Monday 25 June 2018

ஆனி மூலம் இசை வழிபாடு



ஆனி மூலம் இசை வழிபாடு


                                                                        ஆனி மூலம்  இசை வழிபாடு

                                                                                               

அருணகிரிநாதரின் அவதார நன்னாளான ஆனி மூலம்   வைபவம்
வழக்கம்போல்  இசை வழிபாடுடன் முலுண்டில்  ஜூன்   28ம்  நாள்
பிரம்மபுரி மண்டபத்தில்  நடைபெற உள்ளது .அன்பர்கள் பெருமளவில் 
 கலந்து கொண்டு பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது 
 
                                                                                                       
                                                                                                 

                                                   முருகா சரணம் 

Sunday 24 June 2018

அபிராமி அந்தாதி - 32


                                            அபிராமி அந்தாதி - 32



                                                                                    


ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் எனும்வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்தாண்டு கொண்டநேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே.

அன்பரின் விளக்க உரை 


அபிராமி அந்தாதி – 31, 32 மற்றும் 33 , மூன்று பாடல்களும் மரணம் சம்பத்தப்பட்ட பாடல். சாவைக் கண்டு பயப் படாதவர் யாரும் இல்லை. 

ஆனால், இறப்பிற்குப் பின் முக்தி அல்லது பிறவாநிலை கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய அபிலாஷையாக இருந்து வருகிறது. மரண பயத்தை வெல்ல வேண்டுமென்றால் நமக்கு அன்னையின் அருள் துணை புரியும்.


லலிதா சஹஸ்ரநாமம் அன்னையை "காலஹந்த்ரீ - காலனை, ம்ருத்யுவை அழிப்பவள்னு சொல்றது.

"ஸர்வம்ருத்யு நிவாரிணீ" - எல்லாவித மரணங்களையும் தடுப்பவள். தன் ஸ்வரூபத்தை உணரச்செய்து , அம்ருத நிலையை அடையச் செய்து, ம்ருத்யுக்களிலிருந்து நம்மை அம்பாள் காப்பாற்றுகிறாள்.
மேலும் அன்னையை "ம்ருத்யுதாரு குடாரிகா" - மரணம் என்னும் மரத்தை வெட்டும் கோடாலியாக இருப்பவள்னும் சொல்றது.
"ம்ருத்யுமதனி" - பக்தர்களுக்கு மரண பயத்தை இல்லாமல் செய்பவள்.

ஆசைக்கடலில் அகப்பட்டு - ஆசையெனும் பெருங்கடலில் அகப்பட்டு
ஆசையைக் கடலுக்கு ஒப்பிடுவானேன்? கரையில் நின்று கொண்டிருக்கிறோம். வெண்ணிற அலைகள் பட்டுத்துண்டுகள் போல் காலை வருடி விட வருகின்றன. 'வா' என்கிறது சிற்றலை; தூய நிறமுடைய அலையாயிற்றே, அழகாக இருக்கிறதே, உடலைத் தொட்டு கிளுகிளுப்பூட்டுகிறதே, மனதில் மகிழ்ச்சியூட்டுகிறதே... என்றெல்லாம் எண்ணிக் கால் வைக்கிறோம். 'இன்னும் கொஞ்சம் தூரம் வா, கால் என்ன உடலையும் வருடுகிறேன்' என்கிறது அலை (கடல்); குளிக்கிறோம். 'முத்து, மீன் என்று பலவற்றையும் கொள்ளலாம் வா' என்று இன்னும் இழுக்கிறது; இன்னும் போகிறோம். திடீரென்று ஆழத்தை உணர்ந்து, 'அடடா இந்த ஆழம் அப்போது வந்த அலையில் புரியவில்லையே!' என்று திரும்ப நினைக்கிறோம். தாமதமாகி விட்டது; கடலின் ஆழத்தில் தத்தளிக்கத் தொடங்கிவிட்டோம். ஆசை எனபதும் அப்படித்தான். ஆசையின் போர்வைக்குள் மறைந்திருப்பது அழகான விரல்கள் மட்டுமல்ல என்பதை உணரும் பொழுது நிறைய இழந்து விட்டதைப் புரிந்து கொள்கிறோம். கபடமில்லாமல் நம்மைக் கவரும் ஆசை மெள்ள நம்மைக் கயவனாக்க வல்லது என்பதை முதலில் அறிய இயலாததால், ஆசை கடலைப் போன்றது. ஆசைக் கடலில் மூழ்கினால் முத்தோ மீனோ எடுக்கப் போவதில்லை; இருப்பதையும் இழக்கப் போகிறோம் என்பதனால் - ஆசைக்கடலில் மூழ்குவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்பதால் - ஆசைக்குத் துன்பக்கடல் என்றும் பெயர். 

அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை- கொஞ்சமும் கருணையில்லாத கூற்றுவனின் (யமனின்) பாசக்கயிற்றால் கட்டப்பட்டு எல்லா துன்பங்களும் அடைய இருந்த என்னை


அந்தகன் என்றால் எமன். எமன் அருளற்றவனா? எமனுக்கு அருளும் கிடையாது, வஞ்சமும் கிடையாது என்பார்கள். சமநிலையுடைவன் என்று கடவுளரில் எமனுக்கு ஒரு பெயர் உண்டு. அதனால் எமனை நீதிக்குத் தலைவனென்றும் பாடியிருக்கிறார்கள். தவறு செய்கிறோம். பெற்றோர், உற்றார், ஆசிரியர் என்று யாராவது நம்மை தண்டிக்கிறார்கள்; அந்த நேரத்தில் தண்டனை கொடுப்பவர்களுக்குக் கருணையே இல்லையா என்று நினைக்கிறோம். பட்டர் இங்கே சிறுபிள்ளை; தாயை எண்ணிக் கலங்குகிறார். அதனால் தண்டனை கொடுக்கும் எமன் கருணையற்றவனாகத் தோன்றுகிறான். அரசனை இங்கே அருளற்றவன் என்று தாக்குவதாகவும் நினைக்கிறேன். "அம்மா அபிராமி, அப்படியென்ன தவறு செய்து விட்டேன்? திருடினேனா? கொலை செய்தேனா? அமாவாசையைப் பௌர்ணமியென்றது அப்படியென்ன குற்றமாகி விட்டது? இதற்கு தலையை வெட்டுவேன் என்று சொல்லும் அரசனுக்கு கருணையே இல்லையா? இப்படிப்பட்ட கருணையே இல்லாதவனுக்குப் பணிந்து வாழ்வதும் ஒரு வாழ்வா?" அப்பபடின்னு கேக்கறாார் பட்டர்.

நின் பாதம் என்னும் வாசக் கமலம் - உன் திருவடிகள் என்னும் மணம் மிகுந்த தாமரைமலர்களை

தலை மேல் வலிய வைத்து - 


ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் என் தலை மேல் நீயே வலிய வந்து வைத்துஎன்னை உன் அடியவனாக ஏற்றுக் கொண்ட உன் அன்பினை எப்படி புகழ்வேன்?

அம்பிகை தானே விரும்பி வந்து தன் தாளுக்கும் அன்பர் தலைக்கும் இணைப்பு ஏற்படுத்தி உறவாக்கி கொண்டது. இது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று. எதற்காக அன்பர்களாகிய அடியார்கள் முன்னே பலகோடி தவங்கள் செய்தனரோ, அதனால் ஏற்பட்ட புண்ணியபலன் இது. அபிராமிபட்டர் ' ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்லுவேன்! ' - என்கிறார்.
இந்த அற்புத அருளை' நேசம் ' என்று குறிக்கிறார்.நேசம் என்பது தானே விரும்பி ஏற்படுத்திக்கொண்ட உறவு அல்லவா! எல்லோருக்கும் பயனளிப்பது போன்ற அருள்.

ஈசர் பாகத்து நேரிழையே - சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும் அழகிய அம்மையே!
சிவனின் ஒரு பாகமாக விளங்கும் அழகிய அபிராமிப் பெண்ணே!

 இந்தப் பிறவியின் பந்தபாசத் தொடர்பினாலுண்டான கடல் போல் அளவில்லாத ஆசைகளுக்கு அடிமையாகி நான் செய்த செயல்களின் விளைவினால், கருணையில்லாத காலனின் கைப்பிடியில் சிக்கித் தவிக்க இருந்த என்னை, தக்க நேரத்தில் உன் மணமிகு தாமரை மலர்பாதங்களை நீயாகவே என் தலைமீது இட்டு என்னை நல்வழிப்படுத்திய உன் கருணையை எப்படிப் புகழ்ந்து பாடுவேன்?

நாமும் இந்த ஆசைக்கடல்ல அகபட்டுக்கொள்ளாம , ஈசனின் வாமபாகத்தில் எழுந்தரிளியிருக்கும் நுட்பமான அணிகலன்களை அணிந்துள்ள அந்த அபிராமியின் பேரன்பு கிடைக்க அவளின் சிவந்த மலர்ப்பாதங்களை கெட்டியா பிடிச்சுகலாமா!!
அபிராமி சரணம் சரணம்!!

                                                                 பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்

                                                                                                  

                                                                                                   அன்பர்கள் 


                                                                                                                                                                            
                                                         முருகா சரணம்                                            

Friday 15 June 2018

சுப்பிரமணிய புஜங்கம் 18


                                                                            சுப்பிரமணிய புஜங்கம்  18

                                                                                                   

இஹாயாஹி வத்சேதி ஹஸ்தான் ப்ரஸார்யா
ஹ்வயத்யாதராச் சங்கரே மாதுரங்காத் |
ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்
ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் ||


அன்பரின் விளக்கவுரை 

இதை யாராவது சித்திரமா எழுதினா அவ்ளோ அழகா இருக்கும்

மாதுரங்காத்’ -அம்மாவான பார்வதி தேவியின் மடியில் உட்கார்ந்திருக்கும் 

‘பாலமூர்த்தி’ – குழந்தையான முருகப் பெருமானை ‘சங்கர:’ சங்கரர் என்ன பண்றார்?

 ‘இஹாயாஹி வத்ஸ’ – குழந்தாய் இங்க என்கிட்ட வான்னு 

‘ஹஸ்தான் ப்ரஸார்ய’ – இரண்டு கைகளையும் நீட்டி

ஆஹ்வயதி’ – கூப்பிடறார். ‘ஆதராத்’ -ரொம்ப செல்லமா கூப்பிடறார். அப்படி கூப்பிடும் சங்கரரிடத்தில், 

‘ஸமுத்பத்ய’ குதிச்சு வந்து 

‘தாதம் ஸ்ரயந்தம்’ – அப்பாவைக் கட்டிக்கொள்ளும்,

 ‘குமாரம்’ அந்த குழந்தையை 

‘ஹராஸ்லிஷ்டகாத்ரம்’ அப்படி ஓடி வந்த உடனே

 ‘ஹர:’ பரமேஸ்வரன் என்ன பண்றார், அப்படியே அணைச்சுக்கறார்

(அப்படி அம்மா மடியிலிருந்து துள்ளி அப்பா மடிக்கு வந்து, அப்பா கட்டியணைச்சுண்ட அந்த குழந்தையை, பால மூர்த்தியான முருகப் பெருமானை ‘)

பஜே’ நான் வழிபடுகிறேன்னு ரொம்ப அழகான ஸ்லோகம்.

   சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.).

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம் 

  
   குமரா எனச்சங் கரன் கைகள் நீட்டக்
      குதித்தம்மை மடிநின்று பரனைத் தழீஇக்கொண்
         டமரா மகிழ்ந்தாடு செந்தூரி லெம்மான்
            அழகான மழமேனி மறவாது நினைவேன்.
       ...... 18

   அம்மையின் மடியில் மழமேனியுடன் முருகன் வீற்றிருக்கக், 'குமரா' என்றழைத்துச் சங்கரன் கைகளை நீட்டுகின்றார். அம்மையின் மடியினின்றும் முருகன் குதித்துச் சென்று அப்பனைத் தழுவிக் கொண்டு மகிழ்ந்து கூத்தாடுகின்றார். இவ்வாறு பரனைத் தழுவிக் கொண்டு மகிழ்ந்து விளையாடுகின்ற செந்தூரனாகிய எம்பிரானின் அழகான இளமேனியை நான் மறவாது நினைப்பேன்.


கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல 

அருணகிரிநாதர் படைப்பில் 
சீர்பாத வகுப்புல ரெண்டு வரிகள் இருக்கு.

இதழிவெகு முகககன நதியறுகு தறுணர ~ இமகிரண தருணவுடு  ......பதிசேர் சடாமவுலி  ...... 9

இறைமகிழ வுடைமணி யொ டணிசகல மணிகலென இமையமயில் தழுவுமொரு  ....திருமார்பி லாடுவதும்  ......10



 (கொன்றையும்,அளவற்ற கிளைகளை உடைய ஆகாச கங்கையையும்,

அறுகம் புல்லையும்,அஞ்சாமையையும் வீரமும் உடைய வாசுகி என்கின்ற சர்ப்பத்தையும்,குளிர்ந்த ஒளி கிரணங்களை உடையதும் இளமை பொருந்தியதும் நட்சத்திர கூட்டங்களுக்கு தலைவனான சந்திரனையும், சேர்த்து வைத்துக் கொண்டுள்ள,. ஜடையாளராகிய,
எல்லாப் பொருள்களிலும் விளங்கும் சிவ பொருமான், இன்பமடைய,
அரை மணியில் அணிந்துள்ள, அணிந்திருக்கும் தண்டை, வெண்டையம், கிண்கிணி சதங்கை முதலிய ஆபரணங்களின் கலின் என ஒலிக்கும்,
இமவான் மடந்தையாகிய பார்வதி தேவி தழுவிக் குழையும்,
ஒப்பற்ற பரமனின் மார்பில் விளையாடல் செய்வதுவும் (மண நாறு சீறடியே)
இதே போல குழந்தயாக, முருகா நீ குழந்தையா என் மடியில தவழ்ந்து எனக்கு முத்தம் கொடுக்கணும்னு  
"செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த" என்ற பாடலில் 
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி …… தரவேணும்
.
"விந்து பேதித்த "என்று தொடங்கும் திருப்புகழில்

மைந்தர் தாவிப் புகழ தந்தை தாய் உற்றுருகி 
வந்து சேயைத் தழுவல் சிந்தியாதோ என்கிறார்..

 அடுத்து ஆரவாராமாயிருந்து எனத் தொடங்கும் திருப்புகழில் 

"நீதனான தோர்குழந்தை பெருமாளே " என்கிறார்.

நாமும்  பெருமானை குழந்தையாக பாவித்து என்றென்றும் இன்புறுவோம்.

                                               முருகா சரணம் 


Sunday 3 June 2018

மும்பை வைகாசி விசாகம் நிறைவு

                                                                                                                               


                                   மும்பை வைகாசி விசாகம் நிறைவு

வைகாசி விசாகம் வழிபாட்டில் மும்பையின் பல பகுதிகளிருந்து அன்பர்கள் பெருமளவில்கலந்துகொண்டனர்.வழக்கம்போல் சுப்பிரமணிய ஸஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி சுப்பிரமணிய புஜங்கம்,மற்றும் சிறப்பாக திருவகுப்பு பாடல்கள் முழுவதும் இசைக்கப்பட்டன.முருகன் அருள் வேண்டி பிரார்த்தனையுடன் இனிதே நிறைவுற்றது.

                                                                      சில புகைப்பட தொகுப்புகள்

                                          

                                          
                                                                                                   













                                                                                                                                                                                                                                                             
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          வழிபாட்டின் சில பகுதிகள்                                                                                                                                                                                                                                                                                                       
                                                                                     சுப்பிரமணிய புஜங்கம்

                                                                                                             

                         
                                                                 U Tube Link for ANDROID  and   I PAD   PHONE   

https://www.youtube.com/watch?v=khP6Kg80LLU&feature=youtu.be


                                                             "முத்தைத்திரு"  கௌளை ராகம்


     

                                                                 U Tube Link for ANDROID  and   I PAD   PHONE
  
                                          https://youtu.be/6ICIsPRkrEs
   
                                                                      "அனைவருமருண்டு " மோஹனம் ராகம்

                                                                                                                                                                     
                                                                 U Tube Link for ANDROID  and   I PAD   PHONE


                                            https://youtu.be/C726ounpV6E

                                                                  "வாதம் பித்தம் "   ஹம்ஸா நந்தி ராகம்

       

                                                                 U Tube Link for ANDROID  and   I PAD   PHONE
  
                                        https://youtu.be/brdoG_Pznhs

                                                                     "ஓருருவாகிய "  தர்பாரி கானடா  ராகம்

                                                                                                                                                                     
                                                                 U Tube Link for ANDROID  and   I PAD   PHONE

                                           https://youtu.be/6Gjd3HQM15k 

                                                                            "வட்ட வாட்டமான " ரஞ்சனி ராகம்

                                                                                                                                                                   
                                                                 U Tube Link for ANDROID  and   I PAD   PHONE

                                   https://www.youtube.com/watch?                                                   v=pTK9bdH_7hc    


                                                      சீர்பாத வகுப்பு




     



                                                                     U Tube Link for ANDROID  and   I PAD   PHONE
                                            https://youtu.be/G2BpTqMmdlg

                                            தேவேந்திர சங்க வகுப்பு


                                                                                                                                                                 

                                                                 U Tube Link for ANDROID  and   I PAD   PHONE

                                     https://youtu.be/5u6feqEKiDw

                                                            மயில் வகுப்பு 


       


                                                                 U Tube Link for ANDROID  and   I PAD   PHONE

                                          https://youtu.be/CGlfLC7j4Kc

                                                      வீரவாள் வகுப்பு



       


                                                            U Tube Link for ANDROID  and   I PAD   PHONE

                                         https://youtu.be/OXzam7-qhTg

                                                       திருப்பழனி வகுப்பு 
                                                                                                                                                            

     

                                            U Tube Link for ANDROID  and   I PAD   PHONE

                                           https://youtu.be/WApMvqBSulk  


                                                       முருகா சரணம்