Tuesday 28 January 2014

அந்தமான் விபத்து - அருளாளர் ஐயப்பனின் உறவினர் இழப்பு

அந்தமான் படகு விபத்தில் அருளாளர் ஐயப்பனின் உடன் பிறப்பு அரங்கநாதனின்  மனைவி சுசீலா அம்மையாரின் அகால மரணம் பற்றிய மனம் கலங்கிய செய்தி அவரிடமிருந்து வந்துள்ளதை கீழே பிரசுரித்துள்ளோம்,அன்பர்கள் எல்லோரும் அவருடைய துக்கத்தில் பங்குகொள்கிறோம்.உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.அவர்களின் இழப்பை தாங்கும் மனோவலிமையை மற்ற குடும்பத்தினருக்கு அளிக்க பெருமானை வேண்டுகிறோம்.

செய்தி:


முருகா சரணம்
அன்பர்களே,

இந்த சுதந்திர தின விழா  நமது ( எனது ) குடும்பத்திற்கு கருப்பு தினமாகி விட்டதை உங்களுடன் பகிர்ந்து நாயேனின் மனக்கவலையை குறைத்துக் கொள்ளும் முயற்சியே இந்த மெயில். நாயேனது இரத்தத்துடன் ஒட்டிய உறவினர்கள் பலர் இருப்பினும் அடியேனின் ஆவியோடு ஒட்டியவரகள் திருப்புகழ் அன்பர்கள் தான். நமது குருஜி சொல்லி இருக்கிறார் நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று..

நாயேனது உடன் பிறப்பு தம்பி அரங்கநாதன், மனைவி சுசிலா, மகன் குரு, மருமகள் பிரீதி. நால்வரும் அந்தமான் தீவிற்கு சுற்றுலா சென்றனர். திரும்பி வந்தவர்கள் மூவரே. சுசிலா நடுக்கடலில் தனுயிரை காலனிடம் ஒப்பிவித்து இந்த மூவருடைய உயிர்களையும் காப்பாற்றி இருக்கிறாள் இந்த உத்தமி . திருத்தம் ப்ளீஸ். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 14 பேர்கள் தமது இன்னுயிரைத் தந்து 8 பேர் உயிரை காப்பாற்றி இருக்கின்றனர். அனைவருடைய பூத உடல்களும் இன்று காலை 10 மணி அளவில் ( 28.01. 2014 ) காஞ்சியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளன. நீங்கள் மானசீகமாக வந்திருந்து அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய மவுனமாக பிரார்திக்க வேண்டிகிறேன்.

நமது முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு உதவிகளை செய்திருக்கிறார்கள் அவர்கள்.

நாயேன்
ஐயப்பன்
முருக சரணம்



Thursday 23 January 2014

திருக்குடந்தையில் திருப்புகழ் வகுப்பு

திருக்குடந்தையில் திருப்புகழ் வகுப்பு கட்டுப்பாட்டுடனும் ஆர்வத்துடனும் தொடர்வது பற்றி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.வகுப்பு வழிபாடாக விரைவில்  உருவெடுக்க பிரார்த்திக்கிறோம்.

அருணகிரியார் சேத்ர கோவை பாடலில் தன் புனிதப் பயணத்தை கும்பகோணத்தில் தொடங்கியதைப்போல் மூர்த்தி தம்பதியினர் தொடங்கியுள்ளனர் .அவர்கள் பயணமும் .பணியும் மற்ற தலங்களிலும் பரவ பெருமானின் அருள் வேண்டுகிறோம். நினைத்த காரியம் அநுக்கூலமே புரி பெருமாளே

திருக்குடந்தை வகுப்பு:

http://www.youtube.com/watch?v=BzcRKq5-Udc&feature=em-uploademail-smbtn 

குருஜியின் இசையோடு அருணகிரியார் தரிசித்த  தலங்களுக்கு நாமும் பயணிப்போம்: 

http://www.kaumaram.com/audio_k/grtp1306.html





Tuesday 21 January 2014

THIRTY FOURTH PADI VIZHA - 2014 : LIST OF SONGS

படிவிழாவில் இடம் பெரும் பாடல்களின் பட்டியல்  இணைத்துள்ளோம்:




THIRTY FOURTH PADI VIZHA - 2014

34வது படிவிழா - 2014 

படி என்றால் என்ன ?நாம் உயர ஏற உதவி செய்யும் படிக்கட்டுக்கள் மட்டும் தானா?வேறு பொருள்கள் ஏதேனும் உண்டா என்று  ஆர்வத்துடன் அகராதியை பார்த்ததில் கிடைத்தவை: படித்தல்  (வாசித்தல்) பூமி,நீர்நிலை,உருவம்,தகுதி,குணம்,தரம்.நித்திய கட்டளை, வம்ச பரம்பரை.விதம்,வேடம்,நாழி,சம்பளம்,(சம்பளப்படி) ஓர் அளவு (அரிசி அளக்கும் படி) தாழ்வாரம்,வாயிற்படி,படிக்கல்,முறைமை,படிதல்,கீழ்ப்படி           ( obey ) முதலிய பொருள். அது தவிர மற்ற வார்த்தைகளோடு சேரும்போது மாறுபட்ட பொருள் கிடைக்கும் .உதாரணமாக ,"சொற்படி,வாழும்படி.சேரும்படி ,கூடும்படி,விளங்கும்படி  போன்றவை.  நம் பாடல்களில் " படி " பல இடங்களில் பல பிரயோகத்தில்  இடம் பெற்றுள்ளது.சில உதாரணங்கள்:

  • பிறவிகள் தோறும் எனை  நலியாத   படி 
  • படி   மீது துதித்துடன் வாழ 
  • பருத்தி சோமன் வானாடர   படி  யுளோர்கள் 
  • ஏட்டின் விதிப்  படி யே 
  • அப் படி ஏழும் ...இப் படி யோனி ..விதிப் படி யே மாறி 
  • தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும்  படி ..பத்ம தச்சனும் முட்கும்  படி 
  • பொற் சிகரக்  குன்றை ப்  படி யில் சிந்த தொடும் வேலா 
  • சந்திரசேகரன் பாவை விளையாடும்  படி 
  • படி புனல்  நெருப்படர்                                                                                                    
பொதுவாக அறியப்பட்ட பொருள்  படிக்கட்டு,படித்தல். குருஜி, திருப்புகழை ராகதாளத்தோடு பாட முடியாதவர்கள் படித்தால் போதும் பெருமான் மனம் உவந்து அருளுவான்  எனபார் அருணகிரியார் மயில் விருத்தத்தில்:

"பாடல் தரு மாசறு வேல் விருத்தம் ஒரு பத்தும் 
மாசறு மயில் விருத்தம் ஒரு பத்தும்  
படிப்பவர்கள் ஆதி மறை நூல் 
மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர் 
வாணி தழுவப்பெருவரால் 
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
வாரிச மடந்தையுடன் வாழ் 
அன்னாயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர் 
அமுதாசனம் பெறுவர் மேல் 
ஆயிரம் பிறை தொழுவர்  சீர் பெறுவர் பேர் பெறுவர் 
அழியா வரம் பெறுவரே "

படி விழாவில் இந்த இரண்டு "படி" களும் கலந்துள்ளதை நாம் அனுபவிக்கலாம். இவ்வளவு பதிவுகளின் காரணம் அன்பர்கள்  யாவரும் பெருமளவில் படி விழாவில் கலந்து கொண்டு பாட வேண்டும்,படிக்கவேண்டும். கேட்க வேண்டும்.அனுபவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கத்தான். இப்போது யதார்த்த  படி விழாவுக்குத் திரும்புவோம். 

நம் படி விழா பல நகரங்களில் ஜனவரி முதல் வாரத்தில் நடை பெறுகிறது.மும்பையில் 26ம் தேதி குடியரசு  தினம் பொது விடுமுறை .அதனால் அன்பர்கள் எல்லோரு ம்  கலந்துகொள்ள வசதி யாக இருக்கும் என்ற நோக்கம் கருதி அன்று ஆண்டு தோறும் நடக்கிறது.

திருத்தணியில்1917 ஜனவரி முதல் தேதி அன்றே படி விழா  தொடங்கி வைத்தவர் சச்சிதானந்த வள்ளிமலை சுவாமிகள்.அது சுவாரஸ்யமான ஒரு தொடக்கம்.அந்த கால கட்டத்தில்,நம்மவர்கள் நம்மை ஆண்ட ஆங்கிலேய பிரபுக்களை தங்கள் சுயநலம் கருதி அந்த புத்தாண்டு தினத்தில் "துரையே " என வணங்கி பல பரிசுகளை வழங்கி வந்தனர்.துரைகளுக்கு துரையாக நம்மை வாழ வைக்கும் நம் பெருமானை வணங்காமல் ,அவர்களை போற்றிய மக்களைக்கண்டு மனம் வெதும்பி,அவர்களை திசை திருப்ப "திருத்தணி திருப்புகழ் திருவிழா " என்ற அமைப்பை ஏற்படுத்தி படி விழா தொடங்கினார்.

ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களை களையவும் ,புத்தாண்டு வளமாக அமையவும் பெருமானின் கருணை வேண்டியும் டிசம்பர் 31 இரவு முதல் மறுநாள் புத்தாண்டு காலை வரை படிவிழா இன்று வரை தொடருகிறது.

துரை என்ற சொல் சமீப காலத்தில் தான் தமிழில் புகுந்துள்ளது என்று பெரும்பாலானோர் கருத்தில் கொண்டுள்ளனர்.ஆனால், நம் அருணகிரியார்  "துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடது தருவாயே."என்று  "வஞ்சம் கொண்டும்" என்ற திருசெந்தூர் பாடலில் வேண்டுகிறார்.திருத்தணி முருகன் துரை முருகன்  என்றே அழைக்கப்படுகிறார்.

நம் படி விழா பெருமானின் திரு உள்ளப்படியும் சிருங்கேரி மஹா சன்னிதானத்தின் அருளாசியுடனும் கடந்த 33ஆண்டுகளாக குருஜியின் தலைமையின் கீழ் நடை பெற்று வருகிறது.இந்த ஆண்டும் அருவமாய் நம்மை வழி நடத்துவார் என்பதில் ஐயமில்லை.அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.படி விழாவில் கலந்துகொள்வது நம் கடமை,பாக்கியம்,குருஜிக்கு செலுத்தும் நன்றிக்கடன்,காணிக்கை என்ற உணர்வுடன் அன்பர்கள் முன்னதாகவே வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

34வது படிவிழா - 2014 

26 ஜனவரி 2014

அழைப்பிதழ் 


நிகழ்ச்சி நிரல்



சென்னையிலும்,செகந்திராபாத்திலும்  நடைபெற்ற படிவிழாக்களின் புகைப் படங்களை அடியி ல் உள்ள LINK மூலமாக காணலாம். அருளாளர்கள் நீலகண்டன்,மாலதி ஜெயராமன் அவர்களுக்கு நன்றிகள் பல.

Chennai: 

Secundrabad: 

Friday 17 January 2014

தைப்பூச நன்னாளின் சிறப்பு - உமா பாலசுப்பிரமணியன்

தை பூச நன்நாளின் சிறப்புக்களைப்பற்றி அருளாளர் உமா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள தமிழ் பதிப்பு வெளியாகி உள்ளது.அதன் தொடர்பு குறியீட்டை கீழே கொடுத்துள்ளோம். அன்பர்கள் படித்து பயன் பெற வேண்டுகிறோம்.


Wednesday 15 January 2014

தை பூசம் நன்னாளைப்பற்றி அருளாளர் உமா பாலசுப்ரமணியம்

தை பூசம் 

தை பூசம் நன்னாளைப்பற்றி அருளாளர் உமா பாலசுப்ரமணியம் பல அரிய நிகழ்ச்சிகளை அளித்துள்ளார்.விழா நெருங்கும் தருணத்தில் வெளிவந்துள்ளது  மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.அன்பர்கள் படித்து அனுபவிக்கவும்.

kindly click the Link below:

வெளியிட்டுள்ள முருகன் பக்தி வலைத்தளத்துக்கும்,உமா பாலசுப்ரமணியம்,ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்த்துள்ள மாலதி ஜெயராமன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

தைபூசம் திருப்புகழ் இசை வழிபாடு: 17-01-2014

தை பூச நன்னாளின் சிறப்புகளை துருவிய போது கிடைத்த அரிய தகவல்கள்:

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அன்னை பார்வதி தேவி யின் திருக்கரங்களினால் புனித வேல் முருகப்பெருமானுக்கு வழங்கிய தினம் இந்த நாள் தான்,பயம்,வெறுப்பு,பேராசை ஆணவம் போன்ற தீய சக்திகளின் உருவகங்களான சூரபத்மன்,சிங்கமுகன்,தாரகாசுரன் முதலியவர்களை அழித்து உலகில் சாந்தியையும் அறிவொளியையும் நிலைக்க புனித வேலை திருக்கரங்களில் ஏந்திய தினம் 

சிவனின் அம்சமே முருகப் பெருமான் என்பதை, 'ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்என்று கந்த புராணம் சுட்டுகிறது. அதனால்தான் சிவனுக்கும், முருகனுக்கும் உரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது... தைப்பூச திருநாள்! என்றாலும், முருகன் ஆலயங்களில்தான் இந்நாள் பெரும் சிறப்புப் பெறுகிறது!

ஆண்டுதோறும் தை மாதத்தில் பௌர்ணமியோடு கூடி வருகின்ற பூசம் நட்சத்திரத்தில் தைப்பூசம்

ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவரும், புலியின் கால்களை உடைய புலிக்கால் முனிவரும் (வியாக்ரபாதர்) தில்லையில் கூத்தப் பெருமானின் நடனத்தைக் காண தவம் புரிந்தனர். அதன் காரணமாக முதன் முதலாக சிவன் தில்லையில் நடனமாடிய நாள், தைப்பூச நாள் என்பது ஒரு சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.


தைப்பூச நாளில் திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. காரணம்... இந்த நதிக்கரையில் தவம் மேற்கொண்ட உமையம்மைக்குத் தைப்பூச நாளில்தான் ஈஸ்வரன் வரம் அருளினான் என்பது புராணம். இந்நாளில் அவன் புத்திரன் முருகனின் திருவினைகளும் ஏராளம். அதில் ஒன்று... முருகன் - வள்ளி - தெய்வானை முக்கோண காதல்.

முருகப் பெருமான் வள்ளியை மணம் செய்ததால்... தெய்வானை ஊடல் கொண்டதாகவும், இருவரும் முற்பிறவியில் சகோதரிகள் எனவும், தன்னை அடைய வேண்டி இருவருமே தவம் புரிந்ததால் கற்பு மணம், களவு மணம் மூலம் இருவரையும் மணந்ததாகவும் எடுத்துக் கூறித் தெய்வானையைச் சமாதானப்படுத்திய நிகழ்வைக் குறிப்பதே தைப்பூசம் என்று கூறுபவர்களும் உண்டு

கடலூர் மாவட்டம், வடலூர், தைப்பூச விழாவில் சிறப்பிடம் பெறுகிறது. சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பிய அருளாளர் ராமலிங்க அடிகளார் 1874-ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி!

அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து. தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் அடிகள்!

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தைபூச விழா உலகெங்கும் பல விதங்களில் கொண்டாடப்பெறுகிறது.நம் அன்பர்கள் அமைப்பில் பெருமானைப்போற்றி வழிபாடுகள் நடை பெறுகின்றன.நம்முடைய வழிபாடு வழக்கம்போல் 17-1-2014  வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் தொடங்கி  நடை பெறுகிறது

நடை பெறும் இடம்: 

BAJAN SAMAJ COMPLEX

90 FEET ROAD GARODIA NAGAR GHATKOPAR EAST

MUMBAI-400077 .

அன்பர்கள் முன்னதாகவே வந்து பூஜைமுதல் கலந்து கொண்டு முருகன் அருள் பெற வேண்டுகிறோம்.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.



Sunday 12 January 2014

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

"திருப்புகழ் அன்பர்கள் யாவர்க்கும் இதயம்கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்"






பாலு சார் & மாமி 

மற்றும் 

வலைப்பூ குழுவினர் 

Thursday 9 January 2014

ஆருத்ரா தரிசனம்

 
Photo

இன்று ஆருத்ரா தரிசனம். ஆகாச தலமான தில்லை சிற்றம்பலத்தில் ஓய்வின்றி திரு நடனம் ஆடும் எம்பிரான் பக்தர்களை தேடி வெளி வந்து ஆனந்த கூத்தாடும் புண்ணிய தினம்.

குருஜியுடன் சேர்ந்து நாமும் துதித்து ஆடுவோம்

Kindly Click 

SAD DEMISE OF SHRI S.B.SUBRAMANIAM. BANGALORE ANBAR

We have received  a sad news from our Bangalore Blog regarding passing away of   Anbar
Shri .S.B.Subramaniam. We all join with them  in praying to Chendhil Andavan for the departed soul

Dear Anbargal,

S B Subramaniam, known to all Bangalore Anbargal as SBS mama of Jayanthi Apartments, passed away in sleep on early Sunday morning, His last rites are being performed today.

SBS Mama is one of the very senior anbar of Bangalore region and was very active until very recently diligently organising, Mic, Venue, food, and logistics for many major Thiruppugazh IVPs from Chinna Guruji Venkatraman’s times.

Praying to Chendil Anadvan for the departed soul

Muruga Sharanam