Tuesday 5 March 2019

சுப்ரமண்ய புஜங்கம் 26


                             சுப்ரமண்ய புஜங்கம்  26
                                                                                   


दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्ति-
र्मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।
करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं
गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥ २६॥
த்ருசி ஸ்கந்த மூர்த்தி: ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி:
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம் |
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா: ||
அன்பரின் விளக்கவுரை 

‘த்ருசி’‘ஸ்கந்த மூர்த்தி:
 என் கண்களுக்கு எதிரில் முருகப் பெருமானுடைய உருவம்.
ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி:

காதுகளில் அவன் கீர்த்தி ஒலிக்கட்டும் 

எப்போதும் முருகப் பெருமானுடைய கதைகளையே நான் கேட்க வேண்டும்.
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்’
நான் ஏதாவது பேசினேன்னா, எல்லாரையும் தூய்மை படுத்தக்கூடிய, பேசறவா உட்பட எல்லரையும் தூய்மை படுத்தக் கூடிய முருகப் பெருமானுடைய அந்த திவ்ய சரித்திரத்தை மட்டுமே நான் பேச வேண்டும். 
‘கரே தஸ்ய க்ருத்யம்’ 
கையை வச்சுண்டு முருகப் பெருமானுடைய அர்ச்சனையை பண்ண வேண்டும்.
ஒரு அர்ச்சனை பண்ணனும்னாக் கூட புஷ்பம் வேணும். அப்படி இல்லேன்னாக் கூட ‘ஸ்தவைஹி அர்ச்சேந் நரஸ் ஸதா’ அப்படின்னு பீஷ்மாச்சார்யாள் சொன்ன மாதிரி இந்த ஸ்தோத்ரத்தினாலேயே பகவானை அர்ச்சனை பண்ணலாம். அதுல அதிகமா திருப்தி ஆகிறார்ன்னு வேற சொல்றார். அருணகிரி நாதரும்,
“ஆசைகூர் பத்தனேன் மனோ பத்ம
மான பூ வைத்து …… நடுவேயன்
பான நூலிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டியொரு ஞான
வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப
மாசிலோர் புத்தி யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர
வாள பாதத்தில் அணிவேனோ ………
ன்னு ஒரு அழகான பாடல். என்னுடைய ஆசையோடு கூடிய ‘மனசு’தான் தாமரை. அந்தப் பூவை வச்சுண்டு ‘அன்பு’ என்கிற நூலிட்டு (என்னோட அன்புதான் நூல்), என் நாக்கைக் கொண்டு மாலையாகக் கட்டறேன். சித்ரக் கவி மாலையாக அதைக் கட்டி, ஞானம் தான் அதோட வாசனை, ‘மாசிலோர் புத்தியளி பாட’, தூய்மையான புத்தி உள்ளவர்கள் என்ற தேனீக்கள் இந்த மாலையில வந்து குடி இருக்கிறார்கள். மாத்ருகா புஷ்ப மாலை. 51 அக்ஷரங்களுக்கு மாத்ருகா அக்ஷரங்கள் ன்னு பேரு. அந்த மாத்ருகா அக்ஷரங்களைக் கொண்டு ஒரு புஷ்ப மாலை பண்ணி ‘கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ’ உன்னோட அழகான பாதத்தில நான் போட மாட்டேனா’ அப்படின்னு இங்க வேண்டிக்கறார்.
கந்தர் அநுபூதியில ‘நெஞ்சக் கனகல்லு’ ன்னு ஆரம்பிச்சு 51 பாடல்கள் இருக்கு. அந்த 51 பாடல்களும், இந்த 51 மாத்ருகா அக்ஷரங்களைக் கொண்டு செய்தது. ஒவ்வொரு பாட்டுலயும் ஒரு பீஜாக்ஷரம் இருக்குன்னு மஹான்கள் சொல்லுவா. முன்ன வேண்டிண்ட மாதிரியே அருணகிரி நாதர் அந்த கந்தர் அநுபூதியைப் பாடி, மாத்ருகா புஷ்ப மாலையை முருகப் பெருமானுடைய கோல ப்ரவாள பாதத்தில் அணிவித்தார் ன்னு மஹான்கள் சொல்லுவா. 
‘வபுஸ்தஸ்ய ப்ருத்யம்’ 
என் உடம்பு அவனுக்கு அடிமை தொழில் செய்ய வேண்டும் .உடம்பு அவனுக்கு வேலைக் காரனாக இருக்கட்டும்.ஸ்வாமி தூக்கறா இல்லையா! அந்த மாதிரி பகவானோட காரியத்தைத் தான் என் உடம்பு பண்ணனும்
மம அசேஷ பாவா:
என்னுடைய எல்லா காரியங்களும் 
‘குஹே ஸந்து லீனா’ 
முருகப் பெருமானிடத்துலேயே லயித்திருக்க வேண்டும், அப்படீன்னு ஒரு ப்ரார்த்தனை. அவன் நாம ஸ்மரணை தவிர வேறு ஒன்றும் இந்த உடலுக்கு தெரிய வேண்டாம். நம் அவயவங்கள் உலக காரியத்தில் ஈடு படாமல் அவனுக்கே தொண்டு செய்யட்டும் என்கிறார். நாமும் மனதால் அவனை நினைத்து,  தலையால் வணங்கி அவன் புகழ் பாடுவோம் அவனுக்கு தொண்டு செய்வோம். இப்பிறவி எடுத்ததே அதற்காகத்தானே.  
திரு அங்க மாலை ன்னு தேவாரத்துல அப்பர் பெருமான் ‘தலையே நீ வணங்காய்’, அப்படீன்னு ஆரம்பிச்சு
தலையே நீவணங்காய் – தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்
கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண் தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ – சிவன் எம் இறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ
மூக்கே நீமுரலாய் – முது காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்
வாயே வாழ்த்துகண்டாய் – மத யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துகண்டாய்
நெஞ்சே நீநினையாய் – நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்
கைகாள் கூப்பித்தொழீர் – கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர்
ஆக்கை யாற்பயனென் – அரன் கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இல் ஆக்கையால் பயன் என்
கால்களால் பயன் என் – கறைக்கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்
உற்றார் ஆர் உளரோ – உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்து உறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ
இறுமாந்து இருப்பன்கொலோ – ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச்சென்று அங்கு இறுமாந்து இருப்பன்கொலோ
தேடிக் கண்டுகொண்டேன் – திருமாலொடு நான்முகனுந்
தேடித் தேட ஒணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்
ன்னு பாடறார். அப்படி என் உடம்பு உன்னுடைய காரியத்தையே பண்ணணும்னு வேண்டிக்கறார்.
அருணகிரி நாதரும்,
“கோடாத வேதனுக்கு யான்செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாளனே தென்தணிகைக் குமர நின் தண்டையந்தாள்
சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாத கையும்
பாடாத நாவுமெனக்கே தெரிந்து படைத்தனனே. “
(கந்தர் அலங்காரப் பாடல்)
அப்படி தன்னோட குறையைச் சொல்றார். கொடுத்த உடம்பை வச்சிண்டு நான் என்னென்னவோ பண்றேனே. நான் அப்படி என்ன பாவம் பண்ணிட்டேன் அந்த ப்ரம்மன் கிட்ட? இப்படி என்னை படைச்சிருக்கானே. அப்படின்னா என்ன அர்த்தம். ‘எனக்கு முருகனுடைய தண்டையந்தாளை சூடக் கூடிய சென்னியும், அவனை நாடும் கண்களும், அவனைத் தொழும் கைகளும், அவனைப் பாடும் நாவும் கொடு’ன்னு பிரார்த்தனை பண்றார்.


சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம்   



   செந்திற் குமாரன் றனைக்கண்கள் காண்க
   செவிஎந்தை புகழ்கேட்க வாய்சீர்த்தி பாட
   கந்தன் திருத்தொண்டு கைசெய்வ தாக
   கடையேன் அவன்தொண்ட னெனும்வாழ்வு சேர்க.
   


சுப்பிரமணிய புஜங்கம் முழுவதும் இசையுடன் 

பாம்பே  சகோதரிகள் குரலில் 
                                                    முருகா சரணம் 

No comments:

Post a Comment