Saturday 31 March 2018

Thiruppugazh Songs ...script in other languages. 4



             Thiruppugazh Songs ...script in other languages. 4

                                             In Telugu 

we  are extreamely happy to receive the messaage from Anbar Sri Krishnamurthy Venkataraman that 

"Thiruppughazh book  consisting of all 503 songs Anubhuthi, Vel Mayil Vritthams, Vaghuppus Kandar Alankaram , Abhirami Andhadhi and Padhigam have been transilitrated into 
Telugu scripts by Smt Lakshmi Venkataraman of Secunderabad and is ready for printing

We have sought further information from him and will  publish when the book will be ready for ditribution.

                             Murugaa Saranam

Thursday 29 March 2018



Thiruppugazh Songs .....Script in other languages.... 3

                                     In Kannada

The transliterated  Kannada version of Thiruppugazh Isai Vazhipadu  Book was released during Aanmeega Peruvizha by Thiruppugazh Anbargal  held at Bangaluru on  13.7.2013

The Book was released at the hands of Paramapujya Sri SriJayendra Puri Mahaswamiji,Peedathipathiof Sri Kailasa Ashrama Mahasamasthanam  Bangaluru

The cost of the book is fixed at  RS.120.00 

The copies are available with Chairman Thiruppugazh Anbargal  Bangalore at the following address

402, 3rd Main, 
2nd Block,
R.T.Nagar,
Bangaluru   560032            

The Kannada book is also available from Sri .Nagesh  Secretary,Thiruppugazh Anbargal

His mobile no  +919448089383

                                     Murugaa saranam

Monday 26 March 2018



Thiruppugazh Songs .....Script in other languages.... 2

                                                  IN HINDI

 Arulaalar Mumbai Sri.S. Narayanan has provided Thiruppugazh in Hindi Script for the benefit of needy Anbars.which is available in Google Drive against the Link as under 



Sri Narayanan has well explained his works in his forward as under

"Saint Arunagirinathar’s “Tiruppugazh” forms an important part of Tamil spiritual literature and is held in great reverence among the believers. The laudatory poems are composed in various ‘chandams’, and hence are very impressive when sung.

 Our Guruji Shri Raghavan has set them to exquisite music, which has made the songs reach thousands of bhaktas breaking the language barrier.


 In tuning the Tiruppugazh songs to music, Guruji has not only set them to pure classical music but also set the talams without disturbing the chanda nadai, laying emphasis on the meanings. In the last context, while singing, the words do not follow their original groupings,which are set as per  grammatical rules. This makes the rendering of the songs, following the correct grouping of the words, a little difficult for those who have not studied Tamil literature.

Considering the multi-linguistic composition of the Tiruppugazh Anbars, it was felt that a version in Devanagari script should be made for those who do not know the Tamil script. 


It was  also felt that the rendering would be a lot more
useful if it is made the way the songs are sung rather than the way they are presented according to grammatical rules."..........


The Hindi version can be downloaded and printed also.

 We feel that  it is a boon to Anbars ,who can not read Tamil and can read HINDI well.I

                                         

                                        முருகா  சரணம் 



Saturday 24 March 2018


THIRUPPUGAZH SONGS....... SCRIPT IN OTHER LANGUAGES.....1 

MALAYALAM AND ENGLISH LANGUAGES


உலகின் பல பாகங்களில் சூழ்நிலை காரணமாக வாழும் திருப்புகழ் அன்பர்கள் துரதிஷ்டவசமாக  தமிழில் தேர்ச்சிபெற முடியாமல்,எழுதவும் படிக்கவும் முடியாத நிலையில் உள்ளனர் .அடுத்த சந்ததியினர் நிலையும் அப்படியே .மற்றும் மற்ற மொழியை தாய் மொழியாக கொண்ட அன்பர்களும் திருப்புகழில் தங்களை ஈடு படுத்திக்  கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,அக்குறைகளைப் போக்கி ,திருப்புகழை அப்பழுக்கில்லாத வகையில் கற்கும் பொருட்டு ,அன்பர்களில் சிலர் அரும்பாடுபட்டு ,வெறும் எழுத்து மாற்றம் மட்டுமல்லாது,சந்தங்களோடு,குருஜியின் வழியைக் கடைப் பிடிக்கும் வகையில் மற்ற மொழிகளில் அப்படியே வடித்துள்ளனர்.உதாரணமாக தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனைகளை பல மொழிகளில் காணலாம்.இசைக்கும் பொழுது ஒரே வழி,ஒரே பாவம் ,ஒரே லயிப்பு என்பது கண்கூடு.அதே வகையில் நம் அன்பர்களும் மற்ற மொழி எழுத்துக்களில் கற்கிறார்கள்.வழிபாடுகளிலும் ஒரே குரலில் இசைக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

அத்தகைய பிற மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள  அன்பர்களின் படைப்புகளை அன்பர்களின் நலம் கருதி அளிக்க விரும்புகிறோம்.

திருவனந்தபுரம் அருளாளர்  குரு முனைவர் பாலுஅய்யர் அவர்கள் மலையாளத்திலும்,ஆங்கிலத்திலும் திருப்புகழ் பாடல்களை வடிவமைத்துள்ளார்.அது பற்றிய விபரங்களை பற்றி அவர் கூறுவதை கேட்போம்.


TIV Book in Malayalam script - Third Edition


To meet the demand of the anbarkal attending our Thiruppukazh classes in Thiruvananthapuram, who could not read Tamil language, we decided to publish Thiruppukazh Isai Vazhipadu (TIV) in Malayalam script.    As per Guruji Raghavan’s suggestion, we took great effort to transliterate the Tamil words to Malayalam.   In this process, we referred to Tamil, Malayalam and Sanskrit dictionaries as well as the books by Chengalvaraya Pillai and Kripananda Variyar.  
First edition of TIV in Malayalam.  We submitted the first copy of the Malayalam book to Guruji in December 2006 in Chennai.   We published the second edition of the Malayalam book in May 2010.  

Now we have published the third edition of the TIV book in Malayalam script.   The book will include 501 songs (using the new numbering system), Kandar Anubhuthi, Mayil, Vel and Seval viruththangaL, Thiru-vakuppukaL and Kandar AlankAram.   The books are produced using spiral binder to keep the cost low. 

The cost of the TIV book in Malayalam is Rs 200.00 

 AVAILABLE AT 

Dr. Balu Iyer,
‘Bagiradee’, 59 Vinayaka Nagar,
Thiruvananthapuram, 695018.

e-mail  : (drbaluiyer@gmail.com)     mobile number  :    94470 92866


TIV Book in English script - First Edition

Several versions of TIV in English script are available.   Most of them are using phonetically incorrect spelling.  Many do not include the ‘chanDams’ of the songs.  

To correct the above, we have published the TIV book in English script, using phonetically correct spelling and including the ‘Chandams’ of the songs.    The books are produced using spiral binder to keep the cost low. 

The cost of the TIV book in English is Rs 250.00 
AVAILABLE AT
Dr. Balu Iyer,
‘Bagiradee’, 59 Vinayaka Nagar,
Thiruvananthapuram, 695018.

e-mail  : (drbaluiyer@gmail.com) mobile number  :  94470 92866

We are sure that needy Anbargal will make use of the books

முருகா சரணம்  

Friday 23 March 2018

பங்குனி உத்திரம்


                                  


                                                 

                                      
                                                              
                                             பங்குனி உத்திரம்   

                                   மும்பையில் இசை வழிபாடு                                
                                                                                                         



தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு.

12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.


 இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வீகத் திருமணங்கள் 

நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. தெய்வீக திருமணங்கள் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்குனி உத்திரத்தன்றுதான்.

மணக்கோலத்தில் காட்சி உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. 


சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.

ரதி - மன்மதன் சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்


முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார்.


அவதாரங்கள் நிகழ்ந்த நாள் நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது;


அய்யப்பன் அவதரித்த  நாளும் இந்நாளே. 


ஆண்டாள் திருக்கல்யாணம் வைபவமும் நிகழ்ந்தது இந்நாளில் தான்

சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான். 


மகாலட்சுமி அவதாரம் அன்னை மகாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.


 கல்யாண விரதம் ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன.


 பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான்.


இத்தகைய சிறப்புகள் கொண்ட நன்னாளில்  திருப்புகழ் இசை வழிபாடு மும்பை செம்பூர் சங்கராலயம் ஆலயத்தில் வரும் மார்ச் 30ம் நாள் பிற்பகல் 4.15 அளவில் தொடங்கி விமரிசையாக நடைபெற உள்ளது.மும்பை மற்றும் புனே அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு முருகப்பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.
அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.


                                                   

                                           

                          முருகா சரணம் 
                                        

Tuesday 20 March 2018



குருமஹிமை   இசை  புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள்  476-503

 புதிய வரிசை எண்  499 வழிபாடு புத்தக எண்  வரிசை   203

"கருகியறிவகல "என்று  தொடங்கும் பாடல் 
அத்திப்பட்டு தலம் 

* புதுக்கோட்டைக்கு அடுத்த கந்தர்வ கோட்டையிலிருந்து 7 மைலில் 

அமைந்துள்ளதாக அறிகிறோம்  

.மற்ற விபரங்கள் தெளிவாக கிடைக்கவில்லை.

தெரிந்த அன்பர்கள் தெரிவிக்கலாம் 

                                                                  பாடலும் பொருளும் காண குறியீடு

                                     http://thiruppugazhamirutham.blogspot.in/2013/03/203.html

                                                                              பாடல் இசையுடன் 

                                                                17.10.2010 விஜய தசமி வழிபாடு 


                                                                                                          

                                             Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  

                                        https://www.youtube.com/watch?v=fn31mvCYW78

                                                                                அன்பர்கள் 


                                                                                                           

                                                 Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  

                                      https://www.youtube.com/watch?v=vgCoivuAZFQ


                                                     முருகா சரணம் 

Sunday 4 March 2018

சுப்ரமண்ய புஜங்கம் 14

                                                                                                                                                                                                                               சுப்ரமண்ய புஜங்கம் 14                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     



சென்ற  ஸ்லோகத்துல இந்த ஆறு முகங்களை சந்திரனோட ஒப்பிட முடியாதுன்னு ஒரு கவித்துவமா சொன்னார்.ஆனால்  இந்த ஸ்லோகத்துல அவற்றை  தாமரையோட ஒப்பிடலாம் ன்னு சொல்றார். பார்ப்போம் 

ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்

கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி

ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ

தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி


அன்பர் தொகுத்தளித்துள்ள விளக்க உரை  நன்றிகள் பல 


‘ஹே ஈஷஸூனோ’

 பரமேஸ்வரனுடைய புத்ரனான ஷண்முகக் கடவுளே 

‘ஸ்புரன் மந்தஹாஸை’ஸஹம்ஸானி

 உன்னுடைய முகத்துல மந்தஹாசம் ஒளிவிடுகிறது என்கிறார்.

மந்தஹாசம் என்றவுடன் எப்பயுமே மஹான்கள் வெண்மையா இருக்கு, வெள்ளையா சிரிக்கறது எங்கறதை வெச்சுண்டு, தூய்மையான புன்சிரிப்பு என்பதைப் பத்தி வர்ணித்துள்ளார்கள். 


 அதனால இங்க முகத்தை தாமாரைன்னு சொல்லும் போது இந்த ஜொலிக்கின்ற புன்சிரிப்புங்கற ஹம்ஸங்கள், தாமரைக்கு பக்கத்துல ஹம்சம் இருக்கும். அந்த மாதிரி இந்த முகமாகிய தாமரைக்கு பக்கத்துல அந்த புன்சிரிப்புங்கற வெண்மையான ஹம்ஸங்கள் இருக்குங்கறார்.

அடுத்தது ‘சஞ்சத் கடாக்ஷாவலீ ப்ருங்க ஸங்கோ ஜ்வலானி’ 

தாமரைன்னா அதுல வண்டுகள் இருக்கணும். முகத் தாமரையில் என்ன வண்டுன்னா, கடாக்ஷாவலீ, கடாக்ஷம்-ன்னா கண்கள் கிடையாது. அந்த கண்களிலிருந்து வர்ற பார்வை. அந்த பார்வை வந்து ஆவளி போல ஒரு வரிசையா கண்களிலேருந்து அந்த பார்வை வந்துண்டே இருக்கு. கறுப்பு தானே கண்ணோட பார்வைங்கறது. அது இப்படியும், அப்படியும் சலிக்கறது.

 ‘சஞ்சத்க டாக்ஷாவலீ’ கண்ணோட பார்வை இங்கேயும் அங்கேயும் போகும் இல்லையா? 

அது ‘ப்ருங்கங்கள்’ வண்டு போல இருக்கு. வண்டு தாமரை மேல வட்டமிடற மாதிரி, உன்னுடைய முகமாகிய தாமரையில இந்த கண்களில் இருந்து வெளி வரும் அந்த கடாக்ஷ வரிசைகளுடைய ப்ருங்கங்கள் இருக்கு, வண்டுகள் இருக்குங்கறார்.

அப்புறம் தாமரைன்னா தேன் இருக்கணுமே.

 இதுல ‘ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீ’ 

உன் பிம்ப அதரங்கள், கோவைப்பழம் போன்ற உன்னுடைய உதடு முகத்துல செக்க செவேல்னு இருக்கு. அதுல அந்த சிகப்பழகு தாமரையில இருக்கற தேன் மாதிரி அமிர்த ப்ரவாகமா, அந்த அழகு உதடுலேர்ந்து வந்துண்டிருக்கு. 

 ‘தவ ஷண்முகாம்போரு ஹாணி’

 உன்னுடைய ஆறு முகங்கள் என்ற ஆறு தாமரைகளை நான் பார்க்கிறேன்னு இந்த அழகானா ஸ்லோகம்.

இந்த ஆறு முகங்கள் பத்தி மஹான்கள் எல்லாம் ரொம்ப, திரும்ப திரும்ப அதை த்யானம் பண்ணி, தர்சனம் பண்ணி சந்தோஷப் பட்டிருக்கான்னு தெரியறது. கச்சியப்ப சிவாச்சாரியார் முருகனுடைய அவதாரத்தை சொல்லும் போது,


"கருணை கூர் முகங்கள் ஆறும்" என்று வர்ணிக்கிறார் 

அருணகிரிநாதர் பல திருப்புகழில் ஆறுமுகங்களையும் பன்னிரு புயங்களையும் தரிசித்து , அனுபவித்ததையெல்ல்லாம்   கொட்டி கொட்டி எழுதி இருக்கிறார் என்று அடிக்கடி குருஜி கூறுவார்கள்..


1) அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்கு அசைந்தாடு குழை என்கிறார்

2) சுவாமிமலை பாடலான 
"ஒருவரையும் ஒருவர் அறியாமலும்" எனத் தொடங்கும் திருப்புகழில்

தண் தரு மா மென் கருணை பொழி கமல முகம் ஆறும் 


3) ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்தரசும்" என்று திருவேளைக்காரன் வகுப்பிலே குறிப்பிடுகிறார்.

4) கந்தரலங்காரத்தில்  47 வது பாடலில் 

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன் என்கிறார்.

5)  நமது குருஜியை மனதில் தியானித்து கந்தரலங்காரம் 102 வது பாடலை பார்ப்போம்.

திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்

பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்

மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்

குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.

அப்படீன்னு அந்த மருவடிவான வதனங்கள் ஆறும், மலர்க் கண்களும் குருவடிவாய் வந்து என் உள்ளத்தில் குடி கொண்டவே, வந்து தங்கியாச்சு, என் உள்ளத்துலதான் இருக்கார்ன்னு சொல்லியிருக்கார் .

6)."வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து  தெளியேனே "என்ற பாடலில் 


 "ஆதியோடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகமென்று தெரியேனே" ன்னு பாடறார். 

அப்படி மஹான்கள் எல்லாம் அந்த ஆறுமுக தரிசனத்துல ரொம்ப சந்தோஷப் பட்டிருக்கா. ஆறுமுகம், ஆறுமுகம்-ன்னு இதே ஒரு மந்த்ரமா ஆறுமுகம், ஆறுமுகம், ஆறுமுகம்ன்னு ஒரு பாடல் இருக்கு. முன்னமே நாம அதைப் பார்தோம்.

7) கந்தர் அநுபூதியிலோ


 "முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே " என்கிறார். 

சொல்லிக் கொண்டே போகலாம்.

                                    முருகா சரணம் 

Thursday 1 March 2018

அபிராமி அந்தாதி - 28


                                                               அபிராமி அந்தாதி - 28   

                                                                                                      

                                                     
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே! நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே 

அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை... நன்றிகள் பல 

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்

சொல் - என்பது முதலில் வருவது - சக்தியைக் குறிக்கும்.பொருள் - என்பது சொல்லைக் கேட்ட பிறகு விளங்குவது - சிவன்.பொருளின்றி ஏதேனும் ஒரு சொல் இருக்க முடியுமா? இல்லை அல்லவா? அது போல், ஒரு பொருள் பற்றிப் பேச வேண்டுமானால், ஏதேனும் ஒரு சொல் சொல்லித்தானே ஆக வேண்டும்? அப்படி, சொல்லும், பொருளும், இரண்டறக் கலந்தவை. அப்படித்தான், இறைவனும், இறைவியும் கலந்திருப்பதாகப் பேசுகிறர் பட்டர்.
லலிதா ஸஹஸ்ரநாமத்திலயும் அன்னையை
வாகதீச்வரீ - வாக்குகளிற்கு அதிபதியானவள் வசினீ முதலிய எட்டு வாக்தேவதைகளுக்கும் ஈசுவரியானவள். இவர்கள், அம்பாளின் ஆக்ஞைப்படியே ( இந்த) ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை எழுதினார்கள். எல்லா விதமான வார்த்தைகளும் எழுத்துக்களும் அம்பாளுடையதே என்று ஸௌந்தர்யலஹரீயில் பகவத்பாதாள் கூறியுள்ளார்கள்.
சிவ பெருமான் நர்த்தனம் செய்தபோது, முதலில், சப்தங்கள் எழுந்தன என்று சொல்வார்கள்.
அந்தச் சொற்களே பின்னர் வேதங்களாக விளங்கின என்று சொல்வதும் உண்டு. சொல்லையோ அதன் பொருளையோ பிரிக்க முடியாது. அதுபோல இந்த அர்த நாரீஸ்வரத் திருக் கோலத்தை பாடுகிறார் பட்டர்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -
நடேஸ்வரி - நடரேசருடைய மனைவி. சிதம்பரத்தில் ஆடும் நடராஜாவின் மனைவி. சிதம்பரம் என்பதை ஷேத்திரம் என்றும், ஹ்ருதயாகாசம் என்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். இரண்டுமே சரியானவை. அப்படி ஆடும் நடேசருக்கு அனுஸரணையாக இவளும் நடனம் ஆடுகிறவள்.
இவர்கள் இருவரும் நடனம் செய்வதை " தவாதாரே மூலே " ஸௌந்தர்யலஹரீயில் ( ஸ்லோகம் - 41) சொல்லப்படுகிறது.
புல்லும்

புல்லுதல் என்று ஒரு அருமையனா தமிழ் சொல் உண்டு. அணைத்தல், மருவுதல், தழுவுதல், புணர்தல் என்று தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள நெருக்கத்தை புலப்படுத்தும் ஒரு சொல். வள்ளுவர் இந்த சொல்லை பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்

அபிராமி, அவளுடைய துணைவனை அணைத்து இருக்கிறாள். அவளுடைய துணைவன் மீது அவளுக்கு அவ்வளவு அன்பு. நெருக்கம் என்றால் மிக நெருக்கம். பிரிக்க முடியாத நெருக்கம். அதை எப்படி சொல்லி விளங்க வைப்பது ?

ஒரு சொல்லும், அதன் பொருளும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படி ஒரு நெருக்கம். பொருள் இல்லாவிட்டால் சொல் இல்லை. சொல் இல்லாமல் பொருள் இல்லை. இரண்டும் வேறுதான் என்றாலும் ஒன்றை விட்டு ஒன்று இல்லை.

கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவு, உள்ள ஒரு புரிதல் என்பது ஒரு அலுவகலத்தில் வேலை பார்க்கும் மற்றொரு நபருடன் உள்ள புரிதல் போல அல்ல.
ஒரே சொல் பல அர்த்தங்களை தரும்...
அறிவு பூர்வமாய் ஒரு அர்த்தம்
உணர்வு பூர்வமாய் ஒரு அர்த்தம்
சொல்லுபவரின் மன நிலையை கொண்டு ஒரு அர்த்தம்
சொல்லப் படும் இடத்தை கொண்டு ஒரு அர்த்தம்
என்று அர்த்தம் மாறுபடும். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அறிவு பூர்வமாய், உணர்வு பூர்வமாய், ஒருவரின் மனதை ஒருவர் அறிந்து கொண்டு...ஈருடல் ஒருயிராய் இருக்க வேண்டும்..அபிராமி அப்படி இருக்கிறாள்....
அதாவது அபிராம பட்டர்,இந்தப் பாடலில், பக்தி மார்க்கத்தையும் அதன் பயனையும் இந்த இரண்டு சொற்களினால் விளங்க வைத்து விட்டார். சக்தியின் மூலமாகத்தான் சிவனை ( சிவலோக பதவியை) அடைய முடியும். திருமூலரும், " மருவொத்த மங்கையும் தானும் ( திருமந்திரம் - 1137) என்பார்.அதாவது மலரோடு மணம் பொருந்தியிருப்பது போல சிவனும் சக்தியும் ஒன்றியிருப்பது.
இரகு வம்சத்தில் காளிதாசன் இப்படி சொல்றார்.
वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये।
जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ॥
வாக³ர்தா²விவ ஸம்ப்ருʼக்தௌ வாக³ர்த²ப்ரதிபத்தயே|
ஜக³த​: பிதரௌ வந்தே³ பார்வதீபரமேஸ்²வரௌ||
சொல்லும் பொருளும் என இணைந்த தொல்லுலகின் தாய் தந்தையரை, பார்வதி பரமேஸ்வரரை, சொல்லையும் பொருளையும் அறிந்திடவேண்டிப் பணிகிறேன்னு சொல்றார்.

 பரிமளப் பூங்கொடியே!

பரிமளப் பூங்கொடியே. ( 631. திவ்ய கந்தாட்யா - தெய்வீக மணத்தால் நிறைந்தவள். ) நடராசப்பெருமானுடன் நின்று விளங்குவதால் ' அவளைப் பூங்கொடியே ' என்றார்.


நின் புதுமலர்த் தாள்

அவளுடய பாதங்கள்...மிகமிகமென்மையானவை...ஈரமானவை...மணம் வீசுபவை ....இப்படி சொல்லிக் கொண்டே போவதை விட ...அப்போது தான் மலர்ந்த மலர் போல் இருக்கும் அவளுடைய பாதங்கள்....
அல்லும் பகலும் தொழுமவர்க்கே
அப்படிப் பட்ட உன் பாதங்களை இரவென்றெண்ணாது, பகலென்றெண்ணாது எந்நேரமும் தொழுகின்ற அடியவர்களுக்கு....

என்னவெல்லாம் கிட்டும்?


அழியா அரசும் செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே 
வேறென்ன கிட்டும்? செல்லும் தவநெறி.. எங்கே செல்வதற்கான தவநெறி.? இறப்புக்குப் பின்னான உலகு சொர்க்கமா? அல்லது நரகமா? என்பதைத் தீர்மானிப்பவை நாம் செய்யும் புண்ணிய பாவங்களே.. எனவே நல்லுலகமான சொர்க்கத்துக்குச் செல்வதற்குரிய அரும்பணியான தவநெறிகள் அன்னையைத் தொழுவோர்க்கு வந்து சேரும்.
வேறு? சிவலோகம்... அம்மையுடன் அப்பன் அருளாட்சி செய்யும் சிவலோகத்தில் வாழக்கூடிய வாய்ப்பு.. சிவலோக பதவியடைந்தார் என்று நாம் மரித்த பின்னர் நமது நினைவிடத்தில் கல்வெட்டில் எழுதிவைத்தால் மட்டும் சிவலோக பதவி நமக்குக் கிட்டிவிடுமா? இல்லவே இல்லை... அன்னையின் கருணை நமக்குக் கிட்டினால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார் அபிராமிப் பட்டர்..
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திலயும்
சிவபரா - தன் பக்தர்களுக்கு சிவனைக் காண்பிப்பவள்னு சொல்லியிருக்கு.
பவதாவஸுதாவ்ருஷ்டி. பவதா + வஸுதா + வ்ருஷ்டி என்றும் பிரிக்கலாம். பவதா - சிவனை தருபவள். வஸுதா - செல்வங்களைத் தருபவள். அதாவது மோட்சத்தையும், போகத்தையும் அளிப்பவள்.
ராஜ்யதாயினீ - ராஜ்யத்தைக் கொடுப்பவள்.
ஸாம்ராஜ்யதாயினீ - ஸாம்ராஜ்யத்தைக் கொடுப்பவள்.
ராஜபீடநிவேசித நிஜாச்ரிதா - தன்னை அண்டியவர்களை அரசபீடத்தில் அமர்த்துபவள்.
இந்த அந்தாதில பட்டர் அடியாருக்கு என்ன என்னவெல்லாம் கிடைக்கும் என்று பட்டியல் போடுவதும்கூட மிக அழகாக இருக்கிறது. முதலில், நாம் வாழப், பொருள் வேண்டும். அந்தப் பொருள் வேண்டும் போகத்தின் எல்லை தான், ராஜ போகம். அந்த ராஜ போகத்தினையே தந்து விடுகிறாள் எம் அன்னை. பின்னர், போகம் கசந்து, மனம் இசைந்து, நல் வழிப்பட்டு, தவ நெறி தேடும்போதும், அருள்பவள் அந்த அன்னைதான். அந்தத் தவநெறியின் பயனேயாக, முக்தியினை, அந்தச் சிவத்தினை, நல்குவதும் கூட, எம் அன்னையே என்று அழகாக உணர்த்துகிறார் பட்டர்.                                                                                                                                          பொழிப்புரை

தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும், நடராஜப் பெருமானுடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்




                                                                பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்


                                                                                               

                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHON

                                        https://youtu.be/-8oq2Rae4qk?t=3

                            
                                                                        அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                       


                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 



                                      https://youtu.be/mFmYi4hrAjk?t=2 



                                              அபிராமி சரணம் சரணம்!!
                                                        முருகா சரணம்