Sunday 24 March 2019

பங்குனி உத்திரம் நிறைவு


                                                                                  


                                                             பங்குனி உத்திரம்  நிறைவு                                                                            


பங்குனி உத்திரம் வைபவம் மும்பை செம்பூர் சங்கராலயம் சன்னிதானத்தில் வெகு சிறப்பாக நடந் தேறி யது .மும்பை மற்றும் நவி மும்பை பகுதிகளிலிருந்து அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு வழிபாட்டை பெருமானுக்கு சமர்ப்பித்தனர்.
  வைபவ முடிவில்  பாலு சாரும் அன்பர்களும் சங்கராலய நிர்வாகிகளால் கெளரவிக்கப்பட்டனர் 






                                                   சில புகைப்படத் தொகுப்புக்கள்.                   












                                                     வழிபாட்டின் சில பகுதிகள்  இசையுடன் 

                                                               பாலு சாரின்  விருத்தம் 

                                               "கனகம் திரள் " பாடல்   சங்கராபரணம்  ராகம் 

                
                                                                ராஜி மாமி யின் விருத்தம் 

                                            "திரைவார் கடல்" பாடல்   சுப பந்துவராளி ராகம் 

                                                                                                                                                                                                                                                        மணி சாரின் விருத்தம் 

                                                     "படர்புவியின் " பாடல்  பந்துவராளி ராகம் 

     
                                                               கிரிஷ்ணமுர்த்திசாரின்  விருத்தம் 
                                                 "கறைபடும் "  பாடல் யமுனா கல்யாணி  ராகம் 



                                                                                                                                                                           

                                                          நவி மும்பை அன்பர் ப்ரியாவின் விருத்தம் 
                                                  "ஊணுத்தசை உடல் " பாடல்   சிந்துபைரவி ராகம் 

           

                                                                               அன்பர்கள் 
                                               "குருதி மலசலம் " பாடல்  கேதார கௌளை ராகம் 


                                                                                                                                                                                                            முருகா சரணம்              

Thursday 21 March 2019

அபிராமி அந்தாதி.... 39


                                            அபிராமி அந்தாதி....  
39

                                                                                       


ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே


அன்பரின் விளக்கவுரை 
ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு - 

என்னை ஆள்வதற்கு உந்தன் திருவடித்தாமரைகள் உண்டு
வாழ்விலே, மேலாக வாழ்வதற்கு, ஆளுமையோடு வாழ்வதற்கு, அந்த அம்பிகையின் அடித்தாமரைகள் இருக்கின்றன. வாழ்விலே நம்மைக் கைதூக்கிவிடும் அந்த தேவியின் பாதங்கள்.

ஆளுக்கைக்கு அடித்தாமரையும் யமன் கையினின்று மீளுகைக்கு கடைக்கண்ணும் என்பதை ஆதிசங்கரர் ' ஜன்ம ஜலதௌ நிமக்னானாம் முரரிபு வராஹஸ்ய த்ஷ்ட்ராபவதி ' - என்கிறார். ( ஸௌ.ல. 3 )
உயிர்கள் சம்சாரக்கடலில் மூழ்கித் தவிக்கும் போது அம்பாளின் இருபாதங்களும் வராஹமூர்த்தியின் இருகோரைப்பற்கள் போல இருக்கின்றன என்கிறார். தண்ணீரில் மூழ்கிக் கிடந்த ' பாசிதூர்ந்த பார்மகளை ' வராஹ அவதாரம் எடுத்துத் தனது கோரைப் பற்களில் தாங்கி வெளிக் கொணர்ந்தது போல அம்பாளின் திருவடிகள் ஸம்ஸாரக் கடலில் மூழ்கிய ஜீவர்களைக் கரையேற்றுவன என்பது பொருள்.
அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு 

எமனிடமிருந்து மீள்வதற்கு உந்தன் கடைக்கண்ணின் கருணைப்பார்வை உண்டு

அந்த தேவியின் கடைக்கண் பார்வையோ, அந்தகனின் வாய்க்குள் சென்றவனைக்கூட மீட்டுவிடும் சக்தி வாய்ந்தவை. இப்படி வாழ வைக்கவும், சாவிலிருந்து மீட்கவும் அந்த தேவியின் அருள் காத்துக் கிடக்க, ஒருவன் கடைத்தேற முடியாமல் போனால், அது அவனுடைய குறையே அல்லவா? இதைத்தான், பட்டரும், 'என் குறையே அன்றி, நின் குறை அன்று' என்று பேசுகிறார்.

அம்பிகையின் விழிகளிலாவது நாம் பட்டோமா? அதுவும் இல்லை. அதுவும் நம் குறையே! இயமனின் பிடிப்பிலிருந்து மீண்டிட அவளது திருவிழிகளின் கடைக்கண் பார்வை போதும். அந்த அரும் பார்வையைப் பெற்றிடவும் நாம் முனைந்தோமில்லை. திருவடிகளைப் பற்றிச் சிந்திக்காததும் அவற்றைப் பற்றி நெஞ்சில் வந்திக்காததும் நம் குற்றம். நமது கர்மவினையும் ஆணவ மலமும், மாயையுமே காரணம். இவற்றை ஒழித்து, இவற்றினின்று விட்டு விலகித் தள்ளி நிற்க முடியும். ஆனால் நாம் முனைந்தோமா? இல்லை. அன்னையைப் பற்றி எண்ணினோமா? இல்லை.
கடைக்கண் பார்வை விழுந்தால் எமனை வெல்லலாம். எமனது குறிப்பை முன்னர் சில இடங்களில் சொன்னார். இங்கும் சொன்னார். இனியும் இயம்புவார். ஏன் தெரியுமா? எமனை மார்க்கண்டேயன் வென்ற திருத்தலம் திருக்கடவூர். எமனது இடரை அபிராமிபட்டர் வெல்லப்போகும் இடமும் அவ் ஊரே. அங்கே வாழ்பவள் அபிராமி ; அதனால்தான் அடிக்கடி அதனை அபிராமி பட்டர் நினைவு கூர்கிறார். இவ்வளவு கருணையுள்ளம் கொண்ட அன்னையினது கருணையைப் பெற்றிடாமை நம்ம குறைதான்னு சொல்றார்.
மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று 

இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையே; அது உன் குறை இல்லை.

கடைசி இரண்டு அடிகளுக்கு வேறு வகையிலும் பொருள் சொல்வதுண்டு.
 இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையாக இருக்கலாம்; ஆனால் அது உன் குறையும் கூட (ஏனெனில் நான் உன் பிள்ளை; உன் அடியவன்/அடியவள். என்னைக் காப்பது உன் கடன்.
முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே 


 முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!

அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிக ஸ்தல சோபிதா - அஷ்டமியில் தோன்றும் அரைவட்ட சந்திரனைப்போல் பிரகாசிக்கும் நெற்றியுடன் சோபிக்கிறவள். இதையே - வாணுதல் ( வாள் - நுதல்) என்கிறார் அபிராமபட்டர்.


16. முகசந்த்ர - கலங்காப - ம்ருகநாபி - விசேஷகா - சந்த்ர மண்டலத்தில் களங்கம் காணப்படுவது போல தேவியின் முகமாகிற சந்த்ர மண்டலத்தில் நெற்றியின் கஸ்தூரி திலகம் களங்கம் போல் அழகு கூட்டுகிறது
இந்த அந்தாதியில் எம்பெருமானை "அம்பு தொடுத்த வில்லான்" என்கிறார். எல்லோரும் அறிந்த கதைதான். திரிபுரம் எரித்த கதை.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் இரும்பு,வெள்ளி, பொன் ஆகிய மூன்று உலோகங்களால் ஆன கோட்டைகளை ஆண்டு கொண்டிருந்தனர். அக் கோட்டைகள் வானில் பறக்க வல்லவை. அம்மூன்று கோட்டைகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றாய்க் கூடும். " மூன்றும் ஒன்றாய்ச் சேருங்கால் ஒரே அம்பினால் அவற்றை எய்தால் மட்டுமே அழிய வேண்டும் " என்னும் வரங்கள் அவர்கள் பெற்றிருந்தனர்.
மூன்று கோட்டைகளையும் பறக்க விட்டு அவற்றைக் கீழே இறக்கி ஆங்காங்குள்ள ஊர்களையும் உயிரினங்களையும் அழித்து வந்தனர். தேவர்கள் அஞ்சிச் சிவனிடம் வேண்டினர். அடுத்த முறை மூன்று மலைகளும் ஒன்று சேர்ந்து வானில் உலா வந்தன. சிவபிரான் மேரு மலையை வில்லாக்கித் திருமாலை அம்பாகவும், அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு நின்றார். கையில் வில், வாள், அம்புடன் நின்றனன்.
திருமாலும், அக்கினியும், மேருவும் தம்மால் கோட்டைகளைச் சிவன் அழிப்பார் என இறுமாந்தனர். அதுகண்டு அத்தன் சிரித்தான். முப்புரங்கள் அழிந்தன .
அந்த ஈசனின் இடப்பாகம் அமர்ந்த வாள் போன்ற நுதல் கொண்ட எம் அன்னையே அல்லவா முப்புரங்களும் அழிபடக் காரணமாயிருந்தவள்!


                                                      பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                                         


அபிராமி சரணம் சரணம்!
முருகா சரணம் 



U Tubes published  by us are available in the following link

Monday 18 March 2019

பங்குனி உத்திரம்


                          
                                             பங்குனி உத்திரம்   

                                   மும்பையில் இசை வழிபாடு                                
                                                                                                         



தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு.

12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.


 இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வீகத் திருமணங்கள் 

நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. தெய்வீக திருமணங்கள் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்குனி உத்திரத்தன்றுதான்.

மணக்கோலத்தில் காட்சி உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. 


சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.

ரதி - மன்மதன் சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்


முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார்.


அவதாரங்கள் நிகழ்ந்த நாள் நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது;


அய்யப்பன் அவதரித்த  நாளும் இந்நாளே. 


ஆண்டாள் திருக்கல்யாணம் வைபவமும் நிகழ்ந்தது இந்நாளில் தான்

சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான். 


மகாலட்சுமி அவதாரம் அன்னை மகாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.


 கல்யாண விரதம் ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன.


 பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான்.


இத்தகைய சிறப்புகள் கொண்ட நன்னாளில்  திருப்புகழ் இசை வழிபாடு மும்பை செம்பூர் சங்கராலயம் ஆலயத்தில் வரும் மார்ச் 21 ம் நாள் பிற்பகல் 3.45 அளவில் தொடங்கி விமரிசையாக நடைபெற உள்ளது.மும்பை மற்றும் புனே அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு முருகப்பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.
அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

                                                                               
m


முருகா சரணம் 

Tuesday 5 March 2019

சுப்ரமண்ய புஜங்கம் 26


                             சுப்ரமண்ய புஜங்கம்  26
                                                                                   


दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्ति-
र्मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।
करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं
गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥ २६॥
த்ருசி ஸ்கந்த மூர்த்தி: ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி:
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம் |
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா: ||
அன்பரின் விளக்கவுரை 

‘த்ருசி’‘ஸ்கந்த மூர்த்தி:
 என் கண்களுக்கு எதிரில் முருகப் பெருமானுடைய உருவம்.
ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி:

காதுகளில் அவன் கீர்த்தி ஒலிக்கட்டும் 

எப்போதும் முருகப் பெருமானுடைய கதைகளையே நான் கேட்க வேண்டும்.
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்’
நான் ஏதாவது பேசினேன்னா, எல்லாரையும் தூய்மை படுத்தக்கூடிய, பேசறவா உட்பட எல்லரையும் தூய்மை படுத்தக் கூடிய முருகப் பெருமானுடைய அந்த திவ்ய சரித்திரத்தை மட்டுமே நான் பேச வேண்டும். 
‘கரே தஸ்ய க்ருத்யம்’ 
கையை வச்சுண்டு முருகப் பெருமானுடைய அர்ச்சனையை பண்ண வேண்டும்.
ஒரு அர்ச்சனை பண்ணனும்னாக் கூட புஷ்பம் வேணும். அப்படி இல்லேன்னாக் கூட ‘ஸ்தவைஹி அர்ச்சேந் நரஸ் ஸதா’ அப்படின்னு பீஷ்மாச்சார்யாள் சொன்ன மாதிரி இந்த ஸ்தோத்ரத்தினாலேயே பகவானை அர்ச்சனை பண்ணலாம். அதுல அதிகமா திருப்தி ஆகிறார்ன்னு வேற சொல்றார். அருணகிரி நாதரும்,
“ஆசைகூர் பத்தனேன் மனோ பத்ம
மான பூ வைத்து …… நடுவேயன்
பான நூலிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டியொரு ஞான
வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப
மாசிலோர் புத்தி யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர
வாள பாதத்தில் அணிவேனோ ………
ன்னு ஒரு அழகான பாடல். என்னுடைய ஆசையோடு கூடிய ‘மனசு’தான் தாமரை. அந்தப் பூவை வச்சுண்டு ‘அன்பு’ என்கிற நூலிட்டு (என்னோட அன்புதான் நூல்), என் நாக்கைக் கொண்டு மாலையாகக் கட்டறேன். சித்ரக் கவி மாலையாக அதைக் கட்டி, ஞானம் தான் அதோட வாசனை, ‘மாசிலோர் புத்தியளி பாட’, தூய்மையான புத்தி உள்ளவர்கள் என்ற தேனீக்கள் இந்த மாலையில வந்து குடி இருக்கிறார்கள். மாத்ருகா புஷ்ப மாலை. 51 அக்ஷரங்களுக்கு மாத்ருகா அக்ஷரங்கள் ன்னு பேரு. அந்த மாத்ருகா அக்ஷரங்களைக் கொண்டு ஒரு புஷ்ப மாலை பண்ணி ‘கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ’ உன்னோட அழகான பாதத்தில நான் போட மாட்டேனா’ அப்படின்னு இங்க வேண்டிக்கறார்.
கந்தர் அநுபூதியில ‘நெஞ்சக் கனகல்லு’ ன்னு ஆரம்பிச்சு 51 பாடல்கள் இருக்கு. அந்த 51 பாடல்களும், இந்த 51 மாத்ருகா அக்ஷரங்களைக் கொண்டு செய்தது. ஒவ்வொரு பாட்டுலயும் ஒரு பீஜாக்ஷரம் இருக்குன்னு மஹான்கள் சொல்லுவா. முன்ன வேண்டிண்ட மாதிரியே அருணகிரி நாதர் அந்த கந்தர் அநுபூதியைப் பாடி, மாத்ருகா புஷ்ப மாலையை முருகப் பெருமானுடைய கோல ப்ரவாள பாதத்தில் அணிவித்தார் ன்னு மஹான்கள் சொல்லுவா. 
‘வபுஸ்தஸ்ய ப்ருத்யம்’ 
என் உடம்பு அவனுக்கு அடிமை தொழில் செய்ய வேண்டும் .உடம்பு அவனுக்கு வேலைக் காரனாக இருக்கட்டும்.ஸ்வாமி தூக்கறா இல்லையா! அந்த மாதிரி பகவானோட காரியத்தைத் தான் என் உடம்பு பண்ணனும்
மம அசேஷ பாவா:
என்னுடைய எல்லா காரியங்களும் 
‘குஹே ஸந்து லீனா’ 
முருகப் பெருமானிடத்துலேயே லயித்திருக்க வேண்டும், அப்படீன்னு ஒரு ப்ரார்த்தனை. அவன் நாம ஸ்மரணை தவிர வேறு ஒன்றும் இந்த உடலுக்கு தெரிய வேண்டாம். நம் அவயவங்கள் உலக காரியத்தில் ஈடு படாமல் அவனுக்கே தொண்டு செய்யட்டும் என்கிறார். நாமும் மனதால் அவனை நினைத்து,  தலையால் வணங்கி அவன் புகழ் பாடுவோம் அவனுக்கு தொண்டு செய்வோம். இப்பிறவி எடுத்ததே அதற்காகத்தானே.  
திரு அங்க மாலை ன்னு தேவாரத்துல அப்பர் பெருமான் ‘தலையே நீ வணங்காய்’, அப்படீன்னு ஆரம்பிச்சு
தலையே நீவணங்காய் – தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்
கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண் தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ – சிவன் எம் இறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ
மூக்கே நீமுரலாய் – முது காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்
வாயே வாழ்த்துகண்டாய் – மத யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துகண்டாய்
நெஞ்சே நீநினையாய் – நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்
கைகாள் கூப்பித்தொழீர் – கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர்
ஆக்கை யாற்பயனென் – அரன் கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இல் ஆக்கையால் பயன் என்
கால்களால் பயன் என் – கறைக்கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்
உற்றார் ஆர் உளரோ – உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்து உறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ
இறுமாந்து இருப்பன்கொலோ – ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச்சென்று அங்கு இறுமாந்து இருப்பன்கொலோ
தேடிக் கண்டுகொண்டேன் – திருமாலொடு நான்முகனுந்
தேடித் தேட ஒணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்
ன்னு பாடறார். அப்படி என் உடம்பு உன்னுடைய காரியத்தையே பண்ணணும்னு வேண்டிக்கறார்.
அருணகிரி நாதரும்,
“கோடாத வேதனுக்கு யான்செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாளனே தென்தணிகைக் குமர நின் தண்டையந்தாள்
சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாத கையும்
பாடாத நாவுமெனக்கே தெரிந்து படைத்தனனே. “
(கந்தர் அலங்காரப் பாடல்)
அப்படி தன்னோட குறையைச் சொல்றார். கொடுத்த உடம்பை வச்சிண்டு நான் என்னென்னவோ பண்றேனே. நான் அப்படி என்ன பாவம் பண்ணிட்டேன் அந்த ப்ரம்மன் கிட்ட? இப்படி என்னை படைச்சிருக்கானே. அப்படின்னா என்ன அர்த்தம். ‘எனக்கு முருகனுடைய தண்டையந்தாளை சூடக் கூடிய சென்னியும், அவனை நாடும் கண்களும், அவனைத் தொழும் கைகளும், அவனைப் பாடும் நாவும் கொடு’ன்னு பிரார்த்தனை பண்றார்.


சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம்   



   செந்திற் குமாரன் றனைக்கண்கள் காண்க
   செவிஎந்தை புகழ்கேட்க வாய்சீர்த்தி பாட
   கந்தன் திருத்தொண்டு கைசெய்வ தாக
   கடையேன் அவன்தொண்ட னெனும்வாழ்வு சேர்க.
   


சுப்பிரமணிய புஜங்கம் முழுவதும் இசையுடன் 

பாம்பே  சகோதரிகள் குரலில் 
                                                    முருகா சரணம்