Friday 6 December 2019

வள்ளி முருகன் திருக்கல்யாணம் --பழமுதிர்சோலையில் செய்தி மடல் ..1

                                                                                      

வள்ளி முருகன் திருக்கல்யாணம் --பழமுதிர்சோலையில்  செய்தி மடல் ..1

                                                                                                     

அன்பர் அய்யப்பன் அவர்களிடமிருந்து வந்துள்ள செய்தி மடல் 



"நமது குருஜியின் அருளாசியாலும் செந்திலாண்டவனின் பெருங்கருணையினாலும் அன்று திருச்செந்தூரில் ஆரம்பித்து, வரிசையாக , அடுத்தடுத்து ஒவ்வொரு ஆண்டுகளிலும் திருத்தணியிலும், சுவாமிமலையிலும், திருப்பரங்குன்றத்திலும் வள்ளி கல்யாணத்தை பாரோர் போற்றும் வண்ணம் அவன் சிறப்பாக நடத்திக் கொண்டான். நீங்கள்மனமுவந்துவழங்கியபொருளுதவியால் தான் இவ்வளவும் இனிதே நடந்திருக்கிறது. ந்த வரிசையை நிறைவு செய்யும் வகையில் இந்த வருடம் சோலை மலையில்,  அவன் சித்தப்படி , 29-12-2019 ஞாயிற்றுக் கிழமை வள்ளி  கல்யாணம் நடக்க இருப்பதை நாம் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறோம். 

அவன் கல்யாணத்திற்காக அதி நவீன குளிர் சாதன வசதியுடன் கூடிய மிகப்பெரிய  கல்யாண மண்டபத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளான். அனைத்து ஏற்பாடுகளுமே செவ்வனே நடந்து வருகின்றன.  இந்த கல்யாணத்திற்கு வழக்கத்தை விட அதிகமான செலவாகும் . நீங்கள் மனமுவந்து செந்திலாண்டவனை மனதில் தியானித்து அவன் உணர்த்திய வண்ணம் பொருளுதவி செய்ய பிரார்த்திக்கிறேன். 

இத்துடன் வழக்கம் போல் நாம் தயாரித்துள்ள கூகில் சீட் இணைத்துள்ளேன். நீங்கள் விரும்பும் பொருளை கூகில் பக்கத்தில் எழுதி,  பொருளை அன்பர் கோபியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

அன்பர் கோபியின் வங்கி விபரம்

P.C.GOPI
STATE BANK OF INDIA 
KALPAKKAM BRANCH
SB/AC. # 10912124541
IFS # SBIN0002219

GOOGLE SHEET

https://docs.google.com/spreadsheets/d/144mqsYfAZkdRVkN3zbYuk1Z2v0wqy3zTQ6o4rEqzyYc/edit#gid=0

முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்"
குருஜி தலைமையில் பழநி  திருத்தலத்தில் விமரிசையாக நடை பெற்ற வள்ளி கல்யாண வைபவத்தை தொடர்ந்து திருச்செந்தூர்,திருத்தணிகை,சுவாமிமலை,திருப்பரங்குன்றம் அறுபடை தலங்களில் அமோகமாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு  "நிறைவு செய்யும் வகையில்"என்ற  பழமுதிர்சோலையில் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார் 

ஆனால் நாம் "நிறைவாக " என்ற சொல்லுக்கு அறுபடை தலங்களில் நிறைவு என்றே கருதுகிறோம்.மற்றும் "மன நிறைவு" என்றும் பொருள் கொள்ளலாம்.நம் பெருமானின் வைபவங்கள்தொடர்ந்துகொண்டேதான்இருக்கும்.
அவ்வகையில் அடுத்து பஞ்சபூத தலங்களில் தொடரவேண்டும் என்ற விண்ணப்பத்தை பெருமானின் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறோம்.

நம் மணி சார் சென்ற ஆண்டு திருப்பரங்குன்றம் வள்ளிகல்யாண வைபத்தில் அழைப்பு விடுத்தார்.சமீபத்தில் நிகழ்ந்த மஹாகந்த சஷ்டி விழாவிலும் மறு  அழைப்பு விடுத்துள்ளார்.செயலில் இறங்க வேண்டியவர்கள் அன்பர்கள்தாம்.

வழக்கம்போல் குடும்ப சகிதமாக.குறிப்பாக தங்கள் அடுத்த வாரிசுகளுடன் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.மற்றும் தங்கள் காணிக்கை ,தங்கள் குடும்பத்தில் கலந்து கொள்ளும் அன்பர்களின் எண்ணிக்கை விபரங்களை முன் கூட்டியே கூகிள் சீட் மூலமாக பதிவு செய்ய வேண்டுகிறோம்.இது விழா அமைப்பாளர்களுக்கு நன்கு திட்டமிட்டு செவ்வனே செயல்பட பேருதவியாக இருக்கும்.



                                                                                  அழைப்பிதழ் 
                                                                                                       

பழநி வள்ளி கல்யாண வைபவத்தில் குருஜியின் அருளுரை 


                                                                                                                               

                                                                                                               

வள்ளி கல்யாண பாடல்கள் (LYRICS)

https://drive.google.com/open?id=1sm-d78-OvkbwEbizjyzTUL6uXvlvSDDY

வள்ளி கல்யாண பாடல்கள் காணொளியில் 

 https://www.youtube.com/watch?v=tmYpnWjdFY4



                                                                                         முருகா சரணம்                                                                                                                                                                                                   

No comments:

Post a Comment