Tuesday 4 February 2020



                            மும்பையில் தை  பூசம்  வைபவம்

மாதம் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமிதினம் ஒரு சிறந்த நாளாகும். இத் தினத்தில் பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன.

 இந் நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர். 

சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே.

தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையிடமிருந்து சக்தி வேலையும் பெற்று, தேவர்களுக்கு நீங்காத துயர் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை வென்று வீழ்த்திய நாளும் தைப் பூசமேயாகும்.

உண்மை தேவியின் சாபத்தை அடைந்த முருகன் சாபம் தீர கடும் தவம் புரிந்தார் அதனால் மகிழ்ந்த சிவபிரானும், பார்வதியும் கோபம் தணிந்து, காட்சி கொடுத்து சாபத்தை தவிர்த்து அருளினர். அவ்வாறு செய்த நாளும் தைப் பூசமே.

முருகனின் அருள் பெற்ற திரு அருட்ப்ரகாச வள்ளலார் சிதம்பரம் ராமலிங்க அடிகளார் தை மாதம் பூச நட்சத்திரம், பௌர்ணமி அன்று தான் ஜோதி வடிவில் இருந்த இறைவனுடன் கலந்தார்.

யாவற்றுக்கும் மேலாக சிவபெருமான் இத் தினத்தில் தான் மும் மலங்களாகிய திரிபுரத்தை சிரித்தே அழித்தார் 

வழக்கம் போல் நம் தைப்பூச இசை  வழிபாடு வைபவம்  அன்று கரோடிய நகர் பஜன் சமாஜ் வளாகத்தில் பிப்ரவரி 8 ம் நாள் சனிக்கிழமை மாலை 4.00 மணி அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி நடைபெற உள்ளதுஅன்பர்கள் பெருமளவில் முன்னதாகவே வந்து பூஜை முதலே  கலந்துகொண்டு பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது


                                                                                 


                                   முருகா சரணம் 

Saturday 18 January 2020


                          மும்பை படி விழா ......2020


                                                                                                         



                                திருசெம்பூர் திருமுருகன் திருக்கோயில்                                                             
திருத்தணியில் 1917 ஜனவரி முதல் தேதி அன்றே படி விழா  தொடங்கி வைத்தவர் சச்சிதானந்த வள்ளிமலை சுவாமிகள்.அது சுவாரஸ்யமான ஒரு தொடக்கம்.அந்த கால கட்டத்தில்,நம்மவர்கள் நம்மை ஆண்ட ஆங்கிலேய பிரபுக்களை தங்கள் சுயநலம் கருதி அந்த புத்தாண்டு தினத்தில் "துரையே " என வணங்கி பல பரிசுகளை வழங்கி வந்தனர்.

துரைகளுக்கு துரையாக நம்மை வாழ வைக்கும் நம் பெருமானை வணங்காமல் ,அவர்களை போற்றிய மக்களைக்கண்டு மனம் வெதும்பி,அவர்களை திசை திருப்ப "திருத்தணி திருப்புகழ் திருவிழா " என்ற அமைப்பை ஏற்படுத்தி படி விழா தொடங்கினார்.

ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களை களையவும் ,புத்தாண்டு வளமாக அமையவும் பெருமானின் கருணை வேண்டியும் டிசம்பர் 31 இரவு முதல் மறுநாள் புத்தாண்டு காலை வரை படிவிழா இன்று வரை தொடருகிறது.

"துரை" என்ற சொல் சமீப காலத்தில் தான் தமிழில் புகுந்துள்ளது என்று பெரும்பாலானோர் கருத்தில் கொண்டுள்ளனர்.ஆனால், நம் அருணகிரியார்  "துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடது தருவாயே."என்று  "வஞ்சம் கொண்டும்"என்ற திருசெந்தூர் பாடலில் வேண்டுகிறார்.திருத்தணி முருகன் துரை முருகன்  என்றே அழைக்கப்படுகிறார்.

நம் படி விழாக்கள் ஜனவரி மாதத்தில் நாட்டின் பல பாகங்களில் முருகன் திருத்தலங்களில்நடந்து வருகின்றன..
மும்பையில் சிருங்கேரி ஆசாரிய சுவாமிஅருளாசியுடன்1981ம்ஆண்டுகுருஜிதலைமையில் துவங்கி இப்பொழுது 40ம் படிவிழா 26.01.2020 அன்று மும்பை செம்பூர் செட்டா நகர் திரு முருகன் ஆலயத்தில்  நடை பெறுகிறது.


குருஜியும்,செந்தில்துறவியும்தொடர்ந்துமும்பையில்ஜனவரி 26ம்நாள் அன்பர்களை படி ஏற்றி  சன்னிதானத்தில் திருப்புகழ் பாக்களை சமர்ப்பணம் செய்து அன்பர்களுக்கு அருளாசி வழங்கி வந்தது மும்பை அன்பர்கள் செய்த பாக்கியம். அவர்களின் பொற்பாதங்களை வணங்கி திருப்புகழ் பாடல்களுடன் திருப்பி படிகளில் ஏறி பெருமானின் அருள் பெறுவோம்


                                                                                    அழைப்ப்பிதழ் 

                                                                                         


படி விழாவில் இடம் பெரும் பாடல்களின் தொகுப்பு 

 




முருகா சரணம்