Sunday 29 July 2018

ஆடி கிருத்திகை


                                                                                  ஆடி கிருத்திகை வழிபாடு 
                                                                                                 


                                                                                                  
 ஆடி கிருத்திகை வழிபாடு வழக்கம்போல்  வரும் ஆகஸ்ட் 5 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நவி மும்பை ஸ்ரீ வள்ளி தேவா சேனா சமேத பிரசன்ன கல்யாண சுப்ரமணிய ஸ்வாமி திருகி கோயிலில் பிற்பகல் மணி அளவில் ஸஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி  திருப்புகழ் இசை வழிபாடு நடை பெற உள்ளது .மும்பை புனே அன்பர்கள்,மற்றும் நகருக்கு விஜயம் செய்யும் மற்ற அன்பர்களும் பெருமளவில்  கலந்துகொண்டு பெருமானின் பேரருள் பெற வேண்டுகிறோம்.

                                                                                            அழைப்பிதழ்
                                                                                                 


மற்றும் நம் குருஜியின் ஜெயந்தி விழா வரும் செப்டெம்பர் முதல் நாள் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் அதே  திருக்கோயிலில் நடை பெறஉள்ளதையும் அன்பர்கள்  நினைவு கொள்ள வேண்டுகிறோம் 

                                     முருகா சரணம் 

Friday 27 July 2018

அபிராமி அந்தாதி - 35

                                           அபிராமி அந்தாதி - 35
                                                                                                                                                                                                                                        
                                                                                                                                                                                                               
திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெண்கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே!

இங்கே பட்டர், அன்னையே விஷ்ணு என்று பாடுகிறார்.


விஷ்ணுவானவள், விஷ்ணுவின் சக்தியானவள் என்று லலிதாசஹஸ்ரநாமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
892. வைஷ்ணவி - விஷ்ணுவின் சக்தியாக இருப்பவள்.
893. விஷ்ணுரூபிணி - விஷ்ணு ரூபமாக இருப்பவள். ( அதாவது லஷ்மீ ரூபமானவள்)
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி 
சந்திரன், யார் தலை மேல் இருக்கிறான்? சிவ பெருமான் தலை மேலே. அப்படி இருக்கும் சந்திரனின் மேலே அம்பாளின் கால் பட வேண்டுமானால், என்ன நடந்திருக்க வேண்டும்?

ஊகிப்பது சுலபம் இல்லையா! அம்மையின் காலடியிலே, சிவ பெருமான், விழுந்திருக்க வேண்டும். ஊடல் காலத்தில், அம்மையின் ஊடல் தீர்க்க, சிவ பெருமான் விழுந்த்தனால்தான், சந்திரனின் மேல் அம்மையின் காலடி பட்டு, அந்தச் சந்திரன் முழுக்கவே, மணம் வீச ஆரம்பித்து விட்டது.

சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா? 

அப்படிப்பட்ட திருவடி தமது தலை மேலே பட, நான் என்ன தவம் செய்தேனோ என்று வியக்கிறார் பட்டர். இந்தத் தவம் விண்ணவரும் கூட செய்த்தில்லை. அவர்களுக்கும் கூட, இந்தத் திருவடித் தாமரையானது சென்னியிலே விழவில்லை. அப்படி இருக்க, தான் செய்த தவம் என்ன என்று வியந்து போற்றுகிறார் பட்டர்.
இங்கே ஓர் வியப்பு என்ன தெரியுமா? சிவபெருமான் விரும்பி வேண்டி, அன்னையின் திருவடிகளை எடுத்துச் சூடிக்கொள்கிறார். அன்னையோ, அடியவர்கள் தவம் இருக்கும்போது, அவளாக வலிய வந்து அத் திருவடிகளைச் சூட்டுகிறாள்.
பெருந்தவத்தின் பயன் - அன்னை அபிராமி அகமகிழ்ந்து தன் திருவடிகளை தலையில் வைத்தாளாம். ' சென்னியது உன் பொற் திருவடித்தாமரை' ( 6 ) என்றும் முன்னும் சொன்னார் அல்லவா! ' எங்கட்கு  என்று பன்மையில் கூறியது அவர் ஒரு சிறந்த தேவி உபாசகர் என்று காட்டுகிறது. தேவி உபாஸகர்களுக்கு ஏழு தலைமுறை குருமார்களை வணங்கிவிட்டு பின்னே தான் பூஜையை ஆரம்பிப்பர், அதனால் பன்மையில் குறிப்பிட்டுள்ளார்.
அபிராமிபட்டர் இதே செய்தியைப் பல இடங்களில் சொல்லப் போகிறார்; அவருக்கு சொல்லச் சொல்லச் சுவைகூட்டும் செய்தி இது. அம்பிகையின் திருவடிகள் அத்தனின் திருமுடியில் இலங்குவதை எண்ணி வியந்தவர், பின்னர்" பனிமாமலர் பாதம் வைக்க மாலினும் தேவரும் வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின் மேலினும் " ( 60) என்பார். சங்கரனார் தமது திருக்கைகளினால் அபிராமியின் தாமரை புரையும் திருவடிகளைத் தடவித் தம் முடியில் சூடியதனைத் " தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்கு " என்று சொல்வார் ( 98 - ஆம் பாடல்)


எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? 
எண்ணிக்கையில் அளவில்லாத விண்ணில் வாழும் விண்ணவர்கள் தங்களுக்கும் இந்த தவம் கிடைக்குமா?
தரங்கக் கடலுள் - அலைவீசும் பாற்கடலில் 

வெங்கண் ...............- வெப்பம் ததும்பும் கண். வெப்பத்தால் சிவந்த கண்களையுடைய 

பணி .............-         பாம்பு, 
அனை .................- தலை அனை போல. அதாவது பாம்பு படுக்கை.
துயில் கூரும் விழுப்பொருளே 

துயில் கொள்ளும் பரம்பொருளே! (விஷ்ணு ரூபிணியான வைஷ்ணவியே) !


                                                         பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்
                                                                              அன்பர்கள்                                                                                  
                                                                                      

                                                                                அபிராமி சரணம் சரணம்!!
                                                                                             முருகா சரணம் 

Monday 23 July 2018

சுப்ரமண்ய புஜங்கம் 21

சுப்ரமண்ய புஜங்கம்   21
चण्डेषु कोपाद्
दहच्छिन्द्धि भिन्द्धीति मां तर्जयत्सु ।
मयूरं समारुह्य मा भैरिति त्वं
पुरः शक्तिपाणिर्ममायाहि शीघ्रम् ॥२१॥
க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷுகோபாத்
தஹச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு |
மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம்
புர : ஸக்திபாணிர் மமாயாஹி ஸிக்ரம் ||
க்ருதாந்த: னா எமன்,
 ‘க்ருதாந்தஸ்ய தூதேஷு’ – எமனுடைய தூதர்களால்,
அவா எப்படி இருக்கான்னா – 
‘சண்டேஷு’ – ரொம்ப உக்ரமா இருக்கா, பயங்கரமா இருக்கா.
‘கோபாத்’ – அவா கோபத்தோடு ‘
தஹ’ – எரி இவனை. 
‘ச்சிந்தி’ – வெட்டு, 
‘பிந்தி’ – இவனை வெட்டி இரண்டா பிளந்து போடு.
இப்படியெல்லாம் 
‘மாம் தர்ஜயத்ஸு’ – என்னை அதட்டி பயமுறுத்தி ஹிம்ஸை பண்றா. அப்போ
‘ஹே ஸ்வாமின்’ – ஹே குமாரக் கடவுளே ‘ 
த்வம்’ – நீ ‘சக்திபாணி’ கையில் வேலோடு
‘மயூரம் ஸமாருஹ்ய’ மயில் மேல் ஏறி என் முன்னாடி வந்து 
‘மா பைஹி’ பயப்படாதே என்ற உபதேசத்தை பண்ணி ‘
இதி மம புர:’ என் முன்னாடி 
 ஷீக்ரம் ஆயாஹி= சீக்கிரம் வந்து அபயத்தைக் கொடு
‘மா பைஹி’ என்ற வார்த்தைகளைச் சொல்லி அபயம் கொடுன்னு கேட்கறார்

.இந்த பயப்படாதேன்னு குரு சொல்ற வார்த்தை அது சொன்ன நாள்லேயிருந்து உயிர் பிரியற நாள் வரைக்கும் கூட துணையாக நிற்கும். ‘பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’ அப்டினு சொன்னா மாதிரி அந்த ‘மா பைஹி’ எங்கறது ஒரு மந்திரம். அது கொடுக்கற தைரியம், எத்தனை ஜன்மா வேணா எடுக்கலாம். அவ்ளோ தைர்யம் கொடுக்கும்.
இந்தக் கடைசிக் காலத்துல படுக்கையில படுத்த படற அவஸ்தையை  முருகப் பெருமான் வந்து காப்பாத்தணுங்கிற வேண்டுதல் அருணகிரி நாதரும் சில பாடல்கள்ல சொல்லியிருக்கார்.
‘தலைவலி மருத்தீடு’ன்னு பழனித் திருப்புகழ் ஒண்ணு. பெரிய பாட்டு. அதுல பல விதமான வியாதிகள் வந்து அது ஒவ்வொண்ணுக்கும் பேர் வெச்சுடறா. வயசான காலத்தில காது கேட்க மாட்டேங்கிறது. கண் தெரிய மாட்டேங்கிறது.  இப்படி இருக்கும் போது,
” …உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம்
உனதடியினிற் சூடவே நாடு மாதவர்கள் இருபாதம்
உளமது தரித்தே வினாவோடு பாடியருள்
வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ
உரகமதெடுத்தாடும் ஏகார மீதின்மிசை. வரவேணும் ..”
அழகான பூக்களை தேர்ந்து எடுத்துத் தொடுத்து, மாலையாக பண்ணி உன்னுடைய பாதத்துல போடறதில சந்தோஷப் படற அடியவர்களுடைய திருப்பாதங்களை என்னுள்ளத்தில் தரித்து, எனக்கும் அந்த பக்தி வருமா, மோக்ஷம் கிடைக்குமா, எனக்கும் அந்த முருகப் பெருமானுடைய பக்தர்கள் கூட்டத்தில் சேர முடியுமா அப்படின்னு ஏங்கி வேண்டிண்டு, அந்த தயவுக்காக காத்திருக்கும் எனக்கு உதவ, உரகமது (வாசுகி என்ற பாம்பை) எடுத்தாடும் அந்த மயில் ‘ஏ’கார மீதின் மிசை வரவேணும்ன்னு ஒரு பாட்டுல சொல்றார்.

பாடலை குருஜியுடன் சேர்ந்து இசைத்து அருள்  வேண்டுவோம் 



                                                                                                           
"பஞ்ச பாதகம் உறுபிறை "எனத் தொடங்கும் பாடல் 

நீடிய கருமுகில் உருவொடு பண்பிலாதொரு பகடது முதுகினல் யமராஜன் அஞ்சவே வரும்

 அவதரம் அதிலொரு தஞ்சமாகிய வழி வழி அருள் பெறும்அன்பினால் உனதடி புகழடிமை என் எதிரே  வரவேணும் எப்படி வரவேணும்..


அண்ட கோளகை வெடிபட இடிபட எண்டி சாமுக மட மட நடமிடும் அந்த மோகர மயிலின் இயலுடன் வர வேணும் "


பாடலை குருஜியுடன் சேர்ந்து இசைத்து அருள்  வேண்டுவோம் 



                                                   முருகா சரணம் 

Thursday 19 July 2018

அபிராமி அந்தாதி - 34



                                                   அபிராமி அந்தாதி - 34
                                                                                        

                                                                                         

                                                                                                     


வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந்தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந்தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே :


அன்பரின் விளக்கவுரை 



இந்தப் பாடலில், பட்டர் நமக்கு, அன்னையின் ஸ்வரூபத்தினை அழகாகக் காட்டுகிறார்

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு - தன் திருவடிகளை வந்தடைந்த அடியார்களுக்கு அன்னையின் பரிவோடு வானுலகம் தந்து


யார் யாரையோ தேடிப் போகாமல் தாய் உள்ள இடத்தை அறிந்து வந்துசரணம் புகுகிறவர்கள் அடியார்கள். தாயினிடம் ஓடிவந்து காலக் கட்டிக்கொள்ளும் குழந்தையை அன்னை உடனே எடுத்துக் கொஞ்சுவாள்.  அவர்களுடைய பழைய நிலையை யும் இப்போதுள்ள ஆர்வத்தையும் கண்டு அன்னை பரிவோடு நோக்குகிருள். இவர்கள் சில காலம் இந்தப் போகத்தை நுகரட்டும் என்று அமரல்ோக வாழ்வை அருளுகிருள். பக்தர்களுக்கு இனிய போக வாழ்வைத் தருகிறவள் அன்னை!!
தான் போய் இருக்கும் - (அன்னை அபிராமி) என்றும் இருக்கும் (இடங்கள்):

அன்னை என்பது யார்? எங்கெல்லாம் அவள் இருக்கிறாள்? யாராகவெல்லாம் அவள் இருக்கிறாள்?

சதுர்முகமும் - வேதங்களை ஓதி உலகங்களை எல்லாம் படைக்கும் நான்முகனின் திருமுகங்கள் (கலைமகளாக).





லலிதா ஸஹஸ்ரநாமத்தில எப்படியெல்லாம் அன்னையை அர்ச்சனை பண்ணுகிறார்கள் வாக்தேவதைகள்னு பார்ப்போமா!!

ஸஹஸ்ராராம்புஜாரூடா (105) .
ஸஹஸ்ரதள பத்மஸ்த்தா ( 528) என்ற திருநாமங்கள் அன்னைக்கு உரியவைஆயின.
452.தேஜோவதி - தேஜஸ்ஸை உடையவள்.
117. பக்த ஸௌபாக்யதாயினி - பக்தர்களுக்கு ஸௌபாக்கியத்தைத் தருபவள்

 201. ஸக்கதிப்ரதா - நல்ல கதியை வழங்குபவள்.
692 ஸாம்ராஜ்யதாயினீ - பக்தர்களுக்கு ஸாம்ராஜ்யத்தைக் கொடுப்பவள்.

675. ப்ராஹ்மீ - ப்ரம்மாவின் பத்னீயான ஸரஸ் திவாக்வடிவானவள்.
704. ஸரஸ்வதி - ஞான அபிமான தேவியான ஸரஸ்வதியாக இருப்பவள்.
313. ரமா - லஷ்மீ ரூபமாக இருப்பவள்

 892. வைஷ்ணவி - விஷ்ணுவின் சக்தியாக இருப்பவள்.
265. ப்ரஹ்மரூபா - ப்ரஹ்மாவின் வடிவமாயிருப்பவள். படைக்கும் தொழிலைச் செய்யும் ப்ரஹ்மா பரம்பொருளின் வடிவமான தேவியின் மாயையினால் வேறுபடுத்திக் காட்டப்பட்ட உருவம்.
266. கோப்த்ரீ - காத்தல் என்ற தொழிலைச் செய்கிறவள்.படைக்கப்பட்ட ப்ரபஞ்சத்தை தேவி தன்னுடைய ஸத்வகுண ப்ரதானமான வடிவினால் காக்கிறாள்.
269. ருத்ர ரூபா - ருத்ரன் வடிவானவள். பரம்பொருளான தேவியின் தமோகுணம் மிகுந்த வடிவு ருத்ரன். இது உலகை ஸம்ஹாரம் செய்கிறது.
ஆக அன்னை அபிராமி, பிரம்மனின் திருமுகங்களிலும், திருமாலின் மார்பிலும், சிவபெருமான் இடது பாகத்திலும், பொற்தாமரையிலும், கதிரவனிலும், சந்திரனிடத்தும் போய்த் தங்குகிறாள் என்று ஆறு இடங்களைச் சொல்லுகிறார்.
சிவன் அக்னியில் சிகையிலிருப்பதாகவும், அம்பாள் சந்த்ரமண்டலத்திலிருப்பதாகவும் சிவபுராணம் கூறுகிறது. ' சந்த்ர மண்டலமே ஸ்ரீ சக்ரம். ஸ்ரீ சக்ரமே அன்னை என்பது ரஹஸ்யம்.
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் -

 நறுந்தேன் நிரம்பிய மலர்களால் ஆன மாலைகளும் பெரிய மாணிக்க மாலைகளும் விளங்கும் திருமாலின் நெஞ்சகமும் (திருமகளாக)

பாகமும் - சிவபெருமானின் உடலில் ஒரு பாகமும்

பொற் செந்தேன் மலரும் - பொன்னிறத்துடன் நறுந்தேனை உடைய தாமரை மலரும்

அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே 

அடுத்து சொல்வது, சூரியனும், சந்திரனும், பகலில் சூரியன் ஒளி தருகிறான். இரவில் சந்திரன் ஒளி வீசுகிறான். இவை காலம் தவறாமல் தன் கடமையைச் செய்கின்றன. இந்நிலையில் சிறிது தவறினாலும் பிரபஞ்சத்தின் போக்கில் பெரிய மாறுதல்களும், துன்பங்களும் உண்டாகும். இந்த இரண்டு மண்டலங்களும் வழுவாமல் ஒளி வழங்குவதற்கு காரணம் இவற்றினூடே அன்னை அபிராமி இருந்து இயங்குவது தான்னு சொல்றார்.
                                                     பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்


                      
                                                                                        அன்பர்கள் 


                                                                                                                                                                  

                                         அபிராமி சரணம் சரணம்

                                                 முருகா சரணம் 
       

Monday 16 July 2018

சுப்பிரமணிய புஜங்கம் ..20


                                               சுப்பிரமணிய புஜங்கம் ..20

                                                                             
प्रशान्तेन्द्रिये नष्टसंज्ञे विचेष्टे कफोद्गारिवक्त्रे भयोत्कम्पिगात्रे ।
प्रयाणोन्मुखे मय्यनाथे तदानीं द्रुतं मे दयालो भवाग्रे गुह त्वम् ॥ २०॥

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே |
ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் ||
‘என்னுடைய கடைசி காலத்துல நீ என் முன்னாடி வந்து தர்சனம் கொடுத்து என்னை காப்பாத்த வேண்டும்’ ன்னு சொல்றார். நமக்கு கடைசி காலம் என்னிக்கின்னு நமக்கு தெரியாது.  நாம ரொம்ப சாஸ்வதமா இருக்கப் போறோம்னு நம்பிண்டு இருக்கோம். ஆனா நம் உயிர் பகவான் கையில தான் இருக்கு. அப்படி அந்த உயிர் பிரியறதுக்கு முன்னாடி, ‘ஜீவஸ்ய தத்துவ ஜிக்ஞாஸா’ ன்னு, இந்த ஜன்மா கொடுத்ததோட காரணமே, இதோட தத்வம் என்னன்னு விசாரிச்சு, உண்மையை உணர்ந்து காம, க்ரோத, மோகமெல்லாம் போய், பரம சாந்தமாகி உண்மையை அறிந்த பின்ன இந்த உடம்பிலேர்ந்து உயிர் பிரிந்தால், அதுக்கு மரணம்-ன்னு பேர் கிடையாது. அதற்கு பேர் அமிர்தம்-ன்னு பேரு, அந்த அமிர்தத்வத்தை அடையறதுக்காகத் தான் இந்த ஜன்மா. அப்படி நமக்கு உயிர் பிரியறதுக்கு முன்னாடி உண்மையை உணர்வதற்கு நாம முயற்சி பண்ணிண்டிருக்கணும். அந்த மாதிரி ஞானம் ஏற்படுவதற்கு முன்னாடி உயிர் பிரியாமல், அந்த கடைசி நேரத்துலேயாவது பகவத் தர்சனம் கிடைக்கணும். ஜன்மா முழுக்க நாம் பகவானை த்யானம் பண்ணிண்டு, பஜனம் பண்ணிண்டு இருந்தா தான் அந்த கடைசி நிமிஷத்துல பகவானோட ஞாபகம் வரும். அப்படி முருகா, நீ வந்து என்னை காப்பாத்தணும் என்கிறார்.
அந்த இறுதி கட்டத்தில் நாம் இருக்கும் போது, அந்த நிலைமை என்னங்கறதை வர்ணிக்கிறார்.
 ‘ப்ரசாந்தேந்த்ரியே’ – 

இந்திரியங்கள் எல்லாம் அடங்கி போயிடறது. கண்ணு பார்க்கறது கிடையாது, காது கேட்கறது கிடையாது, கடைசி நேரத்துல.
 ‘நஷ்டஸம்க்ஞே’ 
ஞாபக சக்தியும் போயிடறது. 
‘விசேஷ்டே’ – கை, கால்லாம் ஒரு சேஷ்ட்டையும் பண்ண மாட்டேங்கறது. அடங்கி போயிடறது 
‘கபோத்காரி வக்த்ரே’ – தொண்டையில கபம் அடைச்சுக்கிறது. பகவானோட நாமத்தை கூட, முருகான்னு சொல்றதுக்கு கூட தொண்டை வர மாட்டேங்கறது.
‘பயோத்கம்பி காத்ரே’ – எமபடர்கள் கனவுல வந்து பயமுறுத்தறா. அதனால உடம்பெல்லாம் நடுங்கறது. 
‘ப்ரயாணோன்முகே’ அந்த நீண்ட யாத்திரை, உள்முகமா தயார் ஆகிடறோம், இந்த உடம்பை விடப் போறோம், யம லோகத்துக்கு போகப் போறோம், அந்த மாதிரி நிலைமையில 
‘மய்யநாதே’ – அனாதையான என்னிடத்தில், பிள்ளைக்கிட்ட சொல்ல முடியுமா , பொண்டாட்டிகிட்ட சொல்ல முடியுமா, யாருமே அந்த நிலையில் நாதன் கிடையாது . பகவான் ஒருத்தர் தான் நாதன்ங்கற அறிவு இருந்தாதான், அந்த நேரத்துல பகவான் வந்து காப்பாத்துவார், 
‘ததானீம்’ – அந்த நேரத்தில் 
‘த்ருதம்’ – வெகு விரைவாக ‘
மே அக்ரே’ – எனக்கு முன்னாடி வந்து முருகா
 ‘பவ த்வம்’ – நீ காட்சி தர வேண்டும். 
அருணகிரி நாதப் பெருமான் நிறைய பாடல்கள்ல இந்த மாதிரி ‘எம பயத்திலிருந்து தன்னை மீட்கணும்’  என்று இறைஞ்சுகிறார்.
நீலச் சிகண்டியிலேறும் பிரான் எந்த நேரத்திலுங்
கோலக் குறத்தியுடன் வருவான்

படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுது வந்தஞ்லென்பாய் 
மாகத்தை முட்டி வரு நெடுங்கூற்றவன் வந்தாலென் முன்னே
தோகைப் புரவியிற்றோன்றி நிற்பாய் 
கனைத்தெழும் பகடது பிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்தடர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே
கலக்குறுஞ் செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்து அலமுறு பொழுதளவை கொள்
கணத்தில் என் பயமற மயில் முதுகினில் வருவாய

உரையும் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சு போல் ஆனது..
கண்டு அயல் உழலுஞ் சிந்துறு பால்கடை நின்றது கடைவாயால் ஒழுகுஞ் சஞ்சல மேனி குளிர்ந்தது முறிமுன் கண்டு கைகால்கள் நிமிர்ந்தது உடலும் தொந்தியும் ஓடி வடிந்ததுபரிகாரி வர ஒன்றும் பலியாது இனி என்றபின்உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ
மறல் வந்து இங்கு எனது ஆவி கொளும் தினம் இயல் தோகை மயிலும் செங்கைகள் ஆறிரு திண்புய வரை துன்றும் கடிமாலையும் 
இங்கித வனமின் குஞ்சரி மாருடன் என்றன் முன் வருவாயே...முருகா

முருகா என்றன் முன் கார்மா மிசை  காலன் வரின் களபத்தேர் மாமிசை  வந்து எதிர் படுவாய் முருகா முருகா  கடிதே வரவேணும்..முருகா..

சுப்பிரமணிய புஜங்கத்தை கற்போம் 



"உரையும் சென்றது நாவும் உலர்ந்தது " பாடலை குருஜியுடன் இசைப்போம் 

https://www.youtube.com/watch?v=kxDZVIjRaH4

                                                    முருகா சரணம் 



Saturday 14 July 2018

வள்ளி கல்யாணம்

                                                             
                                                         வள்ளி கல்யாணம் 
                                                     திருப்பரங்குன்றம் திருத்தலத்தில் 
                                                                                                  
                                          


                                                              செய்தி மடல் ...1


அடுத்த வள்ளிகல்யாண வைபவம் நம் பெருமானின் பேரருளால் வரும் டிசம்பர் மாதம் 16ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நன்னாளில் மதுரை திருப்பரங்குன்றம் திருத்தலத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது,

அன்பர் அய்யப்பனிடமிருந்து வந்துள்ள முதற்கட்ட செய்தி மடலை பெரு மகிழ்ச்சியுடன் அளிக்கிறோம்.

வழக்கம்போல் அன்பர்கள் குடும்ப  சகிதம் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.

"அன்பர்களே,

நமது குருஜி அவர்கள் பழநியில் 2004ல் வள்ளி கல்யாணத்தை நடத்தினார்கள் அதைத் தொடர்ந்து நமது குருஜியின் சிஷ்யத் தொண்டர்கள் 2015ல் திருச்செந்தூரிலும், 2016ல் திருத்தணிகையிலும் 2017ல் சுவாமிமலையிலும் நடத்தி மகிழ்ந்தார்கள் 

அடுத்து இந்த வருடம் மதுரை திருப்பரங்குன்றத்திலும் வரும் டிசெம்பர் மாதம் 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமை கோபாலசுவாமி திருமண மண்டபத்தில் அவனருளால் நடத்த முடிவெடுத்துள்ளார்கள். இந்த வைபவத்தின் அழைப்பிதழைப் அடியில் பாருங்கள். அகிலத்து அனைத்து அன்பர் கூட்டமும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு நமக்கு நமது குருஜி அவர்கள் சொல்லிக் கொடுத்த முறைப்படி திருப்புகழ் பாடி வரங்கள் பல கிடைக்கப்பெற்று நமது குழந்தைகள் அவரவர்கள் விருப்பப்படி வரன்கள் அமையப்பெற்று, சகல செல்வமிக்க பெருவாழ்வு வாழ கூட்டு பிரார்த்தனை செய்ய வாருங்கள்.

மதுரைக்கு ரயிலில் வர 4- மாதங்கட்கு முன்னரே டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் அதற்கு அடுத்த மாதம்  ( ஆகஸ்ட் மாதம் - 2018 ) 16 தேதி வாக்கில் டிக்கெட் ரிசர்வேசன் செய்ய வேண்டும் நன்றாக பிளான் செய்து அதைச் செய்து விட வேண்டுகிறேன்.
முருகா சரணம்   முருகா சரணம்   முருகா சரணம் "

                                                                                    அழைப்பிதழ் 

                                                                                             

                                                    திருப்பரங்குன்றம் திருப்புகழை குருஜியுடன் இசைப்போம் 


                                                                                                                                                                                     
                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE



Saturday 7 July 2018

அபிராமி அந்தாதி ....33


                                            அபிராமி அந்தாதி ....33                                                                                                        




அன்பரின் விளக்க உரை 


இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே

அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே - 


அத்தனாம் (தந்தையாம்) சிவபெருமானுடைய சித்தம் எல்லாம் குழையும் படி செய்யும் மணம் வீசும் குவிந்த முலையை உடைய இளையவளே! மென்மையானவளே!

இங்கு அத்தன் என்றால் தந்தை என்று பொருள். 
அத்த சித்தமெல்லாம் என்பதை அத்தர்+சித்தம்+எல்லாம் எனப்பிரிக்க வேண்டும். 'தந்தை மனம் முழுதும்' 
 களபம் என்றால் சேறு, சாந்து என்று பொருள். இங்கே மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனம் கலந்த மணங்கமழ் சாந்து என்ற பொருளில் வருகிறது.
அந்தச் சித்தமெல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே! 

பிரபஞ்சத்தின் தந்தை சிவபிரான்; அவன் என் அத்தன். அப்பெருமானின் உள்ளம் குழைந்து மனம் நெக்கு உருகச் செய்பவள் யாமளை! அதற்குக் காரணம் நறுமணக் கலவை பூசி அவளை நெகிழ வைப்பவை அவளது அழகான குவிந்த தனபாரங்களே! அப்பெருமாட்டி இளைய மெல்லியள் ; 

சியாமளைக் கோமளமே! ( கோமளம் - இளமை; மாணிக்க வகை) . ' யாமளையே! ' என்று தன் கவிவெண்பாவில் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் குறிப்பிடுவார். யாமளை - சிவனோடு ஐக்கியமாய் இருக்கும் வடிவம்.
அன்னையின் அவ்விரு தனங்களும் பர, அபர ஞானங்களே ஆதலின் ' பவித்ர, பயோதரம் ' எனப்பட்டது".

உன்னையே அன்னையே என்பன் 


அம்மா ' என்று கூப்பிட்ட குரலுக்கு ( காத்திருப்பவள்போல) ஓடிவருபவள் அவள். ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ' ஸ்ரீமாதா ' என்று ஆரம்பிக்கிறது. 1000 - வது நாமமாக ' லலிதாம்பிகா ' அம்பாளின் முத்திரையோடு லலிதமாக பூரணமாகிறது. மனதிற்கு சந்தோஷம் கொடுக்கும் எல்லா பாவங்களும் லலிதம் என்று சொல்லப்படும் ( அதாவது ப்ரகாசம், தோற்றம், இனிமை, ஆழம், ஸ்திரத்தன்மை, சக்தி, நளினம், தாராளம். )
823- ஜனனீ - தாயார் சகல ஜகத்தையும் சிருஷ்டிக்கிறள் தகப்பனால் தன் சரீரத்தில் சேர்க்கப்பட்ட சுக்லத்திற்கு கருவாக உருக்கொடுப்பவள்.
457. மாதா - கருவை தன்னுள் அடக்கி வைத்து காப்பாற்றுபவள்.
(அடைகாப்பது போல்)
826. ப்ரசவித்ரீ - தக்க தருணத்தில், தேவையான அளவுக்கு கரு வளர்ந்த பிறகு, அதை வெளியில் கொண்டு வந்து விடுபவள்.
337. விதாத்ரீ - சிசுவை போஷித்து வளர்ப்பவள்.
935. ஜகத்தாத்ரீ - உலகத்தை தாங்குபவள்.
985. அம்பா - ஆபத்து வேளையில் தானே வந்து விடுபவள்.
295. அம்பிகா - சிறந்த தாயாக இருப்பவள்.
நித்திரையையும், ஓய்வையும் தருபவள்.
934. விஸ்வமாதா - உலகம் அனைத்திற்கும் அன்னையானவள்.
உலகமனைத்தையும் ஈன்ற அன்னையை ஆப்ரஹம கீட ஜனனினும் ஸஹஸ்ரநாமாவுல வாக்தேவதைகள் சொல்லியிருக்கா.
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது -

 நான் இழைக்கும் (செய்யும், செய்த, செய்யப் போகும்) நல்வினைத் தீவினைகளுக்கேற்ப எனை தண்டிக்கும் கால தேவன் (எமன்) நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் போது


எல்லாவற்றையும் வரையறுக்கும் விதியின் படி ( அடியேன் பல பிறவிகளில் இழைத்த வினையின் பயனாய்) கொல்ல வரும் காலன், என்னை நடுங்கச் செய்து அழைக்கும்போது, அடியேன் யமவாதனைப் பட்டு கலங்கும்போது உன்னைத்தான் ' அம்மா ' என்றுகூப்பிடுவேன். 

உழைக்கும் போது - அப்போது உயிரும் உடலும் ஊசலாடி நான் மரண வேதனையில் துன்புறும் போது


ஓடி வந்தே (வந்து) அஞ்சல் என்பாய் 


என் முன்னே ஓடி வந்தே அஞ்சாதே என்று சொல்வாய்.

இந்த அந்தாதில பட்டர் சொல்லவரும் கருத்து என்னவென்றால்,
குழந்தை ஏதேதோ விளையாட்டு எல்லாம் விளையாடிண்டு இருக்கு. திடீர்னு அதுக்கு அம்மா நினைவு வந்ததும், அம்மான்னு சொல்லிண்டு அம்மாட்ட ஓடிப்போய் தஞ்சம் அடைந்துவிடும் இல்லையா? அதேபோல் தான் பட்டரும் தாயிடம் செல்லத் தவிக்கும் சேயைப் போல , அவள் குழந்தைகளாகிய நாம், அவளைப் பிரிந்து, இப்பிறவி எடுத்தோம் இல்லையா!! நாமும் சேயைப் போல, அவள் திருவடிகளுக்கு திரும்பச் சென்று விடவேண்டும் , என்பதையே பட்டர் இந்த அந்தாதில நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.

                                                                 பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்

                                                                                                       

                                                                                  அன்பர்கள் 
                                                                                         
                                         அபிராமி சரணம் சரணம்
                                                 முருகா சரணம்