Sunday 16 September 2018

திருப்புகழ் அன்பர்கள் மணி விழா வைபவம் நிறைவு ...........பகுதி 1


                                                         திருப்புகழ் அன்பர்கள் மணி விழா வைபவம்  நிறைவு ...........பகுதி  1

                                                                                             


  வழிபாடுகளில் விருத்தங்களினாலும் ,திருப்புகழ் பாடல்களினாலும் அன்பர்களை முருகன் சந்நிதானத்துக்கே இட்டு செல்லும்  ஓர் அன்பர் நம்மிடம் " நான் வீட்டில் என்னதான் முயன்று பாடினாலும் அமைவதில்லை.திருப்தி இல்லை. ஆனால் வழிபாட்டில் கலந்துகொண்டு பாடும் போதுதான் அந்த அனுபவம் கிடைக்கிறது" என்று கூறுவது உண்டு.அவர் மட்டுமல்ல.மற்ற அன்பர்களின் வெளிப்பாடும் அது தான் .காரணம் சத் சங்கம்.தான்.

அருணகிரிநாதர்.  "சத்சங்கததின் பரிபூரண விளக்கம் அடியார்கள் தான்.  அவர்களுடன் சேரந்து விட்டால் முருகன் மனம் கனிந்து அருள் புரிகிறான்  ஒவ்வொருவர் மேலும் அருட் கண் பார்வை வீசுகிறான், 

பார்ப்பாயலையோ அடியாரொடு சேர்ப்பாயலையோ " என அடியார் குழாத்துடன் இணைந்து கொள்ள ஏங்குகிறார்    

 அன்பர்கள் நடுவில் முருகன் ப்ரத்யட்சமாய் இருக்கிறான் என்பதால் தான் அப்படியொரு அப்பழுக்கில்லா அன்பர்கள் இயக்கம் உருவாக்க குருஜி அவர்கள்  அரும் பாடு பட்டார்கள் . 

இது கலிகாலம். ஈரம் வற்றிப் போய்க் கனல் வீசும் பாலை நிலம். அந்த வெம்மையில் துடிக்கும் மனித குலம்.   அது கண்டு தவித்த குருஜியின் உயர்ந்த உள்ளம்.  துயரங்களைப் போக்கும் அருமருந்து திருமுருகனின் திருப்புகழ் தான் என்று காட்டத் தான் இசை வழிபாடு .இந்த வழிபாடு இதயத்தில் நேரான , சீரான தாக்கத்தை ஏற்படுத்தி நெஞ்சங்களுக்கு நிம்மதி தருகிறது.      Uடி விழாக்கள் படிப்படியாக நம்மை முருகனின் அருகே அருகே அழைத்துச் செல்வது போன்ற சிலிர்ப்பு . அருணகிரிநாதர் விழாக்களில், விழிநீர் பெருக்க வைக்கும் அடுக்கடுக்கான ஆனந்த நிலைகள். நாளுக்கு நாள் இயக்கத்தில் சேரும் அன்பர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்தது. பூர்வ பட்சிம உத்தர தட்சிண திசைகளை நோக்கியும், கடல் கடந்தும் தன் வலிய சிறகுகளை விரித்துப் பறந்தது. ஆங்காங்கே தடம் Uதித்து மாந்தரைப் புடம் போட்டது.        

ஒவ்வொரு திருப்புகழ் மையமும் தனித் தனி தீவாக இல்லாமல் இணைந்து கொள்ளும் பொழுது ஆன்மீக பலம் Uன்மடங்காகிறது என்பதை குருஜி அவர்கள் வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். அன்பு தான் அங்கே பேசும் மொழி. பக்திதான் நடக்கும் வழி. அவரவர் திறமை எலலாம் முருகனுக்கே அர்ப்பணம் என்ற மனோ பாவம் .சத்சங்கத்தில் தொடர் மின்கலங்களின் இணைப்புப் போல் ,தயாகமும் த்யானமும் மற்ற நல் உணர்வுகளும் ஒவ்வொருவருக்கும் கிடைத்து விடுகிறது. கூட்டுப் பிரார்த்தனை நலிந்த உள்ளங்களுக்கு  , உடல்களுக்கு நம்பிக்கை தந்து நலம் சேர்க்கிறது. குமுறும் எரிமலையாய் கொந்தளிக்கும் கடலாய்ப் பொங்கும் மனித சமுதாயம் அமைதிப் பூங்காவாய் மாற, குருஜி அவர்கள் போட்டுத் தந்த ராஜபாட்டை அது.  

அதை  மனதில் கொண்டுதான் நம் அமைப்பு  ஒவ்வொரு ஆண்டும் அத்தகைய மகா சத்  சங்கத்தை ஒவ்வொரு தலத்தில்  ஏற்பாடு செய்து வாழையடி வாழையாக வந்த அன்பர் கூட்டத்தை   ஒருங்கிணைத்து , அன்பர்களை ஒருநிலைப்படுத்தி ,பெருமானுடன் உறவாடியபின் ஆத்ம திருப்தியுடன் அன்பர்களை வழி அனுப்பி வைக்கிறது.அவ்வாறு அறுபது ஆண்டுகள் கடந்து விட்டன .

இந்த ஆண்டு அத்தகைய திருப்புகழ் அன்பர்களின் சங்கங்களை,சங்கங்களின் சங்கமத்தை குருஜிதன்னை அர்ப்பணித்து எண்ணற்ற  பல அன்பர்களை உருவாக்கிய  தலைமைப் பீடமான புது தில்லியில் கொண்டாடியது சால ப் பொருத்தமே.

அந்த புனித நன்னாள் எப்போது வரும் என்று நாளை எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மிகப் பலர்.
வாதம் பித்தமிடா  வயிறீளைகள்  சீதம் பற்சனி சூலை  குளிர்காசம் மாறுங் கக்கலொடே  சில நோய்பிணி முதலிய உடல் உபாதைகளை உதறித் தள்ளினார்கள்.விரைந்தார்கள்.பறந்தார்கள். தலமைப்பீட  அரங்கை அடைந்தார்கள்.மற்ற அன்பர்களோடு கலந்தார்கள்.ஒன்றினார்கள்.
                                                    
                                                          
                                                    
அத்தகைய அன்பர்களில்  ஒருவரான மூத்த அன்பர் பெங்களூரு வசந்தா பஞ்சாபகேசன் வைபவ நிகழ்ச்சிகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

"திருப்புகழ் என்னும் மகா மந்திரத்தை சென்ற நூற்றாண்டில்  ஆயிரக்கணக்கான மக்களுக்கு  உபதேசித்து அவர்களை திருப்புகழ் அன்பர்களாக  மாற்றிய அற்புதம் துவங்கி இந்த ஆண்டு 2018ல் அறுபது ஆண்டுகள் முடிகின்றன. அருணகிரிநாதரின் மறு அவதாரம்  என்று கொண்டாடப்படும் குருஜி ராகவன்   அவர்கள்  திருப்புகழை ஆதாரமாகக் கொண்டு ஜாதி குலம் இன்றி ஆண் பெண் பேதம் அற ஷடாக்ஷரத்தை அறிய வைத்த இயக்கத்தின் மணிவிழா புதுடெல்லியில் சங்கர வித்யாலயா கேந்திர வளாகத்தில் செப்டம்பர் 8 9 தேதிகளில் நடைபெற்றது. புவியின் பூர்வ  பச்சிம  தக்ஷின  உத்தர திக்குகளிலிருந்து அன்பர்கள் கலந்து கொண்ட அற்புதத் திருவிழா. 

8 9 2018 அன்று காலை விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. திருப்புகழின் மூத்த அன்பர் திருநீலகண்டன் தம்பதியருடன் குருஜியின் மகன் திரு ராஜு அன்பர்களின் நன்மைக்கு சங்கல்பம் செய்து கொண்டு ஹோமம் நடந்தேறியது. 
                                                                                  


                                                                                           
                                                                                     
    
                                                                         ஒளி /ஒலி  வடிவில் 
                                                                                  
                                                                       https://youtu.be/BVb0N0Btozs

                                                                          https://youtu.be/Nvwz0gXaXQs 

                                                                          https://youtu.be/165dpW5c1ZU           
                                                                                                                                             
காலை சிற்றுண்டிக்கு பின் அபிராமி அந்தாதிமற்றும்   பதிகம் இரண்டும்  மாதர் அன்பர்களால் துதிக்கப்பட்டது 

மணி விழா குத்து விளக்கேற்றி துவங்கப்பட்டது. மூத்த அன்பர்கள் கடவுள் வணக்கத்திற்கு பின் அன்பர் திரு ஜிக்கிமாமா   இயற்றிய  குரு வந்தனம் எல்லோராலும் பாடப்பட்டது. 

                                                                                
விழாவை துவக்கி வைத்த திருப்புகழ் அன்பர்கள்அமைப்பின் தலைவர் திரு கே. என். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திருப்புகழ் இசை வழிபாடு முறையை அதன் சிறப்பை பகிர்ந்தார்.  பழனி வகுப்பு பாடி  முருகேசனே வரவேணுமே   என்னும் போது முருகனே நேரில் வருவார் என்று நெகிழ்ந்தார். 
                                                                       

செயலர் திரு. நாகேஷ்   உரையாற்றும்போது திருப்புகழ் இசை வழிபாடு புத்தகம் கிட்டத்தட்ட 40,000 அன்பர்களிடம் சேர்ந்து உள்ளதுஎன்றார்.  

                                                                                                      


இசை வழிபாட்டு முறையை தமிழ் மட்டுமல்ல மலையாளம் தெலுங்கு கன்னடம்  ஆகிய மொழிகளிலும் கற்று வருகிறார்கள். ஆன்மீக பெருவிழாவின் போது கன்னட புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த மணிவிழாவில் தெலுங்குப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில்  திருப்புகழ் வகுப்புகள் நடத்தி அன்பர்களை இசை வழிபாட்டில் ஈடுபடுத்திய  திருமதி சரஸ்வதி மாமி வழியில் திருமதி லக்ஷ்மி  வெங்கட்ராமன் தம்பதியர் தெலுங்குப் பதிப்பு வெளிவருவதில் முழு முயற்சி எடுத்துள்ளனர் .தெலுங்கு பதிப்பின்  முதல் புத்தகத்தை வெளியிட்ட திரு கே என் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடமிருந்து முதல் பிரதியை திருமதி லக்ஷ்மி  வெங்கட்ராமன் பெற்றுக்கொண்டார்.



தொடரும் 

முருகா சரணம் 


Tuesday 11 September 2018

சுப்ரமண்ய புஜங்கம் 23



                                                                            சுப்ரமண்ய புஜங்கம்  23 

                                                                                          

ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா

ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய: |

மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்

ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி ||

அன்பரின் பொருள் விளக்கம் 


இதுல ‘மமாந்தர் ஹ்ருதிஸ்தம்’ : என் ஹ்ருதயத்துக்கு உள்ளே இருக்கும்

 ‘மனக்லேசம்’: மனக்கவலை என்ற அசுரனை

 ‘ந ஹம்ஸி ப்ரபோ’: நீ கொல்ல மாட்டேங்கறியே

 ப்ரபோ ‘கிம் கரோமி’ நான் என்ன பண்ணுவேன்,

 ‘க்வயாமி’ யார் கிட்ட போய் கேட்பேன்-னு சொல்றார்.


ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா

ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய: |

 இந்த உலகத்தை ஆயிரம் அண்டங்களாக செய்து ஏக சக்ராதிபதியா ஆண்டுண்டு இருக்கான் ஸூரபத்மன். அந்த ஸூரபத்மன் என்ற பெயர் கொண்ட அவனையும், தாரகனையும், ஸிம்ஹவக்த்ரனையும் நீ கொன்றாய். அதனால் அவர்கள் தங்களுடைய பாவங்களில் இருந்து விடுபட்டு நற்கதியை அடைந்தனர்.அந்த தைத்யர்களை எல்லாம் நீ வதம் பண்ணே. ஆனா என் மனசுக்குள்ள இருக்கற இந்த கவலைங்கற ஒரு அசுரனை மட்டும் நீ கொல்ல மாட்டேங்கறியேன்னு கேட்கறார்.

சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.).

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம்   

 அண்டங்க ளோராயி ரங்கொண்ட சூரன்
  அவன்றம்பி மார்சிங்க முகனானை முகவன்
  மண்டும் பலஞ்செற்ற வடிவேல அலைவாய்
  மருவும் குகாஎன்றன் மன நோயு மொழியே.       ...... 

ஓராயிரம் அண்டங்களைக் கொண்ட சூரபதுமன், அவன் தம்பிமார்களாகிய சிங்கமுகன், ஆனைமுகன், ஆகியவர்களின் வலிமையை நாசஞ் செய்தழித்த வடிவேலைக் கையில் தாங்கி அலைவாயில் வீற்றிருக்கும் அதிபனே! என் மனநோயை ஒழிப்பாயாக.

ஆதி சங்கரர்  மகானே இப்படி பிரார்த்தனை செய்யும்போது நாம் எம்மாத்திரம்?அவர் நமக்காகவே பிரார்த்திக்கிறார் என்பது தான் சத்யம்.

நாம் நம் மனக்கவலைகளை,கிலேசங்களை,விகாரங்களை ஒழிக்குமாறு நம் பெருமானை வேண்டுவோம் . 

நமது  அருணகிரிநாதர் பாடிய பாடல்களில் தற்போது நினைவில் வருபவை 

1) நாடாப் பிறப்பு முடியாதோ எனத் தொடங்கும் திருப்புகழில் 
வாராய் மனக்கவலை தீராய் நினைத் தொழுது வாராய் எனக்கெதிர் முன் வரவேணும்...
என்கிறார்.

2) மனக்கவலை ஏதுமின்றி உனக்கடிமையே புரிந்து
வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே
......
வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும் முருகா..

                                     முருகா சரணம் 

Tuesday 4 September 2018

அமுத திருப்புகழ் பாடல்கள் 503


                                  அமுத திருப்புகழ் பாடல்கள் 503
                                                   

                                                               


 செந்தில் ஆண்டவன் நமக்கு தெய்வீக இசையுடன்   குருஜி வாயிலாக நமக்கு வழங்கியுள்ள அருணகிரியாரின் 503 திருப்புகழ் பாடல்களை திருவாசகம் முற்றோதல் என்ற வகையின்படி சென்னையில் சென்ற ஆண்டு நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் ,அன்பர்களும் முழுமையாக சமர்ப்பித்து ஒரு சரித்திர நிகழ்வை நிலை நாட்டினர்.

அது ஒரு மன நிறைவுடன் முடிந்த வைபவம்.ஆனால் நம் அன்பர்களுக்கு முடிவு என்பது ஒரு ஸம்ப்ரதாயந்தான்.முடிவிலிருந்து மற்றொன்று துவங்கும் என்ற வாக்கின்படி குருஜியிடம் 1963 முதல் 55 ஆண்டுகள் பயின்று எண்ணற்ற வழிபாடுகளைநிகழ்த்தி இன்றளவும் குருஜியின் சீடராக தன்னை சமர்ப்பித்து அரும்பணி ஆற்றி  திருப்புகழ்  மணியை தம் பெயரிலேயே கொண்டுள்ள அருளாளர் என் .எஸ் .மணி சார் நம் வருங்கால சந்ததியினர் நம் இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு,ஈடுபட்டு குருஜியின் வழியில் திருப்புகழ் பாடல்களை நன்கு கற்று குருவருளையும் ,திருவருளையும் பெற குருஜி கையாண்டுள்ள 503 திருப்புகழ் பாடல்கள் ,51 கந்தர் அனுபூதி,31 வேல்,மயில்,சேவல் விருத்தங்கள்,12 திரு வகுப்புகள் முதலிய படைப்புகளை 28 மணி நேர அளவில் இசைத்து  UTUBE வடிவில் அமைத்து அன்பர்களுக்கு வழங்கியுள்ளார்கள். 

அன்பர்கள் வசதிக்காக 13 பகுதிகளாக  வழங்கியுள்ளார்கள். . 

நம் அமைப்பின் மணி விழா நெருங்கும் இத்தருணத்தில் இந்த அரிய சேவையை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக பெருமைப் படுகிறோம்.இதுவும் நம் இயக்கத்தின் சரித்திரத்தில் மற்றொரு மைல்கல் என்று கருதுகிறோம்.

UTUBE பற்றிய விபரங்கலும்  அதன் குறியிட்டுகளும்  கீழே 

1...50


51..100


101..150



151...200


201..250


251..300


301..350


351..400




வேல்/மயில் விருத்தங்கள் 


வகுப்புகள் 


அன்பர்களுக்கு தாழ்வான வேண்டுகோள்.

குருஜியின் படைப்புக்கள்  நம் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டது.அந்த மனோ பாவத்தில் மற்ற UTUBE க் களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது போல் .இந்த UTUBE க்களுக்கு எந்த விதமான கருத்துக்களையும் அளிக்கவேண்டாம் என்று மிகத்தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

  குருஜியின் படைப்புகளை நன்கு கற்றும் ,வழிபாடுகளில் கலந்துகொண்டும் ,நம் இளைய தலைமுறையினரை ஈடுபடுத்தியும் மணிசாருக்கு   நம் நன்றிகடன்களை  என்றென்றும் செலுத்துவோம்  .திருப்புகழ் கடலிலிருந்து அமுதை பருகுவோம்.

மற்றும் மணி விழா வைபவத்தில் இடம் பெறும் பாடல்களின் பட்டியல்.

                                                                                

                                            முருகா சரணம் 

Saturday 1 September 2018

அபிராமி அந்தாதி - 36


                                              அபிராமி அந்தாதி - 36

                                               பொருளே பொருள் முடிக்கும் போகமே (பாடல் 36)

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே 
என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன்
 அம்புயாதனத்து அம்பிகையே


அன்பரின் விளக்கவுரை 

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே 
 உலக மாந்தர்க்கு வேண்டிய பொருட்செல்வத்தை அன்னை
தந்தருளுகின்றாள். அன்னையே அப்பொருட்செல்வமாக நிற்கின்றாள். ஆனால் நல்வழியில் செல்லவேண்டிய மனமானது பொருட்செல்வம்
அதிகமானதும் போகத்தை நாடுகின்றது.. அன்னையே அப்போகமாகவும் நிற்கின்றாள். போகம் அதிகமாகும் போது மனம் மாயையில் சிக்கி மயங்குகின்றது... அச்சமயம் அன்னையே அம்மாயையாக நிற்கின்றாள். மயக்கத்தின் பின் தெளிவு உண்டாகிறது...

பொருட் செல்வம் கெட்டதன்று. அந்தப் பொருட் செல்வத்தால் உலகில் நன்மை விளைகின்றது. ஆனால் அந்தப் பொருட் செல்வத்தை அந்த நல்ல வழியில் பயன்படுத்துவது எல்லோராலும் இயலாததொன்று. அந்தப் பொருட் செல்வத்தைப் போகத்தின் பால் செலவழிக்கவே எல்லார் மனமும் விழைகிறது. 
அப்படிப் பெறப்படும் போகங்களும் கெட்டதல்ல. இடைவிடாத மகிழ்வு (ஆனந்தம்) என்பதே எல்லோருடைய குறிக்கோளும். தனக்குள்ளேயே அந்த ஆனந்தம் இருப்பதாக அறிந்தவர் கூறுகின்றார்கள். ஆனால் பெரும்பான்மையினர் அந்த மகிழ்ச்சியைப் போகங்களில் தானே தேடுகிறோம். அந்த போகங்கள் அவைகளாகவே கெட்டவை இல்லை. ஆனால் அவை மருளை ஏற்படுத்துகின்றன. மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டால் பின்னர் பிழைப்பது அரிது. அன்னையின் அருள் தானே வந்தால் அன்றி அந்தச் சுழலில் அகப்பட்டவர் அகப்பட்டவரே. ஆனால் அதே நேரத்தில் அந்த மயக்கமே அன்னையின் அருளை இழுத்து வருவதற்கும் பல நேரங்களில் காரணமாக இருக்கிறது. 

கீதையின் முதல் அத்தியாயம் 'அர்ச்சுன விஷாத யோகம் - அருச்சுனனின் மயக்கம் என்ற யோகம்'. அருச்சுனனின் மயக்கம் எப்படி யோகமாக இருக்க முடியும் என்பதற்குப் பெரியவர்கள் சொல்லும் பொருள் இது தான் - அந்த மயக்கம் வந்ததால் தான் அவனால் கண்ணன் சொல்லும் நல்வார்த்தைகளை உணர்ந்து தெளிவு பெற முடிந்தது. அங்கேயும் மயக்கத்தில் இருந்து தெளிவு பிறந்தது.

 அருணகிரியாரும் போகத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து மயக்கம் உற்று அந்த மயக்கத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள விழைந்த போது தானே முருகனின் அருள் வந்து தெளிவு தந்தது. இப்படி பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அதனால் மயக்கமும் நல்லதே என்பது விளங்கிற்று. அந்த மயக்கத்தில் இருந்து தோன்றும் தெளிவும் நல்லதே. அந்தத் தெளிவு நம் முயற்சியால் ஏற்படுவதன்று. அன்னையின் அருளால் ஏற்படுவது. நல்லவரைக் காப்பதென்னவோ எளிது. ஆனால் கெட்டவரைக் காப்பது தானே பெருமைகடவுள் என்பது அனைத்தையும் கடந்து உள்ளிருக்கிறதல்லவா. அப்படியானால் ஒவ்வொரு பொருளாகவும்..அதன் பண்பாகவும்..அந்தப் பண்பின் பயனாகவும்..அந்தப் பயணின் விளைவாகத் துய்க்கும் இன்பமாகவும்....அந்த இன்பத்தின் விளைவாக எழும் எண்ணமாகவும்...அந்தன் எண்ணத்தின் வழி கிடைக்கும் நல்வழியாகவும் இருப்பது கடவுளே. அதைப் பொருளை மட்டும் வைத்து அழகாக விளக்கியிருக்கிறார். இப்படி ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாமே என்றுதான் "யாதுமாகி நின்றாய் காளி" என்றான் பாரதியார் 

"என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன்  

"மானிடராய்ப் பிறந்தவர் போகம் யோகம் இரண்டையும் சமமாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில். இரண்டையும் சமமாகக் கருதாதவர்கள் அறியாமை இருளில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.  

அ பிராமி நம் முன் தோன்றி, "ஒரு வரம் தருகிறேன், என்ன வேண்டும் கேள்" என்றால், நம்மில் எத்தனை பேர் உடனே "தாயே, இனிப் பிறவாமை வேண்டும்" என்று கேட்போம்? இறந்தபின் பிறவாமை கிடைத்தால் நமக்கென்ன தெரியவா போகிறது? பிறந்து விட்டோம்; அண்ணன் தம்பி மாமன் மச்சான் இவர்களை விட நாமும் நம் தலைமுறையும் வசதியாக வாழ்ந்தால் போதும் என்றுதான் நம் மனம் உடனே நினைக்கும்; அதைத்தான் வரமாகக் கேட்கும்.  

என் பிள்ளைகளை வாழ வை தாயே' என்றுதான் கேட்டிருப்போம் இல்லையா? பாசங்களின் பிடி அப்படிப்பட்டது. சட்டி சுட்டதடா எனும் மனப்பக்குவம் மிகவும் அரியது. போகத்தில் தவறில்லை. போகம் மனித இயல்பு. நெறி. மருள். அதை உணர்ந்து தெளிவு பெறுவது என்பது சாதாரண முதிர்ச்சியில்லை. இதைத்தான் 'மனத்து வஞ்சத்து இருள்' என்றார் பட்டர்

 ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன்" 

உனது அருள் என்னும் பேரொளியால் என் மனத்தில் இருந்த வஞ்சனை என்னும் இருள்... அல்லது என் மனத்தை வஞ்சித்த மாயை என்னும் இருள்... இல்லாது போனது... அப்படிப்பட்ட உனது பேரருள் என்ன என்பதுஎனக்குப் புரியவில்லையே அம்மா என்று வியக்கிறார் பட்டர்.  

'அம்புயாதனத் தம்பிகையே' என்பதற்குக் கூட பல வித விளக்கங்கள் சொல்லலாம்.

 அம்பிகை என்பதற்கு தாய் என்று பொருள். அம்புய+ஆதனத்து+அம்பிகையே எனப் பிரித்து தாமரையை இருக்கையாக (ஆதனம்:ஆசனம்) உடைய தாயே எனலாம். அதே சொற்பிரிவில் தாமரையை யோக நிலையாக (ஆசனம்) உடையவளே எனப் பொருள் கொள்ளலாம். அம்புய+தனத்து+அம்பிகையே எனப் பிரித்து தாமரை போல் பரந்த, மென்மையான அல்லது குவிந்த மார்பை உடைய தாயேன்னு கூப்பிடுகிறார்.
லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி பாடல்களில் தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள் என்று அடிக்கடி வருகிறது. நான்கு இதழ் தாமரையில் இருப்பவளே, ஆறு இதழ் தாமரையில் இருப்பவளே, எட்டு இதழ், பத்து இதழ், பதினாறு இதழ் என்று வரிசையாக ஆயிரம் இதழ் தாமரையில் இருப்பவளே வரை லலிதா சஹஸ்ரநாமத்தில் தொடர்ந்து வணங்கப்படுகிறாள் திரிபுரசுந்தரி.

                                                      பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்

                                                                       காம்போதி ராகம் 

                                    


                                                                                           
                                                  அன்னை அபிராமியே சரணம் 

                                                               முருகா சரணம்