातः

क्षमस्वापराधं समस्तं महेश ||

ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராத

ம்ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத |அஹம் சாதிபாலோ வான் லோதாத: க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச

இந்த ஸ்லோகத்தில் முருகனை தன்னுடைய அப்பா அம்மாவாக நினைச்சு ஆச்சார்யாள் சரணாகதி பன்றார்.
.
‘ஹே தேவசேனாதி நாதா’தேவர்களுடைய சேனைக்கு அதிபதியே.

ஜநித்ரீ’ – அம்மாவோ,

 ‘பிதாச’ – அப்பாவோ,

 ‘ஸ்வபுத்ராபராதம்’ – தன் குழந்தைகள் செய்த அபராதத்தை , 

‘ஸஹேதே ந கிம்’ – பொறுத்துக்கிறது இல்லையா? 

 ‘ததா’ – அப்படியே ,

 ‘அஹம் சாதிபால:’ – நானோ ரொம்ப சின்னக் குழந்தை,

 ‘பவான் லோக தாத:’ – நீங்கள் உலகத்துக்கே அப்பா ,

‘ஹே மஹேச’ – பரமேஸ்வரா,

ஸமஸ்தம் அபராதம் க்ஷமஸ்வா’ – என்னுடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக் கொள்ளுங்கள் 

இந்த பரமேஸ்வரனும், பார்வதி தேவியும் ‘அம்மையும் அப்பனுமாக’ இருக்கா. அவா இரண்டு பேருமே ஆச்சார்யாளுக்கு இந்த முருகப் பெருமான் கிட்டேயே தெரியுறதுனால, ‘முருகப் பெருமானே! நீயே என்னுடைய அம்மை அப்பன் ‘ ன்னு சொல்லி, ‘உங்கிட்ட நான் வேண்டிக்கிறேன். என்னுடைய பிழைகளைப் பொறுத்து எனக்கு அநுக்கிரஹம் பண்ணு’ அப்படின்னு சொல்றார்.

பகவானை அம்மை அப்பனா பார்த்து அவா பண்ண அநுக்கிரஹத்த நினைக்கிறது நிறைய மகான்கள் பண்ணி இருக்கா.

 திருவாசகத்துல நிறைய அந்த மாதிரி பாடல்கள் வரும்.

"அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே! பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?"

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆயதேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!"

இராமலிங்க அடிகளார் இந்த மாதிரி ‘அம்மையே அப்பா’ன்னு பாடியிருக்கார். 

"தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்."

(திருவருட்பா: ‘அருட்ஜோதி நிலை’)

“தடித்தஓர் மகனைத் தந்தை 
ஈண்டடித்தால் தாயுடன் அணைப்பள் தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்பொடித் திருமேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னைஅடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப்பா இனி ஆற்றேன்.”(திருவருட்பா: ‘பிள்ளைச் சிறு விண்ணப்பம்’)
அருணகிரி நாதரும் கந்தர் அநுபூதியில,

"எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே."  என்று போற்றுகிறார்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ 

Friday 15 November 2019

அபிராமி அந்தாதி - 43




                                                      அபிராமி அந்தாதி - 43


                                                                      
அன்னையின் அழகினை ரொம்ப அருமையா வர்னனை பண்ணியிருக்கார் பட்டர். 
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே
அருஞ்சொற்பொருள்:
பரிபுரம்: சிலம்பு
சீறடி: சிறிய அடி
பொருப்பு: மலை (இங்கே மேரு மலை)
சிலை: வில்
குனித்தல்: வளைத்தல்
எரி: நெருப்பு  


பரிபுரச் சீறடி - சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளை உடையவளே;

நம்மை எல்லாம் பரிபாலனம் செய்யும் திருவடி அம்மையின் திருவடி. அவையும் சின்னஞ்சிறியவை. இதைத்தான், 'பரிபுரச் சீறடி' என்று குறித்தார் பட்டர்.  

உலகத்தைப் படைத்த அன்னையின் வடிவு மிகப்பெரிது.. ஆயினும் நம் போன்ற சிறியோர்களும் காணும் வண்ணம் அவள் அழகிய சிறு குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்..அன்னையை சிறு குழந்தை வடிவில் மனத்தில் எண்ணிப் பாருங்கள்!!
நம் அன்னையின் திருவடிகள் சிறியன: அத் திருவடிகளில் அவள், வேதமாகிய சிலம்புகளை அணிந்துள்ளாள். அவள் மெல்ல நடக்கையில், அவளது திருவடியின் சிலம்புகள் வேத நாதமாய் ஒலிக்கின்றன. பரிபுரச் சீறடி கொண்டவள் அவள்.
பரிபுரம் என்றால் சிலம்பு. முந்தைய பாடலின் முடிவில் பரி+புரை என்று பிரித்துப் பொருள் கொண்ட சொல், இங்கே பரிபுரம் என்ற தனிச்சொல்லாகச் சிலம்பு என்ற பொருளில் வருகிறது. காலில் சிலம்பணிந்தவள் என்று சக்தியை இறையிலக்கியங்களில் நிறைய வர்ணித்திருக்கிறார்கள். லலிதாசஹஸ்ர நாமத்தில் 'நவரத்தின மணியினாலான சலங்கை' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சௌந்தர்யலஹரியில், சக்தியின் சலங்கையொலியைப் பற்றிச் சுவையாகச் சொல்லியிருக்கிறார் சங்கரர். 'ஊடலில் தோற்றுச் சரணடைந்த சிவனின் தலையில் சக்தி தன் கால் விரல்களை விளையாட்டாக வைத்துத் தட்டும் பொழுது ஏற்படும் கிணுகிணுப்பான வெற்றி ஓசையில் எல்லாம் அடங்கி விடும்' என்ற அழகான சங்கரர் கற்பனையை,
வீரைக் கவிராஜர் 'இறையை வென்றனன் விழியை வென்றனன் என முழங்கிய குரல் எனாது அறைச் சிலம்பு எழும் அரவம் என்பதேன் அருண மங்கலக் கமலையே' என்று அருமையான தமிழில் சொல்லியிருக்கிறார்.
சிவனிடம், "ஐயா நீர் மலையை வளைத்து அம்பெய்தி முப்புர அரக்கரைக் கொல்லும் வலிமை படைத்தவர் என்பதெல்லாம் சரி, ஆனால் எம் தலைவியின் கால் சலங்கையொலி உம்மையும் அடக்கி விடுமே?" என்பது போல் தொனிக்கும் பட்டரின் உட்பொருள் இன்னும் சுவை.
 "பாசாங்குசை (பாசம்  அங்குசம் )
பாசத்தினால் தான் பிள்ளைகளை இணைத்துத் தன்னிடம் ஈர்த்து வைத்திருக்கிறாள். அத்துடன் தன் உள்ளத்து பாசத்தையும் கைவழி காட்டுகின்றாள். அங்குசம் ஆணவத்தை அடக்கும் கருவி. பாசம் கொண்ட தாய். தனது பிள்ளைகளின் ஆணவத்தினையும் அடக்க வல்லவள்; ஆவணத்தினை அடக்கியாக வேண்டும் என்ற கட்டுப்பாடு உடைய ள் அவள்.  
அன்னை அபிராமி பாசம் ( அல்லது ஆசை) என்னும் கயிற்றை தனது இடது பின்கையில் தாங்கியிருப்பது பாசத்தைக் காட்டும் பண்பு உடையவள் அன்னை என்று சொல்லுகிறது.
அங்குசம் என்பது யானையை அடக்க அதன் பாகன் பயன்படுத்தும் தொரட்டி. யானை மிகவும் பலசாலியானது. அதற்கு மதம் பிடித்தால் அடக்கப் பயன்படும் ஆயுதம் தொரட்டி. எல்லாவற்றிற்கும் மூலமாகிய மலம் ஆணவம். அதற்கு யானையை உவமையாகச் சொல்வது வழக்கம். அகங்காரம் என்னும் மதயானையை அடக்க நம்மால் இயலாது. அது அவள் அருளினால் தான் முடியும். இந்த மதயானையை அடக்கும் பாசாங்குசத்தை அவள் ஏந்தியிருப்பது இதற்கு அடையாளம்.
மேலும் காமத்தில் வசப்படுத்தும் மாயா சொரூபியும், அதனின்று நீக்கும் ஞானசொரூபியுமாக விளங்குகிறாள் அன்னை பிராமி. முதல் வேலை மன்மதனுக்கு. இரண்டாவது வேலை ஞானக்கொழுந்தனாகிய கணபதியின் மூலம் நடக்கிறது. இதனாலே தான் கணபதியின் கையில் பாசாங்குசம் காணப்படுகிறது. அகங்காரம் அழிய. அன்னையை பாசாங்குசம் ஏந்தியவளாகத் தியானிக்க வேண்டும்.
அன்னை அபிராமியின் உருவத் தியானத்தினால் ஆணவம், மாயை,கண்மம் என்ற மும்மலமும் அழிந்து, அன்னையின் அன்பு என்னும் அருளினால் இன்பம் உண்டாகும் என்பதை அபிராமிபட்டர் இந்தப் பாடல் மூலம் சொல்கிறார்.
அன்னையைச் சொல்கின்ற போது, அவளது கைகளில் பஞ்சபாணம், பாசாங்குசம் என்றார்.ஏன்? கருப்புச்சிலை என்று அபிராமிபட்டர் சொல்லவில்லை. அந்தச்சிலை என்ற வில் எங்கே போயிற்று ? வில்லைச் சொல்லாமல் விட்டாரே என்று நாம் பேதுறுகிறோம். ' சொன்னேன் ' என்கிறார் அவர். அந்தக் கரும்புவில், எரிபுரை மேனி இறைவரிடம் பொருப்பு வில்லாயிற்று. 
எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். “தரணியில் அரணிய” என்ற பாடலில் “எரிபுரை வடிவினள்” என்று அம்மையை விளிக்கிறார்.
இது விந்தை! இன்னும் ஒரு விந்தையையும் இந் பாடலில் காண்போம். அம்பாளின் மூன்று கைகளைப் பக்தர் விவரித்தார். ஒரு கையில் அங்குசம் ; இன்னொரு கையில் பாசம் ; மூன்றாவது கையில் பஞ்சபாணங்கள் என்றார்.நான்காவது கையினைச் சொல்லாமல் விட்டுவிட்டார். நான்காவது கையினை, அவளது வலப்பாகம் கொண்ட சங்கரனாரின் கையில் உள்ள பொருப்புச் சிலையுடன் சேர்த்தார். அன்னைக்குள்ள மூன்று கைகளைச் சொல்லி, எரிபுரை மேனியரின் நான்கு கைகளில் ஒரு கையை மட்டும் சொன்னதால், இறைவனின் செம்பாகத்தில் நம் அன்னை அரைப்பாகம் அல்ல, முக்கால் பாகம் பெற்றுவிட்டாள் என்று முழங்கத் தோன்றுகின்றது.
இன்சொல் திரிபுரசுந்தரி - இனிய சொற்களையுடைய மூவுலகங்களிலும் அழகில் சிறந்தவளே

சிந்துர மேனியள் - சிந்துரத்தை மேனியெங்கும் அணிந்தவளே

தீமை நெஞ்சில் புரி புர வஞ்சரை - தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த திரிபுர அசுரர்களை அவர்கள்

அஞ்சக் குனி _   அஞ்சும்படியாக   

 பொருப்புச் சிலைக் கை - அஞ்சும்படியாக மேருமலையால் ஆன வில்லை வளைத்தக் கையினை உடைய

 பொருப்பு என்றால் மலை. சிலை என்றால் வில். சிவன் மேருமலையை வில்லாக வளைத்ததாக திரிபுரம் எரித்த கதையில் வருகிறது. 

எரிபுரை மேனி - எரியும் நெருப்பினை ஒத்த மேனியைக் கொண்ட

எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். "தரணியில் அரணிய" என்ற பாடலில் "எரிபுரை வடிவினள்" என்று அம்மையை விளிக்கிறார்.  

இறைவர் செம்பாகத்து இருந்தவளே - நம் தலைவராம் சிவபெருமானின் சரிபாதியாக இருந்தவளே

வாம பாகம்,செம்பாகம் எதாயிருந்தால் என்ன அம்பாள் இருக்கும் இடம் செம்மையாக இருக்கும்.
எரிகின்ற நெருப்பில் செம்மை எது? ஒளி. நெருப்பிற்கு உரிய பண்புகள் வெப்பமும் ஒளிச்சுடரும். வெப்பத்திற்கு நிறமில்லை. ஆனால் ஒளிச்சுடருக்கு? அது செம்மைதானே? அப்படி வெளிச்சமும் வெப்பமும் சேர்ந்திருப்பதுதான் அம்மையப்பன். பிரிக்க முடியாதது..
ஆகவே நாமும் அன்னையை அந்த பஞ்சபாணியை, எரிபுரை மேனியரின் இடப்பாகத்தில் இருப்பவளை நம் மனக் கண்களாலும், அகக் கண்களாலும் தரிசனம் செஞ்சுண்டே, தியானிச்சின்டே இருப்போமா!!

                                           அபிராமி சரணம்!!

Monday 11 November 2019

சுப்ரமண்ய புஜங்கம்.... 29



                                                                                                                                                     சுப்ரமண்ய புஜங்கம்....  29   



                                                                                       
                                                                                                                                                                           

முருகப் பெருமானுடைய  கையில இருக்கிற வேலுடைய மஹிமை.

मृगाः पक्षिणो दंशका ये च दुष्टा-

स्तथा व्याधयो बाधका ये मदङ्गे ।

भवच्छक्तितीक्ष्णाग्रभिन्नाः सुदूरे

विनश्यन्तु ते चूर्णितक्रौञ्जशैल ॥ २९॥

ம்ருகா: பக்ஷிணோ தம்சகா யே ச துஷ்டா:

ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே |

பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா: ஸுதூரே

விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல ||


அன்பரின் விளக்க உரை 

க்ரெளஞ்ச மலையை வேலால் பொடிப் பொடியாக ஆக்கியவரேன்னு கூப்பிட்டு


 ‘மதங்கே’ என்னுடைய உடம்பில்  

‘யே’ – எந்த கஷ்டங்கள் – பலவிதமான உடம்புக்கு வரக் கூடிய ஆபத்துக்களை சொல்றார். 

‘ம்ருகா:’ – கொடிய மிருகங்களால் கஷ்டம் வரலாம்,

 ‘பக்ஷிண:’ – தீடிர்னு ஏதாவது பக்ஷி வந்து தாக்கலாம்.

 ‘தம்சகா:’ –  பலவிதமான பூச்சிகள், கொசுக்கள் அதெல்லாம் வந்து கடிக்கலாம். 

‘ததா’ – அப்படியே, 

‘துஷ்டா: வ்யாதய:’ – ரொம்ப கஷ்டப் படுத்தக் கூடிய வ்யாதிகள்

 ‘பாதகா:’ – இதெல்லாம் என்னை  ஹிம்சை பண்றது. அவற்றையெல்லாம்

 ‘பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா:’ 

உன்னுடைய சக்தி ஆயுதம், உன்னுடைய வேலாயுதத்தைக் கொண்டு, அது தீக்ஷ்ணமா இருக்கு. கூராக  இருக்கு. அதை வெச்சு நீ மலையையே பிளந்தாய். இந்த வ்யாதிகள் மாதிரி எனக்கு வர கூடிய கஷ்டங்களை எல்லாம், அந்த வேலின் கூர் முனையால வெட்டி போட்டுடு. 

‘ஸுதூரே விநச்யந்து’ – அதையெல்லாம் எங்கேயோ தூரத்துல கொண்டு போய் தள்ளி நாசம் பண்ணிடு. 

அப்படி அந்த ஸுப்ரமண்ய ஸ்வாமியோட வேலை வெச்சுண்டு பூஜை பண்றவாளுக்கு எந்த ஒரு கஷ்டமும் அண்டாதுங்கற ஸ்லோகம்..

வேலைப் பத்தி வரக்கூடிய கந்தர் அலங்கார பாடல்கள்.


தேர் அணி இட்டு புரம் எரித்தான் மகன் செம் கையில் வேல்
கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்
நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப்
பேர் அணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே

தேரை அலங்கரித்துச் செலுத்தி, [‘ஆணவம்-மாயை-கன்மம்’ என்னும்] மூன்று கோட்டைகளைத் [தம் திருப்பார்வையினாலேயே] எரித்து அருளிய சிவபெருமானுடைய திருக்குமாரர் திருமுருகப்பெருமானின் சிவந்த கையில் உள்ள கூர்மையான வேலாயுதத்தால் தைக்கப்பட்ட கிரௌஞ்ச மலையானது அணு அணுவாக துகள்பட்டு அழிந்தது. ஆரம்பத்தில் நேராக அணி வகுத்து வந்து பின்னர் வட்ட வடிவில் வளைந்து கொண்ட அசுரர்களின் சேனை தளர்ந்து ஓடியது; சூரபன்மனுடைய பெரிய நடுச்சேனையும் அழிந்தது. தேவர்களின் உலகமான அமராவதியும் அசுரர்களிடமிருந்து உய்வு பெற்றது.


பாலென்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையற்கண்
சேலென்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேலென்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித்தண்டைக்
காலென்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே.

பாலை ஒத்தது [பெண்களின்] சொல், பஞ்சை ஒத்தது பாதம், கண்கள் கெண்டை மீனை ஒத்தவை என்று எண்ணி மயங்கித் திரிகின்ற மனமாகிய நீ, திருச்செந்தூர்த் திருமுருகப்பெருமானின் திருக்கையில் விளங்கும் வேலாயுதமே என்று சொல்கின்றாயில்லை; வெற்றி பொருந்திய மயில் என்றும் சொல்கின்றாயில்லை; வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடிகள் என்கின்றாயில்லை. [ஆதலால்] நீ முத்திப் பேற்றை அடைவது எங்ஙனமோ?


கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண்டெனக் கொட்டியாட வெஞ்சூர்க் கொன்ற ராவுத்தனே.

கற்கண்டைப் போன்ற சொற்களையுடையவரும் மென்மையானவருமான பெண்களின் காமப் புணர்ச்சியாகிய மதுவினை நிரம்பவும் மொண்டு குடித்து அவ்வெறியால் அறிவு மயங்கினாலும் தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன். முதிர்ந்த பேய்க் கூட்டங்கள் ‘டுண்டுண் டுடுடுடு …’ என்னும் ஒலியை உண்டாக்கிக் கொண்டு பறையடித்துக்கொண்டு கூத்தாடுமாறு வெய்ய சூரபன்மனைக் கொன்று அருளிய சேவகனே.


 ‘வேல் வகுப்பில் 

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும்

வள்ளியம்மையோட கண்கள் வேல் மாதிரி இருக்குன்னு சாதாரண அர்த்தம் சொல்லலாம். வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் இதுக்கு விசேஷமா அர்த்தம் சொல்லி இருக்கார். இந்த ‘பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ்’ ங்கறதுக்கு, அம்பாள் பண்ணக்கூடிய அஞ்சு காரியங்கள் ‘ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்ரஹம்’ அப்படின்னு அர்த்தம் சொல்லி இருக்கார். மேலும் எப்படி அம்பாளோட கடாக்ஷம் அனுக்ரஹம் பண்ணுமோ, அந்த மாதிரி வேல் அனுக்ரஹம் பண்ணும் அப்படின்னு அவ்வளவு அழகா சொல்லி இருக்கார்.


தருக்கி நமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை கழற்கு நிகராகும்

‘தருக்கிநமன் முருக்கவரின்’ – எமன் எருமை மாட்டு மேல ரொம்ப கர்வத்தோட வந்து பாசக் கயிறைப் போட்டு முறுக்கும் போது, மார்க்கண்டேயன் கழுத்துல பாசக் கயிறு போட வந்த போது, ‘எருக்கு, மதி’ இதெல்லாம் தலையில வச்சிண்டு இருக்கற சிவபெருமானுடைய கழல் என்ன பண்ணித்தோ,அதை இந்த வேல் பண்ணும் அப்படின்னு சொல்றார். அதற்கு நிகரான காரியத்தை செய்யும்.


‘தனித்துவழி நடக்குமென திடத்துமொருவலத்தும்
இருபுறத்தும் அருகடுத்திரவு பகற்றுணையதாகும்

தனியா போயிண்டிருக்கும் போது, ‘தனித்து வழி நடக்கும் எனது ஒரு இடத்தும். ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையதாகும்’ 

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே’

  இதெல்லாம் மஹாமந்திரங்கள்..  

அப்படி ‘வேல்’ங்கறது பயத்தைப் போக்கும். மிருகங்கள் கிட்ட இருந்தோ, வியாதியில் இருந்தோ நமக்கு வர்ற பயத்தை போக்கறதுக்கு ‘வேல் வழிபாடு’ உற்ற வழி, அப்படின்னு ஆச்சார்யாளும் சொல்லியிருக்கார். அருணகிரிநாதரும் நிறைய சொல்லியிருக்கார்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Friday 8 November 2019


                                             அபிராமி அந்தாதி ....42




இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி, இளகி, முத்து

வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே

அன்பரின் விளக்கவுரை 

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி, இளகி முத்துவடம் கொண்ட கொங்கை மலை கொண்டு)
அன்னையின் திருநகில்கள் அகன்று,பரப்புற்று, பருத்து,ஒன்றினை ஒன்று இணைதல் உற்றுத் தளர்வு இன்றி இறுக்கம் பெற்று இளகிய மென்மைத் தன்மை பெற்றவை. அவ்வழகிய திருமார்பில் லேமுத்துமாலை புரள்கிறது. அம்மாலை புரள்வதும் ஓர்அழகே!
பரஞானத்துக்கும் அபரஞானத்துக்கும் அடையளமானவை அம்பிகையின் திருமுலைகள். அவை ஓன்றுக்கொன்று இணையாக இறுகியும் இளகியும் முத்துவடம் சூடிய மலைகள் போல் தோன்றி வல்லமை பொருந்திய சிவபெருமானின் திருவுள்ளத்தை ஆட்டுவிக்கும் கொள்கை கொண்டன. 
வடமொழியில் காளிதாசருக்கும், தமிழில் திருமூலர், கம்பர்,அருணகிரிநாதர் முதலான தெய்வக் கவிஞர்களுக்கும் இவ்வருணனை உரிமை உண்டு. ' பருத்த முலை, சிறுத்த இடை, வெளுத்த நகை, கறுத்த குழல்,சிவத்த இதழ், மறச்சிறுமி விழி ' என்பார் அருணகிரிநாதர். ( திருப்புகழ் - வேல் வகுப்பு)
அபிராமி அம்மையின் ஸ்தனங்கள் [மார்பகங்கள்] கருணை ததும்புவது, பெரியது போன்றெல்லாம் முந்திய பாடல்கள் சிலவற்றில் பார்த்துள்ளோம். அவை ஒன்றொடு ஒன்று போட்டியிட்டுக்கொண்டு கருணை சுரப்பதால் இடமின்றி மோதிக்கொண்டு விம்முகிறது. பின்னர் இரண்டும் சற்றே இளகி மேலும் கருணை சுரக்க வழிவகுக்கின்றன.
இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட 

நம் தலைவராம் சிவபெருமானின் எதற்கும் அசையாத வலிய நெஞ்சையும் உன் எண்ணத்திற்கு ஏற்ப ஆடம் படி செய்தஇறைவன் தன் திருவுள்ளப்படி எல்லோரையும் இயக்குவர்; ஆட்டுவிப்பவர்; அவர் ஆட்டுவிக்க நாம் ஆடுகின்றோம். நம் கர்மவினைகளுக்கு ஏற்ப, அவர் நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார். ' ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரோ! ' ஆனால் நம்மை ஆட்டுவிக்கும் அத்தனையே ஆட்டுவிக்கின்றாள் நம் அன்னை. அவளது திருவுள்ளப்படி அந்த ஆடவல்லான் ஆடுகின்றான். அருளே வடிவான அந்தப் பிராட்டியின் வசப்ப்பட்டு அவனும் ஆடுகின்றான். 

கொள்கை நலம் கொண்ட நாயகி


 பிள்ளைகளான எங்களுக்கு அருள் செய்யும் நல்ல கொள்கை நலம் கொண்ட தலைவியே

நல் அரவின் படம் கொண்ட அல்குல் -

 அம்பாளின் இடையானது நல்ல பாம்பின் படம் போல், மெல்லியதாகவும், ஒளி வீசுவதாகவும் உள்ளது.

பனி மொழி வேதப் பரிபுரையே -

 அன்னை அபிராமியின் ' மொழி ' - குளிர்ச்சியாகவும்,இனிமையாகவும் உள்ளது . மதுரபாஷினி என்று அம்பாளுக்கு பெயர் உண்டு.
இதற்கு ஈடு,இணை, நிகர் எதுவும் இல்லை. 27. நிஜ ஸல்லாப மாதுர்ய - விநிர்பத்ஸித கச்சபீ - தன்னுடைய பேச்சின் இனிமையினால் தானே கச்சபீ எனப்படும் ஸரஸ்வதி தேவியின் வீணையும் தோற்றது.

பசுபதியான பரமசிவனின் லீலைகளை அழகாக வீணை மீட்டி சரஸ்வதி பாடுகிறாள். அதை அம்பாள் ரசிக்கிறாள். அப்போது "ஆஹா" என்று அதை பாராட்டி தேவி கூறுகையில், அந்த சப்தம், தனது வீணையை காட்டிலும் இனிமையாக இருந்ததால், சரஸ்வதி, வெட்கப்பட்டுக்கொண்டு தன் வீணையினை உரை போட்டு யாருக்கும் தெரியாதவாறு மூடி மறைத்து விடுகிறாள்.

வேதப் பரிபுரையே' என்பதற்கு அறிஞர்கள் 'வேதங்களைக் காற்சிலம்பாகக் கொண்டவளே' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். .

இந்தப் பாடலை ' வேதப் பரிபுரையே ' என்று முடிக்கிறார்
வேதங்களே அன்னையின் திருவடிகள். அவற்றில் உள்ள சிலம்புகளே நான்மறையாய் ஒலிக்கின்றதாம்.


இதையே ஆதிசங்கரர் ஸௌந்தர்யலஹரியில் ( 66) சொல்கிறார். " விபஞ்ச்யா காயந்தீ "
46. ஸிஞ்ஜான மணிஞ்ஜீர மண்டித ஸ்ரீபதாம்புஜா சப்திக்கின்ற மணிகளையுடைய சிலம்புகளால் அலங்கரிக்கப்பட்ட திருவடித் தாமரைகளையுடையவள்..
அம்பாள இவாள்ளாம் அழகா வர்ணணை பண்ணும்போது மனசுல தெய்வாம்சம் தான் நிக்கறது அவாளுக்கு. கேட்கிற நமக்கும் அந்தப் பக்குவம் வரவேண்டும் என்பதற்காகத்தான் பட்டர், பகவத்பாதாள் இவாள்ளாம் நமக்கு இப்படிப்பட்ட அந்தாதி, செளந்தர்யலஹரிலாம் குடுத்திருக்கா.
ஒவ்வொரு அந்தாதியும், அதன் அழகான, அபாரமான கவித்துவத்தையும் நல்ல முறையில் கேட்டும், அனுபவதித்தும், மனதில் எந்தவிதமான குயுக்தியும் ஏற்படா வண்ணம், நம் அன்னையை நாம் எப்படி நினைப்போமோ, அதற்கும் மேல் இந்த அன்னையை, இவளை, இந்த ஆதிபராசக்தியை ஆராதிப்போம்.
அபிராமி சரணம் சரணம்!!

முருகா சரணம் 

Sunday 22 September 2019

சுப்ரமண்ய புஜங்கம்.... 28


                                                                                  சுப்ரமண்ய புஜங்கம்....  28                                                                                                  
                                                                                                           
                                                                                                     
                                                                                                             
                                                     
कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा

नरो वाथ नारि गृहे ये मदीयाः ।

यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं

स्मरन्तश्च ते सन्तु सर्वे कुमार ॥ २८॥

களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா

நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா |

யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்

ஸ்மரந்தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார ||  


 ஹே குமாரா:’ – குமரக் கடவுளே 

க்ருஹே:– என்னுடைய வீட்டில் உள்ள 

களத்ரம் – என்னுடைய மனைவி, 

ஸுதா–     என் பிள்ளைகள் 

பந்துவர்க:– அப்பா, அம்மா, அண்ணா தம்பி, இன்னும் பந்து வர்கத்துல                                 இருக்கறவா, 

பசுர்வா: – வீட்டுல இருக்கற மிருகங்கள், 

நரோவாத நாரீ வா – மத்த மனிதர்கள், பெண்கள் 

யே மதீயா– என்னைச் சேர்ந்தவான்னு நான் நினைக்கக்  கூடிய யாரா இருந்தாலும், அவா என்னுடைய நண்பர்களாக இருந்தாலும் சரி, என்னுடைய தொழில்ல கூட வேலை செய்யறவாளா இருந்தாலும் சரி, எனக்கு சம்பத்தப்பட்ட எல்லாரும், 

தே ஸர்வே – அவா எல்லாரும் முருகா

பவந்தம்– உன்னை, 

யஜந்த – பூஜை பண்றவாளாகவும் 

நமந்த – உன்னை  நமஸ்காரம் பண்றவாளாகவும் 

ஸ்துவந்த – உன்னை ஸ்தோத்ரம் பண்றவாளாகவும் 

ஸ்மரந்த– உன்னையே ஸ்மரிக்கறவர்களாகவும் 

ஸந்து’ – இருக்கட்டும்

இதுல இந்த பசுர்வான்னு சொன்னதை ‘எனக்கு தெரிஞ்ச பசுக்கள் கூட உன்கிட்ட பக்தியா இருக்கணும்’ என்கிற போது, குருவாயூர் கேசவன்-னு ஒரு யானை ஞாபகம் வரது. அந்த யானை குருவாயூரப்பனுக்கு அறுவது வருஷம் service பண்ணித்து. அப்புறம் ஒரு குருவாயூர் ஏகாதசி அன்னிக்கு, அன்னிக்கு நாளெல்லாம் ஒண்ணும் சாப்பிடாம இருந்து, அந்த ஸ்வாமி சன்னதியைப் பார்த்துண்டு, தன் தும்பிக்கையை மேல தூக்கி, ஒரு  வாட்டி பிளறிட்டு உயிரை விட்டது. அந்த யானை மேலே ஸ்வாமியை வச்சுண்டு யாராவது  வந்தா ஸ்ரீவேலிம் போது ஏறாலமே தவிர வேற யாரும் ஏற முடியாது. அது ஏற விடாது. அப்பப்போ அதை  கட்டி வெச்சுருக்கற இடத்துலேயிருந்து கிளம்பி, நேரா ஸ்வாமி சன்னதிக்கு வந்து கோயிலை ப்ரதக்ஷிணம் பண்ணிட்டு போகும். இப்படி ஒரு அற்புதமான யானை. அதுக்கு கஜராஜன்-னு தேவஸ்வத்துலேர்ந்து title கொடுத்திருந்தா. பூர்வ ஜென்மத்துல பக்தி பண்ணின வாசனைனால, எவ்வளவு மிருகங்கள் கூட பகவானோட பக்தி பண்றது.


இப்ப  கூட பார்க்கறோம். ராமாயணம் நடக்கறதுன்னா தீடிர்னு எங்கயிருந்தோ ஒரு வானரம் வந்து  அந்த ராமாயணத்தைக் கேட்டுட்டு பழத்தை எடுத்துண்டு போறதுன்னு எல்லாம் சொல்றா. 


பசுக்கள் பால் கொடுக்கறது ஸ்வாமி புஜைக்குன்னா நிறைய யதேஷ்டமா பால் கொடுக்கறது. நம் வீட்டில்  நாம பார்த்திருப்போம். அப்படி என்னுடைய வீட்டுல இருக்கற  பசுக்கள் கூட  உன்கிட்ட பக்தியா இருக்கணும் ன்னு வேண்டிக்கறார்.

 அதுக்கும் மேலே இந்த மாதிரி உலக விஷயங்கள்ல ரொம்ப பாசம் வெச்சு அல்லல் படாமல் இருக்கணும் னும் வேண்டிக்கணும். 


கந்தர் அனுபூதி யும் இதையே வலியுறுத்துகிறது.
வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,


தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. 



மக மாயை களைந்திட வல்ல பிரான்

முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே

அகம் மாடை, மடந்தையர் என்றயரும்

சகமாயையுள் நின்று தயங்குவதே. 


(முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே’ ‘மாடை’ னா தங்கம், பணம். ‘மடந்தையர்’ னா பெண்கள். இதுலேயே என் மனசு தயங்கி தயங்கி அங்கேயே நிக்கறது. அதை உதறவே மாட்டேங்கறதே. ‘முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே!’  ‘ஆறுமுகம் ஆறுமுகம்’ ன்னு சொல்றேன். இதெல்லாம் இன்னமும் ஒழிய மாட்டேங்கறேதே )

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்

பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?

தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல, நிர்பயனே. 


கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே

சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ

சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்

போர் வேல, புரந்தர பூபதியே. 


 நம்மைச் சேர்ந்தவா நமக்கு அனுகூலமா இருக்கணும்.  நமக்கு  நல்ல நண்பர்கள் , நல்ல பந்துக்கள், நாம வளர்க்கற மிருகங்கள் , நமக்கு வர்ற அதிகாரிகள், நமக்கு வர்ற வேலைக்காரர்கள்  எல்லாரும் முருக பக்தியோட இருக்கணும்னு வேண்டிப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Friday 13 September 2019

அபிராமி அந்தாதி 41

                                                                          அபிராமி அந்தாதி   41                                                                                                              



புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே


புண்ணியம் செய்தனமே மனமே - ஆகா. என்ன பாக்கியம். என்ன பாக்கியம். புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே.

அன்னையும் அத்தனும் அபிராமிபட்டரிடம் அன்பு கொள்ளக் காரணமாக இருந்தது எது? அவர் முன் செய்த புண்ணியம். அந்தப் புண்ணியம் அவர்களிடம் அன்பு செலுத்த, அந்த அன்பு, இவரை அடியார் நடுவுள் இருத்திற்று. இதனை மனத்துக்குள் சொல்லி மகிழ்கின்றார். புண்ணியம் செய்தனமே மனமே! என்று!!
தமக்குள் சொல்லி அநுபவிக்கும் தெய்வ இன்பம் இது. தெய்வத்தால் ஏற்படும் அநுபவங்களைப் பிறரிடம் சொல்லிக் கொள்வதில்லை. வியந்து தமக்குள் சொல்லிக் கொள்வதே வழக்கம் அந்தப் பண்புள்ள அபிராமிபட்டர், தம் மனத்துள் சொல்லிக் கொண்டார். அவர் மனத்துள் சொன்னது நம் மனத்துக்கும் உரியது. நம் மனமும் அபிராமியிடமும் அத்தனிடமும் அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டதல்லவா! அபிராமிபட்டரின் மனம் நம் மனத்துடன் பேசுகிறது. நாமும் புண்ணியம் செய்தோம். ' நாமும் ' என்று துணிந்து சொல்வோம். ஏனெனில்,அபிராமிபட்டர் " புண்ணியம் செய்தனமே " என்று நம்மையும் சேர்த்துப் பண்மைப்படுத்தியிருக்கிறார்.

புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி - இப்போதே மலர்ந்த கருங்குவளைப்பூவைப் போன்ற கண்களை உடைய நம் 

அம்மையும் அப்பனுமாக இணைந்து இருப்பதே நிலையானது. அதுவே அருள் செய்யும் நிலை. 

நம் காரணத்தால் நண்ணி - நம்மை ஆண்டு அருள்வதற்காக விரும்பி


இங்கே வந்து 

இங்கே வந்து என்றது நல்லதும் தீயதும் நிறைந்து இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இந்த உலகத்தில் இருக்கும் நமக்காக அவர்கள் கீழிறங்கி வந்தார்கள் அவர்களின் கருணையால் என்று சொல்வதற்காக.


தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி 

அடியவர்கள் குழுவுடன் இணைந்து காலத்தைப் போக்கினால் பந்த பாசங்கள் நீங்கும்; பந்த பாசங்கள் நீங்கினால் மயக்கம் தீரும்; மயக்கம் தீர்ந்தால் நிலை தடுமாறா மனநிலை கிடைக்கும்; அந்த மனநிலை கிடைத்தால் இங்கேயே விடுதலை கிடைக்கும்; என்று ஆன்றோர் சொன்ன நிலை கிடைக்கும் படி அடியவர் கூட்டத்தின் நடுவில் இருக்கப் பண்ணினாள்.

ஸத்சங்கம் ' பற்றி, ' சான்றோர் இனத்திரு' என்பார் ஔவைப்பாட்டி.
" ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் " னு ஆதிசங்கர பகவத் பாதாளும் சொல்லிற்கார்.
தாயுமானவரும், ' ' அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே! என்றார்
அதாவது ' அன்பர்களுடன் கூட அவர்களுக்குப் பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்து விட்டால் போதும். நான் மோட்சத்தை தேடிக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. அதுவே என்னைத் தேடிக்கொண்டு வந்து விடுமாம்.
மாணிக்க வாசகரும் ' உடையாள் உன்றன் நடு இருக்கும் ' என்று தொடங்கும்பாடலில் ' அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரியாய்...' என்று பாடுகிறார். 
நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே -  அம்மையப்பர்களின் பொற்றாமரைத் திருவடிகள் நம் சென்னியில் நிலையாக  பதித்திடவே என்ன தவம் செய்தோமோ மனமே என்று வியக்கிறார்.
நாமும் அடியார் கூட்டத்துடன் ஒன்று கலந்து அன்னை அபிராமியையும் அவள் கணவனாரான அமிர்தகடேஸ்வரரையும் "நம் காரணத்தால் நண்ணி " அதாவது நெருங்கி அருளை பெறுவோமா!!
அபிராமி சரணம் சரணம்!!

முருகா சரணம் 

Monday 9 September 2019

ஸுப்ரமண்ய புஜங்கம் 27



                                                                           ஸுப்ரமண்ய புஜங்கம்   27

                                                                                                             


मुनीनामुताहो नृणां भक्तिभाजामभीष्टप्रदाः सन्ति सर्वत्र देवाः ।
नृणामन्त्यजानामपि स्वार्थदाने गुहाद्देवमन्यं न जाने न जाने ॥ २७॥
முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜாம்
அபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா: |
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே ||
                                                                                          பொருள் 
 ‘ஸர்வத்ர’ தேவா,             – எல்லா உலகங்களிலும் தெய்வங்கள், 
‘முனீனாம், பக்தி பாஜாம் ந்ருணாம் ‘ – முனிவர்களுக்கும், தன்னிடம் பக்தி செலுத்தும் மனிதர்களுக்கும்
 ‘அபீஷ்ட ப்ரதா: ஸந்தி’ – அவா மனோரதங்களை பூர்த்தி பண்றதுக்கு வரங்களை கொடுக்கிறார்கள்.
 ஆனால்.. ‘அந்த்யஜாநாமபி” – கீழ் ஜாதியில் பிறந்தவரா இருந்தாலும்
 ‘ந்ருணாம்’ – மனிதர்களுக்கும்,
‘ஸ்வார்த்த தானே’ – விரும்பியதை கொடுப்பதில்
‘குஹாத் அன்யம் தேவம்’ – முருகப் பெருமானைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை
‘நஜானே நஜானே’ – நான் காணவில்லை, நான் காணவில்லை 
அன்பரின் விளக்கவுரை 
இப்போ அந்த மனு தர்ம சாஸ்திரத்துல சொல்லியிருக்கிற வர்ணாஸ்ரமத்தின்படி குலங்கள், அதோட குணங்கள் எல்லாம் இருக்கான்னு தெரியலை.

ஆனால் மாந்தர்கள் என்கிற ஆச்சர்யமானா புஸ்தகத்துல  ஒரு படிக்கட்டு போட்டால்   தற்காலத்தில் ஜனங்கள் எப்படியிருக்கிறார்கள் என்று வேறு படுத்தலாம்.
பல விதமான பஞ்சமாபாதங்களை பண்றவர்களை ‘பாபிகள் '
‘பாமரன்’ ன்னு ஒரு category போட்டால்  99.99% of the population வந்துடும். சாதாரண பிழைகளையும் தவறுகளையும் இழைத்துண்டு பணம், பெண் இதுல ஆசைப்பட்டுண்டு, நான் என்னோடதுன்னு ரொம்ப தன்னலமா இருந்துண்டு வாழ்க்கையை நடத்திண்டு போகக் கூடிய ஜனங்கள் எல்லாரும் பாமரர்கள் 

அவன் படிச்சவனா இருந்தாலும் சரி, ரொம்ப புத்திமானா இருந்து, ரொம்ப சம்பாதிச்சு சாமர்த்தியசாலியா இருந்து, திறமைகள் இருந்தாலும் சரி, வைதீகாளா இருந்தாலும் சரி, சந்யாசியா இருந்தாலும் சரி, பணத்தாசை இருந்தா பாமரன் தான். 

விவேகி, சாது, சிறந்த விவேகி, முற்றின விவேகியெல்லாம் படிச்சு பார்க்கணும். அப்பத்தான் அந்த உயர்ந்த நிலைமைகளோட பெருமை புரியும். அந்த நிலைமைகள் எல்லாம் அடையாத வரைக்கும் அவன் என்ன வேஷம் போட்டாலும் அதெல்லாம் உதர நிமித்தம் தான். அதனால அவனை நீங்க பெரியவனா நினைச்சுடாதீங்கோ. அவாளுடைய நோக்கம் என்ன என்கிறதை புரிஞ்சிக்கோங்கோ. காமினி காஞ்சனத்துல இருந்தா அவா பாமரர்கள் தான். 

ஏதோ ஒரு சந்தர்ப்ப வசத்துல எப்பவோ ஒரு தப்பு பண்ணினா பரவாயில்லை. பிராயச்சித்தம் பண்ணிக்கலாம். ஆனா எது right wrong-ன்னு தெரியாம தப்பே பண்ணிண்டு இருந்தா அவா பாமரர்கள் ன்னு சொல்றார்.


நீங்க அவாளோட பழகினா, நம்ம level-ல இருக்கறவாளோட பழகினா நாம அந்த level-ல தான் இருப்போம். மேல போக முடியாது.
‘விவேகி’ங்கறது எது right wrong-ன்னு தெரிஞ்சு, முடிஞ்ச வரைக்கும் நாம ரைட்டா நடந்துக்கணும். அந்த ஒரு right wrong-ஆவாது தெரிஞ்சு, எப்போதும் நேர்மையாக நல்லவனா இருக்கறவன் விவேகி.
தன்னலமில்லாதவர்கள் ‘ஸாதுக்கள். ‘சிறந்த விவேகி’, ‘முற்றின விவேகி’ என்கிறது men of wisdom வைராக்கியம் உள்ளவர்கள்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் மாதிரி பகவானுக்காக எதையும் விடறதுக்கு தயாராக, அவ்வளோ தெய்வத்துக் கிட்ட பாசம் வந்தவாளை ‘தெய்வ சாதுக்கள்.
ஒரு வாட்டி ‘வருண ஜபம்’ பண்ணா மழை கொட்டும் என்கிற அளவிற்கு, தெய்வத்தோட நேரா பேசக் கூடியவாளா இருந்த அந்த காலத்து பிராமணர்கள் ‘தெய்வ விவேகி’ கள் .
அதுக்கும் மேல பகவானோடயே எப்பவும் லயிச்சு இருக்கிறவாளை ‘மஹான்’கள் 
அத்வைத ஞானத்தை அடைவதற்கு ரொம்ப நெருங்கி இருக்கிறவாளை ‘துறவி’ங்கள் .
அத்வைத ஞானத்தில உட்கார்ந்து (நிலை பெற்று) இருக்கிறவாளை ‘ஞானி’ங்கறார். இப்படி ஒரு Gradation போட்டிருக்கார்.
இந்த Gradation தான் இந்த காலத்துல வசதி நமக்கு. ஏன்னா ‘எல்லா குலங்களிலும், எல்லா விதமான ஜனங்களும் பிறக்கறதுக்கு பகவான் வழி வகுத்து விட்டார். இந்த காலத்துல 99% of the people பாமரன், அல்லது பாபியாகத் தான் இருக்கா. அதனால நமக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்கிறது, மழை பெய்யறதே பகவானுடைய கருணைன்னு நீங்க புரிஞ்சிக்கணும்ன்னு ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்றார். 
 ‘ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே’ கீழான மனிதர்களுக்கும் ஆசைப் பட்டதைக் கொடுக்கிறவர். அவாளுக்கு ஷேமத்தைக் கொடுக்கறவர்" அப்படிங்கற போது ,நமக்குத்தான் என உணர முடியும்.
நாம மஹான்களுடைய ஸங்கத்துனால உலக விஷயங்கள்ல இருந்து மனசு திரும்பறதுக்கு பிரார்த்தனை பண்ணனும். ‘நான்…..என்னுது … எனக்கு வேண்டியத சேர்த்து வைக்கிறது..’ இப்படியே ஓயாம திரும்பத் திரும்ப ஜன்மம் எடுத்து, திரும்பத் திரும்ப இதே காரியங்களைப் பண்ணி, வெட்கமே இல்லாம நான் திரிஞ்சிண்டு இருக்கேனே. மஹான்களோட ஸங்கத்துல சேர்ந்து, அவா ‘திருப்புகழை’ ‘பகவானோட பெருமை’யைப் பேசறத காதுல வாங்கிண்டு, அதை அங்க அவாளோட ஸங்கத்துல இருக்கும் போது மட்டும் காதுல வாங்காம, அங்கேயிருந்து வந்த பிறகும், அதைத் தன்னோடு எடுத்துண்டு வந்து அந்த போதத்தைக் (ஞானத்தை) பிரியாமல், அந்த பகவானோட குளிர்ச்சியும், அழகும், நிறைந்த அந்தப் பாதங்களை எப்பவும் தொழுது, நான் நல்ல வழியில, உயர்ந்த நிலைமையை அடைவேனா’ அப்படின்னு ஒவ்வொரு நாளும் ஏங்கணும்’ அப்படின்னு இந்த ஸ்லோகத்துக்கு பொருள் கொள்வோம்.
இதே மாதிரி திருப்புகழ் பாடல் ஒண்ணு இருக்கு. 
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையிலாதென் பவமாற
உனைப் பலநாளுந் திருப்புகழாலும்
உரைத்திடுவார் தங்குளி மேவி
உணர்த்திய போதந்தனைப் பிரியாதொண்
பொலச்சரணானுந் தொழுவேனோ
‘உனைப் பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார்’ முருகா! எப்பொழுதும் உன்னுடைய பெருமையைப் பேசக்கூடிய, உன்னுடைய புகழைப் பாடக் கூடிய மஹான்களுடைய
‘தங்குளி மேவி’ அவா இருக்கிற இடத்தைத் தேடித் தேடிப் போய், தர்சனம் பண்ணி, ‘உணர்த்திய போதம்’ அவா ‘இதுதான் ஜன்மத்தோட பலன் .இதுக்கு நீ பண்ண வேண்டிய காரியம் இது’ன்னு அவா சொல்லிக் கொடுத்த அந்த ஞானத்தை, அந்த போதத்தை, ‘தனைப் பிரியாது’ அதை அங்கேயிருந்து இறங்கின உடனே மறந்து போயிடக் கூடாது. அதைப் பிரியாமல் ‘ஒண் பொலச்சரண் நானும் தொழுவேனோ’ உன்னுடைய ஒளி பொருந்திய பாதங்களை நானும் தொழுவேனோ அப்படின்னு வேண்டிக்கறார்.
அது மாதிரி ஸாதுக்களை நாம நினைப்போம். ஒரு நாளைக்கு முருகன் நமக்கும் அந்த மாதிரி விவேகத்தையும், தன்னலம் இல்லாத உயர்ந்த பக்தியையும் அருள வேண்டும்ன்னு பிரார்த்திப்போம்.
வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா