Monday 8 May 2017

திருப்புகழ் சங்கமம் சென்னையில்


                                                                                                 


                                                                                                 
                                                                                                                                                                                                                                                                                                                                                                     திருப்புகழ் சங்கமம் சென்னையில்

                                                                                   (ஏப்ரல் 22&23 நாட்களில்) 

                                                                          குரு சமர்ப்பண திருப்புகழ் இசை விழா 

                                                                             503 பாடல்கள்  சமர்ப்பணம்




                                                                                                         

இரண்டாம் நாள் 


புத்துணுர்ச்சியுடனும் துடிப்புடனும் அன்பர்கள் பாடல்களை இரண்டு மணி நேரம் முன்னதாகவே நிறைவு செய்தனர்.


நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டியது போல் அமைந்தது இளம் சிறார்களின் சமர்ப்பணம். தங்களுக்காக நிர்ணயம் செய்துள்ள பாடல்களை பாவத்துடனும்,தாளக்கட்டுடனும் அர்பணித்தது அன்பர்களை பரமானந்தத்தில் ஆழ்த்தியது. அவர்கள் கூட பாடாமல் தாளம் மட்டும் போட்டு அவர்களை உற்சாகப் படுத்தினர்.வழிபாடுகளில் கை தட்டுதல் கூடாது என்ற நம் மரபையும் மீறி கை தட்டி மகிழ்ந்தனர்.அதை நான் பெருமானின் அருள் பிரசாதமாகவே கருதுகிறேன்.

பாடல்களை மீண்டும் கேட்போமே


                                                                           

           


புதிதாக சேர்க்கப் பட்டுள்ள பாடலை எப்படி பாடுகிறார்கள்

                                                                                                                                                                   
சிறார்களின் கோலாட்ட நடனத்துடன் வைபவம் கோலாகலமாக நிறைவுற்றது.                                                           

                                                                                   

கந்தர் அனுபூதி,வேல்மயில் விருத்தம்,வகுப்பு பூஜா விதிகளுடன் ,அருள் வேண்டலுடன் சாந்தி ஸ்லோகத்துடன் வைபவ நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.பிரியா விடை காரணமாக அன்பர்களின் முகத்தில் சிறிது சோகம் தெரிந்தாலும் பெருமானின் அருளை பெற்றோம் என்ற மன நிறைவுடன் விடை பெற்றார்கள்.

அரிய பணியில் ஈடுபட்ட தொண்டர்களை நினைவு கூர்வது நம் கடமையாகும்.

                                                                                                   
                                     

                                                                                                   
                                                                                                       








 திருப்புகழ்பாக்கள்ஹேமமாலினிமண்டபத்தின்தூண்களிலும்,கூரையிலும் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.அங்கு வரும்காலங்களில் நடைபெறவுள்ள மங்கல நிகழ்ச்சிகளுக்கு திருப்புகழ் பாடல்கள் ஆசி வழங்கும்.


நம் மத்திய செயற்குழுவிடமிருந்து வந்துள்ள செய்தி

 The office bearers of the Chennai Region have done the stupendous task of organising the event admirably .. and this would not have been possible with out the support of each of the regions/centres and all the anbargals who participated.... It has been Guruji's vision to sustain the movement he started by bringing children into its fold and this Vizha, in addition to everything else, fulfilled this vision. There were many without whose service and support the event would not have been as successful as it was ..... for the first time we were able to reach Anbargals through the world ... and we need support from each of them .

I would invite your comments and feedback to enable us to improve further ...    

நம் அனைவரின் சார்பில் பெங்களூரு அன்பர்கள் நன்றி நவில்கிறார்கள்.


Dear Sir,

We are extemely happy to convey our sincere appreciation and kudos to the Chennai Anbargal for having conducted the Guru Samarpana Thiruppugazh Isaivizha in a grand manner, engraving in the mind of every anbar the nuances of the function. The entire programme is still lingering in our minds with Thiruppugazh vibration all through.  Even after the function, while in the room as well during travel, we kept on feeling that we were still in the hall hearing Thiruppugazh songs.

Our particular thanks to  the volunteers for their untiring service, especially when the surging crowd was unexpected on the first day. 

I am sure with Guruji's blessings all the events conducted, post 2013, drew  anbargal koottam  from various regions/centres indicating that the Mission will reach greater heights in the future years.

Once again thanking you,

K.N.Krishnamoorthy & 
R.Nagesh & other Karnataka Anbargal    

இந்த வைபவம் நம் இயக்கத்துக்கு  ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.வழக்கமாக இதுபோல் விழாக்கள் முடிந்தவுடன் திரும்புவார்கள்.அடுத்து வரும் நிகழ்ச்சிக்காக காத்திருப்பார்கள்.ஆனால் இந்த நிகழ்ச்சி அன்பர்கள் மனத்தில் ஒரு மாபெரும் எழுச்சியை  தோற்றுவித்துள்ளது.நம் இயக்கத்தை உலகளாவிய அளவில் பரப்ப வேண்டும்.குருஜியின் மகத்துவத்தை எல்லோரும் உணர வேண்டும்.அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும்.என்று பலவாறான எண்ணங்களை தோற்றுவித்துள்ளது. அதை நடை முறைப் படுத்த வேண்டியது ஒவ்வொரு அன்பரின் கடமையாகும்.

  குருஜியின் திருப்புகழ் இசை நமக்கு கிடைத்துள்ள அருள் பிரசாதம்.பேணிக்காக்க வேண்டியது நம் கடமை.இப்போது மின்னணு சாதனங்களில் பல உருவங்களில் உருவாகியுள்ளன.பாடல்களின் பொருளும் கிடைக்கின்றன.இந்த வைபவத்தின் வீடியோ வர உள்ளன.எளிய முறையில் குறிப்பாக இளைய தலைமுறையினர் வெகு விரைவில் கற்று தேற முடியும்..

நாம்  சபதமேற்று செயலில் இயங்குவோம்.தினம் ஒரு திருப்புகழ் கற்போம்.அருகில் நடக்கும் வகுப்புக்கு தவறாது செல்வோம்.நம் வாரிசுகளை வகுப்புக்களுக்கும்  ,வழிபாடுகளுக்கும் அழை த்துச்செல்வோம்.திருப்புகழ் பாடல்களுடன்  walking செல்வோம்.பஸ் ,ரயில் ,விமான பயணத்தின் போது பாடல்களை கேட்போம்.அவரவர் யுக்திக்கு தகுந்தாற்போல் திருப்புகழை எளிதில்,விரைவாக கற்போம்.

அடுத்த ஆண்டு நம் இயக்கத்தின் மணி விழா ஆண்டு.மிகச்சசிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அன்பர்களின் குரல்கள் ஒலிக்கத்துவங்கியுள்ளன.

சிறிது ஓய்வுக்குப்பின் மத்திய செயல் குழு  முழு வேகத்துடன்  செயல் படும்  என்பதில் சந்தேகமே இல்லை.   

மும்பை வெங்கட்ராமன்  

அருளாளர் மாலதி ஜெயராமன் அவர்கள் வெளியிட்டுள்ள முதல் பகுதி வீடியோ  

Click 


https://youtu.be/orb0ZLq8Dzw    


                                                                                            

No comments:

Post a Comment