Saturday 4 July 2015



            திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 

                                                         (476 முதல் 503 வரை )

                                                  அத்திப்பட்டு திருத்தலம் 

 புதுக்கோட்டைக்கு அடுத்த கந்தர்வ கோட்டையிலிருந்து 7 மைலில்
அத்திப்பட்டு உள்ளது.

பாடல்  வரிசை எண் 11          புத்தக வரிசை எண் 203
ராகம் பூர்வி கல்யாணி  அங்க தாளம் தகிடதக  தகிடதக தகதிமி  தகிட தக 
                                                             9 1/2                   2 1/2           2 1/2            2               1 1/2    1

                                                          திருப்புகழ்  பாடல் 

கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
     கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
          கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி ...... லிடைபோடாக்

கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
     கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
          கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் ...... வழியேபோய்

மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
     மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
          மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் ...... மலராலே

மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
     மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
          வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் ...... தருவாயே

பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்
     புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்
          புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி ...... லுறமேவும்

புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
     புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்
          பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் ...... மருகோனே

அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
     லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
          அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு ...... மிளையோனே

அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு
     மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
          அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை ...... பெருமாளே.
  
                                           சொல் விளக்கம் 

கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கிக் கிளைஞர் கதறிஅழ ... 

உடல் கருகித் தீய்ந்தது போல் ஆகி, அறிவும் நீங்கி, உயிர்பிரிந்தவுடன் சுற்றத்தார் உள்ளம் நைந்து கதறி அழ,


விரவு பறை முட்டக் கொட்டி இட கனக மணி சிவிகையில்அமர்த்திக் கட்டையினில் இடை போடா ...

(இழவு வீட்டுக்கு)வந்து சேர்ந்த பறைகள் யாவும் சப்திக்க, பொன்னும் மணியும் துலங்கும்பல்லக்கில் அமர்த்தி, விறகுக் கட்டைகளின் நடுவில் போடப்பட்டு
,

கர மலர் கொடு அரிசியினை இட்டுச் சித்ர மிகு கலையை உரி செய்து ...


உறவினர்களின் மலரன்ன கைகளால் வாய்க்குஅரிசியிடப்பட்டு, அழகுள்ள மேல்துணியும் விலக்கப்பட்டு,

மறைகள் பற்றப் பற்று கனல் கண கண என எரிய உடல் சுட்டு ...

உடலின் மறைவான இடங்களிலும் பிடிக்கின்ற நெருப்புபற்றிக்கொண்டு கண கண என்று எரிய, உடல் இவ்வாறு சுடப்பட்டு,


கக்ஷியவர் வழியே போய் மருவு புனல் முழுகி மனை புக்குத்துக்கம் அறு ..

பக்கத்தில் இருந்தவர்கள் தாம் வந்த வழியே திரும்பிப்போய் நன்றாக நீரில் குளித்து, வீட்டுக்குப் போய் துக்கம் நீங்கினர்.

மனிதர் தமை உறவு நிலை சுட்டுச் சுட்டி உற மகிழ்வு செய்துஅழுது பட வைத்து ...

மனிதர்களை இன்ன உறவு இவர் என்று உறவின்முறையைக் குறித்து அத்தகைய குறிப்பால் மகிழ்ச்சி பூணவும்,அழுதிடவும் (என்னை) வைத்து,


அத் துட்டன் மதன் மலராலே மயல் விளைய அரிவையர்கள்கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையைநினைத்து ... 

அந்தத் துஷ்டனாகிய மன்மதனுடைய மலர் அம்பால், காமஉணர்ச்சி உண்டாக, பெண்கள் கையில் அகப்பட்டு இளைத்து, மிகவும்மனம் நொந்து அழிகின்ற அடிமையாகிய என்னை நீ நினைத்து,

சொர்க்க பதி வழியை இது வழி என உரைத்துப் பொன்கழல்கள் தருவாயே

உன் பாதங்களாகிய பொன் உலகுக்குப்போகும் வழியை இதுதான் வழி என்று சொல்லிக் காட்டி, உனது அழகியதிருவடியைத் தந்தருளுக.

பொருவு இல் மலை அரையன் அருள் பச்சைச் சித்ர மயில்புரம் எரிய இரணிய தனுக் கைப் பற்றி ...

நிகர் இல்லாத பர்வதஅரசன் (இமவான்) பெற்ற பச்சைநிற அழகு மயில், திரி புரம் எரி படபொன் வில்லைத் தன் கையில் பற்றியவள்,

இயல் புதிய முடுகு அரிய தவம் உற்றுக் கச்சியினில் உற
மேவும் புகழ் வனிதை தரு புதல்வ ...

இடைவிடாத அன்புடன்அதிசயமான வகையில் ஊக்கத்துடன், அருமையான தவத்தை மேற்கொண்டு காஞ்சிப் பதியில் பொருந்தி விளங்கும் புகழ் பெற்ற தேவிபார்வதி பெற்ற மகனே,


பத்துக் கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ரக் கைக்கடவுள் பொறி அரவின் மிசை துயிலு(ம்) சுத்தப் பச்சைமுகில் மருகோனே ...

(ராவணனின்) பத்துக் கொத்தான தலைகளும்,இருபது புயங்களும் அற்று விழ அம்பைச் செலுத்தியவனும், சக்ராயுதத்தைஏந்தியவனுமாகிய கடவுள், புள்ளிகளைக் கொண்ட ஆதிசேஷன்என்னும் பாம்பின் மேல் பள்ளி கொள்ளும் சுத்தமான பச்சை நிற மேகவண்ணனாகிய திருமாலின் மருகனே,

அரிய மரகத மயிலில் உற்றுக் கத்து கடல் அது சுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டை அற ...


அருமையான மரகதப் பச்சைநிறமான மயில் மீது வீற்றிருந்து, ஒலிக்கும் கடல் வற்றும்படி,அசுரர்களின் கூட்டம் கட்டோடு ஒழிய,

அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே ...

தேவர்கள் தலைவனான இந்திரன் சுகத்துடன் குடி ஏறுதற்கு தக்கபடி
ஏற்பாடு செய்த, மிக்க இளையவனே.


அருண மணி வெயில் பரவு பத்துத் திக்கும் மிகும் அழகுபொதி மதர் மகுட

செம்மணிகள் பத்துத் திக்குகளிலும் ஒளி வீசும்,மிக்க அழகு நிறைந்து செழிப்புடன் விளங்கும் கிரீட மணி முடியைஉடையவனே,


தத்தித் தத்தி வளர் அணிய கயல் உகளும் வயல்அத்திப்பட்டில் உறை பெருமாளே. ...

தாவித் தாவி வளர்கின்றவரிசையாக உள்ள கயல் மீன்கள் குதிக்கும் வயல்கள் உள்ளஅத்திப்பட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே.


                                                 குருஜியின் குரலில் ஒரு விருத்தம்



                           குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்


முருகா சரணம்

1 comment:

  1. விருத்தம் - குருஜியின் குரலில் குமரன் அடிக்கே கொண்டு சென்றுவிட்டது. பூரிக்க வைக்கும் பூர்வி கல்யாணி!

    ReplyDelete