Wednesday 1 July 2015



                                                                                                        திருப்புகழ்வழிபாடு புத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள்                                                                                                                                                                                                                                                              (476முதல் 503 வரை )



                                                      விராலிமலை திருத்தலம்
                            
கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு,காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது.இங்குதான் விராலிமலை உள்ளது 

விராலிமலை தமிழ்நாட்டின் திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் மணப்பாறைக்கு அருகே அமைந்துள்ளது.


விராலிமலையில் உள்ள குன்றின் உச்சியில் விராலிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பரத நாட்டியக் கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இந்நகரில் வாழ்வோரில் பெரும்பான்மையானோர் இசைவேளாளர்சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். சோழர் கால கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது. 

விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையானகுறவஞ்சி நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும் 

இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள காடுகளிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது





                                                    திருப்புகழ்  பாடல் 


               வரிசை எண்  9             புத்தகவரிசை  எண்  199

 ராகம்  கீரவாணி                                                                       2 1/2             1 1/2     1 1/2         2


சீரான கோல கால நவமணி
     மாலாபி ஷேக பார வெகுவித
          தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்

சீராடு வீர மாது மருவிய
     ஈராறு தோளு நீளும் வரியளி
          சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
     ஜீமூத மூர்வ லாரி மடமகள்
          ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
     ஞானாபி ராம தாப வடிவமும்
          ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
     மீதேறி மாறி யாடு மிறையவர்
          ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
     லூடாடி யால வாயில் விதிசெய்த
          லீலாவி சார தீர வரதர ...... குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
     னீடேறு மாறு பாநு மறைவுசெய்
          கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே

கோடாம லார வார அலையெறி
     காவேரி யாறு பாயும் வயலியில்
          கோனாடு சூழ்வி ராலி மலையுறை  பெருமாளே


                                    சொல் விளக்கம் 

சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார ...

வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற

பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,

வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் ..

பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு

முகங்களையும்,

சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் ... 

சிறப்பு உற்றுஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும்,


நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் ...

நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி

ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும்,

ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள் ...

முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம்

மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய
அழகிய பெண்ணாகிய தேவயானையும்,

ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ... 

பக்தர்களின்பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும்உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,


ஆராயும் நீதி வேலும் மயிலும் ...

 நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும்உனது வேலையும் மயிலையும்,


மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் ...

ஞான ஸ்வரூபியானகீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும்,

ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் ... 

மிகக்கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன

அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற
வேண்டுகிறேன்.

ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும்
இறையவர் ... 

அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில்,

வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய

சிவ பெருமான் (இயற்றிய 'இறையனார் அகப் பொருள்' என்ற நூலுக்கு),

ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ...

நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள்

அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக,

ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ..

 தகுதி உள்ள ஊமைப்பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி,


ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா ...

ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக்

காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக்
கொடுப்பவனே, குரு நாதனே,

முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநுமறைவு செய் ... 

முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு

எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால்
சூரியனை மறைத்து வைத்த

கோபாலராய நேயம் உள திரு மருகோனே ... 

கோபாலர்களுக்குஅரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே,

கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும்
வயலியில் ..

தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும்
காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும்,




கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. ...


கோனாடு** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும்
வீற்றிருக்கும் பெருமாளே.


உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல








                           குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்
/



முருகா சரணம் 

1 comment:

  1. குருஜியின் உருக்கமான விருத்தத்துடன்,கோனாடுறை குமரன் கீர்த்தி கூறும் கீரவாணித் திருப்புகழ் பக்தியில் கிறங்க வைக்கின்றது.

    ReplyDelete