Sunday 29 April 2018

இன்று சுப்ரமண்ய புஜங்கத்தின் 16 வது ஸ்லோகம்


இன்று  சுப்ரமண்ய புஜங்கத்தின் 16 வது ஸ்லோகத்தை பார்ப்போம்.

இதில் "மஸ்தகம்"ன்னு சொல்லக் கூடிய தலையை பற்றி  வர்ணனை 

सुताङ्गोद्भवो मेऽसि जीवेति षड्धा
जपन्मन्त्रमीशो मुदा जिघ्रते यान् ।
जगद्भारभृद्भ्यो जगन्नाथ तेभ्यः
किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः ॥ १६॥
ஸுதாங்கோத்பவோ மேஸி ஜீவேதி ஷட்தா

ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான் |

ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய

கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய ||

அன்பரின் அருமையான விளக்கவுரை 

ஸுதா’ 

குழந்தை,

அங்கோத்பவோமேஸி’ 

என்னுடைய சரீரத்திலிருந்து நீ உண்டானவன்

என் உடம்புலேர்ந்து இவன் உண்டானவன்’, ‘ஆத்மாவை புத்ர நாமாஸி’ ன்னு வேதத்துலேயே வர்றது. ஒருத்தன், தானே தான் தன்னோட குழந்தையா பிறக்கறான், என்கிற மாதிரி, தான் இந்த உலகத்துலேர்ந்து போனாலும் தான் இன்னும் இந்த உலகத்துல இருந்துண்டே இருக்கணும்ன்னு ஆசைப்படற இவன் தான் ஒரு குழந்தையை உண்டாக்கறான். தன் புத்ரன் மூலமா இந்த உலகத்துல இருக்கான்னு சொல்றா. 

பரமேஸ்வரன் ‘நீ என் உடம்புலேர்ந்து உண்டானவன்’ ன்னு சொல்றதுல ஒரு விஷேஷம் இருக்கு.
மஹா பெரியவா தெய்வத்தின் குரல் முதல் பகுதியில ஸனத்குமார யோகிதான் சுப்ரமண்ய ஸ்வாமியா அவதாரம் பண்ணார்ன்னு ஒரு கதை சொல்றா. ஸனத்குமார யோகிங்கறவர் ப்ரம்மஞானி, ப்ரம்ம நிஷ்டர். உலகத்துல எந்த விதமான பற்றும் இல்லாதவர். அவருக்கு ஒரு நாளைக்கு தான் தேவ சேனாதிபதியாக இருந்து அசுரர்களோட யுத்தம் பண்ற மாதிரி ஒரு ஸ்வப்னம் வந்துதாம். அவர் அப்பாவான ப்ரம்மா கிட்ட போய் கேட்டாராம். ‘எனக்கு இப்படி ஸ்வப்னம் வந்துதே என்ன அர்த்தம்’ ன்ன போது, “நீ அடுத்த ஜென்மத்துல, தேவ சேனாதிபதியாக இருந்து அசுரர்களோட யுத்தம் பண்ண போற. உன் கனவுல வந்தா, நீ ஞானிங்கறதுனால அது நடக்கும்னு’ சொன்னாராம். ‘ஓஹோ அப்படியா’ ன்னு சொல்லி கேட்டுண்டு போயிட்டார்.

ஞானிகளுக்கு ஜன்மா எடுக்கறதை பத்தி வருத்தமும் இல்லை, சந்தோஷமும் இல்லை. அவாளுக்கு அது ஒரு பொருட்டு கிடையாது.
அப்போ பரமேஸ்வரன் பார்த்தாராம். இவர் ப்ரம்மஞானி, ஜன்மா எடுக்கறதை பத்தி அவர் ஒண்ணும் நினைக்கப் போறது இல்லை, அதுனால நாம தான் இதை ஆரம்பிக்கணும் ன்னு, பார்வதி பரமேஸ்வராள் போய், ஸனத்குமார யோகிக்கிட்ட, ‘உன்னுடைய தபஸ்ல த்ருப்தியானேன், உனக்கு ஏதாவது வரம் வேணும்னா கேளு’ன்னாளாம்

அவர் பார்வதி பரமேஸ்வராளைப் பார்த்து சிரிச்சிண்டு, ‘எனக்கு ஒண்ணும் தேவைகளே இல்லையே. எனக்கு ஒண்ணும் வரம் வேண்டாம். ஏதோ இந்த வரம் சாபம் இதிலேல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கற மாதிரி தெரியறது. உங்களுக்கு ஏதாவது வரம் வேணும்னா கேளுங்கோ’ன்னாராம். 

பரமேஸ்வரன் அதுக்கு தான் காத்துண்டு இருந்தார். ‘எனக்கு நீ குழந்தையா பொறக்கணும்’ ன்னு வரம் கேட்டாராம். இந்த சனத்குமாரர் யோகி ‘ஆகட்டும்’ அப்டீன்னாராம். ‘ஆனா நீங்க மட்டும் தான் என் கிட்ட கேட்டேள், அதனால நான் உங்களுக்கு மட்டும் குழந்தையா பொறக்கறேன்’ ன்னு சொன்னாராம்.

 அப்போ பார்வதி தேவி ‘கணவர் கேட்டா அது மனைவிக்கும் தானே. நான் தனியா கேட்க முடியுமா? நீ இப்படி சொல்லலாமா?’ ன்னு கேட்ட போது, இந்த ஸனத்குமார யோகி சொன்னாராம், ‘என்ன இருந்தாலும் ஒரு ஸ்த்ரீ சம்பந்தத்துல, கர்ப்ப வாசம் பண்ணி, ஊர்த்வமுகமா பொறக்கறதுல எனக்கு இன்னும்கூட லஜ்ஜை இருக்கு, அதனால நான் பரமேஸ்வரன் என்னை தன்னிடத்திலேயிருந்தே எப்படி உற்பத்தி பண்ணுவாரோ, அந்த மாதிரி நான் பொறக்கறேன்’ னாராம். 

‘எனக்கு அம்மான்னு ஆக வேண்டாமா, அம்மான்னு இருந்து குழந்தையை கொஞ்ச வேண்டாமா’ ன்னு பார்வதி கேட்டாளாம், அப்போ அவா ஒரு compromise பண்ணிண்டாளாம்.
பஸ்மாசுரன்னு ஒரு அசுரன் இருந்தான். அவன் யார் தலையைத் தொட்டாலும் அவா பஸ்மம் ஆயிடுவான்னு பரமேஸ்வரன் கிட்ட வரம் வாங்கிண்டு உன் தலையை தொடறேன்னு வந்தான்னு கதை இருக்கு இல்லையா! அப்பறம் விஷ்ணு பகவான் மோஹினியா வந்து விளையாட்டு காண்பிச்சு அந்த பஸ்மாசுரனை தன் தலையை தொட வச்சார்ங்கறது அப்புறம். அதுக்கு முன்னாடி ‘உன் தலையையே தொட வர்றேன்’ ன்னு சொன்ன போது அந்த இடத்துல பரமேஸ்வரன் அந்தர்த்யானம் ஆயிட்டாராம். மறைஞ்சு போயிட்டாராம். திடீர்னு பரமேஸ்வரன் மறைஞ்சு போயிட்டார்.

 உடனே பார்வதி தேவி, அம்பாள் எல்லாம் தெரிஞ்சவா தான், இருந்தாலும் விளையாட்டா இப்படி ஒரு கதை, அங்கேயே கணவனை காணோமேன்னு உருகி ஜலமா ஆயிட்டாளாம். அந்த ஜலம் சரவணப் பொய்கைன்னு இமயமலை அடிவாரத்துல ஒரு குளமாக இருந்தது. அந்த சரவணப் பொய்கையில முருகப் பெருமான் அவதாரம் பண்ணி, அந்த விதத்துல என் குழந்தைன்னு நான் சந்தோஷப் பட்டுக்கறேன்னு பார்வதி தேவியும் ஸனத்குமார யோகியும் ஒரு ராஜி (compromise) பண்ணிண்டாளாம். தெய்வத்தின் குரல்ல பெரியவா சொன்னதைத் தான் நான் அப்படியே திரும்பச் சொல்றேன்.
பரமேஸ்வரன் தன்னுடைய நெற்றியிலிருந்து அந்த ஸனத்குமார யோகியை ஆறு தீப்பொறிகளா ஆவிர்பவிச்சு, அதை அக்னி பகவான், கங்கைகிட்ட கொடுத்து, கங்கை தாங்க முடியாம அதை போய் சரவணப் பொய்கையில சேர்த்த போது, அங்க ஆறு தாமரைப் பூக்கள்ல ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அம்பாள் ஆறு குழந்தைகளையும் சேர்த்தணைத்த போது, ஆறு திருமுகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களும், ஒரு உடம்பு, ரெண்டு கால்களோட ஆறுமுகரா ஆனார்ங்கிற வரலாறு இருக்கு.
அப்படி பார்வதிக்கும் குழந்தை. ஆனா முருகப் பெருமானுடைய விசேஷம் என்னன்னா முழுக்க முழுக்க பரமேஸ்வரன் தன்னிடதிலேருந்தே சிருஷ்டி பண்ணின ஒரு குழந்தை. அதனால ‘ஸுதாங்கோத்பவோ மேஸி’ என்னுடைய அங்கத்துலருந்து நீ வந்துருக்கே,

ஜீவ’. ரொம்ப தீர்காயுசா இருன்னு, 

‘ஷட்தா’

ஆறு தடவைகள், ஒவ்வொரு சிரசையும் எடுத்து உச்சி முகர்ந்து, ‘ஜிக்ரன்’ ன்னா உச்சிமுகர்ந்து பார்க்கறது. அப்படி ஆறு தலைகளையும் முகர்ந்து பார்த்து ஆறு தடவை இந்த மந்த்ரத்தை சொன்னாராம். ‘ஸுதாங்கோத்பவோமேஸி ஜீவ’-ன்னு ஒவ்வொரு தலையும் முகர்ந்து பார்த்து பரமேஸ்வரன் சந்தோஷத்தோடு சொல்றார். 

இந்த தலைகள் ‘ஜகத்பாரப்ருத்ய:’ 


உலகத்தோட பாரத்தையெல்லாம், உலகத்தின் யோக க்ஷேமத்தையெல்லாம் வஹிக்கக்கூடிய இந்த முருகப் பெருமானுடைய ஆறு தலைகள்.

கிரீடோஜ்வலேப்யா:’

அப்படி உலகத்தையெல்லாம் காப்பாத்தற ராஜான்னு அர்த்தம். அதனால ராஜாவோட தலையில கிரீடம் இருக்கற மாதிரி, இந்த ஆறு ஆறு தலைகளிலேயும், ஆறு நவரத்ன கிரீடங்கள் இருக்கு.

அந்த ‘தேப்ய: மஸ்தகேப்ய:’ உன்னுடைய அந்த ஆறு தலைகளுக்கு ‘

‘நம:’ நான் நமஸ்காரம் பண்றேன்ன்னு ஆச்சார்யாள் சொல்றார்.


அருணகிரியார் வாக்கில் 

."எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே" என்கிறார்  நெடிய வட எனத் தொடங்கும் திருப்புகழில்.

தரணிமிசை எனத் தொடங்கும் திருப்புகழில்

"ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன் தநயன் " என கூறுகிறார்..

தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி.....

முது மா மறைக்குள் ஒரு மா பொருட்குள் 
மொழியே உரைத்த குருநாதா...உனை
"மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில் 
மலை நேர் புயத்தில் உறவாடி 
மடி மீதடுத்து விளையாடி நித்தம் மணிவாயின் முத்தி தரவேணும்"

                                                முருகா  சரணம் 

Thursday 26 April 2018

புதிய வரிசை எண் 501வழிபாடு புத்தக எண் வரிசை 199



குருமஹிமை   இசை  புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள்  476-503

 புதிய வரிசை எண்  501 வழிபாடு புத்தக எண்  வரிசை   199

"சீரான கோல கால நவமணி"என்று தொடங்கும் பாடல்


விராலிமலை திருத்தலம் 

தலம் பற்றிய தகவல்களுக்கு 


 பாடலும் பொருளும் காண குறியீடு

http://thiruppugazhamirutham.blogspot.in/2013/03/199.html





                                                                              பாடல் இசையுடன் 

                                                                17.10.2010 விஜய தசமி வழிபாடு 




   

                                                    Utube  Link for ANDROID  and   IPAD   PHONE              
                                           https://youtu.be/kiCZKnxEnmc

                                                                               அன்பர்கள்    


                                                                                                                                                                    
                                                   Utube  Link for ANDROID  and   IPAD   PHONE                  

                                  https://www.youtube.com/watch?v=ZBa0cXN86ZU

                                                                                            

                                                          முருகா சரணம் 

Monday 23 April 2018

திருப்புகழ் அன்பர்கள் மணி விழா



                                        திருப்புகழ் அன்பர்கள் மணி விழா புது தில்லியில் 

                                                8th and 9th September 2018

1958 ல் இரண்டு மாணவர்களைக் கொண்டு  டெல்லி அருளாளர் சுந்தரம் இல்லத்தில் துவக்கப்பட்ட அன்பர்களின் புனிதப் பயணம் ஓர் ஆங்கில கவிஞனின் "Miles to go before I sleep " என்ற உறுதி மொழி கவிதையை கைக்கொண்டு கடந்த 59ஆண்டுகளாக பீடு நடை போட்டு,பல மைல்கல்களை  கடந்து இன்று தன் தன்னிகரற்றஅற்புதமான  உன்னத நிலையை எட்டியுள்ளது. முருகன் அருளையும், குருஜியின் ஆசிகளையும் ,அடிக்கல் நாட்டிய அருளாளர்கள் முதல், பல மைல் கற்களை கடக்க அரும்பாடுபட்ட மற்ற அருளாளர்களையும்  போற்றி ,வணங்கி  கடந்து வந்த  பாதையையும் சற்று நினைவுகூறுவோம்.

இந்த சந்தர்ப்பபத்தில் ,அமைப்பின் பொன் விழா 18.7.2008 பெங்களூரில் நடை பெற்ற போது திருப்புகழ் அன்பர்களின் வரலாறு மற்றும் அதன் வளர்ச்சிக்கு அரும் பாடு பட்ட பல அருளாளர்களின் செயற்பாடுகளை பற்றியும் ஒரு குறும் படம் திரையிடப்பட்டது.அதன் வீடியோ வடிவத்தை காண்போம்.


                                                                                                         
                       


                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE



                                                 https://www.youtube.com/watch?v=-mnRi4PFjE0&t=69s

அன்பர்கள் அமைப்பு கடந்து வந்த பாதையையும் பார்ப்போம்.


1985.         Vallikalyanam in Mumbai

1988.         Thiruppugazh Vaibavam in Bangalore

1989.         Thiruppugazh Mahothsavam in Delhi

1990.         Arunagiri Mahothsavam in Mumbai

1991.         Release of 'Thiruppugazh Madani ' Book in Chennai

                                              by 

                  Thirumuruga Kirupaanandha Wariar

1992.         Thiruppugazh Uthsavami n Mumbai to mark two decades of dedication to 

                  Thiruppugazh  Propagation


                                                                  
1993.         Release of 'Thiruppugazh Isai Vazhipadu ' Book

1994.         Silver Jubilee Vaibavam of Karnataka Region in Bangalore

1996.         Release of 37 Audio Cassettes  Thiruppugazh Vazhipadu

                                                                     by 

                  Honorable Shri  R. Venkataraman former President of India in Chennai

1997.         Silver Jubilee celebration of Mumbai Region in Mumbai

1998          Thiruppugazh Thiruppani Thiruvizha (Successfull completion of 40 Years  

                   of our Movement)


2000.          Release of Abirami Andathi and Padhigam in 6 Volumes in Tape Format

2001.          Arunagiri  Anmeegap Peru  Vizha in Delhi 

2003.          Guruvandanam Pavazha Vizha in Chennai

2004           Vallikalyanam at Pazhani

2008.          Golden Jubilee Celebration at Bangalore
July

                   Scrrening of short film   (Thiruppugazh Anbargal History)

 22.8.2008  Guruji's Sathabishegam

2010,.         .Vijayadasami Day  Guruji leading Vazhipadu exclusivly with  added

                    songs (476---502)

2013.           Anmeega Vizhaa (13th &14th July)

                  .Release of CD containing added songs (476---503)

2014           6.6.14  திருப்புகழ் நவமணிகள்  6 டி .வி .டி  க்கள் வெளியீடு.

2014.         Golden Jubilee Year celebrating Saint Arunagirinathar nanaivu Vizha and 

                  Padi Vizha at Delhi (11.10.14)
                                                 
                  Valli Kalyanam (12.10.14)

2015.         23&24th April  Valli Kalyanam at Thiruchendur ( Live Webcast arranged)

                 24.12.15 Thiruppugazh Peru Vizha at Bangalore

                         கலந்துரையாடல்  "நமது திருப்புகழ் இயக்கத்தின்                                                எதிர்காலப்பாதை "

                 25.12.15  Vallikalyanam  (Live Webcast arranged)

2016.        January  Face Book launched 


2016.       18.12.2016  Valli Kalyanam at Thiruththani


2017        ஏப்ரல் 22&23  குரு சமர்ப்பண திருப்புகழ் இசை விழா 


                                  503 பாடல்கள்  சமர்ப்பணம் 

2017        டிசம்பர் 10     ஸ்வாமிமலையில் வள்ளிகல்யாணம் 


தற்போது  மணி விழாவை நோக்கி பீடு நடை போடுகிறது.

                                                    
குருஜி அவர்கள் அன்புடன் ஆரம்பித்து வைத்த வகுப்பு, ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, மணி விழா காணும் இம்மணியான தருணத்தில், அன்னாரின் நினைவைக் கௌரவிக்கும் வகையில், திருப்புகழ் அன்பர்கள் வரும் செப்டம்பர் 8,9 ஆகிய இரு நாட்களிலும், அபிராமி அந்தாதி பாராயணம், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், திருப்புகழ் இசை வழிபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பெரு விழா ஒன்று தில்லியில் நடைபெற சிறப்பான முறையில் நடை பெற தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

உலகளாவிய அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் அருளைப்  பெற வேண்டுகிறோம்

விழா அமைப்பாளர்களிடமிருந்து  வந்துள்ள முன்னோடி செய்தி.
            
"முருகா சரணம்
முருகப்பெருமானின் அளப்பரிய கருணையினால் அருணகிரியாரின் திருப்புகழ்ப்பாக்களைக் கற்று அவற்றைச் சந்தம் பிறழாமல், இனிய இசையுடனும், பக்தி பாவத்துடனும் பாடி வருபவர்கள் திருப்புகழ் அன்பர்கள் அமைப்பினர். அறுபதாண்டுகளுக்கு முன்பு, செந்திலாண்டவனால் தமக்கு உணர்த்திக் கொடுக்கப்பட்ட திருப்புகழ்ப் பாக்களை மக்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் அவாவினால், பெருமதிப்பிற்குரிய நமது குருஜி, அமரர் திரு ஏ.எஸ். ராகவன் அவர்கள் தில்லி அன்பர் ஜி.சுந்தரம் அவர்களது இல்லத்தில் [N, 110, Connaught Circus]  இரண்டே மாணவர்களுடன் துவங்கிய வகுப்பே, பின்னால் பரந்து வளர்ந்து நிழல் பரப்பப்போகும் 'திருப்புகழ் அன்பர்கள்' எனும் ஆலமரத்திற்கான வித்தாக அமைந்தது.

"பரம மாயையின் நேர்மையை, யாவரும் அறியொணாததை,
 நீ குருவாய் இது பகருமாறு செய்தாய்,
 முதல் நாளுறு பயனோதான்"

எனும் அருணகிரியாரின் பாடல் வரிகளை இங்கு நினைவு கூருவது மிகப் பொருத்தமானது.
குருஜி அவர்கள் அன்புடன் ஆரம்பித்து வைத்த வகுப்பு, ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, மணி விழா காணும் இம்மணியான தருணத்தில், அன்னாரின் நினைவைக் கௌரவிக்கும் வகையில், வரும் செப்டம்பர் 8,9 ஆகிய இரு நாட்களிலும், அபிராமி அந்தாதி பாராயணம், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், திருப்புகழ் இசை வழிபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பெரு விழா ஒன்று தில்லியில் நடைபெற உளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் திருப்புகழ் அன்பர்கள் அனைவரும் குருஜியின் நினைவாஞ்சலியாகவே நடைபெற இருக்கும் இவ்விழாவில் பெருந்திரளாக வந்து கலந்துகொண்டு இன்புறவேண்டும் என்பது விழா அமைப்புக் குழுவினரின் தாழ்மையான வேண்டுகோள். 

அன்பர்கள் தங்களாலியன்ற பொருளுதவியை அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விழாக்குழுவினரின் வேண்டுகோள் அறிக்கை  இணைக்கப்பட்டுள்ளது.

பணிவன்புடன்
மாலதி ஜெயராமன்"

திருப்புகழ் அன்பர்கள் செயற்குழுவினர் விடுத்துள்ள  முதல் கட்ட  வேண்டுகோள்  சுற்றறிக்கை 


THIRUPPUGAZH ANBARGAL (REGD.)
ADMIN :402, III MAIN, II BLOCK, R.T.NAGAR, BANGALORE – 560 032     Ph: 080-23335799

Regd. Office : N-110, Connaught Circus, New Delhi – 110001 Ph: 011-23310764

CHENDIL AANDAVAN THUNAI.
VETRIVEL MURUGANUKKU HARA HARO HARA.

Dear Anbargal, the Dearest of Lord of Chendil,
You are well aware that our Association, THIRUPPUGAZH ANBARGAL has progressed in a grandmanner propagating THIRUPPUGAZH and other works of SAINT ARUNAGIRINATHAR with the primary aim of motivating humanity towards promoting ANBU & AVIRODHAM.

Through the divine blessings of CHENDIL AANDAVAN, our revered Guruji Shri A. S. Raghavan laid the foundation in 1958 for the THIRUPPUGAZH ANBARGAL modestly at Connaught Place,New Delhi with just two disciples seeking to learn Thiruppugazh. 

With the blessings of Lord Muruga and the labour in the form of Thondu of our Guruji and his dedicated disciples, the THIRUPPUGAZHANBARGAL (Regd) Society was formed. It has been built with songs, music, devotion and the discipline nurtured time and again by our Guruji and every Anbar taking it to its present stature. Thismovement has reached the hearts of people not only in India but abroad as well.From a humble beginning, THIRUPPUGAZH ANBARGAL has steadily progressed and are poised to celebrate the Sixtieth Year, SASHTI ABTHAPOORTHI.

As a mark of gratitude to Guruji Shri A. S.Raghavan and for his teaching Thiruppugazh, a celebration is being planned, fulfilling the desires of all Anbagal, at its place of origin, New Delhi.

A Celebration Committee has been formed for this purpose and the celebrations are scheduled to takeplace on the 8th and 9th September 2018 at Shankara Vidya Kendra, Pashchimi Marg,VasantVihar, New Delhi. 110057. The Programme  details will be communicated shortly.

We appeal to the Anbargal / Bhakthas and public in general to participate in large numbers with family and friends to propitiate Lord MURUGA through the celebration and receive His blessings.

Yours,
60th year Celebration Committee.
In the service of Lord Muruga
Contact No: +91 98104 13265, +91 99625 76037
+91 99118 46777, +91 99537 27467
New Delhi :14th April 2018 


PS: We humbly request you to be a part of this celebration by contributing liberally.Contributions can be made by Cheque/Demand Draft (payable at New Delhi) in favour of

"Thiruppugazh Anbargal (Regd). "

Cash deposits or Bank transfers can be made to:

Corporation Bank,
 Mayur Vihar Phase 1, Delhi 110091
Account Name: THIRUPPUGAZH ANBARGAL (Regd)
Account Type: Savings
Account No: 520101244704933
IFSC: CORP0000546

MICR: 110017035


                                                                 முருகா சரணம் 

Friday 20 April 2018

அபிராமி அந்தாதி - 29



                                                                  அபிராமி அந்தாதி - 29

                                                                                           
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

அன்பரின் விளக்கவுரை 

சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், 
அபிராமித் தேவி! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?



199. ஸர்வ ஸக்திமயீ - எல்லா சக்திகளையும் உடையவள்.
த்யானம், கீர்த்தனம், பூஜை முதலிய பக்திகளை செய்து பரதேவதையை த்ருப்தி படுத்திய
வர்களுக்கு ( அவர்கள் மூடர்களாய் இருந்தாலும் கூட) விரும்பிய ஸுகத்தை தருகிறவள் எனப்படுகிறது. ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பூர்வ பாகத்தில் ' மங்களானாம் ச மங்களம் ' - என்பதையும் ஒப்பிடலாம். எல்லாப் பொருளும் அவள், எல்லாவற்றிற்கும் மூலமும், முடிவும் அவளே. அதாவது திரிபுரசுந்தரியாகிய அன்னை அபிராமி எல்லாமாகி இருக்கிறாள் என்பது கருத்து.

, சக்தி தழைக்கும் சிவமும்
சக்தியும் சிவமும் இணைந்து ஒன்றாயிருப்பர். சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சக்தியோடு சேர்ந்தே சிவம் தொழிற்படுகிறது. ' சிவமெனும் பொருளும் ஆதிசக்தியோடு சேரின் எத்தொழிலும் வல்லதாம். அவர் பிரிந்திடின் இயங்குவதற்கும் அரிதாம். ' என்று கூறுகிறது. - ஸௌந்தர்யலஹரி ( 1 ) " சிவசக்தியா யுக்தோ ". ( முன்னும் பார்த்தோம்)
சிவமூர்த்தி - சிவனையே தன் மூர்த்தியாகக் கொண்டவள். அதாவது, சிவபெருமானது திருஉருவமாக இருப்பவள். இதனையே மனதில் கொண்டு, '
சக்தி தழைக்கும் சிவமும் என்று பாடுகிறார் அபிராமபட்டர்.


, தவம் முயல்வார்
முத்தியும்,


முக்தியும் அவள் சொரூபந்தான்.இதை லலிதா ஸஹஸ்ரநாமம் ( 737) ' முக்திரூபிணீ - முக்தியையே ரூபமாக உடையவள். 736. முக்திதா - முக்தி அளிப்பவள், என்று கூறுகிறது.
இந்த சக்திதான், முக்தி வேண்டி நிற்போருக்கு, முக்தியும் அளிக்கிறது. முக்தி அளிப்பது மட்டுமல்ல. அந்தச் சக்தி இல்லையேல், அந்த முக்தி வேண்டி நிற்போ எப்படி தவம் செய்ய முடியும்? அப்படி, முக்தி அளிப்பது மட்டுமல்ல, அந்த முக்தி வேண்டுவோர் செய்ய்ய வேண்டிய தவமுமாகி, அந்தத் தவத்திற்கு வேண்டிய வித்தாய், அந்த முயற்சிக்கு மூலமாய் அமைகிறதும் அந்த சக்தியேதான்
தவம் செய்பவர்கள் அடையும் இலக்குகள் பல. சிலருக்கு இலக்கு, அந்தத் தவத்தின் வாயிலாக, பல சித்திகளை அடைதல். மற்ற சிலருக்கு இலக்கு, அந்த சித்திகளை அருளும் அந்த தெய்வத்தையே அடைவது. இன்னும் சிலருக்கோ, அந்த தெய்வம் தரும் முக்தியே குறிக்கோள்.


முக்திக்கு வித்தும் 

நம் அன்னை, அபிராமி, தவத்தின் பயனாய் மட்டுமில்லாது, அந்த தவமாகவும் அவளே இருக்கிறாள். அந்தத் தவத்தினை விளைவிக்கும் வித்துமாகவும் அவளே இருக்கிறாள்.


 வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும்,
,  அந்த முயற்கி ஏற்பட, முதலில் புத்தி வேண்டும் அல்லவா? அப்படி, இந்த சக்தியே, அந்த முயற்சி முதன் முதலில் எழும் புத்தியுமாகி இருக்கிறது.

இப்படி, சித்தியாகி, சித்தி தரும் சக்தியும் ஆகி, அந்தச் சக்தியும் கூட, சிவத்துடன் நின்று, அந்தச் சக்தி பெரும் தவமுமாகி, அந்தத் தவத்தினை விளவிக்கும் புத்தியுமாகி நிற்கும் இந்த பெரும் வடிவம் யார்?

அந்த முப்புரங்களும் கொண்ட திரிபுர சுந்தரியே அல்லவா?

ஸித்த வித்யா - ஸித்தமான ( சாஸ்வதமான) வித்யையாக இருப்பவள். மனனம் செய்பவரைக் காப்பாற்றுவது மந்த்ரம் எனப்படும். புருஷ தேவனாக இருந்தால் - மந்த்ரம் ஸ்த்ரீ தேவதை - வித்யை
473. ஸித்தமாதா - சித்தர்களுக்கு தாயாக, காப்பாற்றுபவளாக இருப்பவள். அன்னை அபிராமிக்கு, மேலே எந்த. சக்தியோ அல்லது எவரும் இல்லாதவள்.
572. பராஸக்தி - மிகவும் உயர்ந்த, மேலான சக்தி வடிவினள். ( பர - மிகவும் சிறந்த) சக்தியின் சேர்க்கையால் தான் சிவனுக்கு உத்கர்ஷம் ஏற்படுகிறது என்பது சாக்தர்களின் கொள்கை. பரா எனப்படும் மந்த்ரத்தின் சக்தி ரூபமாக இருப்பவள்.

 புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
அம்பிகை அவரவர்களுடைய அறிவினுக்குள் இருந்து அதை அறியும்படி செய்கிறவள். அறிவு வயிரம் போன்றது. வயிரம் இருளில் ஒளிவிடாது. ஒளியில் மிகச்சிறந்து ஒளிரும். அதுபோல அறிவு ஒளிர்வது, அதனூடே அன்னை இருந்து அறிவிப்பதனால் தான். அறிவென்னும் விளக்குக்கு ஒளிதரும் சுடர் அவள். அறிவென்னும் மலரை மணக்கச் செய்கிறவள் அவள். மக்களுடைய புத்தியில் இருந்து பாதுகாக்கும் இறைவி அபிராமி புத்தியை மட்டுமா பாதுகாக்கிறாள்?
அவள் திருபுரங்களாகிய மூன்று மூன்று பொருள்களைப் புரக்கிறாள் ( காக்கிறாள்). அதனால் திரிபுரசுந்தரி என்ற திருநாமம் பெற்றுள்ளாள். இதையே கருத்தில் கொண்டு, அபிராமபட்டரும் ' - புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே ' - என்றார்.
இப்படி, முயற்சிக்கு உண்டான பலனாய் மட்டுமல்லாது, முயற்சியாகவும், அவளே இருக்கிறாள் ; முயற்சியாக மட்டுமல்லாது, அந்த முயற்சியை விளைவிக்கும் புத்தியும், அந்த புத்தியும் சிந்தனையும் விளையும் வித்தாகவும் கூட அவளே இருக்கிறாள் என்று மிக அழகாகச் சொல்லுகிறார் பட்டர்.



                                                                பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                                                                     






                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE

                                                           https://youtu.be/YHaWpCuVxDs
                                                                        அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                    



                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE


                                              அபிராமி சரணம் சரணம்!!
                                                    முருகா சரணம் 


Monday 16 April 2018

சுப்ரமண்ய புஜங்கம் 15 வது ஸ்லோகம்




இன்று  சுப்ரமண்ய புஜங்கம்  15 வது ஸ்லோகம் 

                                                           
                                                          
                                                             

விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ்வஜஸ்ரம்

தயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு |

மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்

பவேத்தே தயாசீல கா நாமஹானி ||



தேதியூர் சாஸ்த்ரிகள்  மஹாபாரதத்துலேர்ந்து ஒரு ஸ்லோகம் quote பண்ணியிருக்கார்.
 பன்னிரண்டு கல்யாண குணங்கள் ப்ரம்ம நிஷ்டர்கள் கிட்ட இருக்கு. அதையெல்லாம் பக்தர்களுக்கும் முருகனுடைய பன்னிரண்டு கண்கள் கொடுக்கும்ன்னு சொல்றார்.
 மோக்ஷ சாதனமான ஆத்மஞானம், சத்யவசனம், மனோநிக்ரஹம், வேதாந்த விசாரம், பொறாமை இன்மை, அதர்மத்தில் லஜ்ஜை, சீதோஷணாதிகளை ஸஹிப்பது, குணமுள்ள இடத்தில தோஷாரோபணம் செய்யாமல் இருப்பது, யாகம், ஸத்பாத்ர தானம், இந்த்ரிய நிக்ரஹம், சத்கர்மாவில் தைரியம்,
 இந்த பன்னிரண்டு விதமான ப்ரம்ம நிஷ்டர்களுடைய கல்யாண குணங்களை தன் பக்தரிடத்தில் முருகப்பெருமான் வர்ஷிப்பார், அப்படீன்னு சொல்லி இந்த பன்னிரண்டு கண்களால் பன்னிரண்டு அனுக்கிரஹம் பண்ணுவார்-ன்னு பொருத்தமா ஒரு ஸ்லோகத்தை எடுத்து சொல்லி இருக்கார்.
ஆதி சங்கரர் இங்கு "முருகா, உனக்கு பன்னிரண்டு கண்கள் இருக்கு. எல்லா தெய்வங்களை விட அதிகமான கண்கள் உனக்குத் தான் இருக்கு. அதுவும் எல்லா கண்களும் விசாலமா காது வரை நீண்டு இருக்கு. அப்படி இருக்கும் போது, ஒரு கண்ணால, அது கூட முழு கண் இல்ல, கடைகண்ணால என்னை ஒரு பார்வை பார்த்தேயானால் நான் பிழைச்சு போயிடுவேன். உனக்கு அதனால ஒரு குறையும் இல்லையே அப்படீன்னு சொல்றார்.

தயாசீல
,

 ஹே தயவே வடிவான ஸுப்ரமண்ய மூர்த்தியே, 

விசாலேஷு 

‘விசாலேஷு’ உனக்கு பன்னிரண்டு கண்கள் இருக்கு. அதெல்லாம் விசாலமான கண்கள். எவ்வளவு விசாலமாக இருக்குன்னா

கர்ணாந்த தீர்க்கேஷ்வ
 காது வரைக்கும் நீண்டிருக்கு உன் கண்கள்.

அஜஸ்ரம்

 எப்பொழுதும்


தயாஸ்யந்திஷு

’ தயை  நிரமபி வழிந்து கொண்டிருக்கிறது. உன்னுடைய கடாக்ஷத்துலேருந்து கருணை பெருகி விழுந்துண்டே இருக்குங்கறார், 

 த்வாதசஸ் வீக்ஷணேஷு |

 உன்னுடைய பன்னிரண்டு கண்கள்லேர்ந்து, 

யீஷத் கடாக்ஷ

ஒரு கொஞ்சம் ‘ஈஷத் கடாக்ஷ:’ கொஞ்சம் உன் பார்வையை, கடைக்கண் பார்வையை

 ‘மயி’
 என்னிடத்தில் 

‘ஸக்ருத்
 ஒரே ஒரு தடவை, 

பாதித

’ விழப் பண்ணினேனா, ஒரு தடவை கண்ணெடுத்து நீ என்னை பார்த்தாயேயானால், எனக்கு எல்லாமே கிடைச்சுடும்.

பவேத்தே தயாசீல கா நாமஹானி ||

 உனக்கு இதுனால ஒரு ஹானியும் வராதே. அதனால கொஞ்சம் தயவு பண்ணு’ முருகா ன்னு கேட்கறார்.

நமது அருணகிரிநாதர்
உறவின் முறை கதறி அழ ஊராரும்ஆசை அற எனத் தொடங்கும்
திருப்புகழில்

"உனது முக கருணை மலர் ஓராறும்  
ஆறு இருகை திரள் புயமும் 

எழில் பணி கொள் வார் காது நீள் விழியும் " ......


மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ...
என்கிறார்.

இருவினையும் எனத் தொடங்கும் திருப்புகழில் கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே 
என்கிறார்

தலைவலையத்து எனத் தொடங்கும் திருப்புகழில் 
கருணை விழி கற்பகத் திகம்பரி எங்களாயி  என்கிறார்

முருகனது மயிலையும் , அவன் திருக்கை அயிலையும், அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே ...
நீங்கள் வாருமே


முருகா சரணம்