Sunday 27 August 2017

சுப்ரமண்ய புஜங்கம் 5


                                                                           சுப்ரமண்ய புஜங்கம்   5



                                                       

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா:

ததைவாபத: ஸந்நிதெள ஸேவினாம் மே |

இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் ||


அன்பர் தொகுத்தளித்துள்ள விளக்க உரை 

 ‘யதா(2)’.................................  .எப்படி, 

‘அப்தேஸ்தரங்கா’ ............   கடலின் அலைகள்,

‘துங்காஹா’...............   

 பெரியஅலைகள்  திருச்செந்தூரிலேகடற்கரைக்குவந்த உடனே  
   
‘லயம் யாந்தி’....

அலைகள் எல்லாம் அடங்கி, கரையில ஒதுங்கிடறது   இல்லையா? எப்படிஅந்த   மாதிரி அலைகள் லயம்    அடைகிறதோ                                                                                                                                                                                                  

ததைவ ........

அப்படியே என்னுடைய தரிசனத்தை செய்யும்  ஜனங்களுக்கு 
                                                   
‘ஆபாதஹ’ ..........................    எல்லா விதமான ஆபத்துகளும், 

ஸந்நிதெள’.......................     என்னுடைய சன்னிதியில்

 ‘லயம் யாந்தி’ ...................     லயத்தை அடைந்து விடும்

 ‘இதி’........................................  என்று 

 ஊர்மிபங்திஹி’ .................. 


 கடற்கரையிலே   வரிசையா  வந்து  மோதிக்கொண்டே இருக்கும்   அந்த அலைகளை   
                                                                                                                          
 ‘தர்சயந்தம்’ ..      காண்பிச்சிண்டு இந்த ஸுப்ரமண்ய ஸ்வாமி    கடற்கரையிலே இருக்கார்   

                                                      
‘தம் குஹம்’........................      அந்த  குஹனை

 ‘ஸதா’ .................................    . எப்பொழுதும், 

‘ஹருத்ஸரோஜே’ ................என் ஹ்ருதய தாமரையில்,

 ‘பாவயே’................................. த்யானம் செய்கிறேன்”, 


கடல் அலை போல துனபம் வந்தால், திரும்ப திரும்ப இப்பிறவியெனும் பெரும் கடல் சுழியில் விழாமல் இருக்க அழுதும் ஆ ஆ என இரங்கித் தொழுதும் பக்தியால் நெகிழ்ந்தும் அவசமாய் ஆதரக் கடல் ஊடுற்று, 

பிறவி பெருங்கடல்  சுழியிலே போய் விழப் பெறுவதோ  நான் இனி புகல்வாயே முருகா, முத்து  எறி மீன புணரி கோ கோ என சுருதி கோ கோ என பொருத வேலாயுத பெருமாளே...

முத்துக்களையும் , மீனையும் வீசி எரியும் கடல் கோ கோ என்ற அலை வீச வேதம்.கோ.கோ என்று முழங்க கடற்கரையில் போர் புரியும் வேலாயுதப் பெருமாளே...

முத்து முத்தான  திருப்புகழ் கடலில் மூழ்கி கோ கோ என  கதறினாலும் சரி அல்லது  சுருதியான சுப்ரமண்ய புஜங்கத்தை கோ கோ என முழங்கினாலும் சரி முருகன் நமது பிறவிப் பிணி மற்றும் மனக்கவலையை போக்கிடுவான் என்று நமது குகஸ்ரீ குருஜி கூறுவது போல் உள்ளது


                                                                                             
                                                                Utube  Link for ANDROID  and   IPAD   PHONE 

                                                     https://www.youtube.com/watch?v=aJ1GtmTn5Po

                                                  முருகா சரணம் 

No comments:

Post a Comment