Monday 23 June 2014

                        குருஜி நினைவு நாள்     திருப்புகழ் இசைவழிபாடு

குருஜியின் முதலாண்டு நினைவுநாள் சென்னையில் 22.6.14அன்று அன்பர்கள் இசைவழிபாட்டை பக்தி பூர்வமாக சமர்பித்துள்ளார்கள்.அருளாளர் ஐயப்பன் நமக்கு அனுப்பியுள்ள செய்தியையும் .வழிபாட்டின் ஒரு பகுதியை இசை வடிவிலும்  அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.குருஜியை நாம் நினைவு கூர்வதுதான் நாம் சென்னை அன்பர்களுக்கும் ,ஐயப்பனுக்கும் செலுத்தும் நன்றி கடனாகும்.

முருகா சரணம்
அன்பர்களே
நேற்று திருப்புகழ் அன்பர்களின் குடும்பத்திற்கு ஒரு முக்கியமான நாள். திருப்புகழ் அன்பர்களின் சென்னை கிளையினர் நமது குருஜியின் முதலாண்டு நினைவு நிகழ்வை ஒரு சீரிய திருப்புகழ் இசை வழிபாடாக  செய்தனர். டெல்லியிலிருந்து மணி சார் வந்திருந்து இசைவழிபாட்டை முன்னின்று நடத்தித் தந்தார். பெருமளவில் அன்பர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். அனைவரும் நமது குருஜியின் சானித்தியத்தை உணர்ந்து உணர்ந்து திருப்புகழ் பாடல்களை அன்னாரின் பொன் னார் திருவடிகளுக்கு சமர்பணம் செய்தனர். அதில் ஒரு பாடல் திருமயிலை சிங்காரவேலர் புகழ் பாடும் திரைவார் பாடலை சுபபந்துவராளி ராகத்தில் எவ்வளவு உயிரோட்டத்தோடு பாடுகிறார்கள் நமது அன்பர்கள் பாருங்கள்.
முருகா சரணம்


https://www.youtube.com/watch?v=Gp1D2s3WBJ4&feature=youtu.be


-- 

No comments:

Post a Comment