Tuesday 24 June 2014





கரூர் அருகே அருணகிரிநாதர் சிலை
அருணகிரிநாதர்தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள்மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி,வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.
இவருடைய நூல்கள் தேவாரம்திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.

அருணகிரிநாதர் வரலாறு

திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.
என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.
திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.
பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??
கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.
அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.
மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.
சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.
தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார்.




......... À¡¼ø .........

«¾Ä §º¼ ɡá¼ «¸¢Ä §ÁÕ Á£¾¡¼
     «À¢É ¸¡Ç¢ ¾¡É¡¼ ...... «Å§Ç¡¼ý

Ⱦ¢Ã Å£º¢ Å¡¾¡Îõ Å¢¨¼Â¢ §ÄÚ Å¡Ã¡¼
     «ÕÌ â¾ §Å¾¡Ç ...... Á¨Å¡¼

ÁÐà š½¢ ¾¡É¡¼ ÁÄ¡¢ø §Å¾ ɡá¼
     ÁÕ× Å¡Û §Ç¡Ã¡¼ ...... Á¾¢Â¡¼

Åɺ Á¡Á¢ ¡á¼ ¦¿Ê Á¡Á ɡá¼
     Á墅 Á¡Ê ¿£Â¡Ê ...... ÅçÅÏõ

¸¨¾Å¢ ¼¡¾ §¾¡ûÅ£Á ¦É¾¢÷¦¸¡û Å¡Ç¢ ¡ø¿£Î
     ¸Õ¾ Ä¡÷¸û Á¡§º¨É ...... ¦À¡Ê¡¸ì

¸¾Ú ¸¡Ä¢ §À¡öÁ£Ç Å¢ƒÂ §ÉÚ §¾÷Á£Ð
     ¸É¸ §Å¾ §¸¡Þ¾¢ ...... «¨Ä§Á¡Ðõ

¯¾¾¢ Á£¾¢ §Äº¡Ô Óĸ ãÎ º£÷À¡¾
     ¯Å½ ã÷¾¢ Á¡Á¡Âý ...... ÁÕ§¸¡§É

¯¾Â ¾¡Á Á¡÷À¡É ôÃÒ¼ §¾Å Á¡Ã¡ƒ
     ÛÇÓ Á¡¼ Å¡ú§¾Å÷ ...... ¦ÀÕÁ¡§Ç. 


 பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான்.


அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை 

Monday 23 June 2014

                        குருஜி நினைவு நாள்     திருப்புகழ் இசைவழிபாடு

குருஜியின் முதலாண்டு நினைவுநாள் சென்னையில் 22.6.14அன்று அன்பர்கள் இசைவழிபாட்டை பக்தி பூர்வமாக சமர்பித்துள்ளார்கள்.அருளாளர் ஐயப்பன் நமக்கு அனுப்பியுள்ள செய்தியையும் .வழிபாட்டின் ஒரு பகுதியை இசை வடிவிலும்  அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.குருஜியை நாம் நினைவு கூர்வதுதான் நாம் சென்னை அன்பர்களுக்கும் ,ஐயப்பனுக்கும் செலுத்தும் நன்றி கடனாகும்.

முருகா சரணம்
அன்பர்களே
நேற்று திருப்புகழ் அன்பர்களின் குடும்பத்திற்கு ஒரு முக்கியமான நாள். திருப்புகழ் அன்பர்களின் சென்னை கிளையினர் நமது குருஜியின் முதலாண்டு நினைவு நிகழ்வை ஒரு சீரிய திருப்புகழ் இசை வழிபாடாக  செய்தனர். டெல்லியிலிருந்து மணி சார் வந்திருந்து இசைவழிபாட்டை முன்னின்று நடத்தித் தந்தார். பெருமளவில் அன்பர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். அனைவரும் நமது குருஜியின் சானித்தியத்தை உணர்ந்து உணர்ந்து திருப்புகழ் பாடல்களை அன்னாரின் பொன் னார் திருவடிகளுக்கு சமர்பணம் செய்தனர். அதில் ஒரு பாடல் திருமயிலை சிங்காரவேலர் புகழ் பாடும் திரைவார் பாடலை சுபபந்துவராளி ராகத்தில் எவ்வளவு உயிரோட்டத்தோடு பாடுகிறார்கள் நமது அன்பர்கள் பாருங்கள்.
முருகா சரணம்


https://www.youtube.com/watch?v=Gp1D2s3WBJ4&feature=youtu.be


-- 

Thursday 19 June 2014

வைகாசி விசாகம் "2014"

முருகன் திருவருளால் வைகாசி விசாகம் சிறப்பாக இனிதே நடைபெற்றது.மும்பையின் பல பாகங்களில் இருந்தும் அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

குறிப்பிட்ட படி, ஷண்முக சஹஸ்ரநாம அர்ச்சனை .அஷ்டோத்திர நாமாவளியுடன் தொடங்கி ,சுப்பிரமணிய புஜங்க பாராயனத்துக்குப்பின் வழிபாடு தொடர்ந்தது.

பாடல் பட்டியலை பார்த்த அன்பர்களுக்கு வியப்பு.வழிபாடு ஒரு மணிக்குள் முடியும் அளவில் இருந்தது.அநுபூதி  பாராயணம் முடிந்தபின் பாலு சார் புன்னகையுடன் ,இப்போது வகுப்பகள் முழுவதும் பாட வேண்டும் என்று பணித்தார்.அன்பர்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி ஒரே மூச்சில் முடித்தனர். பழனி வகுப்பில் "முருகேசனே வர வேணுமே "என்று இறைஞ்சுகையில் பலர் உணர்ச்சி வசப்பட்டனர்.தங்களை மறந்தனர்.வேல் விருத்தம் மயில் விருத்தம்  தொடர்ந்து ,"எந்நாளும் ஒரு சுனையில்"தொடங்கும் மயில் விருத்தம்   பல ஸ்ருதியாக அமைந்தது பெருமானின் கருணை.

குரு பாலு சார் அழகான புன்னகையுடன் "நீங்கள் பாடியது உங்களுக்கே திருப்தியாக இருந்திருக்கும் .ஏனெனில்,நீங்கள் பாடவில்லை .குருஜி தான் பாடினார்."என்று கூறியதும் அன்பர்கள் அகமகிழ்ந்தார்கள்.

பூஜா விதிகளுடன் விழா இனிதே நிறைவுற்றது 

நிகழ்ச்சியின் சில புகைப்படங்களை சமர்ப்பிக்கிறோம். அருளாளர் பாலாசுப்ரமணியத்துக்கு நன்றிகள் பல.










Saturday 14 June 2014

காற்றினிலே வரும் திருப்புகழ் கீதம்

மெய்ஞ்ஞானமும்  விஞ்ஞானமும் என்றதலைப்பில் நாம் பல கருத்தரங்குகள் ,பட்டிமன்றம் கேட்டிருக்கிறோம்.மெய்ஞானத்துக்கு விஞ்ஞானம் பல விதங்களில் துணை போவதாக முடிப்பார்கள். உண்மைதான் இன்று நாம் வீட்டிலிருந்தபடியே பல கோயில்கள் தரிசனம் செய்கிறோம்.பல ஆன்மீக நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கிறோம். அதற்கு CD DVD ,VEDIO ,U TUBE போன்ற சாதனங்கள் பெருமளவில் கைகொடுக்கின்றன.

இதற்கு நம் அமைப்பு விதி விலக்கல்ல.குருஜியின் பாடல்கள் ஒலி  நாடா  வடிவில் வந்தன.பின் வழிபாடுகள் CD ,u tube வடிவில் வலம்  வருகின்றன.குருஜியின் பாடல்கள் கௌமாரம்  வலைத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.இவற்றுக்கெல்லாம் காரணம் முற்போக்கு சிந்தனையுள்ள பல அன்பர்கள் நம்மிடையே உள்ளதுதான்.இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ,அண்மையில்  SKIPE  தொழில் நுட்ப சாதனை மூலமாக திருப்புககழ் வகுப்புக்கள்  நடை பெற்று  வருவதாக  அறிகிறோம்.புனே நகர் ஆசிரியர் இடம் பெயர்ந்த போது  ,தொடர்ந்து வகுப்புக்கள் இதன் மூலம் நடை பெற்றன.அது போல் திருவனந்தபுரம்  ஆசிரிய தம்பதிகள் மும்பைக்கு இட மாற்றம் செய்தபோது.,வகுப்புக்கள் தொடர்ந்து இதன் மூலம் இன்றும் நடைபெற்று வருகின்றன அந்த தம்பதிகள்  S.R.சுப்ரமணியம், சுப்பலக்ஷ்மி மாமி தான்.அவர்களை பற்றி அன்பர்கள் நன்கு அறிவார்கள்.இதன் வெற்றிக்கு காரணம் ஆசியர்கள்/மாணவர்களி ன் பரஸ்பர அன்பும் மரியாதையும் தான் என்று கூறத்தேவையில்லை.

இந்த காற்றினிலே உலா வரும் திருப்புகழ் வகுப்பை பற்றி HINDU ( திருவனந்தபுரம் பதிப்பு )பத்திரிகை அருமையாக பாராட்டி எழுதியுள்ளது.அதன் link கீழே: 



விஞ்ஞான சாதனைகளை தம் குறிக்கோளுக்கு முடிந்த அளவு பயன்படுத்தி வெற்றி பெறுவதை  பாராட்டி உற்சாக படுத்த வேண்டியது நம் கடமை. மற்ற ஆசிரியர்களும் இதை பின்பற்றி செயல் படுத்தினால்  புற நகர் /கிராம த்தில் வசிக்கும் அன்பர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பது திண்ணம்