Monday 9 September 2019

ஸுப்ரமண்ய புஜங்கம் 27



                                                                           ஸுப்ரமண்ய புஜங்கம்   27

                                                                                                             


मुनीनामुताहो नृणां भक्तिभाजामभीष्टप्रदाः सन्ति सर्वत्र देवाः ।
नृणामन्त्यजानामपि स्वार्थदाने गुहाद्देवमन्यं न जाने न जाने ॥ २७॥
முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜாம்
அபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா: |
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே ||
                                                                                          பொருள் 
 ‘ஸர்வத்ர’ தேவா,             – எல்லா உலகங்களிலும் தெய்வங்கள், 
‘முனீனாம், பக்தி பாஜாம் ந்ருணாம் ‘ – முனிவர்களுக்கும், தன்னிடம் பக்தி செலுத்தும் மனிதர்களுக்கும்
 ‘அபீஷ்ட ப்ரதா: ஸந்தி’ – அவா மனோரதங்களை பூர்த்தி பண்றதுக்கு வரங்களை கொடுக்கிறார்கள்.
 ஆனால்.. ‘அந்த்யஜாநாமபி” – கீழ் ஜாதியில் பிறந்தவரா இருந்தாலும்
 ‘ந்ருணாம்’ – மனிதர்களுக்கும்,
‘ஸ்வார்த்த தானே’ – விரும்பியதை கொடுப்பதில்
‘குஹாத் அன்யம் தேவம்’ – முருகப் பெருமானைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை
‘நஜானே நஜானே’ – நான் காணவில்லை, நான் காணவில்லை 
அன்பரின் விளக்கவுரை 
இப்போ அந்த மனு தர்ம சாஸ்திரத்துல சொல்லியிருக்கிற வர்ணாஸ்ரமத்தின்படி குலங்கள், அதோட குணங்கள் எல்லாம் இருக்கான்னு தெரியலை.

ஆனால் மாந்தர்கள் என்கிற ஆச்சர்யமானா புஸ்தகத்துல  ஒரு படிக்கட்டு போட்டால்   தற்காலத்தில் ஜனங்கள் எப்படியிருக்கிறார்கள் என்று வேறு படுத்தலாம்.
பல விதமான பஞ்சமாபாதங்களை பண்றவர்களை ‘பாபிகள் '
‘பாமரன்’ ன்னு ஒரு category போட்டால்  99.99% of the population வந்துடும். சாதாரண பிழைகளையும் தவறுகளையும் இழைத்துண்டு பணம், பெண் இதுல ஆசைப்பட்டுண்டு, நான் என்னோடதுன்னு ரொம்ப தன்னலமா இருந்துண்டு வாழ்க்கையை நடத்திண்டு போகக் கூடிய ஜனங்கள் எல்லாரும் பாமரர்கள் 

அவன் படிச்சவனா இருந்தாலும் சரி, ரொம்ப புத்திமானா இருந்து, ரொம்ப சம்பாதிச்சு சாமர்த்தியசாலியா இருந்து, திறமைகள் இருந்தாலும் சரி, வைதீகாளா இருந்தாலும் சரி, சந்யாசியா இருந்தாலும் சரி, பணத்தாசை இருந்தா பாமரன் தான். 

விவேகி, சாது, சிறந்த விவேகி, முற்றின விவேகியெல்லாம் படிச்சு பார்க்கணும். அப்பத்தான் அந்த உயர்ந்த நிலைமைகளோட பெருமை புரியும். அந்த நிலைமைகள் எல்லாம் அடையாத வரைக்கும் அவன் என்ன வேஷம் போட்டாலும் அதெல்லாம் உதர நிமித்தம் தான். அதனால அவனை நீங்க பெரியவனா நினைச்சுடாதீங்கோ. அவாளுடைய நோக்கம் என்ன என்கிறதை புரிஞ்சிக்கோங்கோ. காமினி காஞ்சனத்துல இருந்தா அவா பாமரர்கள் தான். 

ஏதோ ஒரு சந்தர்ப்ப வசத்துல எப்பவோ ஒரு தப்பு பண்ணினா பரவாயில்லை. பிராயச்சித்தம் பண்ணிக்கலாம். ஆனா எது right wrong-ன்னு தெரியாம தப்பே பண்ணிண்டு இருந்தா அவா பாமரர்கள் ன்னு சொல்றார்.


நீங்க அவாளோட பழகினா, நம்ம level-ல இருக்கறவாளோட பழகினா நாம அந்த level-ல தான் இருப்போம். மேல போக முடியாது.
‘விவேகி’ங்கறது எது right wrong-ன்னு தெரிஞ்சு, முடிஞ்ச வரைக்கும் நாம ரைட்டா நடந்துக்கணும். அந்த ஒரு right wrong-ஆவாது தெரிஞ்சு, எப்போதும் நேர்மையாக நல்லவனா இருக்கறவன் விவேகி.
தன்னலமில்லாதவர்கள் ‘ஸாதுக்கள். ‘சிறந்த விவேகி’, ‘முற்றின விவேகி’ என்கிறது men of wisdom வைராக்கியம் உள்ளவர்கள்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் மாதிரி பகவானுக்காக எதையும் விடறதுக்கு தயாராக, அவ்வளோ தெய்வத்துக் கிட்ட பாசம் வந்தவாளை ‘தெய்வ சாதுக்கள்.
ஒரு வாட்டி ‘வருண ஜபம்’ பண்ணா மழை கொட்டும் என்கிற அளவிற்கு, தெய்வத்தோட நேரா பேசக் கூடியவாளா இருந்த அந்த காலத்து பிராமணர்கள் ‘தெய்வ விவேகி’ கள் .
அதுக்கும் மேல பகவானோடயே எப்பவும் லயிச்சு இருக்கிறவாளை ‘மஹான்’கள் 
அத்வைத ஞானத்தை அடைவதற்கு ரொம்ப நெருங்கி இருக்கிறவாளை ‘துறவி’ங்கள் .
அத்வைத ஞானத்தில உட்கார்ந்து (நிலை பெற்று) இருக்கிறவாளை ‘ஞானி’ங்கறார். இப்படி ஒரு Gradation போட்டிருக்கார்.
இந்த Gradation தான் இந்த காலத்துல வசதி நமக்கு. ஏன்னா ‘எல்லா குலங்களிலும், எல்லா விதமான ஜனங்களும் பிறக்கறதுக்கு பகவான் வழி வகுத்து விட்டார். இந்த காலத்துல 99% of the people பாமரன், அல்லது பாபியாகத் தான் இருக்கா. அதனால நமக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்கிறது, மழை பெய்யறதே பகவானுடைய கருணைன்னு நீங்க புரிஞ்சிக்கணும்ன்னு ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்றார். 
 ‘ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே’ கீழான மனிதர்களுக்கும் ஆசைப் பட்டதைக் கொடுக்கிறவர். அவாளுக்கு ஷேமத்தைக் கொடுக்கறவர்" அப்படிங்கற போது ,நமக்குத்தான் என உணர முடியும்.
நாம மஹான்களுடைய ஸங்கத்துனால உலக விஷயங்கள்ல இருந்து மனசு திரும்பறதுக்கு பிரார்த்தனை பண்ணனும். ‘நான்…..என்னுது … எனக்கு வேண்டியத சேர்த்து வைக்கிறது..’ இப்படியே ஓயாம திரும்பத் திரும்ப ஜன்மம் எடுத்து, திரும்பத் திரும்ப இதே காரியங்களைப் பண்ணி, வெட்கமே இல்லாம நான் திரிஞ்சிண்டு இருக்கேனே. மஹான்களோட ஸங்கத்துல சேர்ந்து, அவா ‘திருப்புகழை’ ‘பகவானோட பெருமை’யைப் பேசறத காதுல வாங்கிண்டு, அதை அங்க அவாளோட ஸங்கத்துல இருக்கும் போது மட்டும் காதுல வாங்காம, அங்கேயிருந்து வந்த பிறகும், அதைத் தன்னோடு எடுத்துண்டு வந்து அந்த போதத்தைக் (ஞானத்தை) பிரியாமல், அந்த பகவானோட குளிர்ச்சியும், அழகும், நிறைந்த அந்தப் பாதங்களை எப்பவும் தொழுது, நான் நல்ல வழியில, உயர்ந்த நிலைமையை அடைவேனா’ அப்படின்னு ஒவ்வொரு நாளும் ஏங்கணும்’ அப்படின்னு இந்த ஸ்லோகத்துக்கு பொருள் கொள்வோம்.
இதே மாதிரி திருப்புகழ் பாடல் ஒண்ணு இருக்கு. 
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையிலாதென் பவமாற
உனைப் பலநாளுந் திருப்புகழாலும்
உரைத்திடுவார் தங்குளி மேவி
உணர்த்திய போதந்தனைப் பிரியாதொண்
பொலச்சரணானுந் தொழுவேனோ
‘உனைப் பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார்’ முருகா! எப்பொழுதும் உன்னுடைய பெருமையைப் பேசக்கூடிய, உன்னுடைய புகழைப் பாடக் கூடிய மஹான்களுடைய
‘தங்குளி மேவி’ அவா இருக்கிற இடத்தைத் தேடித் தேடிப் போய், தர்சனம் பண்ணி, ‘உணர்த்திய போதம்’ அவா ‘இதுதான் ஜன்மத்தோட பலன் .இதுக்கு நீ பண்ண வேண்டிய காரியம் இது’ன்னு அவா சொல்லிக் கொடுத்த அந்த ஞானத்தை, அந்த போதத்தை, ‘தனைப் பிரியாது’ அதை அங்கேயிருந்து இறங்கின உடனே மறந்து போயிடக் கூடாது. அதைப் பிரியாமல் ‘ஒண் பொலச்சரண் நானும் தொழுவேனோ’ உன்னுடைய ஒளி பொருந்திய பாதங்களை நானும் தொழுவேனோ அப்படின்னு வேண்டிக்கறார்.
அது மாதிரி ஸாதுக்களை நாம நினைப்போம். ஒரு நாளைக்கு முருகன் நமக்கும் அந்த மாதிரி விவேகத்தையும், தன்னலம் இல்லாத உயர்ந்த பக்தியையும் அருள வேண்டும்ன்னு பிரார்த்திப்போம்.
வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

No comments:

Post a Comment