Tuesday 30 September 2014

டெல்லியில் பொன்விழா 2014



டெல்லி அன்பர்கள் சத்குரு அருணகிரி நாதரின் நினைவு விழா மற்றும் படிவிழாவின் பொன்விழா வைபவத்தை வரும் அக்டோபர் 11.12 தேதிகளில் நியு டெல்லி ஸ்ரீ  சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் (மலை மந்திர்) விமரிசையாக நடத்த உள்ளார்கள்.

திருப்புகழ் வழிபாடுடன் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் “ வாக்குக்கு அருணகிரி ,வாழ்க்கைக்கு திருப்புகழ் “என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற இசைந்துள்ளார்கள்.அவர் சென்ற ஆண்டு சென்னையில் நடந்த ஆன்மீக விழாவில் உரையாற்றி அன்பர்களை பரவச படுத்தியதை நினைவு கூர்கிறோம்.

விழாவின் முக்கிய அம்சமாக “வள்ளி கல்யாணம் “ வைபவமும் 10 ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற உள்ளது. அழைப்பிதழ் கீழே






அன்பர்கள் யாவரும் பெருமளவில் கலந்து கொண்டு முருகனின் அருள் பெற வேண்டுகிறோம்.


Displaying VENKAT PIC.jpg

இந்த சந்தர்ப்பத்தில் வள்ளி கல்யாணம் பற்றி சில செய் திகள்.மற்ற சீதா கல்யாணம் ,ராதா கல்யாணம் ,ருக்மிணி கல்யாணம் போல்  அல்லாமல் வள்ளி கல்யாணம் அருணகிரியாரின் நவ மணிகளாக திகழும் ஒன்பது நூல்களிலிருந்து தொடுக்கப்பட்ட பாமாலைகளால் மட்டும் நிகழ்த்தப்படும் இசை வழிபாடு .நம் குருஜியால் பந்ததியாக வடிவமைக்கப்பட்டு  முறையாக  நடந்து வருகிறது.

1985,1997 ம் ஆண்டுகளில் மும்பையிலும் 2004 ம் ஆண்டு பழனியிலும் குருஜி தலைமையில் ஆறுமணி நேர  காலம் வெகு விமரிசையாக நடை பெற்றன.

அதிர்ஷ்ட வசமாக பழனி வள்ளி கல்யாண வைபவ நிகழ்சிகளை ,அருளாளர் G.V.நிலகண்டன் அவர்கள்  ஆடியோ வடிவில் வழங்கியுள்ளார்கள்.அவருக்கு தலை வணங்குகிறோம்.
அதன் குறியீடு கீழே  (Pl download and Play)


முருகா சரணம்! 



Monday 29 September 2014

அபிராமி அந்தாதி /பதிகம் பொருளும் விளக்கமும்

அந்தாதிக்கும் .பதிகத்திற்கும் பல மெய்யன்பர்கள் பொருளும் விளக்கமும் அளித்துள்ளார்கள்.சிலர் வlaiத்தளம் மூலமாகவும் வெளியிட்டுள்ளார்கள்

அவற்றில் சிலவற்றை அன்பர்கள் பயன் பெற அளிக்கிறோம்

"அபிராமி பட்டர்" வலைத்தளம் பொறுப்பாளர்கள் மூன்று ஆண்டுகள் அரும் பாடுபட்டு பதம் பிரித்து ,பொருளோடு,பொழிப்புரையும் ,பல விளக்கங்களையும் மிக எளிமையாக வழங்கி யுள்ளார்கள்.(பாடல்களை அக்டோபர் 2005 முதல் வரிசையாக அனுபவிக்கலாம்.}அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும்

தொடர்பு குறியீட்டு கீழே



அடுத்து அபிராமி பதிகம்

அருளாளர்கள் சாந்தா  ராஜன் தங்களுடைய "திருப்புகழ் அமுதம் " வளைத்தளத்தில்பதிகம் பாடல்கள் முழுமைக்கும் பதம் பிரித்து ,பொருளுடன் விளக்கங்களையும் விரிவாக வழங்கியுள்ளார்கள்.அது நமக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையாகாது.அன்பர்கள் படித்து பயன் பெறுவதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாகும்..

தொடர்பு குறியீட்டு கீழே.


முருகா  சரணம்!

Thursday 25 September 2014

நவராத்திரி விழா 2014

நவராத்திரி விழா குதூகலமாக  தொடங்கி விட்டது.திருப் புகழ் தாய்மார்கள் முறையான பூஜை .மஞ்சள் குங்குமம் சம்பிரதாயங்களை கடை பிடிப்பதோடு அபிராமி அந்தாதி,பதிகம் ,திருப்புகழ் பாடல்களை தங்கள் இல்லங்களில் மட்டுமல்லாது ,கூட்டு வழிபாடுகளிலும்  கலந்துகொண்டு பாடல்களை தேவிக்கு சமர்ப்பணம் செய்து பரவசம் அடைகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் அபிராம பட்டரின் மகிமையை சுருக்கமாக அளிக்க விரும்புகிறோம்.





                                                  அபிராம பட்டார்

அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) ஒரு இந்து மத துறவி ஆவார். இவர்அபிராமி அந்தாதியை இயற்றியவர். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை என கருதப்படுகிறது.

                                                  அபிராமி காட்சி


சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர். அபிராமிவல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அபிராமி பட்டர் அன்றையசோழநாட்டுப்பகுதியான திருக்கடையூரில் வாழ்ந்து வந்தார்.இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.



                                                        பௌர்ணமி திதி


அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு முதலாம் சரபோஜி மன்னர் (Serfoji I) ஆண்டு வந்தார் (கி. பி. 1675–1728). அம்மன்னர் மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமுத கடேஷ்வரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால்திருக்கடவூரை அடைந்தார்.

அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே செனறபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்த்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள்.ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.

அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்."உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார்.அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிகு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப
         பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
      குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”

என்ற பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்.தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.

இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் "அபிராமி அந்தாதி" என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற'என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.

தெய்வீக பாடல்களான அபிராமி அந்தாதி ,பதிகம் பாடல்களை  நம் குருஜி விட்டு வைப்பார என்ன?ஒலி நாடாவில் அற்புதமாக கற்பிக்கும் முறையில் பதிவு செய்தார்.பல அன்பர்கள் கற்று பயன் அடைந்தனர்.நம் Thiruppugazhanbargalchennai   Blog அவற்றை  MP 3 அமைப்பில் மாற்றி உலகளவில் உள்ள அன்பர்கள் பயனுக்காக தங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.அன்பர்கள் கேட்பதோடு மட்டும் அல்லாமல் பதவிரக்கமும் செய்து கொள்ளலாம்.
அதன் LINK கீழே 
மும்பையில் பாலு சார்/மாமி குடும்பத்தின் சார்பில்  சந்திர கலா ஸ்துதி ,அபிராமி அந்தாதி பாடல்கள் செம்பூர் உத்தம் குடியிருப்பு வளாகம் கணபதி ஆலயத்தில்  அன்பர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. சில புகை படங்கள்:



























சென்னை அன்பர்கள் 28.9.14 அன்று அடையாறு அனந்தபத்மநாப ஸ்வாமி ஆலயத்தில் துதிக்கிரார்கள்.அதன் அழைப்பிதழ் கீழே.

THIRUPPUGAZH ANBARGAL (Regd)
Chennai Region
5 B, ‘Suryakiran’, 11th Cross Street, Indira Nagar
Adyar, Chennai 600 020, Ph:24425103.
 5th September 2014
 Re: Abhirami Andathi Pathigam – Navarathiri

There will be Abhirami Andhathi Pathigam recital at Sri Anantha Padmanabha swami Aalaya valagam, Gandhi nagar. Adyar, Chennai 20, on Sunday 28thSeptember 2014 from 4PM to 6PM.
 Kindly make it convenient to attend.

Vasanthi Viswanathan
Joint Secretary
Cell:9176309996

முருகா சரணம் 

Thursday 11 September 2014

Nerul Bhaktha Samaj Article on Amarar Guruji



OM
THIRU NERUL MURUGANUKKU HARA HAROHARA
Nerul Bhaktha Samaj (Regd)
Plot No.13, Opp.BEST Bus Depot, Sector No.29,
Nerul (E), Navi Mumbai – 400 706

 NM-FMGC:2014-15:                                                                                          Dt. 10.09.2014


THIRUPUGAZH ISAI VAZHIBADU BY THIRUPUGAZH ANBARGAL, DISCIPLE OF AMARAR GURUJI SHRI A S RAGHAVAN FOLLOWED BY DEEPA ARADHANAI & PRASADAM DISTRIBUTION  ONSUNDAY 14TH SEPTEMBER 2014 AT OUR TEMPLE..

ON THIS OCCASION WE ARE GIVING AN ARTICLE ON AMARAR GURUJI SHRI A S RAGHAVAN:

"Thiruppugazh Guruji A.S. Raghavan"

Thiruppugazh Guruji A.S. Raghavan, who started a movement in the Capital in 1958 to spread the message of love, avirodham, self-discipline, unity and brotherhood through the ancient Thiruppugazh hymns, passed away last Friday in Chennai. Born in 1928, “Guruji”, as he was reverently called by his disciples, followers and others, spearheaded the movement that later came to be known as the “Thiruppugazh Anbargal”, when he started teaching the Thiruppugazh hymns to two of his students. He had been propagating the Thiruppugazh ever since, for more than five decades.

Saint Arunagirinadar, who lived in South India about 600 years ago, composed thousands of such hymns, of which only 1,400 are extant. The hymns are a treasure house of rhythmic intricacies and succinct presentation in the Tamil language and occupy a unique place in the sacred music of Tamil.

Guruji not only compiled in one work the available hymns of Saint Arunagirinadar and titled it “Thiruppugazh Madani”, he also set to tune more than 500 of these in more than 100 ragas to melodious music and precise tala, matching the chhanda (meter) of these hymns. He also evolved a pattern from the verses of Thiruppugazh for conducting an elaborate ‘wedding function’ titled “Valli Kalyanam”, which signifies the finality of life in the unification of “atma” with “paramatma”.

Besides Thiruppugazh, Guruji had also set to music the “Abhirami Andhadhi” and “Abhirami Padigam”, the verses on goddess Shakti.

When increasing numbers of people started joining the classes, which hitherto were conducted only at one place in the Capital, more and more centres too came into operation.

Guruji commanded instant respect and was a source of inspiration to hundreds of disciples and followers. People who did not have any knowledge of music, too, started joining the group. When his disciples assembled for a bhajan session, they came not for a performance but for a community prayer in which the entire audience would participate.

Some of Guruji’s disciples started migrating to other parts of the country and even to foreign countries. They took upon themselves the task of spreading Thiruppugazh by conducting classes in the places where they resided.

Thus, the “Raghavan School of Thiruppugazh singing” spread and became well established in India as well as in places like Hong Kong, Malaysia, Canada, Singapore and the U.S. Guruji’s efforts had blossomed into a large “Anbargal” family which accepted the principles enshrined in Thiruppugazh as a way of life.

Afterwards, Guruji shifted from the Capital to Chennai.

But his disciples even today continue to perform the Thiruppugazh “Isai Vazipadu”, which strives for world peace through the medium of mass prayer, at various places in the Country.

While Guruji’s movement has risen to great heights, it is reassuring that the Thiruppugazh IsaiVazhipadu tradition evolved by the late A.S. Raghavan, too, will transcend generations.

Article Courtesy: “ THE HINDU”  23rd May, 2013 ...Delhi  Edition.


We remain in the service of Lord Muruga 

Managing Committee - NerulBhakthaSamaj          

  

குருஜியின் ஜெயந்தி விழா 2014

குருஜியின் ஜெயந்திவிழா சென்ற ஆண்டு முதல் மும்பையில் கொண்டாடப்படுகிறது. நேருல் பக்த சமாஜ் தாமாகவே முன் வந்து தங்கள் முருகன் ஆலயத்தில்  இசை வழிபாடுடன் விழாவை ஏற்பாடு செய்து வருகிறார்கள்..இந்த ஆண்டும் செப்டம்பர் 14 ம் தேதி காலை  9.00 மணி முதல் பூஜையுடன்  தொடங்கி நடைபெறும் அழைப்பிதழ் இணைக்கப்பட்ட்டுள்ளது..அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு முருகனின் அருளுக்கு பாத்திரமாக வேண்டுகிறோம்.



குருஜி முத்துவில் ஆரம்பித்து முத்துவில் முடித்தார் என்று அன்பர்கள் பெருமையுடன் நினைவு கூர்கிறார்கள்.அந்தவகையில் சமீபத்தில் நேருல் முருகன் ஆலயத்தில்  நடைபெற்ற ஆடி கிருத்திகை வழிபாடு  “முத்தை  திரு” பாடலில் ஆரம்பித்து “முத்து நவ ரத்னமணி “ பாடலில் முடிவடைந்தது.மற்றும் குருஜியின் இரு புதல்விகளும் கலந்துகொண்டது ,குருஜியே கலந்து கொண்டதுபோல் அன்பர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்..நேருல் பக்த சமாஜுக்கு  அன்பர்கள் சார்பாகவும், வலைத்தளம் சார்பாகவும், இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொல்கிறோம். அருளாளர் ஐயப்பன் குருஜியின் வகுப்பில் கற்பித்த முத்து நவரத்னமணி பாடலை அவர் வர்ணனையுடன்  கேட்போம்:


இந்த சந்தர்ப்பத்தில் குருஜியை பக்தியுடன் நினைவு கூர்ந்து சில நிகழ்வுகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.

குருஜியின் 80ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் 2008 ம ஆண்டு அன்பர்களின் சங்கமத்தோடு வழிபாட்டுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.
அதன் அழைப்பிதழ் கீழே




 


இந்த சந்தர்ப்பத்தில் மும்பை அன்பர்கள் சார்பாக  சுந்தரராஜன் புனைந்த  ஒரு கவிதை குருஜிக்கு சமர்ப்பிக்கப்பட்டது.


...குருஜியின் எக்காலத்துக்கும் பொருந்தும் உபதேசம்  எழுத்துருவில் 





இசை வழிபாடு 


சங்கீத உலகில் உழன்று ரசித்து மெய் மறந்த அன்பர்கள் குருஜியின் இசை வழிபாடு களில் கலந்து கொண்டு தெய்வீக நிலையை எய்தினார்கள்..கச்சேரிகளில் இசை வேறு .வழிபாடு இசை வேறு என்று உணர்ந்தார்கள். அது இசைவாணர்களின் அயராத உழைப்பின் திறமையை வெளிப்படுத்து கிறது.ஆனால் வழிபாடுகளில் வெளிப்படும் இசை தெய்வீக ம.அதை உணர்ந்த அன்பர்கள் கச்சேரி இசையை பின்னுக்கு தள்ளினார்கள்.வழிபாடு இசையில் விருத்தம் வடிவில்  ராக ஆலாபனையையும் ,பாவ பூர்வமான பாடல்களையும்,ஒப்பிடமுடியாத நிரவல் பகுதியையும்  கண்டு அதிசயித்தார்கள்.மூழ்கினார்கள்.இன்னும் திளைத்துக்கொண்டு இருக்கிரார்கள்.குருஜியின் விருத்தங்களும், நிரவல்களும் அன்பர்களை பரவசப்படுத்தின.தன்னை இழக்க செய்தன.கண்ணீர் விட செய்தன.

அந்த வகையில்,அருளாளர் ஐயப்பன் அளித்துள்ள குருஜியின் ஒரு நிரவல் பகுதியை ,அவரின் உணர்ச்சிப்பெருக்கான உரையுடன் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.



உருக்கத்தின் உச்ச கட்டத்தில் நமது குருஜி அவர்கள்


முருகா  சரணம்



அன்பர்களே



பரம் பொருளை பற்றி பேசும் போதும்மெளனமாக எண்ணும் போதும் விழிபுனல் குதிபாயும் அன்பர்களை நாயேன் வாழ்வில் சந்தித்ததுண்டு. உதாரணமாக மங்கலமுடையார் அவர்கள் தஞ்சை சேகரவர்கள். பாடும்போது ,   பாடிக்கொண்டே உருகி  ,   மற்ற அனைவரையும் உருக்கி         அனைவரையும்         பரம்பொருளின்       பாதார விந்தங்களில் புணரவைக்கும் திறமை கொண்டவர் ஒருவர் அவர் நமது குருஜியே . இக்கூற்றை மெய்ப்பிக்கும் திறமாக இதோ அவர் பாடிய கல்யாணி ராக நிரவல். கேளுங்கள். சென்னை திருவான்மியூர் திருக்கோவில் விசாகத்து இசை வழிபாட்டின் போது பாடியது. 

முருகா சரணம்

Link:



https://mail.google.com/mail/u/0/#inbox/14777bd1da7f28b7?projector=1

(Kindly Click Arulaalar Aiyappan`s message Dated july 27 to get the relative U Tube)


குருஜியைப்பற்றி  அருளாளர் வி.எஸ்.கிருஷ்ணன் 


I would only mention here what Sri S.K.Ramanathan said on the occasion of the inauguration of Pavizha Celebration marking the completion of 75th year of Guruji, Sri Raghavan. 

“Bhageeratha faced many obstacles and ultimately succeeded in bringing Ganga to earth. Similarly, Guruji Sri Raghavan encountered many obstacles, overcome them all with great effort and succeeded in bringing the nectar of Thiruppugazhto the home of all devotees. Just as the Ganga originated from Gangotri, passed through Haridwar, flowed through Bharat Varsha and merged at sea, the sacred river of Thiruppugazh originated from the residence of Guruji Sri A.S. Raghavan at Delhi (not far off from Gangotri),passed through different areas like Connought Place, Karol Bagh and Lodhi Colony, immersed the commercial Bombay, enlivened the cultural Chennai and ultimately enlightened the whole of India and abroad in divine ecstasy”-


கல்யாண சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் நிகழஇருக்கும் வழிபாட்டுக்கு முன்னாள் குருஜியை கல்யாண சுபுத்திரனாக கண்டு களிப்போமே.அதோடு அவரின் ஞானோபதேசத்தையும் கேட்டு அதன்படி நடப்போம்.


https://mail.google.com/mail/u/0/#inbox/146083af62f1d7d8?projector=1


சென்னை அன்பர்கள் "குரு வந்தனம் "வைபவத்தை இசை வழிபாடாக 7.9.14 அன்று  .குருஜி மாமி ,தலைமையில் சமர்ப்பித்தார்கள்.குருஜியின் புதல்வியும் ,மும்பையிலிருந்து சில அன்பர்களும் கலந்து கொண்டனர்.சில புகைப்பட காட்சிகள்