Saturday 18 January 2020


                          மும்பை படி விழா ......2020


                                                                                                         



                                திருசெம்பூர் திருமுருகன் திருக்கோயில்                                                             
திருத்தணியில் 1917 ஜனவரி முதல் தேதி அன்றே படி விழா  தொடங்கி வைத்தவர் சச்சிதானந்த வள்ளிமலை சுவாமிகள்.அது சுவாரஸ்யமான ஒரு தொடக்கம்.அந்த கால கட்டத்தில்,நம்மவர்கள் நம்மை ஆண்ட ஆங்கிலேய பிரபுக்களை தங்கள் சுயநலம் கருதி அந்த புத்தாண்டு தினத்தில் "துரையே " என வணங்கி பல பரிசுகளை வழங்கி வந்தனர்.

துரைகளுக்கு துரையாக நம்மை வாழ வைக்கும் நம் பெருமானை வணங்காமல் ,அவர்களை போற்றிய மக்களைக்கண்டு மனம் வெதும்பி,அவர்களை திசை திருப்ப "திருத்தணி திருப்புகழ் திருவிழா " என்ற அமைப்பை ஏற்படுத்தி படி விழா தொடங்கினார்.

ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களை களையவும் ,புத்தாண்டு வளமாக அமையவும் பெருமானின் கருணை வேண்டியும் டிசம்பர் 31 இரவு முதல் மறுநாள் புத்தாண்டு காலை வரை படிவிழா இன்று வரை தொடருகிறது.

"துரை" என்ற சொல் சமீப காலத்தில் தான் தமிழில் புகுந்துள்ளது என்று பெரும்பாலானோர் கருத்தில் கொண்டுள்ளனர்.ஆனால், நம் அருணகிரியார்  "துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடது தருவாயே."என்று  "வஞ்சம் கொண்டும்"என்ற திருசெந்தூர் பாடலில் வேண்டுகிறார்.திருத்தணி முருகன் துரை முருகன்  என்றே அழைக்கப்படுகிறார்.

நம் படி விழாக்கள் ஜனவரி மாதத்தில் நாட்டின் பல பாகங்களில் முருகன் திருத்தலங்களில்நடந்து வருகின்றன..
மும்பையில் சிருங்கேரி ஆசாரிய சுவாமிஅருளாசியுடன்1981ம்ஆண்டுகுருஜிதலைமையில் துவங்கி இப்பொழுது 40ம் படிவிழா 26.01.2020 அன்று மும்பை செம்பூர் செட்டா நகர் திரு முருகன் ஆலயத்தில்  நடை பெறுகிறது.


குருஜியும்,செந்தில்துறவியும்தொடர்ந்துமும்பையில்ஜனவரி 26ம்நாள் அன்பர்களை படி ஏற்றி  சன்னிதானத்தில் திருப்புகழ் பாக்களை சமர்ப்பணம் செய்து அன்பர்களுக்கு அருளாசி வழங்கி வந்தது மும்பை அன்பர்கள் செய்த பாக்கியம். அவர்களின் பொற்பாதங்களை வணங்கி திருப்புகழ் பாடல்களுடன் திருப்பி படிகளில் ஏறி பெருமானின் அருள் பெறுவோம்


                                                                                    அழைப்ப்பிதழ் 

                                                                                         


படி விழாவில் இடம் பெரும் பாடல்களின் தொகுப்பு 

 




முருகா சரணம்