Friday 11 January 2019

நெஞ்சில் நிறைந்த நினைவலைகள் குருஜியுடன்




                               நெஞ்சில் நிறைந்த நினைவலைகள் குருஜியுடன்                                   
                   தில்லி  திரு இராமமூர்த்தியின் அனுபவங்கள்                             
                                               பகுதி ..1
                                                                                                                                      
                                                                                 

ம்மை ஆட்டுவித்து  நம்மை ஆட்கொண்ட குருஜியின் நினைவலைகளில் அன்பர்கள் என்றென்றும் திளைத்து பரவச நிலையில் திகழ்வது கண்கூடு.குறிப்பாக குருஜியுடன் பல ஆண்டுகள் உடனிருந்த பாக்யசாலிககளான டெல்லி அன்பர்களும் சென்னை அன்பர்களும்  மும்பை அன்பர்களும் தான்.அண்மையில்தில்லி மற்றும் சென்னையில்  நடைபெற்ற மணிவிழா நிகழ்ச்சிகளில்  அன்பர்கள் தங்களில் நினைவலைகளை மன நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.அவை UTUBE வடிவங்களில் வெளியாகியுள்ளன. 

அதில் குருஜியின் மகிமையையும்,திருப்புகழ் பற்றி மட்டும் இடம் பெற்றன. சொந்த விவகாரங்கள்,அனாவசிய புகழ்ச்சி போன்றவைகளுக்கு இடமே இல்லை.நண்பர்களில் குரு பக்தியும் பண்பாடு ம்  வெளிப்பட்டன.

அந்த வகையில் டெல்லி அன்பர் என் .ராமமூர்த்தி அவர்கள்சொல்லவொண்ணா தன்னுடைய நினைவலைகளை  தன் கை  வண்ணத்தில் முத்து முத்தாக எழுதி  தற்போது அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

அதில்,குருஜி செந்திலாண்டவன் உத்திரவின் படி,உணர்த்திய படி   பாடல்கள் அமைந்தது,வகுப்பு வழிபாடு அனுபவங்கள்,காரில் செல்லும் போதே பாடல்கள் அமைத்தது,பத உச்சரிப்பு,எப்படி பத அர்த்தங்களுக்கு ஏற்ப ஏற்றி இறக்கி பாடுவது,தாள நுணுக்கங்கள்,நிர்வாகத்தில் கணக்கு வழக்கு,நிதானம்,பொறுமை,சங்கீதம் அறியாத அன்பர்களை ராகங்களுடன் பாட வைத்தது,மாணவர்களை ஆசானாக்கியது,குருஜி அஷ்டாங்க யோகம்,சமாதி நிலை ,அதற்கு மேற்பட்ட நிர்விகல்ப சமாதிநிலை,ஸ்ரீ வித்யா தத்வம்,அத்வைத தத்வம் முதலியவற்றை  உட்கொண்டது ,மற்றும்" திருப்புகழ் வழிபாடுகளில் பாடுபவர்கள் வேறு,கேட்பவர்கள்வேறு என்று கிடையாது எல்லோரும் பாடுபர்கள் தான் எல்லோரும் கேட்பவர்கள்" என்ற உயர்  தத்துவத்தை கடை பிடித்தது.அன்பர்களுக்கு உணர்த்தியது 
போன்ற அருமையான குருஜியின் மகிமைகள் வெளிப்படுகின்றன.

சிகரம் வைத்தாற்போல் அன்பர்களுக்கு வழிபாடு நிறைந்தவுடன் விபூதி பிரசாதம் கொடுப்பதை பற்றி, "தான் வழங்கும் விபூதி பிரசாதத்துக்கு கொஞ்சமாவது பலன் இருக்கணும்னா  தன்னை தகுதி படுத்திக்கொள்ள "அண்ண ஆகாரம் தீர்த்தம் அருந்தாமல் வழிபாடு நேரம் முழுவதும் விரதம் கடைபிடித்து சுய கட்டுப்பாடுகளை தமக்கு தானே விதித்து பின்பற்றியது. .இதைப்படிக்கும் போது நெஞ்ச நெகிழ்கிறது.

இறுதியாக .".It is too early to assess to Guruji;s contribution.Generation to come are going to be benifitted from his cassets .After several years only we will be able to assess his contribution to the  Thiruppugazh Movements"  என்று நிறைவு செய்கிறார்.( நிதர்சனமான சத்யம்)

 அன்பர் ராமமூர்த்தியின் நினைவலைகளை நம் வலைத்தளத்தில் வெளியிடுவதை பெருமையாக கருதுகிறோம். சில பகுதிகளாக வெளிவரும்.

அன்பர்கள் பொறுமையாக வாசித்து குரு மஹிமையை அனுபவிக்க வேண்டுகிறோம்.


                                                                                       







                                                                                                                                                                                          ஜெயித்தருளும்இசைப் பிரியனான முருகன்ரக பாவ தாளத்தோடு  பாட முடியாத அன்பர்கள் திருப்புகழை  உரை நடையிலேயே   படித்துச் சொன்னாலும்   மனதளவிலே படித்துத் தெரிந்து கொண்டாலும்   அவர்களது குறைகளை எல்லாம் நீக்கி அருளுகிறான்

                                                                                                                              தொடரும்

உதவி  அன்பர் மாலதி ஜெயராமன்


u tubes published  by us are available in the following link

https://www.youtube.com/channel/UCig4GnMNmCHwvGlQVUHr_NA/videos

No comments:

Post a Comment