Monday 31 December 2012

தேஹு ரோடு வழிபாடு


புனேவுக்கு அருகில் உள்ள தேஹு ரோடு  பகுதியில்  பக்த துக்காராம் அவதரித்து விட்டல் மேல் பல பாடல்கள் பக்தி பரவசத்துடன் பாடி  ஆலந்தி என்ற இடத்தில் உயிருடன் சமாதியானார். மனித சரீரத்துடன் நேராக வைகுண்டம் பயணமானார் என்று நம்பப்படுகிறது.அந்த பகுதியில் தான் இன்று நம் முருகப்பெருமான் குன்று தோர் ஆடும் குமரனாக அருள்பாலிக்கிறான்.

குறிப்பாக .இராணுவத்தினர் சேவையில் உருவானது தான் முருகன் உறையும் ஆலயம்.அந்த ஆலயத்தில் தான்  அவன் கட்டளைப்படி கடந்த ஆறு ஆண்டுகளாக  டிசம்பர்  25ந்தேதி நம் வழிபாடு  நடை பெற்று வருகிறது.அதற்கு மூல காரணம் அமரர் முரளி தான். இந்த ஆண்டு கனத்த இதயத்துடன் தான் அன்பர்கள் கலந்து கொண்டார்கள். கந்தசஷ்டி கவசம்,ஷண்முக கவசம் சுப்பிரமணிய கவசம்,ஸ்கந்தகுரு கவசம் போன்ற கவசங்களை முன்பே சூடியுள்ள நம் பெருமான் அன்று தங்க கவசத்தையும் அணிந்து ஜகஜ்ஜோதியாக காட்சி அளித்து அருள் பாலித்தான்..

மும்பையிலிருந்து பெருமளவில் அன்பர்கள் கடமை உணர்வுடனும்,மிகுந்த ஈடுபாட்டுடனும்   கலந்து கொண்டது கோயில் நிர்வாகிகளுக்கு   பெருமகழ்ச்சி  அளித்தது.பெங்களூர் அன்பர் ஸ்ரீநிவாசன் கடலூரிலிருந்து மற்றொரு அன்பர் கலந்து கொண்டனர்.சிறப்பு அம்சமாக செம்பூர் அன்பர் திரு .ராதாகிருஷ்ணன் தேஹுரோட்  முருகன் மேல் தொடுத்த அருள் பாமாலையை  முருகன் பாதக்கமலங்களில் சமர்ப்பித்து  குரு பாலு சாருக்கு அளித்தார்.அன்பர் தம் பாமாலையை பக்தியுடன் வாசிக்கும்போது அன்பர்கள் பொருள் உணர்ந்து அனுபவித்து பரவசமானார்கள்.பாமாலையை இத்துடன் இணைத்துள்ளோம்.கவிதை நயத்தோடு  காப்பு,குருவணக்கம்,நூல்,பலன் என்ற முறையோடு சம்பிரதாயமாக அமைத்தது மிக அழகாக இருந்தது.முருகன் அருளால் மேன் மேலும் பல பாமாலைகளை சூட்டுவார் என்பது திண்ணம்.

அன்புடையீர், தெஹு ரோடு முருகனின்  பாடல் இதோ.

காப்பு 

தாயாய்  உருவெடுத்து தண்டமிழ்த் தேன் பாலூட்டி 
சேயாய்  எனை அணைத்து  சீரிணக்கம் செய்வித்து 
மாயாப் பிறவிதனை மாற்றழிக்க நெறிசெய்தென் 
ஆயாகி நின்றானை ஐங்கரனை வாழ்த்துவனே //            1.

குருவணக்கம் 

வால  வயதினிலே நல்லதமிழ் பயிற்றுவித்து 
சால சீர்செய்த சற்குருமார் பொற்பதமும் 
சீல மிகு குருஜி இராகவனின் வழிநடத்தும் 
பாலமணி ராஜி பதமும் பணிவேனே                               2.

நூல் 

தலம் பலவும் சென்றுநான் சேவித்தேன் -ஆறுபடைத் 
தலம் பலவும் கண்குளிரக் கண்டுகொண்டேன் என்றன்மனம்
பலம்பெறவே கைதொழுது  நிற்கின்றேன்  நற்றேவர் 
நலம்  பரவும் சந்நிதியே தேஹுரோடின் நாயகனே //                  3.

பார் காக்கும் காவலனின் பன்னிருகைக் கோமகனின் 
சீர்போற்றி நல்லடியார் பாடிமகிழ் வேளையிலே 
கார்போல் கருணைமழை பொழிவித்து எங்கள் மனத் 
தேர்மேல் வலம் வருவாய் தேஹுரோடின் நாயகனே //             4.

புவிநாடி வலம்வரு நல புள்ளிமயில் வாகனனைக் 
கவிபாடிச்  சிறு துதியால் வணங்குகிறேன் பார்புகழும் 
தவஞானியார் பலரும் தொழுதேத்தும் பெருங்கோவே 
சிவஞானம் தெளிவிப்பாய் தேஹுரோடின் நாயகனே   //           5.

பூவினுளே சிறப்புளது புண்டரிகம் செம்மைதமிழ்ப் 
பாவினுளே பொற்புளது அருணகிரி திருப்புகழே - என்றன் 
நாவினுளே நின்றுளது நல்லடியார் பாதமலர் 
தேவருளே தேவன் நீ  தேஹுரோடின் நாயகனே   //                     6.

இருமலிலும் சருமலிலும்  காய்ந்து  எந்தன் உளம அலையும் 
பொருமலையும் பெருமலையும் போக்கி அருள்புரிவாய் - வான் 
தருமலையும் தனிமலையும் சேர்ந்தணைந்த இப்புவியில் 
திருமலை போல் தொல்மலிசீர்த் தேஹுரோடின் நாயகனே //      7.

பலன் 

அண்டமெலாம் தொழுதேத்தும்   தேஹுரோடின் நாயகனைத் 
தெண்டனிடு வோர்க்குச் சித்திக்கும் சிவபதமே 
மண்டு துயரிலா வாழ்வும் மாண்பு திருசேர்  வாழ்வும் 
பெண்டுபிள்ளை யுடன்வாழ்வும் மகிழ்வோடு  பெறுவாரே //          8.



வழிபாடு முடிந்தபின் நிர்வாகிகள் சமீபத்தில் நிறுவிய  தேரில் முருகனை அமர்த்தி அன்பர்களுக்கு தரிசனம் செய்வித்தார்கள்.தேரோடும் வைபவம் மாலையில் ஏற்பாடு ஆகியிருந்ததால் அன்பர்களின் தேர் இழுக்கும் விருப்பம் நிறைவேற வில்லையே என்ற ஏக்கம் வெளிப்பட்டது.அடுத்த வழிபாடு  சமயத்தில் தங்கத்தேரையே இழுக்கும் பாக்கியம் அருள பெருமானை வேண்டுவோம்.நிர்வாகிகள் படிவிழா போன்ற மற்ற நிகழ்சிகளுக்கும் அழைப்பு  விடுத்தார்கள்.கலந்து கொள்வது நம் கடமை.

அதற்கு முன் 26-01-2013 அன்று அமைந்துள்ள நம் படிவிழா நிகழ்ச்சியில்  பெருமளவில்  கலந்து கொள்ள புனே அன்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் "2013"




அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆண்டு மென்மேலும் சிறக்க நம் முருகப்பெருமானின் பாத கமலங்களை வணங்குவோம்.


குரு  பாலு சார் அவர்களின் வாழ்த்து "அன்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்" 

ஆருத்ரா தர்சனம்



தாண்டவ தரிசனம்


Nataraja


எந்நாட்டவர்க்கும் இறைவனாம் சிவபெருமான்பஞ்ச பூதங்களில் – எல்லையே காண முடியாத ஆகாயத்தைத் தனதாக்கிக்கொண்டு 
அருளும் திருத்தலமாகிய சிதம்பரமத்தில் இருப்பவன்.  இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில்மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று நிகழும் 
ஆருத்ரா தரிசனம்மிக அற்புதமான வைபவம். ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும். 
இந்தத் திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் திருநடனம் ஆடிக் காண்பித்தார் ஸ்ரீநடராஜ பெருமான். 
உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை. 
இந்த நாளில் ஸ்ரீநடராஜரைத் வழிபட்டு வரநம் இன்னல்கள் யாவும் அகன்றுவாழ்க்கை இனிமையாக இருக்கும்படி அருள்புரிய வேண்டுவோம்.

ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின வகையில் எழுப்பஅண்டங்களில் ஐந்து வகையான பேரிகை (தோற்கருவிதுளைக் கருவிநரம்புக் கருவிகஞ்சக்கருவிமிடற்றுக் கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் மிக்கு ஒலிக்க,

பதினெண்கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர்தும்புரு நாரதர் என்பவர்களுடன் இன்பகரமான முறையில் சிந்து முதலிய இசை வகையைப் பாடதேவர்கள் தேவபேரிகைசங்கம்,தாரைகள் (நீண்ட ஊதுங் குழல்கள்) இவைகளை முழக்கி அவ்வொலி இடையே மேலெழுந்து பொங்க,

இரத்தப் பெருக்கின் வெள்ளம் எல்லாவிடத்தும் பரவதீயின் ஒளி வீசகுதித்து எழுந்து போருக்கு வந்த சூரர்களை (அவர்களுடைய) பெரிய நரம்புகளுடன்எலும்புகளும் மாமுடிகளும் சிதறுண்டு விழும்படியாக கோபத்துடன் எதிர்த்துப் போர் புரிந்த வலிமையாளனே,

மழை பெய்து உயர்ந்த இப்பூமியில் உள்ளோர் வாழ்வுறும்படிபாம்பு உருவராகிய பதஞ்சலியும்,புலி உருவரான வியாக்ரபாதரும் (இறைவன் நடனத்தைத்) தரிசித்த தலமாகிய சிதம்பரத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே.

(சிதம்பரம் திருப்புகழ்)






சாந்தா, சுந்தர்


வந்தது முருகன் தானே!



1984 மே மாதம். நானும் என் மனைவியும் எங்கள் 4 வயது பையனுடன் கொல்கத்தா சென்றிருந்தோம். பக்கத்தில் இருந்த DARGILING  செல்ல எண்ணினோம். எனது தமையனார் தனக்கு தெரிந்தவர் மூலம் DARGILING ல் ஹோட்டல் புக் செய்திருந்தார். எங்களை கொல்கத்தாவில் இருந்து Luxury பஸ்ஸில் ஏற்றிவிட்டார். இரவு கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட நாங்கள் மறு நாள் காலை Silguri  சென்றடைந்தோம். சில்குரியில் இருந்து இன்னொரு பஸ் பிடித்தோம்.

மலைப்பாங்கான வளைவுப் பாதையில் மெதுவாகச் சென்ற பஸ் Dargiling  அடையும் போது  மாலை 4 மணி  ஆகி விட்டது. சூரியன் மறையத் தொடங்கும் நேரம். பஸ் ஸ்டாண்டில் இருந்து ஏற்ற இறக்கப் பாதைகளில் சென்று குறித்த ஹோட்டல் அடைந்தோம். அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹோட்டல் மேனேஜர் ரூம் reservation  மெசேஜ் கிடைக்கவில்லை; ஒரு ரூமும் காலி இல்லை என்றார். தமயனாரிடம் விசாரிக்கலாம் என்றல் communication வசதிகள் இன்றைய அளவு  இல்லாத காலம். அக்கம் பக்கத்து ஹோட்டல்களிலும் ரூம் காலி இல்லை. இருட்டத் தொடங்கி விட்டது;  சம்மராய் இருந்தாலும் குளிர்  கூடிக்கொண்டே இருந்தது ; என்ன செய்வதென்று தெரியாத நிலை. 

தெரியாத ஊரில் இரவு நேரத்தில் மனைவி குழந்தையுடன் நடுத்தெருவில்; மனம் முருகனை "வடிவேலும் மயிலும் துணை " என்று வேண்டிக்கொள்ள, மனைவியோ கண்ணீர் மல்கி வாய்விட்டு "முருகா முருகா " என்று அலற ஆரம்பித்துவிட்டாள். அப்போதுதான் நடந்தது அந்த அதிசயம்!. நடுத்தர வயதில் நெடிய ஒரு இளைஞன்  எங்களை அணுகினான்; "நீங்கள் ரூம்  வேண்டித்தானே அலைகிறீர்கள்? சிறிது தொலைவில் எனக்கு தெரிந்த ஹோட்டல் ஒன்று இருக்கிறது ; என்னுடன் வந்தால் அந்த ஹோட்டல் மேனேஜரிடம் சொல்லி ரூமுக்கு ஏற்பாடு பண்ணுகிறேன்" என்றான். யாருமே அறியாத ஊரில் முன்பின் தெரியாத ஒருவனை எப்படி நம்புவது? வேறு வழியும் தெரியவில்லை . முருகன் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு அவன் பின் நடந்தோம். மனமும் நாவும் "முருகா  முருகா" என்று கூறுவதை நிறுத்தவில்லை.

சிறிது நேரம் நடந்த பிறகு ஒரு சிறு ஹோட்டல் முன்  நின்றோம். அந்த இளைஞன் " இதுதான் நான் கூறிய ஹோட்டல்; விசாரித்து கொள்ளுங்கள்" என்றான்.அந்த மேனேஜரிடம்  எங்கள் நிலையை கூறினேன்; ஒரு ரூம் தருமாறு வேண்டிக்கொண்டேன். அவர் " சரியான  நேரத்தில் வந்தீர்கள் ; இப்போது தான் ஒரு ரூம் காலி ஆயிற்று; உங்களுக்குத்  தருகிறேன்" என்றார். நாங்கள் அடைந்த  மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை".

நன்றி சொல்ல எண்ணி  அந்த இளைஞன் பக்கம் திரும்பினேன்; அவனைக்  காணவில்லை ; மேனேஜரிடம்  விசாரித்தேன் ; அவர் " அந்த இளைஞன் அப்போதே சென்று விட்டான் ; அவன் யாரென்று எங்களுக்கு தெரியாது ; அவன் இந்த ஊர்வாசியும் அல்ல " என்றார். பிரமித்து  வாயடைத்து  நின்றோம் ;  மனைவி  அந்த இளைஞன் உருவில் வந்தது நாங்கள் வேண்டிகொண்ட முருகன்  என்று உறுதியாகக்  கூறினாள். அது சத்தியம் என்றது என் மனது. முருகா!! என்னே உனது கருணை !

நீங்களே சொல்லுங்கள்! வந்தது முருகன் தானே ?

" எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பனே"

- S.KRISHNAMOORTHY, THANE
 

Arunagirinatha Oh! Arunagurunatha!



கோயம்புத்தூர்  அன்பர் கிருஷ்ணனின் பாமாலை:

அன்பர் கிருஷ்ணனுக்கு அறிமுகம் தேவை இல்லை..நம் வலைப்பூ  தொடங்கியது முதல் தம் படைப்புக்களை வஞ்சனை இல்லாமல்  வாரி வழங்குகிறார்.திருச்சூர்காரர். குரு வைத்யனாதனிடம் பயின்று வருகிறார்.பல மகான்களைப்பற்றியும் ,ஆன்மீக விஷயங்களை பற்றியும் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.வலைப்பூ ஒன்றும் தனியாக நடத்தி வருகிறார்.

புத்தாண்டு தருணத்தில் நமக்கு பிரத்யேகமாக அருணகிரிநாதர்,நம் குருஜி பேரில் இரண்டு கவிதைகளை ஆங்கிலத்தில் அருமையாக வழங்கி உள்ளார்.சில ஆலயங்களில் நாம் சில அற்புத சிலைகளை கண்டு ரசித்திருக்கிறோம்.ஒரு பக்கம் யானையாகவும் மற்றொரு பக்கம் நந்தியாகவும் தென்படும்.ஆனால் சிலை ஒன்றுதான்.அதுபோல் அருணகிரியாரும்,குருஜியும் ஒருவரே.அதை கவிதையில் உணர்த்தி இருக்கிறார். அன்பர்கள் தங்களின் மேலான கருத்துக்களை அளித்து கிருஷ்ணன் அவர்களை கௌரவப்படுத்த வேண்டுகிறோம்.   
The hill that wards of sins, karmas and Vasanas,
the hill that represents the element of fire,
the hill that liberates the soul at mere thought,
It is Tiruvannamalai hill, the abode of Arunachala.


Here, at this sacred place appeared, a brilliant star;
 the star named Arunagiri, his heart full of devotion.
Muruga appeared before him with sparkling Vel
 like thousand brilliant suns rising together.


Manifesting as Guru, Muruga rendered Upadesa,
gave him the chain of sacred beads,
enlightened him with the grace of Jnana
and transformed him into an eloquent poet.

“Sing Thiruppugazh about me”, Lord commanded
“about my abode, about my Vel and Seval”.
Then the songs of Thiruppugah flowed from the saint
rejuvenating the spirit of all devotees.

Studded with pearls of devotion and gems of wisdom,
Thiruppugazh is indeed a treasure invaluable.
As it came with the blessing of Muruga
it carried a unique divinity and power.


The light that radiated from Thiruppugazh
awakened us from the world of Maya.
It taught us the doctrine of Valli Sanmarga,
the unity of aspiring soul with eternal reality.

 
The grace that flowed from Thiruppugazh
blessed Guruji Raghavan with an endearing voice;
the voice that was picked up by thousand other voices,
the voice that is heard here and far beyond.


Blessed are the devotees gifted with Thiruppuazh;
the songs elevated them from darkness,
removed their fears and anxieties
 and gave them confidence to live a life of truth.

As I render the beautiful verses of ‘Kandar Alamgaram’
and marvel at the grandeur and majesty of Muruga
I stand folding my hands before saint Arunagiri
who wrote those marvelous verses of beauty.


Embroiled in the world of ignorance and myth
I wandered in darkness, without a hold and support
till at last I found the silver lining of ‘Anubhuti’
and experienced peace, goodwill and tranquility.


Rendering ‘Kandar Anubhuti’ gave me a direction.
As I remained quiet, still and silent,
liberated from the influence of body and mind
I was transcended to a state of bliss.


He, who renders the resplendent verses of ‘Anthadi’,
recites the names of the Lord having no beginning or end,
would experience the presence of the infinite God
in the deep recess of his heart.


Oh Arunagiri, you got the vision of Muruga
and received the saintly advice direct.
How compassionate you are to share it with us
and elevate us to your own state.

Oh Arunagiri, what a beautiful garland you weaved
with the fragrant flowers of Thiruppugazh as offering
We will adorn Muruga with this garland with devotion
and seek to remain at his Lotus Feet for ever.


Oh Arunagiri! you have come as our Guru;
gave Anbargal the nectar of Thiruppugazh,
paving the way for a life of ever-lasting happiness;
happiness not only in this life but even beyond it.


Oh Arunagiri, come to us every day and inspire us
to chant thy songs for at least ‘half a minute’
let thy words of wisdom go through ‘both my ears’
and let my heart ever brims in devotion to Muruga.
         

-------------------------------------------------------------------------------
"For all Anbargal who sing the glory of Muruga in sweet Thiruppuazh
this New Year would indeed be a memorable one.
They would receive the benevolent blessings of Muruga 
and usher into a new era of peace, happiness and prosperity. "   
-------------------------------------------------------------------------------
                                                                                                 By: V.S. Krishnan.

Sunday 16 December 2012

வழிபாடு - தேஹு ரோடு -புனே -25.12.12


ஆண்டு தோறும் டிசம்பர் 25ம் தேதி புனே தேஹு ரோடு முருகன் ஆலயத்தில் நம் வழிபாடு நடைபெறுவதை அன்பர்கள் அறிந்ததே.இந்த ஆண்டின் அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளோம்.அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு முருகன் அருள் பெற வேண்டுகிறோம்.

இந்த சந்தர்பத்தில் அமரர் முரளி நம்மிடையே இல்லாத குறையை உணர்ந்து பல அன்பர்கள் வேதனை அடைந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம் .அவரும் நம் கூடவே பயணித்து வழி நடத்துகிறார் என்ற உணர்வோடு நாம் வழி பாட்டில் கலந்து கொள்ளுவோம் .

Tuesday 11 December 2012

Smt. Lalita Nagaraj - The born Thiruppugazh singer (1943 - 2012)



I inform with profound grief the demise of Smt. Lalita Nagaraj, a Coimbatore Anbar who has dedicated her entire life for highlighting the glory of Thiruppugazh.  Smt. Lalita Nagaraj hailed from a musical family.  Her father, a great admirer of the veteran musician and actor, S.G. Kittappa, renamed himself as Kittappa.  While her husband, Nagaraj deftly handled Ginjara, her son, Manoj is a good Mridamgam player.   Just as any devotional singer, Lalita Nagaraj was also attracted to Guruji Sri A.S. Raghavan and received direct training in Thiruppugazh.  As she settled down in Coimbatore later, she has chosen this city as the ideal ground to express her Thiruppugazh passion.  She was very particular in singing Thiruppugazh in the Raaga and Thala which Guruji has prescribed.  Whenever an Anbar approached her with a request to conduct the Thiruppugazh recital at his house, Smt. Lalita readily obliged and she turned up at the premises sharply at the time specified with all her group members like Sruti, Jaya, Kamala, Kalyani etc.  It is a strange coincidence that her group members’ name also sound music.   

She even used to enquire the Anbar in advance what are the aspirations of his family and accordingly selected the suitable song for the occasion.  She used to conduct Valli Kalyanam regularly in the prescribed manner.    In fact, the name of Lalita Nagaraj has become synonymous with Thiruppugazh worship.   When Navaratri comes, Smt. Lalita Nagaraj becomes the most sought-after personality.  During the entire nine days, she used to give leadership to the scintillating music of Thiruppugazh.  In fact, her voice was heard at many residences, Sabhas, temples and halls; the voice that hailed the glory of Lord Muruga in the divine verses of Thiruppugazh.  Particular mention should be made about her sense of devotion, dedication, discipline and self-lessness.

N.V. Vaidyanathan, who too conducts Thiruppugazh classes and recitals, was one of the early callers to mourn her demise.   He recalled the song ‘Bhakthargana Priya’, where Arunagirinathar said that  he would never forget the blessings of Muruga which enabled him to take the glory of Thirppugazh to all directions of the world. (Seppena Vaithu Ulagir Parava Therisithavanugraham Maravene).  “Smt. Lalita Nagaraj has also been similarly blessed by Muruga to be able to highlight the glory of Thiruppugazh to all corners”, Sri Vaidyanathan added.  She was a born Thiruppugazh singer.  Just mention the first few words of a Thiruppugazh song to her and she would give all details about it; its Raaga, Thaala, the place from which Arunagirinathar rendered it, the song number by which it appears in the old book and the new book.  She was an ‘Encyclopedia of Thiruppugazh’.   Anbargal would very much miss her soul-stirring recital of  Thiruppugazh and Virutham from Kandar Alamgaram.  “It is very rare to see a Thiruppuhgazh singer who is as humble, as sincere and as dedicated as Smt. Lalita Nagaraj.  Hearing her singing, often I forgot myself and was immersed in her divine music, “said Sri Gopal, another ardent student of Smt. Lalita Nagaraj. ‘She was a role model of the principles of Anbu and Avirodha as set out by Guruji for Anbargal’, said another Anbar, Lakshmanan.  

Smt. Lalita was as usual conducting her classes and recitals.  Suddenly she received a stroke and her neighbours immediately admitted her in the hospital.  After being in the ICU for about a week, she was discharged and on reaching home, sitting before the portrait of Lord Muruga, she breathed her last.  Many distinguished personalities, Thiruppugazh Anbargal, friends and relations paid homage and floral tribute to her.   Some recited few songs of Thiruppugazh.  All the Anbargal prayed for her soul to rest in peace at the feet of Lord Muruga.    There is no doubt that having followed the path of Thiruppugazh and having dedicated her life for the cause of Thiruppugazh, Smt. Lalita would attain immortality.  (Mukthiye Servatharkku Arulvaaye…Bhaktiyal Yaan Unnai Palakaalum)

-V.S. Krishnan

Sunday 9 December 2012

Descent of Grace - Thirupugazh


All great works are not the result of conscious dexterity, but have come into being through sheer divine grace. In them we find inspiration for leading an upright life and, in addition, the initiation to seek the highest of human goals (Purusharthas) — salvation.

For instance, Lord Muruga chose to grace Saint Arunagirinathar who then composed the exquisite garland of hymns on Muruga that came to be known as Thirupughazh. This sacred text is an ocean of infinite riches whose extent or depth remains beyond any measurable standards. What we gain from it depends on what we desire and on the amount of our individual effort. If the themes dealt with are encyclopedic and drawn from the Puranas and literatures, the poetic excellences of the hymns are equally unique. There is a remarkable blend of sound and sense in keeping with grammar, prosody, diction, rhyme, rhythm, etc. To top it all is the offer of spiritual upliftment to the seeker. We are drawn into the enriching experience of God by the soul-stirring hymns which philosophical discussions, debates or researches might have failed to generate in us.

The magnetic effect of Thirupughazh is manifest in the encomiums that saints and devotees alike have showered on it.

The hymns reflect the saint’s personal rapport with Muruga, but yet they carry a universal appeal of the individual soul yearning for the union with the Absolute Reality.

It has the effect of the power of Mantras which can help us to deal with and tide over the many unexpected, sometimes surprising and at times even the everyday problems in life. The devotional path is kept ever active by the Supreme Lord who takes many forms and reveals Himself to those who seek him sincerely. Muruga came in different forms to seek Valli who was steeped in His thoughts. God is drawn to His Bhakta and never fails to respond to his sincere yearning. Bhakti is thus the most efficacious in spiritual search. But it becomes effective only if God comes to you to reciprocate your Bhakti. God will lead us to Him.

Thirunavukkarasar states emphatically that he found the Almighty who remained elusive to the grasp of many including Brahma and Vishnu, within his own heart.
religious discourseSri Mathivannan

Thursday 6 December 2012

Dhinamani Review on Chitra Murthy's Musical Discourse

The review published in Dhinamani (dated 18th Nov'12) on Chitra's Musical Discourse on "Thiruppugazhil Ramayanam" at Anantha Padmanabaswamy Temple,Adyar, Chennai.

                                                                                                                                                                                                                                                             

ஸ்ரீ வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்- ஸாந்தா & ஸுந்தரராஜன்


தாங்கள் கார்திகை மூலம் அன்று நடந்த இசை வழிபாடின் போது வள்ளிமலை ஸ்வாமிகள் பற்றிய அளித்த குறிப்பை படித்தோம். பரவசமடைந்தோம். அதைப்பற்றி மனதில் ஒடின சிந்தனைகளின்  எழுத்து வடிவாக்கம் இதோ

 ஸ்ரீ வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் பழநியாண்டவன் சந்தியில் திருப்புகழைக் கேட்டு பராசக்தியின் அருளால் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளின் மூலமாகத் திருப்புகழையே மகாமந்திரமாக ஏற்று, தவநில மேற்கொண்டு அரிய சக்திகளை பெற்று அருணகிரியாரின் திருப்புகழைப் பரப்பி தெய்வ நம்பிக்கையும் முருக பத்தியும் தழைக்கச் செய்யும் அருட்பணியை மேற்கொண்டிருந்தார்.

-       சுவாமிகளின் புகழ் பற்றி ஒரே வரியில் பரணிதரன் எழுதியது

திருப்புகழ் ஸ்வாமி என்னும்பெயர் உடையாய்!
சேஷாத் திரிப்பெயர் மாமுநி உனக்குத்
‘திருப்புக ழேமஹா மந்திரம்’ என்று
செப்புப தேசத்தால் தீஷைசெய் தருளக்
குருப்புகழ் பெற்றந்த வேங்கட ரமணர்
கோவணங் கோல்கொண்ட கோலங்கண் டுருகும்
தருப்புக ழார்வள்ளி மாமலை ஸச்சி
தாநந்த! நீபள்ளி எழுந்தரு ளாயே!

-       ஸ்வாமிகள் மீது திருப்ப்பள்ளி எழுச்சி – அருட்கவி ஸாதுராம் ஸ்வாமிகள்

சச்சிதானந்த ஸ்வாமிகளுடைய வாழ்கை வரலாறு பற்றிய செய்திகள் திரு ஆர். கல்யாண சுந்தரம், ஸ்வாமி அன்வானந்தா அவர்கள் எழுதியிருக்கும் நுல்களிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. அந்த புத்தகங்கள் தற்சமயம் பதிப்பில் இல்லை. அன்பர்களிடையே யாரிடமாவது இருந்தால் அவர்கள் அதை இணையத்தில் இடலாம். பெங்களூர் அன்பர்கள் அருணகிரிநாதரின் 600 ஆன்டு விழாவின் போது வெளியிட்ட மலரில் ஸ்வாமி அன்வானந்தா எழுதிய ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் வெளி வந்திருக்கிறது.

 ஸ்வாமிகளுடன் நேரில் கிடைத்த அனுபவங்களை ஸ்ரீ பி ஸ் கிருஷ்ண ஐயர் எழுதின கட்டுரை  “My experience with Vallimalai Satchidananda Swamigal" தமிழ் ஆக்கம் செய்யப் பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கொடுக்கப்பட்ட  சில விபரங்கள்:

பழனியில் இருந்த ஸ்வாமிகளை முருகப் பெருமானே திருவண்ணா மலைக்குப் போகச் சொன்னாராம். அருணகிரிநாதர் அவதரித்த அந்த இடத்தில் ஸ்வாமிகளுக்கு ரமண முனிவருடன் தொடர்பு ஏற்படும் எனவும், அப்பொழுது தானும் அங்கு வந்து அவருக்கு தரிசனம் தருவதாகவும் கூறி இருந்தாராம். ரமண முனிவரின் உருவில் தண்டாயுதப்பாணி பெருமான் அவதரித்து இருந்ததை ஸ்வாமிகள் கண்டார். அந்த இடத்தில் ஸ்வாமிகள் திருப்புகழின் அனைத்துக் காண்டங்களையும் ( translation error) கற்று அறிந்தார். கடவுளின் அருளினால் அதை முழுமையாகக் கற்றுத் உருக்கமாகப் பாடக் கூடிய அளவில் தேர்ச்சி பெற்றார்.  ஆனால் ரமண மகரிஷியின் கட்டளையால் அவருக்கு சேஷாத்ரி ஸ்வாமிகளை குருவாக ஏற்க வேண்டியதாயிற்று. அவர்தான் திருப்புகழ் என்பது மகா மந்திரம் எனவும், அதைப் பாடினால் வேண்டிய அனைத்துமே வாழ்வில் கிடைக்கும் எனவும் ஸ்வாமிகளிடம் கூறியவர். ஆதி சங்கரர் இயற்றிய 'சிவமானசீகபூஜா' என்பதில் இருந்த நான்காம் ஸ்லோகத்துடன் 'ஆகைக்கோர் பக்தன்' என்ற திருப்புகழ் மந்திரப் பாடல் எந்த அளவு ஒத்து இருந்தது எனப் பாடிக் காட்டினாராம். அதன் பின்னர் சேஷாத்திரி மகான் ஸ்வாமிகளை கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள முருகன்-வள்ளி இருவரும் வசிக்கும் இடமான வள்ளி மலைக்குச் செல்லுமாறு ஆணை இட்டார்.

மேலும்

“அர்த்தநாரி என்ற இயற்பெயர் கொண்ட திருப்புகழ் சுவாமிகள் முருகன் அருள் நிரம்பப் பெற்றவர். அவர் தன வட நாட்டு யாத்திரையை முடித்துக் கொண்டு திருவண்ணா மலை வந்து ரமண மகரிஷிக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவரை நோக்கிய ரமணர் `மலையிலிருந்து கீழே இறங்கி போங்கள்` என உத்தர விட்டார். தான் என்ன தவறு செய்தோம் என்று கலங்கிய திருப்புகழ் சுவாமிகள் குருவின் கட்டளைக்குப் பணிந்து மலையை விட்டு கீழே இறங்கினார். மலை அடிவாரத்தில் சேஷாத்திரி ஸ்வாமிகள் எதிர் கொண்டார். திருப்புகழ் சுவாமியை கண்டதும் ‘சின்ன ஸ்வாமி கீழே அனுப்பினாரோ’ என்று கேட்டு விட்டு சிவ மானஸ பூசை ஸ்லோகத்தின் 5 வது ஸ்லோகத்தை கூறி அதன்  விளக்கமாக  சேஷாத்ரி சுவாமிகள் தொடர்ந்து சொன்னது:

"நீ இனி பாஹ்ய பூஜை (வெளிப்படையாகச் செய்யும் பூஜை) செய்தால் மட்டும் போதாது. உன் எண்ணங்களும் காரியங்களும் உனக்காக என்று கருதுவதை விட்டு, அனைத்தும் தெய்வத்தின் பொருட்டு என்ற மனோ நிலையை  ஸ்திரமாகக் கொள்வாயாயின், 'நான் - பிறர்' என்ற பேதங்களெல்லாம் அற்ற உயர்ந்த பதவியை அடைவாய். இதே கருத்துக்கு சமமான கருத்துள்ள திருப்புகழ் பாட்டு ஏதும்  இருக்கிறதா” என்று கேட்டார்.  அதற்கு ஸ்வாமிகள் “ஆசைக்கூர்’ பாடலை பாடி காண்பிக்கவும் சேஷாத்ரி சுவாமிகள் மிகவும் சந்தோஷப்பட்டு "திருப்புகழே  மகா மந்திரம்; அதுவே உனக்குப் போதுமானது; வேறு நூல்கள் எதுவும் நீ படிக்க வேண்டாம். வள்ளி மலைக்குச் சென்று அங்கு தவம் செய்து கொண்டிரு. பின்னர் நான் அங்கு வந்து சேர்கிறேன்", என்றார்.  

இது சேஷாத்திரி ஸ்வாமிகளின் வரலாற்றில் இடம் பெற்ற தகவல்

அந்த சிவ மானஸ ஸ்தோத்திரத்தை முழுவதும் பார்கலாமா?

ஆராதயாமி மணி ஸந்நிபம் ஆத்மலிங்கம்
மாயாபுரி ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்
சிரத்தா நதீ விமலசித்த ஜலாபிஷேகை:
நித்யம் ஸமாதிகுஸுமை: அபுநர்பவாய

மாயையான   உடலிலுள்ள ஹ்ருதய கமலத்தில் ஸ்படிகம் போல்
வெண்மையாகப் பிரகாசிக்கும் ஆத்ம லிங்கத்தை, ஸ்ரத்தை என்னும்
நதியிலிருந்து நிர்மலமான சித்தம் என்னும் ஜலத்தினால் அபிஷேகம் செய்து,
ஸமாதி என்னும் புஷ்பங்களால் மீண்டும் பிறவாத வரமருள ஆராதிக்கிறேன்.

ரத்னை கல்பிதமாஸநம் ஹிமஜலை: ஸ்நாநம் ச திவ்யாம்பரம்
நாநாரத்ன விபூஷிதம் ம்ருகமாதா மோதாங்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே ஹ்ருத்கல்பிதம் க்ருஹ்யதாம்

கருணைக்கடலே! தயாநிதே பசுபதே! பசுபதே
நவரத்தினங்கள் இழைத்த ஆசனமும், பன்னீரால் திருமஞ்சனமும், திவ்யமான பட்டாடையும், சுந்தராபரணங்களும், கஸ்தூரி கமழும் சந்தனமும்,
ஜாதீ, சம்பகம், பில்வபத்ரம் போன்ற புஷ்பங்களும், தூப, தீபங்களும்
என் மனத்தாலே ஸங்கல்பித்து ஹ்ருத்கல்பிதம் அளிக்கிறேன்.
ஏற்றுக் கொள்வீர் க்ருஹ்யதாம்.

ஸெளவர்ணே நவரத்னகண்டரசிதே பாத்ரேக்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பாபலம் பாநகம்
சாகாநாமயுதம் ஜலம் ருசிகரம் கர்பூரகண்டோஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயாவிரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

உயர்ந்த ரத்னங்கள் இழைத்த ஸுவர்ண பாத்ரத்தில் நெய்யும், பாயசமும், பஞ்ச பக்ஷணங்களும், பால், தயிர், வாழைப்பழம், பானகம்,  பல காய்கறிகள், ருசியுள்ள நிர்மலமான ஜலமும், பச்சைக் கர்ப்பூரம் கலந்த தாம்பூலமும் பக்தியுடன் மனதால் ஸமர்பிக்கப்படுகிறது, அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள் ப்ரபுவே! (ப்ரபோ ஸ்வீகுரு).

சத்ரம் சாமரயோர் யுகம் வ்யஜனகம் சாதர்கம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க காஹலகலா கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி ஸ்துதிர் பஹுவிதாசை தத் ஸமஸ்தம் மயா
ஸ்ங்கல்பேன ஸ்மர்ப்பிதம் தவவிபோ பூஜாம் க்ருஹாணாப்ரபோ

குடையும், சாமரங்களும், விசிறியும், நிர்மலமான கண்ணாடிகளும்,
வீணை, பேரி, மிருதங்கம், எக்காளம் முதலிய வாத்ய கோஷங்களுடனும்,
பாடல்களுடனும், பல ஸ்தோத்திரங்களுடன் ஸாஷ்டாங்க நமஸ்காரமும்
மனதால்  மயா ஸ்ங்கல்பேன அளிக்கிப்படிகிறது ஸ்மர்ப்பிதம்.
என் பூஜைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் ப்ரபோ! (க்ருஹாணாப்ரபோ).

ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசநா நித்ரா ஸ்மாதிஸ்திதி:
ஸ்ஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத் யத் கர்ம கரோமி தத்தகிலம் சம்போ த்வாராதநம்

தாங்களே நான், என் புத்தியே பார்வதி , பஞ்சப்ராணன்களே பணியாட்கள். என் உடம்பே உமது திருக்கோவில். நான் நுகரும் விஷயாதிகளே உமக்கு அளிக்கும் பூஜை. என்உறக்கமே சமாதி நிலை. என் கால்களின் நடையெல்லாம் அனைத்துமே உன்னைப் பிரதட்சணம்  செய்வதாகும்.
பேசுவதெல்லாம் உன் ஸ்தோத்திரமாகும்.
நான் எந்தெந்த காரியங்கள் செய்கிறேனோ,(யத் யத் கர்ம கரோமி)
அவை னைத்துமே (தத்தகிலம்)
ஓ சம்புவே, உனக்கு நான் செய்யும் ஆராதனையாகும்' (சம்போ த்வாராதநம்.)
கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ச்-ரவண நயனஜம் வா மானஸம் வாபராதம்
விதிதம் அவிதிதம்-வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சிவசிவ கருணாப்தே ஸ்ரீமஹாதேவ சம்போ

மங்கள ஸ்வரூபராண கருணைக்கடலே! மகாதேவ சம்போ! அடியேன் கைகளாலும், கால்களாலும், கரசரணக்ருதம் வாக்காலும், வாக்காயஜம் உடலாலும், கர்மஜம் வா காதுகளாலும், கண்களாலும், ச்-ரவண நயனஜம் மனத்தாலும், மானஸம் விதிப்படியும், விதிப்படி இல்லாமலும், பலவித குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் அடியேனை மன்னித்து ஆட்கொள்வீராக (க்ஷமஸ்வ)
.

இப்பொழுது ஸ்வாமிகள் பாடின திருப்புகழ் பாட்டை பார்போமா?

உன் மீது நான் கொண்ட ஆசையினால் என்னுடைய மனம் என்ற தாமரை மலரை எடுக்கிறேன்.  அன்பு என்ற நாரினால் ஒரு மாலை தொடுக்கிறேன் என் நாக்கு என்ற இடத்தில். அதில் ஞானம் என்ற வாசனையைப் பூசுகிறேன். அந்த மாலை பளீரென விளங்க வேண்டும். அறிவு, அதுவும் குற்றமில்லா அறிவு, என்ற வண்டு அங்கு சுற்றட்டும். 51 அக்ஷரங்களான அந்த மாலையை உன்னுடைய பவளம் போல் விளங்கும் உன் பாதங்களில் அளிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டுமா?

திரும்பவும் ஆத்மா த்வம் கிரிஜா ஸ்லோக பொருளை படிக்கவும். ஒன்றாக இல்லை?

உங்கள் 

ஸாந்தா 
ஸுந்தரராஜன்