Wednesday 3 May 2017

திருப்புகழ் சங்கமம் சென்னையில்

                                                                                                       

                                                              திருப்புகழ் சங்கமம் சென்னையில்

                                                                        (ஏப்ரல் 22&23 நாட்களில்) 

                                                           குரு சமர்ப்பண திருப்புகழ் இசை விழா 

                                                    503 பாடல்கள்  சமர்ப்பணம் 






                                                                                  அழைப்பிதழ்                                                            
                                                                                             



செந்திலாண்டவன் அருளாலும் ,கருணையினாலும் .நம் இதய தெய்வம் குருஜியின் ஆசி யுடனும்  வெகு விமரிசையாக சென்னையில்  நடந்தேறிய
குரு சமர்ப்பண திருப்புகழ் இசை விழா வில் லந்துகொண்டவர்கள் மஹா பாக்கியசாலிகளில் அடியேனும் ஒருவன்.நான் அடைந்த அனுபவம்,பரவசம்,பரமானந்தம் முதலியவற்றை  அன்பர்களுடன் பகிந்து கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.குற்றம் குறைகளை பொறுத்தருள வேண்டுகிறேன்.

இந்த குரு சமர்ப்பண விழா  சந்தர்ப்பத்தில்,1958 ல் மிக சிறிய அளவில் டெல்லி அருளாளர் சுந்தரம் இல்லத்தில் துவக்கப்பட்ட அன்பர்களின் புனிதப் பயணம் ஓர் ஆங்கில கவிஞனின் " Miles to go before I sleep " என்ற உறுதி மொழி கவிதையை கைக்கொண்டு கடந்த 59 ஆண்டுகளாக பீடு நடை போட்டு,பல மைல்கல்களை  கடந்து இன்று தன் தன்னிகரற்றஅற்புதமான  உன்னத நிலையை எட்டியுள்ளதை  நினைவு கூறுகிறேன் .முருகன் அருளையும், குருஜியின் ஆசிகளையும் ,அடிக்கல் நாட்டிய அருளாளர்கள் முதல் பல மைல் கற்களை கடக்க அரும்பாடுபட்ட மற்ற அருளாளர்களையும்  போற்றி ,வணங்கி நினைவுகூறுகிறேன் .

அவர்களை பற்றிய  தகவல்கள் அடங்கிய ஒரு குறும்படம் "திருப்புகழ்  அன்பர்கள் வரலாறு "என்ற தலைப்பில்  2008ல் பெங்களூரில்  நடைபெற்ற பொன்விழா வைபவத்தில் திரை இடப்பட்டது.பி ன்   U Tube வடிவிலும் வந்துள்ளது.

பார்ப்போம்.அருளாளர்களை வணங்குவோம்.







                                                                                                       

அடுத்து நாம் கடந்து வந்த மைல்கற்களையும் சற்று பின் நோக்குவோம்.



1975          Celebration of the Sixth Centenery of Sait Arunagirinathar at   

                  Delhi,Mumbai,Chennai and Bangalore

                  Release oh Commemorative Postal Stamp

1983.         Silver  Jublee Celebration in Delhi

1985.         Vallikalyanam in Mumbai

1988.         Thiruppugazh Vaibavam in Bangalore

1989.         Thiruppugazh Mahothsavam in Delhi

1990.         Arunagiri Mahothsavam in Mumbai

1991.         Release of 'Thiruppugazh Madani ' Book in Chennai

                                              by

                  Thirumuruga Kirupaanandha Wariar

1992.         Thiruppugazh Uthsavami n Mumbai to mark two decades of dedication to 

                  Thiruppugazh  Propagation


                                                                    

1993.         Release of 'Thiruppugazh Isai Vazhipadu ' Book

1994.         Silver Jubilee Vaibavam of Karnataka Region in Bangalore

1996.         Release of 37 Audio Cassettes  Thiruppugazh Vazhipadu

                                                                     by 

                  Honorable Shri  R. Venkataraman former President of India in Chennai

1997.         Silver Jubilee celebration of Mumbai Region in Mumbai

1998          Thiruppugazh Thiruppani Thiruvizha (Successfull completion of 40 Years  

                   of our Movement)


2000.          Release of Abirami Andathi and Padhigam in 6 Volumes in Tape Format

2001.          Arunagiri  Anmeegap Peru  Vizha in Delhi 

2003.          Guruvandanam Pavazha Vizha in Chennai

2004           Vallikalyanam at Pazhani

2008.          Golden Jubilee Celebration at Bangalore
July

                   Scrrening of short film   (Thiruppugazh Anbargal History)

 22.8.2008  Guruji's Sathabishegam

2010,.         .Vijayadasami Day  Guruji leading Vazhipadu exclusivly with  added

                    songs (476---502)

2013.           Anmeega Vizhaa (13th &14th July)

                  .Release of CD containing added songs (476---503)

2014           6.6.14  திருப்புகழ் நவமணிகள்  6 டி .வி .டி  க்கள் வெளியீடு.

2014.         Golden Jubilee Year celebrating Saint Arunagirinathar nanaivu Vizha and 

                  Padi Vizha at Delhi (11.10.14)
                                                 
                  Valli Kalyanam (12.10.14)

2015.         23&24th April  Valli Kalyanam at Thiruchendur ( Live Webcast arranged)

                 24.12.15 Thiruppugazh Peru Vizha at Bangalore

                         கலந்துரையாடல்  "நமது திருப்புகழ் இயக்கத்தின்                                                எதிர்காலப்பாதை "

                 25.12.15  Vallikalyanam  (Live Webcast arranged)

2016.        January  Face Book launched 


2016.       18.12.2016  Valli Kalyanam at Thiruththani

என்ன ஆச்சரியுமாக உள்ளதா ?இது சாதனையல்ல .பெருமானின் அருள்தான்.Miles to go before I sleep " என்ற வாக்கின்படி அன்பர்களின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

குரு சமர்ப்ப்பண வைபவம் முற்றிலும் மாறுபட்ட மகத்தான ஒரு குறிக்கோளையும்,லக்ஷியத்தையும்  கொண்ட பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய வைபவம். ஒரு யாகம் என்றே சொல்ல வேண்டும்.திருவாசகம் முற்றோதலைப்போல்,பாகவத சப்தாகத்தைப்போல்   ,சம்பூர்ண நாராயணீயம் போல் இதுவரை நடக்காத ஒன்று கருத்தரங்கு .சொற்பொழிவு ,பேச்சு கிடையாது..

குருஜியின் பயிற்று விக்கும் முறை  Tape  வடிவில் உள்ளது வகுப்புகளில் எல்லா பாடல்களும் பயில  நீண்ட காலம் பிடிக்கும்.முடியாமல் கூட போகலாம் 

மும்பை பாலு சார் பெங்களூர் கலந்துரையாடலில் குருஜியின் அமைத்துள்ள பாடல்கள் அனைத்தையும் முறைப்படி கற்க 30 ஆண்டுகளுக்குமேல் ஆகும் என்றார்..உண்மைதான்.நான் ஒய்வு பெற்று 12 ஆண்டுகளாக பல வகுப்புக்கள் சென்றும் கற்றது சிறிதே.

மற்றும் பல பாடல்கள் பரிச்சியமே இல்லாமல் இருப்பதும் ,அவை வழிபாடுகளில் இடம் பெறாததும் மறுக்க முடியாத உண்மை.மேலும் அன்பர்கள் வழிபாடுகளில் இடம் பெறும் பாடல்களை வெகு எளிதில்,விரைவில்  கற்று தேர்ந்து  வருகிறார்கள். காரணம் வழிபாடு ஒரு தெய்வ சன்னிதானத்தில் நிகழ்வதுதான்.

இந்த இக்கட்டான நிலையில் பெருமான் சில அன்பர்களின் மனத்தை தூண்டி இந்த யுக்தியை செலுத்தியிருக்க வேண்டும்.அவன் அருளால் இந்த மகத்தான வைபவம் வெற்றிகரமாக அமைந்தது.  மின் அணு சாதனங்களில்  வர உள்ள  நிகழ்ச்சி  தொகுப்பு  அன்பர்களை பரவசப் படுத்தி மேன் மேலும் எளிய முறையில் புதிய அன்பர்களும்,அடுத்த தலைமுறையினரும் ,குழந்தைகளும்  தங்களாவே கற்று தேற பெரும் வாய்ப்பாக  அமைந்ததுள்ளது.அமைப்பாளர்கள்  நிச்சயம் நம்பலாம்.   

பல ராகங்களிலும் ,பல  நடைமுறை தாளங்களிலும் .அங்க தாளங்களிலும்,பல பாவங்களிலும் அமைந்துள்ள பாடல்களை எப்படி இரண்டு தினங்களில் இசைக்க முடியும் ? குரல் வளம் நீடிக்குமா?ஒரே  சுருதியில் நீடிக்குமா?என்ற ஐயங்களும்,பயமும்,பரபரப்பும் அமைப்பாளர்களின் மனத்திலும்,மற்ற அன்பர்களின் மனத்திலும் குடிகொண்டது என்பதும் உண்மையே.இவை களை  பொய்யாக்கி அற்புதமாக நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே நிறைவு அடையச்செய்தது பெருமான் தான் என்று உணர்வோம்.அவரைப் போற்றி நமஸ்காரங்களை  சமர்ப் பிப்போம்.

சரி.வைபவத்துக்குள் .நுழைவோம்.


முதல் நாள் காலை 5.30 மணி அளவில் நான் நுழையும்போது சில அன்பர்கள் மட்டுமே இருப்பார்கள் என்ற என் எண்ணத்தை பொய்யாக்கியது.நூற்றுக் கணக்கான அன்பர்கள். குழந்தைகள் முதல் மிக வயது முதிர்ந்தோர்கள்,உடல் உபாதை உள்ளவர்கள் ,நடக்க முடியாதவர்கள்.தென்பட்டனர் .வழக்கம்போல் மாதர்கள் எண்ணிக்கை கூடுதல்.

சிறிது நேரத்தில் மின்னல் வேகத்தில்  

பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப்புகழ்பாடி    
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்    
   முத்தியே சேர்வதற்கருள்வாயே 


 திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிகப்பகைமை
        செயித்தருளு மிசைப்பிரிய
        திருத்தமாதவர்புகழ்     குரு நாதா

பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூற படிமீது துதித்துடன் வாழஅருள்வேளே 


   வாதம் பித்தமி டாவயி றீளைகள்

        சீதம் பற்சனி சூலைம கோதர
        மாசங் கட்பெரு மூலவி யாதிகள்                         குளிர்காசம்                                                                   
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
        யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
          வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள்                 வெகுமோகர்
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
        டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
        சோரம் பொய்க்குடி லேசுக மாமென                   இதின்மேவித்
தூசின் பொற்சர மோடுகு லாயுல
        கேழும் பிற்பட வோடிடு மூடனை
        தூவஞ் சுத்தடி யாரடி சேரநி னருள்தாராய் 


என்ற துதிகளுடன் பல அன்பர்கள் மண்டபத்தின் உள் நுழைந்ததார்கள்..டெல்லி,மும்பை,பெங்களூரு,புனே,கோயம்புத்தூர்,திருவனந்தபுரம்,ஹைதராபாத் முதலிய நகரங்களில் இருந்த அன்பர்கள் தங்களுக்கு தெரிந்த அன்பர்களுடன் புன்னகையுடன்,கண்களால் பேசி.பின் பேசலாம் என்று கைஜாடையினால் பேசி விரைந்தார்கள் .

மண்டபத்தில்வெகுஅழகாக,நேர்த்தியாக,கட்டுப்பாடக எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தது பாராட்டுக்குரியது.பணிகளை தனித்தனியாக பிரித்து பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதை உணர முடிந்தது.அவரவர்கள் தங்கள் கடமைகளை செவ்வனே ஆற்றினர்.பல தொண்டர்கள் தயார் நிலையில் இருந்தனர்.அன்பர்களுக்கு கை நீட்டினர்,இருக்கையில் அமர்த்தினர்.வேண்டிய உதவிகளை செய்தனர் 
பாடல்கள் ஆரம்பித்தவுடன் ஒரே குரலில் பாடல்கள் மட்டும்ஒலித்தன.சபையில்,வழிநடையில்,உணவகத்தில்,ஏன் பாத் ரூமிலும் கூட.

உணவக தொண்டர்கள் (சென்னை) தாங்கள் சபையில் அமர்ந்து பாடமுடிய வில்லையே என்ற ஏக்கம் துளிக்கூட இல்லை.பாடிக்கொண்டே சேவையை தொடர்ந்தனர்.    

நான் தொடர்ந்தால் மிகையாகும்.மற்ற அன்பர்களின் உணர்வுகளின் வெளிப் பாட்டையும் கேட்போமே.

கோயம்புத்தூர் வி .எஸ் .கிருஷ்ணன்.


22nd April 2017 happened to be a memorable day for all Thiruppugazh Anbargal.  When the sun rose on the eastern horizon, on this day, ‘Dharma Migu Chennai’ as Arunagirinathar described that city, witnessed a grand spectacle, the “Guru Samarppana Thiruppugazh Isai Vizha”.  This day and the next day, devotees from all over India came to SVR Mandap, the venue, to experience the shower of Thiruppugazh.  It was a mass congregation of devotees who adopted Thiruppugazh as a way of life.  It was a golden opportunity for them to assemble all under one roof, sing the glory of Lord Muruga and experience the nectar that flowed from Thiruppugazh. The temperature was over 40 degree outside but no trace of any uneasiness was visible in any face.   They seemed to experience the cool effulgence of Thiruppugazh.   Thiruppugazh Anbargal from different cities like Delhi, Bangalore, Hyderabad, Coimbatore Mumbai etc., were rendering Thiruppugazh with devotion, in the true spirit of the song, “Bhaktiyal Yan Unnai Palakalum, Pathiye Maa Thiruppugazh Paadi”.    While different groups rendered songs, Guruji Sri Balasubramaniam, Mumbai, provided the leadership.   Listening to the songs, the audience were transcended to a new world of devotion.  The audience were sitting in the main hall, in the viewers’ gallery on the first floor, in the open veranda outside the hall and every inch of available space was occupied.  I just allowed my gaze to travel all over and it was amazing that everyone joined the chorus of Thiruppugazh chanting.  I could see the devotion and dedication writ large all over their face.  For a moment, I wondered what a powerful movement a single individual, Guruji Sri Raghavan had created.  It is a movement that is growing and growing, radiating the spirit of Bhakti to the emerging generations.  Perhaps, never before Chennai witnessed a function as magnificent as this.  When the Anbargal departed on the 23rd evening, they left with a sense of fulfilment, an experience which they would cherish in their heart for many more years to come.

ஜானகி மாமி புனே

முருகா சரணம். குருஜி ராகவன் அவர்களின் கனவுகளை, நினைவாக்க, அந்த நித்திய சத்தியன் திருவுளம் கொண்டிருப்பது, இன்றைய ஆராதனை நிகழ்ச்சிகளில் தெளிவாகத் தெரிந்தது. இளங் குருத்துக்கள் திருப்புகழ்ப் பாடல்களை, ஒரே குரலில், ஸ்ருதி சுத்தமாக, ராக . தாள சுகத்துடன் பாடிய பொழுது, நம் பண்பாட்டையே, பண்ணாகப் பாடி விட்டது போல் ஒரு நிறைவு. நெளிவு, சுளிவுள்ள, ராக தாளங்களைக் கூட அனாயாசமாகக் கையnண்டு, அசத்தி விட்டார்கள். அந்த முகங்களில் , விழிகளில், தாளமிடும் கரங்களில், அப்படி ஒரு பயபக்தியும், சிரத்தையும் . அவர்கள் ஏற்றிய ஆன்மீக விளக்குகளின் ஒளி சபையில் நிறைந்து, பார்ப்போர் நெஞ்சங்களை நிறைத்தது. அடுத்து ,இன்றைய தினம் பாடப்பட்ட, திருவண்ணாமலை, சிதம்பரம், பாடல்கள் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தன. மனதைச் சிதற விடாமல் எல்லோரும் ஆர்வத்துடன் பாடியது இன்றும் தொடர்ந்தது. இந்த குழுவில் நாமும் இருக்கிறோம் என்ற எண்ணமே, பரவச அலைகளைப் பரப்பியது. தேர்க் கூட்டமோ, திருவிழாக் கூட்ட மோ எனும் படியான, ஆயிரக் கணக்கானோருக்கு அறுசுவை உணவு அளித்தோரின, ஆர்வமான உழைப்பைச் சொல்வதா? இருக்கை வசதிகளைகளைச் சொல்வதா ? ஒரு குழு பாடி முடித்து, எழுந்து கொள்ள, அடுத்த குழு பாட அமர்வதில் இருந்த வேகத்தை, ஒழுங்கைச் சொல்வதா? அந்தத் தணிகைக் காவலன் தன் பொறுப்பில் அனைத்தையும் எடுத்துக் கொண்டானோ? குருஜி ராகவன் மேல் அவன் கொண்டு விட்ட அன்பின் அளவு கோலோ இந்த இனிய விழா ? எதை எழுதுவது, எதை விடுவது ? விளைந்த கரும்பிலே, எந்தக் கணு இனிப்பென்று சொல்வது? இறைவன் படைப்பிலே எந்த அணு முக்கியம் என்று தரம் பிரிப்பது?. எல்லாமே இனிமை.எல்லாமே இளங்குமரன் கருணை. முருகா சரணம். 

22, 23 என்ற அந்த இரண்டு நாட்களில், அந்த இசை முழக்கத்தில், அனைத்து அன்பர்களிடம் பழகிய பழக்கத்தில் எப்படியெல்லாம் கந்தனிடம்  சொந்தம் கொண்டாடினோம். ஒரே நிறம், ஒரே மனம், ஒரே குணம் எனக் கூடிவிட்ட முருக பக்தர்களின் கூட்டம்.எல்லோர் எண்ணத்திலும் வண்ண மயிலின் ஆட்டம். அன்று தினைப்புனம் வந்தவன், இன்று தேடி வருவானோ என்று முதலில் ஒரு வாட்டம். அவன் திருவடிகளைத் தவிர வேறெதிலும் இல்லை நாட்டம் . பனி மூட்டம் விலகியது போல் அவன் கொண்டு வந்து கொட்டியது கொண்டாட்டம். நாம் அனைவரும் இருந்ததுதான் குமரக் கோட்டம். இது முருக பக்தியின் ஜீவ ஓட்டம். நன்றி என்ற மூன்றெழுத்தால் அணையிட முடியா பரவசமெனும் பனி மலைப் பாகீரதியின் வேக ஓட்டம். ஆனாலும் மீண்டும் நன்றி .

வசந்தா பஞ்சாபகேசன் மாமி.  பெங்களூரு 


                                                                   

                                        சில புகைப்பட காட்சிகள் 


                                                                   
                                                             
                






                                                      விருந்தோம்பல்  குழு 











        Four-year-old budding Thiruppugazh Anbar .This little cutie Meera is a student of         Smt Kannamma Sundaram Bangalore and the girl sitting next to her is Amisha,           and she hails from Nepal. Kudos to Smt Kannamma Sundaram.


                   
                                                                                        
                                    


தொடரும் 

மும்பை வெங்கட்ராமன் 

முருகா  சரணம் 














            





































2 comments:

  1. பங்குபெற முடியாத அன்பர்களின் மனக்குறை தீர்ந்தது.நநமஸ்க்காரங்கள்

    ReplyDelete
  2. படிக்க படிக்க பரவசம். இந்த மாக்கடலில் நாங்களும் சிறு புழுக்களாக நெளிந்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் தங்களௌ இறைபணி வெங்கட்ராமன் சார்.

    ReplyDelete