Friday 22 February 2019

அபிராமி அந்தாதி - 38


                                                            அபிராமி அந்தாதி - 38
                                                                           
                                                                                     


பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

இந்தப் பாடலில் அபிராமபட்டர் இரண்டு விவரங்கள் தருகிறார். ஒன்று சிவபெருமான் அம்பிகையிடம் எவ்வாறு மயங்கினார் என்பது. இரண்டாவது இந்திர உலகம் ஆளும் ஆசை இருந்தால், அவளைப் பணிவதே அதற்கு வழி என்பது.

சிவனுக்கே போகம் அருளும் எம்பெருமாட்டி, அவளைப் பணிவோருக்கு ( இந்திரன் அருளும்) அமராவதியை ஆளும் உயர்ந்த தேவலோகப் பதவியைத் தருவாள். ( இந்திரன் அனுபவிக்கும் போகம் தான்- போகத்தின் எல்லை).

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் - பவளக் கொடியில் பழுத்த பவளம் போல் இருக்கும் செவ்விதழ்களும்

பனி முறுவல் தவளத் திருநகையும் - குளிர்ந்த முறுவலும் முத்து போன்ற பற்கள் தெரிய செய்யும் புன்னகையும்
எவ்வாறான புன்முறுவல் அது? " பவளக் கொடியிற் பழுத்த செவ்வாய்? " - அன்னையின் திருஉதடுகள் பவளக் கொடியை விடச் சிவந்து உள்ளன. செக்கச் செவேல் என்ற அரிய வண்ணம் கொண்ட இதழ்கள் அவை. பவளக் கொடியின் மேல் இதழும் கீழ் இதழுமாய் இரண்டு இதழ்களும் சற்றுப் பிரிகின்றன. அவ்வாறு பிரிகையில் செம்பவள இதழ்களுக்குள்ளேயிருந்து, வெண் முத்துக்கள் போன்ற பற்கள் பளிச்சிடுகின்றன. அம்மை புன்முறுவல் பூத்துக் குறுநகை புரிகின்றாள். சிவந்த இதழ்களின் இடையே வேண்முத்துப் பற்கள் தெரியும் வண்ணம், அம்பிகை குறுநகை புரிகின்றாள்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் கூட அன்னையை எப்படியெல்லாம் வர்ணிக்கறது பாருங்கோ!!
( 24) நவ வித்ரும்பிம்ப ஸ்ரீ ந்யக்காரி தசனச்சதா செம்மையான பொருள்களில் சிறந்ததான பவழம். கோவைப்பழம்இவற்றின் காந்தியை வெல்லும்படியான சிறந்த சிவந்த அதரங்கள் அன்னைக்கு. ( ரதனச்சதா என்றும் பாடமுண்டு. அர்த்தம் அதே....).
25. சுத்த வித்யாங்குரகார த்விஜ பங்க்த்தி த்வயோஜ்வலா - சுத்தவித்யையின் முளைகள் போன்ற இரு பல்வரிசைகளால் ஒளிமிக்க தோற்றமுடையவள். 242. சாருஹாஸா - அழகிய புன்சிரிப்போடு கூடியவள்.' உன் இனிய புன்சிரிப்பே சந்திரன்.
28. மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேச மானஸா - தனது புன்சிரிப்பின் ப்ரவாஹத்தில் காமேசுவரருடைய மனதை மூழ்கச் செய்தவள். ஸ்மித - புன்சிரிப்பு - பற்கள் வெளித் தெரியாமல் மெல்லச் சிரிப்பது. ' மந்தஸ்மித ' - இன்னும் விசேஷமான மென்மையானது. அம்பிகையின் புன்சிரிப்பிற்கு ' மூககவி ' - ' மந்தஸ்மிக சதகம் ' என்ற நூறு பாடல்கள் கொண்ட நூலை செய்திருக்கிறார்.

துணையா -
துணையாகக் கொண்டு
எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது - துவண்டு போகும்படி போரிட்டு

துடியிடை சாய்க்கும் - உடுக்கையைப் போன்ற இடையை கீழே சாய்க்கும்

துணை முலையாள் - ஒன்றிற்கு ஒன்று துணையான முலைகளை உடையவள்


' குறுநகை ' இப்போது போர்க்கலன் ஆகின்றது. அன்னை உட்கார்ந்தபடியே, சிரிப்பு என்ற படைகலனைத் துணையாகக் கொண்டு, பரமேசுரனைத் துவள வைக்கின்றாள். இரண்டாம் போர்க்கலனையும் அன்னை தன்னிடம் கொண்டிருக்கின்றாள். அது அன்னையின் கொடி போன்ற மெல்லிய இடை: சாயும் படியாகக் நகில் பாரங்கள். ஆக, நகையையும் நகிலையும் அம்பிகை துணையாகக் கொண்டு சிவனாரை வெல்கிறாள்.


(ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்)
36. ஸ்தன பார தலன் மத்யபட்டபந்த. வளித்ரயா -.ஸ்தனங்களின் சுமையினால் முறிந்து போய்விடுமோ என்று தோன்றக் கூடிய இடுப்புக்குப் பட்டை கட்டியது போன்று அமைந்துள்ள மூன்று மடிப்புகளை உடையவள்.உத்தம ஜாதி ஸ்திரீ புருஷர்களுக்கு நெற்றியிலும், கழுத்திலும், வயிற்றிலும் மூன்று கோடுகள் போன்ற மடிப்புகள் இருக்கும் என்று ஸாமுத்ரிகா சாஸ்த்ரம் கூறும் லட்சணம். அவை மகத்தான ஸௌபாக்கியத்திற்கு அடையாளம்.
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே - " அமராவதி என்னும் இந்திரநகர் ஆளும் தன்மை ஏற்பட வேண்டுமா? பணியுங்கள் பரமேட்டியை "

அவளை எவ்வாறு பணிவது? ஓர் உருவம் தருகிறார். அந்த உருவத்தை வைத்து வழிபாடு செய்தால், அமராவதி ஆளும் உரிமை கிட்டும் என்று குறிப்பிட்டார். அது பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் தவளத் திருநகையும், துணையா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையும் கொண்ட உருவம்.


                                                      பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்


                                                                                          
                                                        அபிராமி சரணம் சரணம்!!

                                                              முருகா சரணம் 


U Tubes published  by us are available in the following link

Wednesday 20 February 2019

VELLI VIZHA OF THIRUPPUGAZH SINGING AT HYDERABAD


                                                                                   

                      VELLI VIZHA OF THIRUPPUGAZH SINGING AT HYDERABAD 

                                                                                     
           


Thiruppugazh Anbargal at Hyderabad invite all the Anbars for the celebration of  25

Years of Thiruppugazh singing  on  16th and 17th March 2019 


                                               Invitation
                                              


         About activities of Thiruppugazh Anbargal at Hyderabad



                                                                               


                                 Velli Vizha Programme



Details of Accommodation arrangements made


      Welcoming all Anbargal, we are arranging accommodation for those coming from outside, in Dormitory, and guest houses as available here. 

1.For Anbargal desiring accommodation in Dormitory with Jamakkalam and pillows arrangement in mini hall nearby for a nominal payment of Rs 500/
( Rs Five Hundred only)/ per person for stay on 16th and 17th March 2019. The allotment shall be on first come first basis.
2. For Anbargal desiring to stay in guest houses with three per room with cots and beds a nominal payment of Rs 1000/  (Rupees Thousand only) per person for stay on 16th and 17th   March 2019. As limited rooms are available an early requisition may please be given.
3. For those who wish to make own arrangements in nearby hotels, may request for details of nearby hotels.
4. All Anbargals who are staying at Dormitory and guest houses will be served breakfast, lunch and dinner on 16th and 17th March. 
    All participating Anbargals can contact at   9014402266  /   9848812301 by phone or 
     by email at  krishnamurtiv@gmail.com     /      poojakrish54@yahoo.com.      


All the Anbars are requested to participatae in large numbers and receive the the blessings of Chenthilandavan

                                                                    Muruga Saranam                                                                          

                                                                                         

Wednesday 6 February 2019

ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம்






ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஐந்தாவது ஸ்லோகம் – நோய்கள் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே


ஸுப்ரமண்ய புஜங்கத்துல 23வது ஸ்லோகத்துலயும், 24வது ஸ்லோகத்துலயும், ‘என்னுடைய மனக் கவலைகள், மனோ வியாதிகளை எல்லாம் போக்கணும் முருகா’ன்னு வேண்டிண்டார். இன்னிக்கு 25வது ஸ்லோகம்.
अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥
அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த: |
பிஷாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே ||


இங்கு முக்கியமாக திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியின் பெருமையை விளக்குகிறார்.


    தாரகாரே= தாரகனை  வதைத்தவனே,

 மஹாந்தஹ அபஸ்மாரம்= பல பெரிய வியாதிகள், குஷ்டம் க்ஷயம், 

அர்ஷ ப்ரமேஹ= மூலம் சரக்கரை வியாதி, 

ஜ்வர உன்மாத= சுரம் மனவியாதி,

 குல்மாதி ரோகாஹா= குன்மம் போன்ற நோய்கள்,

 ஸர்வே பிஷாசாஹாசஹ, = பல பில்லி சூனியம் போன்ற  வியாதிகள்,  

பவத் பத்ர பூதிம்= உன்னுடைய பன்னீர் இலையில் வைக்கப் பட்டுள்ள விபூதியை, 

விலோக்ய= பார்த்தவுடனே, 

க்ஷணாத் த்ரவன்தே= ஒரு நொடியில் ஓடிவிடுகின்றன. 

உரை ஆசிரியரின் விளக்கம் 

அபஸ்மாரம், குஷ்டம், க்ஷயார்சம், ப்ரமேஹம், ஜ்வரம்,குல்மாதி ரோகா,வலிப்பு, குஷ்டம், க்ஷயம், சுவாச ரோகம், மேஹ ரோகம், ஜ்வரம், சித்த பிராந்தி, வயிற்று வலி இப்படிப் பல விதமான வியாதிகள் உடம்பைப் படுத்தறது.அப்படிஉடம்புக்கு வர்ற வியாதிகளை எல்லாம் போக்கிக்கிறதுக்கு ஒரு உபாயம் இருக்கு. 
‘பவத் பத்ர பூதிம் விலோக்ய’ இந்த பத்ர பூதியைக் கண்ணால பார்த்த மாத்திரத்திலேயே பூத ப்ரேத பிசாசங்கள், ப்ரம்ம ராக்ஷசர்கள், இன்னும் எல்லா வியாதிகளும், ஒரு க்ஷணத்தில் ஓடி மறைந்து விடுகின்றன. ‘க்ஷணாத் த்ரவந்தே ‘ ன்னு சொல்றார். அந்த பன்னீர் இலைல வச்சு கொடுக்கற விபூதிக்கு அவ்வளவு மகிமை. 
வேதங்கள் எல்லாம் சேர்ந்து தங்களுடைய ‘ஸுமனஸ்’னால அழகழகான வாசனைப் புஷ்பங்களை எல்லாம் முருகனுடைய பாதத்துல போடணும்ன்னு ஆசைப் பட்டு ஒரு வ்ருக்ஷ ரூபமா ஸ்வாமி சன்னிதியில வந்து இருக்காம். அதைத்தான் பன்னீர் வ்ருக்ஷம்ன்னு சொல்றா. அந்த பன்னீர் வ்ருக்ஷத்தோட கிளைகள் எல்லாம் வேத சாகைகள். அந்த வ்ருக்ஷத்தோட இலைகள் எல்லாம் வைதீக மந்திரங்கள். 

அந்த வைதீக மந்திரத்தில ப்ரணவ ஸ்வரூபமாகிய ஸ்வாமி சம்பந்தப்பட்ட விபூதியை வச்சு கொடுக்கறாதனால, அதை நாம இட்டுண்டா எல்லா உபாதைகளும் போய்டறது. ரொம்ப ஆரோக்யத்தோட தீர்க்காயுசா இருப்பா அப்படின்னு சொல்றார்.
தேதியூர் சாஸ்த்ரிகள், புராணத்திலிருந்து எடுத்து இன்னொரு கதையும் சொல்லியிருக்கார். விஷ்வாமித்ர மஹரிஷி ராமச்சந்திர மூர்த்தியைக் கூட்டிண்டுகாட்டுக்குப் போகும் போது தாடகா வதம் பண்ணுன்னு சொல்லி காரணமாக  இருந்தார்.  அதாவது ஒரு கார்யம் பண்ணுன்னு தூண்டி விடறது. ஒரு ஸ்தீரி வதம் பண்றதுக்கு தூண்டி விட்டதனால அவருக்கு உடம்புக்கு வந்துடுத்து. அவர் எத்தனையோ முயற்சி பண்ணினார். அஸ்வினி தேவர்களாலக் கூட அவரை குணப் படுத்த முடியல. அப்போ அவரோட கனவுல ராமரே வந்து ‘நீங்க ஸ்ரீஜயந்திபுரம் என்கிற திருச்செந்தூருக்குப் போய், முருகப் பெருமானுடைய விபூதியை வாங்கி இட்டுக்கோங்கோ’ அப்படின்னு சொன்னார். அதே மாதிரி விஷ்வாமித்ர மஹரிஷி வந்து அந்த பன்னீர் இலையில் விபூதியை வாங்கி இட்டுண்ட உடனே அவருக்கு எல்லா வியாதிகளும் போய்டுத்து அப்படின்னு ஒரு புராணக் கதை சொல்லியிருக்கார்.

அருணகிரியாரின் வாக்கு 

திருத்தணி முருகரையும் பவரோக வைத்யநாத பெருமாள் ன்னு சொல்லுவா. (‘நிலையாத சமுத்திரமான’ எனத் தொடங்கும் திருப்புகழ்).
வியாதிகள் போகணும்ன்னு திருத்தணி முருகன் மேல அருணகிரி நாதருடைய ஒரு திருப்புகழ் பாடல் இருக்கு. அதைப் படிச்சா எல்லா வியாதிகளும் நிவர்த்தி ஆகும் அப்படின்னு நம்பிக்கை. 
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி …… விடமே
நீரிழிவு விடாத தலைவலி சோகை யெழுகள மாலை …… யிவையோடே
பெருவயிறீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு …… முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனை நலியாத படியுன தாள்கள் …… அருள்வாயே
வருமொரு கோடியசுரர் பதாதி மடிய அநேக …… இசைபாடி
வருமொரு கால வயிரவராட வடிசுடர் வேலை …… விடுவோனே
தருநிழல் மீதிலுறை முகிலூர்தி தருதிரு மாதின் …… மணவாளா
ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு …… பெருமாளே.
‘நோய்கள் பிறவிகள் தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் ருள்வாயே!
ஜலமிடை பூவினடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே!’ ன்னு பாடல்.
சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம்   


   கண்டால்நி னிலைநீறு கைகால் வலிப்புக்
      காசங் கயம்குட்ட முதலாய நோயும்
         விண்டோடு மேபூத பைசாசம் யாவும்
            வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே.
       ...... 25

செந்திலம்பதியில் அமர்ந்தருளும் தேவ தேவா! உன்னுடைய இலை விபூதியைக் கண்ட மாத்திரத்தில் கை கால் வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலாய நோயும் பூதம், பைசாசம், தீவினைகள் யாவுமே விட்டோடிடும்.


சுப்பிரமணிய புஜங்கம் முழுவதும் இசை வடிவில்  (மும்பை அன்பர்கள் )

https://youtu.be/khP6Kg80LLU

                                          முருகா சரணம்