Tuesday 27 June 2017

ஆனி மூலம் இசை வழிபாடு


                                                                                                         

                                                                    ஆனி மூலம்  இசை வழிபாடு


                                                                                         



அருணகிரிநாதரின் அவதார நன்னாளான ஆனி மூலம்   வைபவம் வழக்கம்போல்  இசை வழிபாடுடன் முலுண்டில்  ஜூலை  8ம்  நாள்  பிரம்மபுரி மண்டபத்தில்  நடைபெற உள்ளது 


.அன்பர்கள் பெருமளவில்  கலந்து கொண்டு பெருமான் அருள் பெற  


வேண்டுகிறோம்.




அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது 



                                                                                               


                     Kindly note the change in Venue of the Vazhipadu

 இந்த சந்தர்ப்பத்தில் அருணகிரியாரின்  வரலாற்றில்  ஒரு அற்புதமான நிகழ்வை  பார்ப்போம்

# கருணைக்கு அருணகிரி :-

வக்கபாகை எனும் ஊரில் வாழ்ந்து வந்த வில்லிபுத்தூரார் என்ற பெரும் புலவர், பல புலவர்களிடம் புலமை போட்டியில் ஈடுபட்டு வந்தார். போட்டியின் போது, வில்லிபுத்தூரார் கைகளில் துரட்டு ஒன்று வைத்திருப்பார். அந்த துரட்டு, போட்டிக்கு வந்த புலவரின் காதில் மாட்டப்பட்டிருக்கும். வில்லிபுத்தூரார் கேட்கும் கேள்விகளுக்கு புலவர் பதில் கூற வேண்டும், தவறினால், தமது கைகளில் உள்ள துரட்டினை இழுத்து காதுகளை அறுத்து  விடுவார்.


இந்த போட்டியில், பல புலவர்கள் வில்லிபுத்தூராரை வெல்ல இயலாமல் தமது காதுகளை இழந்தனர். இதை அறிந்த அருணகிரிநாதர், இந்த கொடுமையை தடுக்க எண்ணி வில்லிபுத்தூராரிடம் சென்று, போட்டியில் ஈடுபட்டார்.


அப்போது அருணகிரிநாதர் தமது கைகளிலும் துரட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும், தாம் பாடும் அந்தாதி ஒன்றிற்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூறினால், தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும், தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை, தமது துரட்டினால் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார். வில்லிபுத்தூராரும் அதற்கு ஒப்புக் கொண்டார். 


இருவரது கைகளிலும் துரட்டு வழங்கப்பட்டு, எதிராளியின் காதுகளில் துரட்டினை பூட்டினர்.


அருணகிரிநாதர் பின்வரும் பாடலை பாடினார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

             (கந்தர் அந்தாதி ...54)

இதற்கு பொருள் கூற முடியாமல், வில்லிபுத்தூரார் தோல்வியை ஒப்புக் கொண்டார். தோல்வி அடைந்த போதும், வில்லிபுத்தூராரின் காதுகளை அரியாமல், இந்தப் புலமை போட்டியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வில்லிபுத்தூரார்க்கு அறிவுரை வழங்கினார்.


வில்லிபுத்தூராரும் தமது தவறினை உணர்ந்து அருணகிரிநாதரை வணங்கினார்

 இதனால், "கருணைக்கு அருணகிரி" என்று அருணகிரிநாதர் போற்றப்பட்டார். 

வில்லிபுத்தூரார் தமது தவறிற்கு பரிகாரமாக மகாபாரதத்தை, "வில்லிபாரதம்" என்ற பெயரில் தமிழில் எழுதினார்.


இந்த பாடலின் பொருளை திருமுருக கிருபானந்த வாரியார் பின்வருமாறு விளக்குகிறார்.


திதத்த ததித்த: திதத்த ததித்த     என்னும் தாள வாக்கியங்களை,

திதி:                               தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை:                         உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத:                              மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி:                           புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி:                            பாம்பாகிய ஆதிசேசனின்,
தா:                                 முதுகாகிய இடத்தையும்,
தித:                               இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து:                           அலை வீசுகின்ற,
அத்தி:                           சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய                                                                                             வாசற்தலமாகக் கொண்டு),

ததி:                              ஆயர்பாடியில் தயிர்,

தித்தித்ததே:              மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று                                                                      சொல்லிக்கோண்டு,
து:                                 அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து:                      போற்றி வணங்குகின்ற,
இதத்து:                       போரின்ப சொரூபியாகிய,
ஆதி:                             மூலப்பொருளே,
தத்தத்து:                     தந்தங்களை உடைய,
அத்தி:                          யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை:                       கிளி போன்ற தேவயானையின்,
தாத:                             தாசனே,
திதே துதை:               பல தீமைகள் நிறைந்ததும்,
தாது:                            ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால்                                                            நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி:              மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து:               பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி:              எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ:                                  அக்னியினால்,
தீ:                                  தகிக்கப்படும்,
திதி:                             அந்த அந்திம நாளில்,
துதி தீ:                         உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த                                                         என்னுடைய புத்தி,
தொத்ததே:                உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.


                                       முருகா சரணம் 



Saturday 24 June 2017

அபிராமி அந்தாதி வரிசை ...6 அபிராமி அந்தாதி வரிசை ....பாடல் 6


                                     அபிராமி  அந்தாதி வரிசை ...6
                       

                                                                                                     


பாடல் 


சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!

அன்பரின் விளக்கவுரை 

சென்னியது உன் திருவடித்தாமரை 

தேவியின் திருவடிப் பெருமையோடு இந்தப் பாடலைத் துவங்குகிறார் அபிராமி பட்டர். அந்த அழகிய திருவடித் தாமரைகளை நான் என் தலைமேல்அல்லவாவைத்திருக்கிறேன் என்று தொடங்குகிறார்.
எப்படிப்பட்டத் திருவடிகள் அவை?

சிந்துர வண்ணம் 
வேதமே தாங்கி நிற்கும், வேதத்தின் உச்சியில் இருப்பவை அல்லவா அந்தத் திருவடிகள்!
லலிதா சஹஸ்ரனாமமும் சொல்லுகிறதே . "ஸ்ருதி சீமந்த சிந்தூரி, க்ருத பாதாப்ஜ தூளிகா" என்று. அந்த வேதமாதா, அவளது காலடியிலே விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்கிறாள். அப்படி அவள் விழுந்து விழுந்து வணங்குவதனாலேயே, அவளுடைய தலை வகிட்டிலிருக்கும் சிந்தூரம், அந்த ராஜராஜேஸ்வரியின் பாதங்களில் பட்டு, பட்டு, அந்த ராஜ மாதங்கியின் காலடிகள் சிவந்து விட்டனவாம்! சிவந்து, சிகப்பான தாமரை மலர்கள் போல இருக்கின்றனவாம்!


சென்னியது உன் திருவடித்தாமரை 
அப்படிச் சிவந்த அந்தத் திருவடித் தாமரைகளைத் தனது தலையிலே தரித்துக் கொண்டிருப்பதாகப் பேசுகிறார் அபிராமி பட்டர்.

ஆதிசங்கரரும்கூட, சௌந்தர்ய லஹரியில்,84 வது சுலோகம். அன்னையின் திருவடிகள், வேதங்களின் தலை போன்றதான உபநிடதங்களின் உச்சியில் விளங்குவதாக வர்ணிக்கிறார்.
அம்பாளுடைய சரண கமலங்களைத் துதிக்கிறபோது "வேதங்கள் தங்கள் சிரசுக்கு ஆபரணமாக எந்த உன் பாதங்களைத் தாங்குகின்றனவோ, அந்தப் பாதங்களை என்சிரசிலும்கூட வைப்பாய் அம்மா" என்கிறார்.
இப்படிக் கேட்பது நியாயமில்லையே என்றால், 'நியாயம் - அநியாயம் என்பவை காரிய - அகாரியங்களை எடை போடுகிறபோதுதான். தயை என்பதோ இப்படி குணங்களை எடைபோட்டுப் பார்ப்பதில்லை. நீயோ தயையே வடிவமானவள். எனவே, அந்த தயையால் என் தலைமீதும்கூட உன் திருவடிகளை வைப்பாய்" என்கிறார் (தயயா தேஹி சரணௌ) பகவத் பாதாள்.
தேவர்கள் அகம்பாவம் அடைந்தபோது, அதைப் போக்கி அவர்களுக்கு ஞானம் தருவதாக அம்பிகை தோன்றியதைக் கேநோபநிஷத் சொல்கிறது. இங்கே ஆசார்யாள் அதை மனஸில் கொண்டே சொல்வதாகத் தெரிகிறது. அகம்பாவ நிவிருத்தி தானே ஞானத்துக்கு வழி என்று அந்த உபநிஷத்திலிருந்து தெரிகிறது. அதற்கு ஏற்றாற்போல் இங்கேயும் அகம்பாவமே இல்லாமல் ரொம்பவும் அடங்கி 'மமாபி' "எனக்கும்கூட திருவடி ஸ்பரிசத்தை அநுக்கிரகிப்பாயம்மா" என்கிறார்.
உலகம் அனைத்தையும் தாங்குவது அந்த இறைவனின் திருவடிதான். அந்தத் திருவடிகள்தாம் அனைத்தையும் தாங்குகின்றன.
அதனால்தான், திருவடிகளுக்குப் பெருமை அதிகம்.

அதுதான்அனைத்தையும் தாங்குகிறதுஅதில்தான்அனைத்தும் தங்குகிறது
அதிலிருந்துதான் பாவங்களைப் போக்கும்கங்கை ஊற்றெடுத்தது

ஸ்ரீராமனின் திருவடிகளைத் தாங்கியபாதுகைகளுக்குத்தான்ராமாயணத்தில் பரதன் முடி சூட்டினான்ஸ்ரீராமனின் சார்பாக14 ஆண்டுகள் நாட்டை ஆண்டான்.
நாராயணனின் திருவடிதான்மூவுலகையும் அளந்தது
நாராயணனின் திருவடிதான்தேவர்களை துன்புறுத்திய மாஹபலியைபாதாள உலகிற்கு அனுப்பியது.
காலத்தை கடந்து வாழும் ஈசனின் திருவடிகளைப் பற்றியமார்க்கண்டேயனை பற்ற வந்த காலதேவனைஉதைத்து காப்பாற்றியது ஈசனின் பாதியாய்இருந்த அன்னையின் திருவடியே

உடலில் உள்ள அனைத்து நரம்புகளின் தொகுதிகளும் பாதத்தில்தான் இணைந்துள்ளன என்று யோக சாத்திரம் கூறுகிறது
ஞானிகளின் திருவடிகளை வணங்குவதன் மூலம் ஆன்மீக சக்தி,அருள் சக்தி வணங்குபவர்களுக்கு பாய்கிறது. அது அவர்களுக்கு, நம்பிக்கையையும்,நன்மையையும், மனதிற்கு நிம்மதியையும் அளிக்கிறது.
தன்னுள்ளே இறைவனை உணர்ந்தவர்கள் திருவடிகள்சக்தியுடையவை. அனைத்தையும் அளிக்கக்கூடியவை.ஆதனால்தான் திருவடி தாமரைகள் என்று அழைக்கிறோம்.
அதை வணங்குபவர்கள் உள்ளம் ஆதவனைக் கண்டதாமரை மலர் போல் மலரும்.
பெற்றோர்களின் திருவடிகளை வணங்குபவன்வாழ்வு சிறக்கும்.
இறைவனின் பாதுகைகளின் மகிமையை விளக்கி ஒரே இரவில் 1000 ஸ்லோகங்களை ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் அருளிச் செய்துள்ளார்
அப்படிபட்ட திருவடி தாமரைகளை உடைய அபிராமியின் பொற்பாதங்கள் தன் தலையில் எப்போதும்இருந்து அருள் செய்யட்டும் என்கிறார் அபிராமி பட்டர் .

 சிந்தையுள்ளேமன்னியது உன் திருமந்திரம்

நாமஸ்மரணம், மனதைக் கட்டுக்குள் வைக்கும். அன்னையை அறிய, முதலில் அவளது நாமத்தை விடாது தியானம் செய்ய வேண்டும். “அம்மா, உனது சிவந்த மேனியை எனது நெஞ்சில் வைத்து, உனது நாமத்தை இடைவிடாது தியானித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லுகிறார்.
மனிதர்களின் உள்ளம் எப்போதும் யானையின் துதிக்கை போல் ஆடிக்கொண்டே இருக்கும்.கடலில் அலைகள் வருவதும் போவதுமாய் மனதில் எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்.
உறங்கும் வரை மனம் உள்ளும் புறமும்வந்து போய்க்கொண்டே இருக்கும்.
அதன் போக்கைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால்யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்துவிட்டால் அது அதை ஆட்டிக்கொண்டே இருக்கும். தலையில் மண்ணை அள்ளிப்போடும் செயலை விட்டுவிடும்
அதுபோல் மனதிற்கும் அபிராமியின் நாமத்தைஉச்சரிக்க செய்துவிட்டால் அது வேறு எதையும் நாடாது.

நின் அடியாருடன் கூடி 
உலகில் கடைத்தேற, தேவியின் தியானம் இருந்தால் மட்டும் போதாது. இந்த மனது பிய்த்துக்கொண்டு ஓடி, கண்ட விஷய சுகங்களிலும் ஈடுபடும் இயல்புடையது. அப்போதெல்லாம், அந்த அம்பிகையின் பக்தர் குழாத்தின் சங்கம், கூட்டுறவு நமக்கு இருந்தால், அந்த சங்க மகிமையால் நமது உள்ளம் பண்படும். அவர்கள் அன்னையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், நமது மனமும், விஷய சுகம் நீக்கி, அன்னையின் அழகினிலே, அவளது பாதாரவிந்தங்களிலே ஈடுபடும்.
இந்த உலகில் கடைத்தேற வேண்டுமென்றால்நல்லோர் கூட்டுறவு வேண்டும் .
பத்து நல்லவரோடு ஒரு தீயவன் சேர்ந்தால் அவன் நல்லவனாகிவிடுவான்.அதேபோல் 10 தீயவனோடு சேர்ந்தால்ஒரு நல்லவன் சேர்ந்தால் அவன் தீயவனாகிவிடுவான்
.எனவே இதை உணர்ந்துதான் அபிராமியின் அடியார்களோடு தன்னை எப்போதும் இணைத்துக்கொண்டுவிட்டேன் என்று பட்டர் கூறுகிறார
இதனால்தான், “சத்சங்கத்வே, நிச்சங்கத்வம்” என்றார் ஆதி சங்கர பகவத் பாதர். இதனை உணர்ந்துதான், அபிராமி பட்டரும், “அம்மா, உனது அத்யந்த பக்தர்களோடு, என்னை நான் இணைத்துக்கொண்டு விட்டேன்” என்று கூறுகிறார்

முறை முறையேபன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே

“அம்மா, நான் நித்யம் வழிபடுவதும், கற்பதும் உனது ஆகம வழிமுறைகளில் சொன்னவிதமே” என்றும் சொல்லுகிறார்.

மாணிக்கவாசகரும், “ஆகம உருவாய் நின்று நமக்கருகில் வருபவன்” என்று பொருள்பட, சிவபுராணத்தில் “ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க” என்று பேசுகிறார்.

இப்படி, அன்னையின் திருவடிகளைத் தாங்கியும், அன்னையின் நாமத்தை விடாது தியானம் செய்தும், அவலது அடியாருடன் கூடி இருந்தும், அவளது ஆகம வழி சென்றும் அவளை வழிபடுவதாக அபிராமி பட்டர் கூறும் இந்த வழிகளில் நாமும் சென்று, அந்த அபிராமி அன்னையின் அருளைப் பெறுவோம்.

சொல் விளக்கம் 

'பன்னியது' மீண்டும் மீண்டும் படிப்பது என்ற பொருள் தரும். பல முறை (பன்முறை) படிப்பது 'பன்னுவது'. 

'பத்ததி' என்றால் 'வழிமுறை', 'தொடர்ச்சி', 'தொகுப்பு' என்ற பொருள்களைத் தரும்.


அபிராமி சரணம் சரணம் 



                                                                               குருஜி கற்பிக்கிறார் 

                                                                             
       

Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


https://youtu.be/lRGObsbmOGE        

                                                               
                                                                      அன்பர்கள் 


                                                                                                                                                 


   Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


  https://www.youtube.com/watch?v=KkLAw_S_0V0

                           
                                                அன்னை அபிராமியே சரணம் 
                                                             முருகா சரணம்                                                     

Monday 19 June 2017

புதிய வரிசை எண் 487வழிபாடு புத்தக எண் 326




                                           புதிய வரிசை எண் 487   வழிபாடு புத்தக எண்  326


                                                                 குரு மஹிமை ......இசை 
C

                                                            புதிய வரிசை எண்   487வழிபாடு புத்தக எண்  326

                                                           " அப்படி யேழும் " என்று தொடங்கும் பொதுப் பாடல் 

                                                                                   கேதாரம்   ராகம் 

                                                                                பாடலின் பொருளுக்கு 

                                        http://www.kaumaram.com/thiru/nnt1205_u.html

                                                      
                                                                      17.10.2010 விஜய தசமி வழிபாடு 
                 

                                                                   

Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


https://youtu.be/OMm2L_sJjNY
                                                                                              அன்பர்கள்



                                                               

   
Utube  Link for ANDROID  and   IPAD   PHONE 

  https://youtu.be/uP8WIJKkB-Q  

                                                                             குரு சமர்ப்பண  விழா 

                                                                                                 23-4-2017



                                                                                                                                                                     

Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

https://youtu.be/s1AJ3sfQLhw
                                                      முருகா சரணம் 

Thursday 15 June 2017

அபிராமி அந்தாதி வரிசை ....பாடல் 5


                                                           அபிராமி அந்தாதி  வரிசை ....பாடல்  5

                                                                                  

                                                                                                                                                                                      
                           

                                                                                                                                                           
                                                         பிராமி அந்தாதி - 5

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்,
வருந்திய வஞ்சி, மருங்குல் மனோண்மணி,வார்சடையோன்,
அருந்திய நஞ்சு, அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்,
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே

அன்பரின் விளக்கவுரை 

எம் அன்னை, அனைத்து உயிர்களிடத்தும், முப்புரையால்,நிரம்பி இருக்கிறாள். செப்பாலான உரை அணிந்த அடர்ந்ததனங்களின் பாரத்தினால், வருந்தும் வஞ்சிக் கொடி போன்றஇடையை உடைய மனொன்மணியே ! நீண்ட சடையை உடையசிவபெருமானும் அன்றொருனாள் அருந்திய விஷத்தையும்அமுதமாக ஆக்கிய அம்பிகையே. தாமரை மலரின் மேல்வீற்றிருக்கும் சுந்தரியே. அந்தத் தாமரை மலரினும் மெல்லியநின் பாதங்களை என் தலை மேல் கொண்டேன் என்றுசொல்கிறார் பட்டர்.
முப்புரை என்றால் என்ன ? மூன்று தொழில்கள். படைத்தல்,காத்தல், அழித்தல். முத்தொழில் புரியும் தேவர்கள் எனபடைத்தலுக்கு பிரமனையும், காத்தலுக்கு விஷ்ணுவையும்,அழித்தலுக்கு சிவ பெருமானையும் குறிப்பிடுவது வழக்கம்.ஆனால், இங்கோ, முத்தொழிலும் புரிபவளாக அபிராமியையேகாட்டுகிறார் பட்டர் ! பொருந்திய முப்புரை என்று இரண்டேவார்த்தைகளில் அன்னை முத்தொழிலும் புரிவதைச் சொல்லிவிடுகிறார்.
“திரிபுரை” என்ற, அம்பாளின் நாமத்தை இங்கே “முப்புரை” என்று குறிப்பதாகவும் கொள்ளலாம்.
‘புரை’ என்பது ‘மூத்தவள்’ என்னும் பொருளிலும் வரும். அதனால், இங்கே “முத்தேவருக்கும் மூத்தவளான அம்பிகை” என்று குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.
அப்படிப்பட்ட திரிபுரையான அம்பிகை, இங்கே ஒரு ‘செப்பிடு வித்தை’ செய்கிறாள்! என்ன வித்தை அது? ஞானமலைகளாய் இருக்கிற நகில்கள் இரண்டையும் மூடி மறைக்கும் வித்தையாம் அது! செப்பிடு வித்தை காட்டுபவர்கள் செப்பாலான பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்து வித்தை காட்டுவார்கள். அதே போன்று, அன்னையும், தன் இரு நகில்களையும் மூடி வைத்திருக்கிறாளாம்! ‘செப்பு போன்று அழகிய” நகில்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்!
"செப்பு உரைசெய்யும்" என்பது மிக அழகான பதப் ப்ரயோகம்!- குமிழ் போன்ற மாணிக்கச் செப்பினை அழகியரின் முலையழகிற்கு உவமையாகச் சொல்வது தமிழ் மொழியின் இலக்கிய வழக்கம்!.
‘செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்’ என்ற ஆண்டாள் பாசுரமும் நாமெல்லாம் அறிந்த ஒன்றுதானே!!
அந்த நகில்களோ, அந்தக் காமேஸ்வரனுடன் ஒன்றி இருக்கின்றன. அதனால்தான் அவற்றைப் “புணர்முலை” என்று குறிப்பிட்டார்.
அந்த நகில்களின் பாரம் தாங்காமல் அன்னையின் இடுப்பு – மருங்குல் – வருந்துகிறதாம்!
இதே போன்று, அந்தத் தாயின் சௌந்தர்யத்தை வர்ணிக்கும் பாடல் ஒன்று, சௌந்தர்ய லஹரியிலே 80 வது பாட்டுல வருகிறது.
தேவீ ! உன் பதியான பரமேஸ்வரனின் பெருமைகளை , நீ, நினைத்து ,நினைத்து மகிழ்வதால் , உன் தங்கக்கலசம் போன்ற ஸ்தனங்கள் , அடிக்கடி வியர்த்து , பூரிப்பதால் , மன்மதன் , இந்த ஸ்தன
சுமையினால்உன் இடுப்பு ஒடிந்து விழுந்துவிடப் போகிறதே என்று உன் இடுப்பை வள்ளிக் கொடிகளால் மூன்று சுற்றாக சுற்றி
இருப்பது போல்தோன்றுகிறது
இப்படி, சௌந்தர்ய லஹரியின் பாடலையும், அந்த ஆதி சங்கரரின் வாக்கையும்கூட, இங்கே ப்ரதிபலிக்கிறார் அபிராமி பட்டர்!
“இப்படிப்பட்ட மனோன்மணி என்ன செய்தாள் தெரியுமா” என்று அழகான கதை ஒன்றைச் சொல்லுகிறார் அபிராமி பட்டர்!
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, ஆலகால விஷம் தோன்றியது. அதனைக் கண்டு அஞ்சி அனைவரும் ஓடியபோது, அந்தப் பரமேஸ்வரன், தானே முன்வந்து, அதனை அருந்திவிட்டான்! ஆனாலும், அந்த சிவனின் வயிற்றிக்குள் அண்டங்கள் அனைத்தும் இருக்கின்றன அல்லவா? அதனால், அம்பிகை, ஓடிவந்து சிவனாரின் கழுத்திலே கையை வைத்து, விஷம் அதற்குக் கீழே பரவாமல் தடுத்திவிட்டாள்! அப்படித் தடுத்ததன் மூலம், அண்டங்களைக் காத்தது மட்டுமின்றி, அந்த சிவனின் உயிரையும் காத்துவிட்டாள் என்று கூறுகிறார் பட்டர்!!
அவள், சிவபெருமான் அருந்திய நஞ்சு பரவாமல் மட்டும் செய்துவிடவில்லை; அவன் உயிரைக் காப்பதை மட்டும் செய்துவிடவில்லை – என்ன செய்தாள்? அவன் அருந்திய நஞ்சானது அமுதாக மாறிவிடும்படி செய்துவிட்டாள்! “அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை”!! நஞ்சை அருந்தியவன் இறவாமல் தடுத்தது மட்டுமல்ல; என்றுமே இறவாமல் இருக்கும்படியும் செய்து விட்டாள் அவள்!!
வார்சடையோன் என்று சிவபெருமானைக் குறிக்கிறார். நீண்டசடைமுடி உடையவன் என்று சிவபெருமானை இங்குமட்டுமல்ல - மற்றும் நிறைய பாடல்களிலும் குறிப்பிடுகிறார்.ஜடா முடி தாரியாகவே ஈசன் பற்றிப் பேசுகிறார்.

அப்படிப்பட்ட நீண்ட சடைமுடி கொண்ட ஈசன் அருந்தியநஞ்சினையும் அமுதாக்கி ஈசனையே வாழவைத்த சக்தி எம்அன்னை !

நீலகண்டன் என பெயர் பெற்ற அந்த ஈசன் அந்த ஆலகாலவிஷத்தை உண்டும் கூட ஒன்றும் ஆகாமல் இருந்தது அபிராமிஅன்னை அருள்கூர்ந்து அந்த விஷத்தையே அமுதமாகஆக்கியதால் அல்லவா !
இந்த விஷயத்தை சௌந்தர்ய லஹரி மிக அழகாகச் சொல்லுகிறது :

“அம்பாளைவிட மங்கள வஸ்து இல்லை. ஸர்வ மங்கள மாங்கல்யே என்பார்கள். அவளுடன் சேர்ந்திருப்பதாலே பரமேசுவரனும் மங்களஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்?இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டுக்கூடப் பரமேசுவரன்சௌக்கியமாகவே இருக்கிறார் என்று ஆச்சாரியாள் ஸெளந்தரியலஹரியில் கூறுகிறார். காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில்கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலிலக்ஷணம். அம்பாளும் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள். சாதாரண பனை ஒலையைத்தான் தாடங்கமாகப் போட்டுக்கொண்டிருக்கிறாள். தாலீபலாச தாடங்கம் என்று இதைஸ்தோத்திரங்கள் சொல்கின்றன. பழைய காலத்தில் எல்லோருமே படாடோபம் இல்லாமல் எளிமையிலேயே சுபிக்ஷமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தமாகத் தோன்றுகிறது. அம்பாளைப்போலவே எல்லா ஸ்திரீகளும் பனை ஒலையைத்தான் போட்டுக்கொண்டிருக்கவேண்டும். இதனால்தான் பிற்காலத்தில் வைரத்தோடுபோட்டுக் கொள்கிற வழக்கம் வந்தபின்கூட, அதை வைர ஒலைஎன்றே சொல்கிற வழக்கம் உண்டாகியிருக்கிறது.
அம்பாளுடைய தாடங்கத்துக்கு வருவோம். மங்களச் சின்னமானதாடங்கம் அவள் காதிலிருந்து இறங்கக்கூடாது. அப்படியானால்பரமேசுவரன் எக்காலத்திலும் ஜீவிக்கத்தான் வேண்டும்.இதனால்தான் அவள் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப்பாதிக்கவில்லை.
இது உன் தாடங்க மகிமையம்மா!என்கிறார்ஆசாரியாள். திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியின் தாடங்கத்திலேயே ஸ்ரீ சக்ர, சிவ சக்ரப் பிரதிஷ்டை செய்து, அவளைஸெளம்ய மூர்த்தியாக்கின ஆசாரியாள், இப்படி இங்கே தவ ஜனனிதாடங்க மஹிமா என்கிறார்.
விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன் சொஸ்தமாக இருப்பதற்குக்காரணம், எந்த விஷத்தையும் முறிக்கிற மருந்தாக, அமிருத்தமாக,அம்பிகை அவரோடு சேர்ந்து இருப்பதுதான். வேத வாக்கியமான ஸ்ரீருத்திரத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. ருத்திரனாககோரமாக இருக்கிற உனக்கு சிவா என்று ஒரு மங்கள சரீரம்இருக்கிறது. இந்த சிவாதான் லோகம் முழுவதற்கும் மருந்து. (சிவாவிச்வா ஹபேஷஜீ) லோகத்துக்கு மட்டும்தான் அது மருந்தா?இல்லை. ருத்திரனாக உனக்கும்கூட சிவாதான் மருந்து. (சிவா ருத்ரஸ்யபேஷஜீ) என்று வேதம் சொல்கிறது. கோர ஸ்வரூபியையும் தன் பதி விரத்யத்தால் மங்களமாக்கி, அவரை என்றென்றும் ஜீவிக்கும்படிசெய்கிறவளை ஸ்திரீகள் ஆராதித்தால் பதிபக்தியும், தீர்க்கஸெளமங்கல்யமும் ஸித்திக்கும்.”
இப்படி ஆலகால விஷமே அன்னை அருளினால் அமுதமாகமாறும் என்றால், எந்த கொடிய வினைப்பயந்தாம் நம்மைஅழித்துவிட முடியும் ?அந்த அம்பிகை அனைத்துவினைகளையும் மாற்றி அருள்பவள் அல்லவா நம்வினைகளையும் கூட அவள் மாற்றி அருள் புரிவாள்.
'அம்புய மேல் திருந்திய சுந்தரி' என்று சொல்லுவதுரசிக்கத்தக்கது. அம்புயம் என்றால் தாமரை மலர். தாமரை மலர்மேல் இருப்பதோ சரஸ்வதியும் லஷ்மியும் தான். அலைமகளும் கலை மகளுமே தாமரை தாமரை மலர்மேல் அமர்ந்து அருள்புரிபவர்கள். மலைமகள் தாமரை மேல் வீற்றிருப்பது போல்நாம் பார்த்தது இல்லை. ஆனல் இங்கோ, அன்னைஅபிராமியை, தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் தெய்வமாகசொல்லுகிறார் பட்டர்.
“பத்மாசனா” என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது!
‘அந்தரி’ என்ற பயன்பாடும் அழகான ஒன்று. அந்தரம் என்றால் ஆகாசம் என்று பொருள். ஆகாச ரூபிணியாக இருக்கிறாள் அவள். “தகாராகாச ரூபிணி” என்றும் “பராகாசா” என்றும் லலிதா சஹஸ்ரநாமம் பேசுவதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய அம்மாவின் திருவடி என்மேல் படட்டும் என்று கூறுகிறார் பட்டர்.
முப்புரை என்று தொடங்கி முத்தொழில் புரிபவளாய்க் காட்டி,அந்த முத்தேவர்களுக்கும் மூத்த, அந்த முத்தொழில் புரியும்தேவியே முப்பெரும் தேவியருமாய் இருக்கிறாள் என்றுசொல்லாமல் சொல்லுகிறார் பட்டர்.
இப்படி, முத்தொழில் புரி தேவி, முப்பெரும் தேவியருமாய்விளங்கும் அந்த அபிராமி, நஞ்சினையும் அமுதாக்கி அருளியஅந்த அன்னை தனது பத்ம பாதங்களை நம் மீதும் வைத்து, நம்வினைகளையும் களைந்து, நம்மைக் காக்க



                                                                           குருஜி கற்பிக்கிறார் 

                                                                                                         


Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


https://youtu.be/qXg_i_F2xWI 


                                                                                          அன்பர்கள்


                                                                                                             

Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


https://youtu.be/IFUb4zTb6jk 

                                                   முருகா சரணம் 




Monday 12 June 2017

வைகாசி விசாகம் நிறைவு

                                                                     


                                           வைகாசி விசாகம்  நிறைவு                        
                                                                                                     
                                                                                                    


வைகாசி விசாகம் வழிபாடு  ஷண்முகா  அர்ச்சனையுடன்  தொடங்கி  மூன்று மணி நேரம் பக்தி பாவத்துடன் அன்பர்கள் இசைக்க இனிதே நிறைவு பெற்றது.

மும்பையின்பல பகுதிகளிலிருந்தும் வந்த அன்பர்களோடு சில  சென்னை அன்பர்களும் ,டெல்லி அன்பர்களும் கலந்து கொண்டனர்.

வழக்கம்போல் வழிபாட்டுக்கு முன்னதாக ஆதி சங்கரரின் சுப்ரமண்ய  புஜங்கம் சமர்ப்பிக்கப்பட்டது..

                                                                                                         


Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


https://www.youtube.com/watch?v=LUvlKWe5AoY



வழிப்பாட்டில் சிறப்பு அம்சமாக அன்பர்கள் வகுப்புகள் முழுவதும் இசைத்தது தான்.
                                                               அதன் ஒலிப்பதிவு


                                           

Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

https://www.youtube.com/watch?v=ATl82_7jucg



                                                                              சில புகைப்பட காட்சிகள் 

                                 

                                                                                         





















                                                                       


   
                                                                                          முருகா சரணம்