Sunday 19 August 2012

Editorial on Arunagiryar Ninaivu Vizha dated 15.08.2012

வணக்கம் அன்பர்களே!

அருணகிரியார் நினைவு விழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் இன்னும் அதன் நினைவாகவே பரவசத்தில் திளைத்துகொண்டு  இருப்பார்கள் என்பது திண்ணம். பல ஆண்டுகளாக சுதந்திரதினத்தன்று விழா ஏற்பாடு செய்வதன் நோக்கம் அன்று எல்லோர்க்கும் விடுமுறை தினம் என்பதுதான். அதனால் அன்பர்கள் யாவரும் குடும்பத்தோடு கலந்துகொண்டு முருகன் பெறவேண்டும் என்பதுதான். கலந்துகொண்ட அன்பர்கள் பாக்கியசாலிகள். 

திருசெம்பூர் முருகன் ஆலயத்தில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய விழா, 108 திருப்புகழ் பாடல்களுடன் மதியம் 1.30 மணி அளவில் முடிவடைந்தது. 

மும்பையின் பல பகுதிகளில் இருந்து அன்பர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள். முக்கியமாக குறிப்பிட விரும்புவது புனாவில் இருந்து 20 அன்பர்கள் கலந்துகொண்டார்கள்.

பூஜை விதிகளுடனும், குருவின் ஆசியுடனும் விழா இனிதே முடிந்தது.

சென்னையில் நம் குருஜியின் தலைமையில் இசை வழிபடு இனிதே நடைபெற்றது.

பெங்களூரில் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, 20 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் திருப்புகழ் பாக்களை சமர்ப்பித்தனர். அதில் மும்பையில் இருந்து திருமதி வித்யா ஸ்ரீராம் தனது இளம் வயது மாணவர்களுடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முதன் முறையாக இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


மும்பை நிகழ்ச்சியின் புகைப்படங்களை அன்பர்களின் கண்களுக்கு விருந்தாக இணைத்துள்ளோம் .



























































































Friday 17 August 2012

An appeal to anbargal for old thiruppugazh books



some anbars are in need of  THIRUPPUGAZH BOOK.  It is requested that anbars may spare their old edition books for the benefit of other needy anbars.They may hand over thebooks to the class teacher under advice to the blog.


Editorial on AADI KRITHIGAI dated 10.08.2012


ஆடி  கிருத்திகைவழக்கம்போல் நேருல்  S .I .E .S  வளாகத்தில் கோலாகலமாக வழிபாடுடன் நடைபெற்றது . திருப்புகழ் மகளிர் அன்பர்கள் சந்தனம் ,குங்குமம் பூக்களுடன் வரவேற்றனர் .அரங்கம் தெய்வீக சூழ்நிலையில் அமைந்திருந்தது முருகன் .அறுபடை  வீடுகளிலும் ,அன்னை  பராசக்தி பல வடிவங்களிலும் எழுந்தருளி இருந்தனர் .ஷண்முக அர்ச்சனையுடன் தொடங்கி துர்கா சந்திரகலா  ஸ்துதி ,அபிராமி பதிகம் ,திருப்புகழ் பாடல்களுடன் பின் பூஜா விதிகளுடன் முடிவடைந்தது.

குரு சிவ பாலு சார் நம் திருப்புகழ் அன்பர்கள் இயக்கத்தில் 20 ஆசிரியர்கள்  தொண்டற்றுவதாகவும் சுமார் 900 அன்பர்கள் கற்று வருவதாகவும் கூறினார் .மற்றும் அந்த அன்பர்கள் கற்றுக்கொள்வதோடு மட்டும் அல்லாமல் எல்லா வழிபாடுகளிலும் பூஜைகள் முதற்கொண்டு  கலந்து கொள்ளுமாறும.மேலும் இயக்கத்து சேவைக்காக தொண்டர்கள் முன் வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் . நம்முடைய  BLOG பற்றியும்  அதை அன்பர்கள் பயன் படுத்திக்கொள்ளவும் வேண்டினார்.எங்களுடைய பக்தி பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் சமர்பிக்கிறோம்.

வழிபாட்டு நிகழ்சிகளை புகைப்படத்துடன் DNA (NAVI MUMBAI EDITION DATED 12.08.2012) பத்திரிகை வெளியுட்டள்ளது .அதை இத்துடன் இணைத்துள்ளோம் நமது அன்பர்களின் பார்வைக்கு.





PHOTO GALLERY OF THE EVENT: