Friday 29 December 2017




குருமஹிமை   இசை  புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள்  476-503
 புதிய வரிசை எண்  496  வழிபாடு புத்தக எண்  வரிசை  225

"சாலநெடு நாள்மடந்தை" என்று தொடங்கும் பாடல் 


                                                                  பாடலும் பொருளும் காண குறியீடு


                                             http://thiruppugazhamirutham.blogspot.in/2013/07/225.html


                                     கோடை நகர் (வல்லக்கோட்டை ) தலம் பற்றிய தகவல் 

                                                    http://temple.dinamalar.com/New.php?id=693


                                                                                     பாடல் இசையுடன் 

                                                                      17.10.2010 விஜய தசமி வழிபாடு 




                            
                                                                                                       


                                                                 Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  

                                                    https://youtu.be/nra_-QQfaGs

                                                                குருசமர்ப்பண  இசை விழா  2017

                                                                   குழந்தைகளின் சமர்ப்பணம் 



                         
                                                                                                   



                                                                            Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  


                                              https://www.youtube.com/watch?v=F39fDnoB9tU&feature=youtu.be
                                                                           

                                                         முருகா  சரணம் 

Wednesday 27 December 2017

புணே தேஹு ரோடு முருகன்



                                                              புணே  தேஹு ரோடு முருகன்

                                                      பழைய அடியவர் தின வழிபாடு  நிறைவு


                                                                                                     


பெருமானின் கட்டளைப்படி டிசெம்பர் 25ம் நாள் நடைபெறும் வழிபாட்டை
"பழைய அடியவர் தினம் " என்று கொண்டாடி அடியவர்களை  நினைவில் கொண்டு ,போற்றி பொன்னான புனித தினமாக நிலை நிறுத்தியுள்ளார்கள்.அது மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் கடைபிடிக்க வேண்டும் என்ற மரபையும் வலியுறுத்தியுள்ளார்.அவர்களின் நல்லெண்ணத்தையும்,உணர்வையும் நாம் போற்றி க்கடைபிடிக்க வேண்டியது எல்லா அன்பர்களின் கடமையாகும்.

அடியவர்கள்அதிலும்பழையஅடியவர்கள்ஆழ்வார்கள்,நாயன்மார்கள்,அருணகிரியார்,வள்ளிமலை ஸ்வாமிகள் பாம்பன் ஸ்வாமிகள்,நம் குருஜி போன்றவர்கள்தான்.நாம் அறிந்தது சிலர் .அறியாதது பலர்.

அருணகிரியார் ஒரு பாடலில்   எப்படி போற்றுகிறார்? பெருமானை" நீ மட்டும் காட்சி அளித்தால் போதாது.பழைய அடியவர்களுடன் சேர்ந்து காட்சி தர வேண்டுகிறார்.

பாடல் 
பழய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும்

 பொருள் 



 "பழமையான அடியார்களுடன்,தேவர் கூட்டம் இருபுறமும்மிகுந்த தமிழ்ப்
பாடல்களையும்வேதகீதங்களையும்பாடிவணங்க,முன்னொருமுறைதிருவண்ணாமலையில் என்முன் வந்ததுபோல
இன்னொரு முறை வந்தருளல் வேண்டும்."


மற்றொரு பாடலில்   "தூய்மை வாய்ந்தஅழகிய சுத்தமான உன் அடியார்களின் திருவடி சேரும் பாக்கியத்தைப்பெற உனது திருவருளைத் தர வேண்டுகிறேன்.""


பாடல் 
தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய்


பொருள் 



 "நல்ல ஆடைகளாலும், தங்கச்சங்கிலிகளாலும் அலங்கரித்து மகிழ்ந்து,ஏழு உலகங்களும்எனக்குப் பிற்பட்டதாக எண்ணி முந்தி ஓடிடும் மூடனாகிய நான்,தூய்மை வாய்ந்தஅழகிய சுத்தமான உன் அடியார்களின் திருவடி சேரும் பாக்கியத்தைப்பெற உனது திருவருளைத் தர வேண்டுகிறேன்."

நம் அமைப்பின் பெயரே "திருப்புகழ் அன்பர்கள் " உயிரோட்டமுள்ள வாழையடிவாழையாகவந்ததொருதிருக்கூட்டம்.எல்லோரும் அடியார்கள் ,தொண்டர்கள்.நம் அமைப்பை உருவாக்கியவர்கள் இறை தூதர்கள்.நம்மை சத்சங்கத்தில் ஈடு படுத்தியவர்கள்.இறை உணர்வை ஊட்டியவர்கள்.செம்மைப் படுத்தியவர்கள்.நம்மை எல்லா வகையிலும் உயர்நிலையில்நிறுத்தியவர்கள்.மரணபயத்தைஒழித்தவர்கள்.மரணமில்லா பெருவாழ்வு தத்துவத்தை  உணர்வித்தவர்கள்.உடல் உபாதைகளால் மனம் தளராது இறைபணி ஆற்ற நம்மை இயக்கியவர்கள் .அவர்களை என்றென்றும் நினைவில் கொண்டும் போற்றியும் வணங்கியும் சரணடைவது நம் கடமை.


புணே வழிபாட்டில் அன்பர் ,ஆலய அறக்கட்டளையாளர் சுந்தரராஜன் கடந்த 11 ஆண்டுகளாக  மும்பை அன்பர்கள் பல இன்னல்களுடன் வழிபாட்டில் கலந்து கொண்டு வருவதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிப்பிட்டார்.அது அவர்களுக்காக வேண்டும் பிரார்த்தனையாகவே கருதுகிறோம்..அன்பார் ஜவகர் ,இன்றும் நம்மை ஆட்டுவிக்கும் அமரர்களான அன்பர்களை நினைவு கூர்ந்தார்.


அவர்களில் மும்பை ராதாகிருஷ்ணன் அவர்கள் 2012ம் ஆண்டு வழிபாட்டில் தேஹுரோடு முருகன் மீது சூட்டியுள்ள பாமாலையை சமர்ப் பித்தத்தை யம் நினைவூட்டினார்.


அன்பர்களின் நினைவுக்காக .கவிதை நயத்தோடு  காப்பு,குருவணக்கம்,நூல்,பலன் என்ற மரபோடு சம்பிரதாயமாக அமைந்துள்ள  அந்த பாமாலையை அளிக்கிறோம்.



காப்பு 

தாயாய்  உருவெடுத்து தண்டமிழ்த் தேன் பாலூட்டி 
சேயாய்  எனை அணைத்து  சீரிணக்கம் செய்வித்து 
மாயாப் பிறவிதனை மாற்றழிக்க நெறிசெய்தென் 
ஆயாகி நின்றானை ஐங்கரனை வாழ்த்துவனே //            1.

குருவணக்கம் 

வால  வயதினிலே நல்லதமிழ் பயிற்றுவித்து 
சால சீர்செய்த சற்குருமார் பொற்பதமும் 
சீல மிகு குருஜி இராகவனின் வழிநடத்தும் 
பாலமணி ராஜி பதமும் பணிவேனே                               2.

நூல் 

தலம் பலவும் சென்றுநான் சேவித்தேன் -ஆறுபடைத் 
தலம் பலவும் கண்குளிரக் கண்டுகொண்டேன் என்றன்மனம்
பலம்பெறவே கைதொழுது  நிற்கின்றேன்  நற்றேவர் 
நலம்  பரவும் சந்நிதியே தேஹுரோடின் நாயகனே //                  3.

பார் காக்கும் காவலனின் பன்னிருகைக் கோமகனின் 
சீர்போற்றி நல்லடியார் பாடிமகிழ் வேளையிலே 
கார்போல் கருணைமழை பொழிவித்து எங்கள் மனத் 
தேர்மேல் வலம் வருவாய் தேஹுரோடின் நாயகனே //             4.

புவிநாடி வலம்வரு நல புள்ளிமயில் வாகனனைக் 
கவிபாடிச்  சிறு துதியால் வணங்குகிறேன் பார்புகழும் 
தவஞானியார் பலரும் தொழுதேத்தும் பெருங்கோவே 
சிவஞானம் தெளிவிப்பாய் தேஹுரோடின் நாயகனே   //           5.

பூவினுளே சிறப்புளது புண்டரிகம் செம்மைதமிழ்ப் 
பாவினுளே பொற்புளது அருணகிரி திருப்புகழே - என்றன் 
நாவினுளே நின்றுளது நல்லடியார் பாதமலர் 
தேவருளே தேவன் நீ  தேஹுரோடின் நாயகனே   //                     6.

இருமலிலும் சருமலிலும்  காய்ந்து  எந்தன் உளம அலையும் 
பொருமலையும் பெருமலையும் போக்கி அருள்புரிவாய் - வான் 
தருமலையும் தனிமலையும் சேர்ந்தணைந்த இப்புவியில் 
திருமலை போல் தொல்மலிசீர்த் தேஹுரோடின் நாயகனே //      7.

பலன் 

அண்டமெலாம் தொழுதேத்தும்   தேஹுரோடின் நாயகனைத் 
தெண்டனிடு வோர்க்குச் சித்திக்கும் சிவபதமே 
மண்டு துயரிலா வாழ்வும் மாண்பு திருசேர்  வாழ்வும் 
பெண்டுபிள்ளை யுடன்வாழ்வும் மகிழ்வோடு  பெறுவாரே //          8.


ஆலய நிர்வாகிகளுக்கு நாம் வைக்கும் விண்ணப்பம்.

ஆலயத்தின் சரித்திரத்தில் இடம் பெற்ற அந்த பாமாலையை ஆலய கல்வெட்டில் பொறிக்க வேண்டும்.

அல்லது வண்ண மயத்த்தில் பெரிய படமாக ஆலய வளாகத்தில் அன்பர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

நிர்வாகிகள் செயலில் இறங்குவார்கள் என்று நம்புவோமாக.அதுதான் பழைய அடியவர் அமரர் ராதாகிருஷ்ணனுக்கு செலுத்தும் கௌரவ மாகும்.

நடந்த வழிபாட்டின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறார் ஜானகி ரமணன் மாமி 


" தெகு ரோடு   குன்றக் குமரன் கோயிலில் இன்று , மும்பை,புனே திருப்புகழ் அன்பர்கள் இணைந்து கொண்டாடிய , "பழைய அடியவர் தினம்" தந்ததோ புத்தம் புது உணர்வு. அருணகிரியாலிருந்து  , குருஜி ராகவன், வரையிலான அடியவர் நினைவுகளை அள்ளிக் கொண்டு வந்து, பக்தியால் பன்னீர் தெளித்த தினம். அவர்கள் காட்டிய வழிகள் அல்லவா நம் விழிகளுக்குத் துணை ! அவர்கள் ஏற்றிய தீபங்கள் அல்லவா  ஆன்மீகத் தேடலுக்குத் துணை!  சந்தம் எனும் தேனூற்று .ராகம் எனும் தென்றல் . பாவம் (Bhavam) என்னும் கனிவு - எனத் திருப்புகழின் சாரம், பொங்கி வந்ததாலே, நேரம் ஓடியது தெரியவில்லை.. பாடியது மட்டும் தான் நெஞ்சை நிறைத்தது.வடிவழகனோ , தேவியர் இருவருடன்  விழி நிறைத்து நின்றான். மொழி மறந்து நின்றோம். அடியார்கள் மூலமாய் அவன் அனுப்பி வைத்த அருள் கொடை அல்லவா இது!   விடை பெற மனமின்றி வந்தோம். இனிய நாள் தந்த கந்தா சரணம்.     அனைவருக்கும் நன்றி    .            ஜானகி ரமணன்."

                                                சில புகைப்பட தொகுப்புக்கள்

                                                                                                   


                               

                           


                                                                                         









                                        முருகா சரணம் 
































Saturday 23 December 2017

சுப்ரமண்ய புஜங்கம் 12


சுப்ரமண்ய  புஜங்கம்  12 
                                                                                                    
                                                                                                   



பெருமானின்  பன்னிரண்டு திருக்கரங்களைப் பற்றி ஒரு ஸ்லோகம்.

விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்

நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான் |

ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண செளண்டான்

ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் ||

பாஹு-ன்னா கைகள், முருகப் பெருமானுக்கு நல்ல நீளமான பன்னிரு கைகள். அதைப் பத்தி இந்த ஸ்லோகம்.

விதெளக்லுப்த தண்டான் – 

விதி-ன்னா ப்ரம்மா,

 விதெள-ன்னா ப்ரம்மாவிடத்தில், 

தண்டம்-ன்னா தண்டனை,

 க்லுப்த தண்டான்-னா தண்டனை கொடுத்தார். முருகப் பெருமான் தன் கைகளால் அவர் தலையில குட்டினார், அவர் ப்ரணவத்துக்கு அர்த்தம் தெரியாது-ன்னு சொன்ன போது. அந்தக் கைகள்-னு சொல்றார். ப்ரம்மாவுக்கு தண்டனை கொடுத்த கைகள்.

‘ஸ்வலீலாத்ருதாண்டான்’
 அண்டங்களை எல்லாம் விளையாட்டாக ‘ஸ்வலீலா’ வெறும் விளையாட்டாக அண்டங்களை எல்லாம் தாங்கி கொண்டு இருக்கிறார்.

 ‘த்ருத அண்டான்’

நிரஸ்தேபசுண்டான்’ , இப:-ன்னா யானை,

 இபசுண்டம்-னா யானையோட தும்பிக்கையை,

 நிரஸ்த: யானையோட தும்பிக்கையை பிடிச்சு அதோட திமிரை அடக்கினார், மதத்தை அடக்கினார்-ன்னு இங்க வர்றது.

த்விஷத்காலதண்டான்’ எமனுக்கு சத்ருவா இருந்து எமனையே துவம்சம் பண்ற கைகள்-னு சொல்றார். 

ஹதேந்த்ராரிஷண்டான்’ இந்திரனுக்கு அரி – இந்திரனுக்கு எதிரிகளான சூரபத்மன் முதலிய அசுரர்களை ‘ஹத:’ வதம் பண்ணினார்.

‘ஜகத்ராண செளண்டான்’ இந்த கரங்கள் உலகங்களை எல்லாம் காப்பாத்தறதுல ரொம்ப சாமர்த்தியத்தோட, ரொம்ப சக்தி வாய்ந்த கைகளா இருக்கு.

‘ப்ரசண்டான்’ இந்த கைகள் எதிரிகளுக்கு ரொம்ப பயங்கரமா இருக்கு, அவர் கையில வேலை எடுத்தார்னா எல்லாம் பயந்து ஓடறா. அப்படி பயத்தை கொடுக்கக்கூடியதாக உள்ள

‘பாஹுதண்டான்’ உன்னுடைய தண்டம்-ன்னா நீண்டு தொங்கி கொண்டு இருக்கக் கூடிய, பன்னிரு கைகளையும் 

‘சதா ஆச்ரயே’ நான் எப்பொழுதும் நம்பி இருக்கிறேன். நான் அவைகளை பற்றுக்கோடாக கொண்டிருக்கிறேன்-ன்னு , இந்த அழகான ஸ்லோகம்.


   திருக் கைகளின் சிறப்பு

கவிதை வடிவில் 

   அயனைப் புடைத்தண்ட நிரையைப் புரந்தே
   ஆனைக்கை வென்றந்த கனையும் துரந்தே
   துயரிந்த்ரன் பகைவென் றபயமென்ற நின்கை
   துணை செய்க வுயர் செந்தி லிறைவா எமக்கே.   

பொருள்     

பிரமனைப் புடைத்துச் சிறையிலிட்டு, அண்டங்களை எல்லாம் காத்தருளி, யானையின் தும்பிக்கையையும் வடிவினால் வென்று, எமனை ஓட்டி, சூரபதுமனைக் கொன்று இந்திரனின் துயரை நீக்கி, தனை அடைந்தோருக்கு என்றும் அபயமளிக்கின்ற நின் கை எனக்குத் துணை செய்தருள்க.

அயன் - பிரமன். அண்டநிரை - உலகக் கூட்டங்கள். அபயம் என்றல் - அஞ்சேல் என்பது.


 பலன் ... ப்ரம்ம ஞானம் கிட்டும்

வேதன் தலையில் குட்டிய கை
விண்ணவர் கோனை வாழ்த்தும் கை
வாதனை போக்கும் யமதண்ட மதாய்
வையம் தாங்கும் விளையாட்டாய்
சாதனைக் கரியின் கைபற்றி
தன்மத மடக்கும் நின்னுடைய
காதல் கரங்கள் பன்னி ரெண்டும்
கந்தா என்னைக் காத்திடுக.


 (நன்றி....   கௌமாரம் இணைய தளம்)

அருணகிரிநாதர் கூறுகிறார்  
ஆராத காதலாகி எனத் தொடங்கும் திருப்புகழில்

ஈராறு தோளும் ஆறு மா முகமோடு ஆரு நீப வாச மாலையும் 

இன்னொரு திருப்புகழ் 

சீரான கோல  கால நவமணி என தொடங்கும் திருப்புகழில் 

சீராடு வீர மாது மருவிய 
ஈராறு தோளும் நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள்
என்கிறார்..

பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனுக்கு

Thursday 21 December 2017

வள்ளி கல்யாணம் நிறைவு



                                     வள்ளி கல்யாணம்  நிறைவு   

நிறைவு என்று பகர்வதில் மனம் ஒப்பவில்லை.அன்பர்கள் மனத்தில் "நிறைவு " என்ற பொருளில் தான்   நம் நினைவுகளை வெளிப்படுத்துகிறோம்.

வழிபாடுகளில் அன்பர்கள் தங்கள் நிலை மறந்து பெருமான் சன்னதியில் பய பக்தியோடு தவயோக நிஷ்டையில் அமர்வது கண் கூடு.

ஆனால்பெருமான்வள்ளிகல்யாணவைபவத்தில்அன்பர்கள்பெருமானையும்,வள்ளி பிராட்டியையும் நம்மில் ஒருவராக க்  கண்டார்கள்.பயம் மற்ற சப்ரதாயங்கள் ஒன்றும் கிடையாது.நெறிமுறைகள் தளர்ந்த நிலையில் பெருமானையும்பிராட்டியையும்தங்கள்குழைந்தையாகவும்,சிறுவர்களாகவும்   மணமக்களாகவும் உரிமையோடு சகஜ நிலையில் கண்டார்கள்  கொஞ்சினார்கள்.பாடினார்கள்.கூத்தாடினார்கள் .கும்மியடித்தார்கள்.கோலாட்டம் ஆடினார்கள் போற்றினார்கள்.   வாழ்த்தினார்கள்.பரவசமுற்றார்கள்.ஜீவாத்மா,பரமாத்மா தத்துவத்தின் படிஇணைந்தார்கள்.சரணடைந்தார்கள்.ஆனந்தம்,பேரானந்தம்,பரமானந்தம்,நித்தியானந்தம்,சச்சிதானந்தம் நிலையை அடைந்து திளைத்தார்கள்.

கலந்து கொண்ட அன்பர்கள் பாக்கியசாலிகள்.கலந்துகொள்ள இயலாதவர்கள் அதைவிட பாக்கியசாலிகள் என்ற வகையில் அருள் பிசாதமாக விழா அமைப்பாளர்கள் வைபவத்தை நம் கண்கள் குளிர  UTUBE வடிவத்தில் பாகங்களாக  நம் இல்லங்களுக்கு பெருமான், பிராட்டியை எழுந்தருளச் செய் துள்ளார்கள்.

வள்ளிகல்யாணம் ஒருநாள் மட்டும்தானா? நம் இல்லங்களிலில் என்றென்றும் கல்யாணம்தான்.மீண்டும் மீண்டும் காண்போம். அனுபவிப்போம்..   
                                                                                                   
குறியீடு 
                                                                                                                               






அன்பர் ஐயப்பன் குதூகலத்துடன் நன்றி நவில்கிறார்.நமக்காக பிரார்த்தனை செயகிறார்.

"செந்திலாதிபதி ஸ்ரீ சுவாமிநாதனாய்  தமது திருக்கல்யாண வைபவத்தை வரலாறு காணாத வகையில்  சுவாமி மலையில் நடத்திக் காட்டி  அங்கு வந்திருந்த  ஒவ்வொரு அன்பர்கள் மனதிலும் நிரந்தர பேரானந்தத்தை அருளினான் . அதை எண்ணும்  போதெல்லாம் அடியேன் மனம் பேரானந்தம் அடைகிறது. 

இவ்வளவு பெரிய வைபவம் நடக்க எத்தனை பேர் உதவினார்கள்?  எவ்வளவு அழகாக புஷ்ப அலங்காரம் செய்திருந்தார் அந்தக் கண்ணன் ? . அன்பர்கள் குடும்ப சகிதமாக உள்ளூர் , வெளியூர் , கனடா , அமேரிக்கா , லண்டன் போன்ற நாடுகளில் இருந்து வந்து பேரானந்தம் அடைந்தார்களே  இவர்களுக்கெல்லாம் எவ்வாறு நன்றி சொல்வது?. இந்த திருக்கல்யாணம் இவ்வளவு சீரும் சிறப்புமாக நடை பெற பொருளுதவி செய்து அது  செலவை விட ரூ 28386/- மிஞ்சும்  அளவிற்கு கொண்டு வந்த ( விபரம் நமது கூகிள் ட்ரைவ் சீட்டில் உள்ளது ) அவ்வளவு பேருக்கும் எப்படி  நன்றி சொல்ல     இயலும் ? . 

இதற்கு ஒரே வழி இது தான் .  இப்படி பிரார்த்தனை செய்வோம்.   அனைவருக்காகவும் , நமது குருஜியின் உபதேசத்தின் படி , நிறைய நிறைய திருப்புகழ் பாடுவோம் ஏகசித்த மனத்தோடு. 

கலியாண  சுபுத்திரனாக குறமாது தனக்கு விநோதா  !!!!! கவினாரு  புயத்தில் உலாவி களிகூரும்  உன்னைத் துணை தேடும் எல்லா அன்பர்களுக்கும் சகல  செல்வ யோக மிக்க பெருவாழ்வு  அருளி  , அவர்கள் நினைத்த காரியங்களை அனுகூலமே ஆக்கி , அவர்களை சுகப்படவே வை ஐயா !! அது உனக்கு கனமாகும் ஐயனே முருகா !!!!!        அருளாசிகள்  நல்கி உதவி புரிய வேணும் ஐயனே !!!!!!

முருகா சரணம்  முருகா சரணம்  முருகா சரணம்"

குரு மணி சார் தம் உரையில் "அன்பர்கள் எல்லோரும் உணவு அருந்திய பின் தான் நாங்கள் உணவு அருந்துவோம்  என்று கூறிய போது நம் நெஞ்சம் நெகிழ்ந்தது.கண்களில் நீர் கசிந்தது.அவர்கள் நமக்காக பிரார்த்தனை செய்யும்  போது மனம் உருகும் நாம் அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்ய வேண்டியது நம் தலையாய கடமை என்று உணர்வோம்.மீண்டும்  மீண்டும் பிராத்தனை செய்வோம்.மணிசார் கூறியதுபோல குருஜியின் வழி நடந்தால் மட்டும் போதுமானது.மனோலயம் தானே வரும்.

அடுத்து திருப்பரங்குன்றம் வள்ளி கல்யாண வைபவத்துக்கு நம்மை தயார் படுத்துவோம்.

முருகா சரணம் 

Wednesday 20 December 2017

புணே யில் ( தேஹு ரோடு) திருப்புகழ் இசை வழிபாடு



                                               புணே யில்  ( தேஹு ரோடு) திருப்புகழ் இசை வழிபாடு 

                                                                     நாள்  25.12.2017 திங்கள் 
                                                                                                   


ஆண்டு தோறும் டிசம்பர் 25ம் நாள் புனே தேஹு ரோடு முருகன் ஆலயத்தில் நம் வழிபாடு நடைபெறுவதை அன்பர்கள் அறிவார்கள்.

 இந்த ஆண்டு 25.12.2017 திங்கள்  கிழமை காலை 9.15 மணி அளவில் நடைபெற உள்ளது..மும்பை,புனே அன்பர்கள் பெருமளவில் முன்னதாகவே வந்து அபிஷேகம் அர்ச்சனை பூஜைகளில் கலந்து கொண்டுமுருகனின்திருவருளைஅடைய  வேண்டுகிறோம்..அழைப்பிதழ் இனைத்துள்ளோம் .
                   



Address

Murugan Hills

788.Shitala Nagar Behind  Central Restautant
Dehu Road

Pune 412101

Tel  020 27671485

முருகா சரணம் 

Friday 8 December 2017

அபிராமி அந்தாதி - 26




அபிராமி அந்தாதி - 26

                                                                                               


ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்;- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே!- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு; நகையுடைத்தே


ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்;

 உன்னை என்றும் போற்றிப் புகழ்பவர்கள் யார் என்று கேட்டால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிகின்ற மும்மூர்த்திகளான பிரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள்.

.யாரெல்லாம் உன்னைப் போற்றித் துதிக்கின்றனர் என்று?.... படைத்தல் தொழிலின் அதிபதியாம் நான்முகப்பிரம்மாவும், காத்தல் தொழிலின் அதிபதியாம்...மண்ணுண்டு...விண்ணளந்த எம்பெருமான் செங்கண் மாலும், அழித்தல் தொழிலின் அதிபதியாம் கூடல் நகரின் ஆடல் நாயகன் சிவபெருமானும் உன்னை என்நாளும் போற்றித் துதிக்கின்றனர்...


அந்த அபிராமியை வணங்குபவர்கள், எப்படிப்பட்டவர்கள்? ஒருவர், இந்த உலகைப் படைக்கிறார். ஒருவர், இந்த உலகு முழுக்க வாழக் காக்கும் தொழில் புரிகிறார். இன்னொரொவர், அனைத்தையும் அழிக்கும் சம்ஹார மூர்த்தியாக விளங்குகிறார். அந்த முத்தொழில் புரிவோரையும் இந்த உலகு முழுக்கவே ஏத்திப் பாராட்டுகிறது. ஆயினும், இந்த முதல் மூவரும்கூட, அபிராமியைத் தெய்வமெனப் போற்றுகிறார்கள்.

இங்கே, "கமலாக்ஷ நிஷேவிதா" ,
" ப்ரஹ்ம உபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸமஸ்துத வைபவா "
" ஹரி ப்ரஹ்மேந்த்ர சேவிதா"
"மஹா பைரவ பூஜிதா"
என்ற லலிதா சஹஸ்ர நாமங்களை நினைவு படுத்துகிறார் அபிராமி பட்டர்.
முன்பே ஒரு பாடலில்கூட,
சிந்திப்பவர் நற்றிசைமுக நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப்பரமானந்தர்
என்று போற்றுவதையும் நாம் இங்கே பார்க்க வேண்டும்

கமழ்பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே!-

மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே!


மணம் நாறும் நின் தாளிணைக்கு

முத்தேவர்கள் மட்டுமன்றி, மற்றெல்லாரும் வந்து, வணங்கி, வணங்கி, அந்த அபிராமியின் பாத கமலங்களும் கூட மணம் வீசுகின்றன. வேத மாதா முதல், முத்தேவர்கள் வரை அனைவரும் அந்த அணங்கின் பாத கமலங்களில் விழுந்து வணங்குவதனால், அவர்கள் தலையில் சூடிய மலர்கள், அம்பிகையின் பாத கமலங்களில் விழுகின்றன. அந்த பாத கமலங்களும், அந்த அந்த மலர்களின் வாசத்துடன் திகழ்கின்றன.

 மும்மூர்த்திகளாலும் தொழப் படுபவள் நீ.. அவர்கள் உன்னை என்ன சொல்லித் துதிப்பார்கள்?? நாமறியோம்... தேவாதிதேவர்களெல்லாம் உன்னை என்ன சொல்லித்துதிப்பார்கள்?? நாமறியோம்.. எம் சிற்றறிவுக்கெட்டிய சிறு சொற்களால்,,

என்நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு; நகையுடைத்தே

கீழான சொற்களால் உன்னைத் துதிக்கிறேன்... அதையும் நீ ஏற்றுக் கொள்கிறாயே... இதென்ன நகைச்சுவை... ? என்கிறார். இவ்விடத்து அன்னை  அபிராமி எளியோர் சொல்லையும் தம் கவனத்தில் ஏற்கும் கருணையுடைவள் என்ற அவளது பெருமையும், அன்னையைத் துதி செய்ய மிகச்சிறந்த பாடல்களைப் பாடிவிட்டு இதெல்லாம் மிகவும் கீழான சொற்கள் என்று கூறும் அபிராமிப் பட்டரின் எளிமையும் தன்னடக்கமும் இப்பாடலின் மூலம் வெளிப்படுகின்றன..அபிராமிப் பட்டரின் பாடல்களையே அவர் அவ்வாறு சொல்லும்போது, அறியாது விளக்கமளிக்கும் இவ்வடியேனின் சொற்களெல்லாம் எவ்விடம்தான் போகும்?

இவ்விடத்து தனது நாவில் தங்குகின்ற கீழான வார்த்தைகள் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது அபிராமி அந்தாதியை... நமக்கெல்லாம்
அபிராமி அந்தாதியே வேதம்.. அன்னையின் புகழ்பாடும் சிறந்த பாடல் நூல். ஆனால் அதை எழுதிய அபிராமிப் பட்டரோ எளியவன் என் நாவில் இருந்து புறப்பட்ட கீழான வார்த்தைகள் என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்.. ஆனால் அதையும் நீ ஏற்றுக் கொண்டாயே... இது சிறந்த நகைச்சுவை என்கிறார்.

இப்படிப்பட்ட பாத கமலங்கள், என்னுடைய இனிமை இல்லாத பிதற்றல் மொழிகளையும் கூட ஏற்று விளங்குவது வியப்பான ஒன்றுதானே! இப்படிப்பட்ட சௌலப்யத்துடன் விளங்குகிறாளே இந்த அபிராமி பிராட்டி என்று வியக்கிறார் பட்டர்.

முதல் மூவரும் போற்றும் திருவடிகளுக்கு கீழான எனது பாடல்களும் அணிகலன்களாகப் போனது தான் என்ன வியப்பு? அன்னையின் எளிவந்த தன்மை தான் என்னே? என்று வியக்கிறார் பட்டர்.


பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.




                                   






    












                                                                                                                                                                     

Thursday 7 December 2017

சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர்... 3


                                                              சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர்...  3

                                                                                                 


  வள்ளி கல்யாணம்  தத்துவம் பற்றி அருமையாக விளக்கமளிக்கிறார் 

அன்பர் சாந்தா  ராஜன் ( பெங்களூர்)

 'நம் ஸநாதன தர்மம் (Sanatana Dharma) வேதங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் நெறியில் அறம், பொருள், இன்பம்,வீடு என்ற நான்கு பேறுகளையும் விரிவாக உணர்த்துகிறது. உபநிஷத்துக்கள் வேதங்களின் சாரத்தை வேதாந்தமாகஎடுத்துரைக்கின்றன. ஆனால் இவையெல்லாம் கற்றறிந்த பண்டிதருக்கே உதவுகின்றன. சமுதாயத்தில் உள்ள பாமரர்களும்வேதநெறியில்செல்லவேண்டுமென்றால்,,உண்மையானமெய்ப்பொருளை   அறிய  வேண்டுன்றால்அவர்களுக்கு எளிதாகப் புரியும்படிஎடுத்துச் சொல்ல வேண்டும்.. தேனில் குழைத்து கொடுப்பதுபோல் புராணங்களின் மூலம் புகட்டினால் ஒவ்வொன்றின் தத்வார்த்ங்கள் புரியும்.

முருகன்வள்ளியைஆட்கொள்ளவேண்டிபல திருவிளையாடல்களைப் புரிந்துள்ளான். பரமாத்மாவான முருகன் வலியச் சென்றுஜீவாத்மாவான வள்ளியை தனதாக்கிக் கொண்டதே இதன் தத்துவம்.

இது வள்ளியின் திருமணம் மட்டுமல்ல. நம் ஒவ்வொருவரின் திருமணமும் கூட. ஆண்டவனை அடையும் பொருட்டு ஒவ்வொருஜீவனும் கொண்டுள்ள ஏக்கத்தை பக்தி பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் பாடி, ஆடி, கசிந்து உருகி, ப்ரபஞ்சத்தின் ஒரேபுருஷனாகிய ஸுப்ரமண்யனை (பரப்ரம்மத்தை) அடைவதே இந்த திருமணத்தின் நோக்கமாகும்.

   அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
   ப்ரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு (பரப்ரம்மம்)
   ஒரு மேனியாகி, முருகனாய் உலகமுய்ய உதித்தனன்.

உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் பிரதிநிதியாய் வள்ளி நிற்கிறாள். அவள் இச்சா சக்தியின் உருவகம். பரம்பொருளுக்குஎப்பொழுதுமே ஜீவன் மேல் கருணையுண்டு. ஒவ்வொரு ஜீவனும் பாச பந்தங்களுக்கு அப்பாற்பட்டு, பக்குவப்பட வேண்டியதருணத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்.

வள்ளி என்ற உருவகம் கொண்ட ஜீவாத்மாவை இப்பொழுது சந்திப்போம். அவள் பிறந்த குலம் வேடுவர் குலம். வேடுவர்கள்அற்றைக்கு இரை தேடுபவர்கள். அன்றைய பசியைத் தீர்த்துக்கொள்பவர்கள். அத்தத்திலும் (பொ: அன்றாட தேவைகளிலும்) ஆசைகொண்டவர்கள். இறைவனைப் பற்றி அறியாதவர்கள், அவனைப் பற்றத் தெரியாதவர்கள். அவர்களின் அரசனான நம்பி ராஜன்
முன்செய் பயனாய் ஒரு பெண் முத்தை வள்ளிக்கிழங்கு செடியடியில் கண்டெடுத்து வளர்த்து வருகிறான். வள்ளி என்ற ஜீவன் மற்றஜீவன்களைவிட மேம்பட்டு இருக்கிறது. அவள் இறைவனைப் பற்றி தெரிந்து இருக்கிறாள், இன்னும் அறியவில்லை. நேரே காணவிழைகிறாள். அற்றைக்கு இரை தேடாமல் மறுமைக்கு முக்தியை தேடுகிறாள்.

அஷ்டாங்க யோகம் மூலமாகப் பெரு முயற்சி செய்கிறாள். முதல் இரண்டு அங்கங்களான இயமம், நியமம் மூலம் உயிர் குடிகொண்டுள்ள உடலை கோவிலாக பேணுகிறாள். புற அழுக்குகள் படாமல் 'சிற்றேனல்' காக்கின்றாள். இதற்காகயோகாசனம்பயில்கிறாள். 'ஆலோலம்' பாடி மகிழ்கிறாள். 'ஹம்ஸோஹம்' என்ற பிராணாயாம தியான வழிபாடு உதவுகிறது. சுவை, ஒலி, ஊரு, ஓசை,
நாற்றம் என்னும் பஞ்சேந்திரியங்களை வெளி விஷயங்களிருந்து தன்னை அப்புறப்படுத்துகிறாள். ப்ரத்தியாகாரம் என்னும் யோகவகையில் எதிர்மறைகளான கோபம் மற்றும் மத மாச்சரியங்களை (பொ: பகைமை, பொறாமை) அறவே நீக்குகிறாள். இதையே 'குருவிஓட்டித்' திரிந்த பெண்ணாக அருணகிரியார் காண்கிறார். 'தியானம்' மற்றும் 'தாரணை' மூலாமாக மனதை ஒருமுகப்படுத்தித் தவம்மேற்கொள்கிறாள். 'சமாதி' எனப்படும் எட்டாவது அங்கத்தில் பரப்ரம்மத்துடன் ஒன்றுவதற்குண்டான நிலை பெற அவளுடையமுயற்சி மட்டும் போதவில்லை. அத்தருணத்தில் பரமாத்மாவான முருகன் அவளை ஆட்கொள்ள வருகிறான்.

முதலில் அவளை பரீட்சை செய்ய அவர்களில் ஒருவனான வேடுவனாக வந்து மணம் புரியக் கேட்கிறான். வள்ளி உலகவாழ்க்கையில் உழல மறுக்கிறாள். ஆனால் வந்தது பரப்ப்ரம்மம் என்று அறியவில்லை. முருகன் வேங்கை மரமாக உரு எடுக்கிறான்.அஞ்ஞான இருளை அகற்றி ஞானம் தரும் தருவாக நிற்கிறான். அதன் பின் கிழவனாக (தலைவனாக) வந்து ஆச்ரயிக்கிறான்.குருவாகி தீட்சை (தீக்கை) தந்து மும்மலங்களையும் இருவினையையும் போக்குகிறான்.

இப்பொழுது வள்ளி என்னும் ஜீவன், சத்தினிபாதத்திற்கு (பொ: மறைந்திருந்து அருள் பாலித்தல்) உரியவள் ஆகிறாள். ஓம்காரமந்திரத்தின் உட்பொருளை முருகன் உணர்த்துகிறான். ப்ரவணத்தின் நாயகனான விநாயகர், யானையின் உருவம் தாங்கி வருவது இதை குறிக்கிறது. பரமாத்ம - ஜீவ - ஸ்வருப - ஐக்யத்தை உலகுக்கு உணர்த்துவது தான் வள்ளி திருமணத்தின் உட்கருத்து.

சிவ யோகநிலையில் சித்திர தீபம் போன்ற அநுபூதி பெற அஷ்டாங்க யோகத்தை அருணகிரிநாதர்,

 'ஆசை நாலு சதுரக்கமல' 

என்ற பாடலில் எடுத்துரைக்கிறார். அவன் அருள் அல்லாது அதை அடைய முடியாது. ஆகவே நம் சார்பாக ஆண்டவனிடம் 'யோக பேதவகை எட்டும்' தந்தருள வேண்டுகிறார்.

   ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்திபெற
   மூலவாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
   யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய்
   காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர்புகழ் ...... தம்பிரானே."

(கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றி )

தஞ்சை சேகரின் குதூகலம் 

 வைரவேல் சுவாமிநாதா சரணம்.

இன்று சுவாமிமலை சுவாமிநாதனுக்கு வைரவேல் சாத்துவார்கள். மிக அருமையாக இருக்கும். மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவே இன்றைய சரணமாக அமைந்துள்ளது.  ஆற்றுப்படுத்திய அறுபடை வீடுடையவனின் சரணங்கள் எந்த வரிசையில் வருகின்றன என்ற வினா உள்ளத்தில் எழுந்தது. அது வள்ளிக்கல்யாணம் நடைபெற்ற, நடைபெறுகிற, நடைபெற உள்ள வரிசையிலே வருகின்றது. 
பழநியிலே குருஜி அனைவரையும் வருக வருக என அன்பால் ஈர்த்து நடத்திய வள்ளிக்கல்யாணம் நினைவில் வருகின்றது. அடுத்து குருஜிக்கு மிகவும் இஷ்டமான செந்திலாண்டவனின் செந்திலம்பதியில் அருவாய் இருந்து ஆசி கூறி வள்ளிக்கல்யாணத்தை நடத்திக்கொடுத்தார்கள்.
அடுத்து திருத்தணியிலே முருகனே முன்னி்ன்று குருஜி கூறிய வழிமுறையிலே நடத்திக்கொண்டான். 

தற்போது சுவாமிமலையிலே..

நினைக்கும்போதே உள்ளமெல்லாம் பலப்பல நினைவுகளுடன் மகிழ்கிறது.

சரவணபவா என்ற ஷடாட்சர மந்திரத்தின் மூன்றாவது எழுத்து  'வ'. 

வ என்பது முக்தி,  சாத்விகம், நித்ய திருப்தி மற்றும் போக மந்திரம் இவற்றை குறிப்பதாக உள்ளது. 

இரண்டாவது அநுபூதி பாடலின் மூனறாவது வார்த்தை  யோக என்பதாகும். இது சிவயோக தயாபரனாக பழநியில் நிற்கின்ற அருட்கோலத்தை  குறிப்பதாகும். 

சரவணபவ என வரும் திருப்புகழ்....

அரகர சிவனரி அயனிவர் எனத் தொடங்கும் திருத்தணி திருப்புகழில் சரவணபவனே என்றும் அழைக்கின்றார்.
பகர்தரு குறமகள் என்று வள்ளியையும், 
தருவமை வநிதை என்று தெய்வானையையும் அநுதினம் மனம் மகிழ்வுற அழைக்கின்றார்.

அருணகிரிநாதருக்கு ஷடாட்சர மந்திர உபதேசம் நல்கினான். பாத தரிசனம் தந்தான். ஜபமாலை தந்தான். புகழ் பாடுக என்றான். அருணகிரி அறியாது விழித்தார்.!

முத்தைத்தரு பத்தித்திரு நகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்துக்கொரு வித்துக் குருபர என ஓதும்
 என்று அடியெடுத்துக் கொடுத்து ஆரம்பித்து வைத்தார்.
கந்தனே குருபரனாகி வித்தாகி பக்தியை பெருக்கி முக்தியை எய்திடச் செய்வான். திருப்புகழ் என பெயர் கொடுத்தான். விருப்பமொடு பாடு என்றான்.     
அந்த பாடல்களுக்கு நமது குருஜி மூலம் இசை அமைத்துக் கொடுத்து இசை வழி பாடுக என்று அருளி உள்ளான் ..அந்த இசை வழிபாட்டின் மூலம் வள்ளிக்கல்யாணம் நடத்திடுக என்றும் அருளி உள்ளான்.


அதன்படி 

 முருகன் - வள்ளி திருக்கல்யாணம் சுவாமிமலையில் நடத்திக்கொள்ள முருகன் இசைந்துள்ளான்.
அதற்கு இன்னும் மூன்று காலைப் பொழுதுகளே.

அன்பர் அய்யப்பன்  அனுப்பியுள்ள செய்தி 

"நமது குருஜி இந்த வள்ளி கல்யாணத்தை செவ்வனே ப்ரத்தியேகமாக்கி இசை வழிபாடாக நடத்தி வைக்க திருப்புகழில் இருந்து வாக்கியங்களை பொருக்கி எடுத்து மாலையாக்கி வள்ளி மணாளனுக்கு அணிவித்தார்கள். அந்த மாலையின்  ஞானப்பூக்கள் சேகரிகப்பட்டு கிடைக்கும் இடமாக  உண்டாக்கப்பட்டதே அந்த சின்ன வள்ளி கல்யாண புத்தகம். 

கல்பாக்கம் திருப்புகழ் அன்பர்கள்  அந்த புத்தகத்தை மறுபதிப்பு அச்சிட்டுள்ளார்கள். இந்த வள்ளி கல்யாண மலர் சுவாமி மலையில் வள்ளி கல்யாணத்தின் போது கிடைக்கச் செய்வான் நமது முருகன். 

அன்பர்கள் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்

 இசைவழிபாடு புத்தகம் வள்ளி கல்யாண புத்தகம் கைவசம் உள்ளோர்கள்  அதை மறக்காமல் கொண்டு வாருங்கள். வள்ளி கல்யாணத்தின் போது சுவாமி மலையில் சந்திப்போம்."


பெங்களூரு அன்பர்கள் முதற்கண் சிதம்பரத்துக்குச் சென்று  9.12.2017 சனிக்கிழமை அன்று மாலை 4.30 முதல் தொடங்கி மூன்று மணி அளவு திருப்புகழ் இசை வழிபாடு நிகழ்த்தி அருள் வேண்டுகிறார்கள்.ஆடல் அரசன் நடராஜப் பெருமானை கண்குளிர தரிசித்தபின் ஆடல் பாடலுடன் ஏரகத்துக்கு விரைகிறார்கள்.

அருகில் உள்ள அன்பர்கள் சிதம்பரம் வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்,


வள்ளிகல்யாண வைபவத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை குருஜி உபதேசிக்கிறார்.

(பழனி வள்ளி கல்யாண வைபவம் நிகழ்ச்சியில் )



                                                                                       

வள்ளி கல்யாணத்துக்கு விரைவோம் .ஏரகத்து இறைவனைப் போற்றுவோம்.


 சிவபிரானிடத்தில் தோன்றிய சுவாமி,
 மயிலின் மீது நடனம் செய்யும் சுவாமி,
 எம்முடைய உள்ளத்திலே சிறப்பாகவிளங்கும் சுவாமி,
தனது திருவுருவத்தின் பேரொளியை அடியார்கள் காணுமாறு விளக்கமாகத்
தோன்றும் சுவாமி,
பிறவியை அடியோடுதொலைத்தருளும் சுவாமி,
பாவங்களைப் போக்கி ஒழிக்கும் சுவாமி,
 முநிவர்கள் செய்யும்தவப்பொருளாக விளங்கும் சுவாமி,
அடியார்கள் செய்யும் பிழைகளைஎல்லாம் பொறுத்தருளும் சுவாமி,
 தேவர்களை விண்ணில் குடிபுகச்செய்து அங்கு நிலைபெற வைத்த சுவாமி,
அசுரர்களைப்பொடியாகும்படி நெரித்து அழித்த சுவாமி,
யாம் செய்ய வேண்டிய தொண்டுஇன்னதென்று நிர்ணயிக்கும் சுவாமி,
 சரவணபவனே,
தந்தைக்கு குருஸ்வாமியாக வந்த பெருமாளே.

என்று போற்றுவோம்.ஆடுவோம் பாடுவோம் அருள் பெறுவோம்.

கொசுறு 

கும்பகோணம் தொண்டர்கள் செயலில் இறங்கி ,சீர் பட்சணம் தயாரிப்பதில் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள் 




                                                                                             


                                                                                         









                                                 முருகா சரணம்