Friday 3 July 2015

               திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 


                                                        (476 முதல் 503 வரை )


                                                        விராலிமலை  திருத்தலம்


                                    

                                                                      தலச்சிறப்புக்கள்


வசிஷ்டரும் அவர்தம் இல்லாள்அருந்ததியும் தமது சாபம் நீங்க
இத்தலத்தில் தவமிருந்தனர்.இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் 
என்னும்சித்தியைஅருணகிரிநாதருக்கும்பெம்மான்வழங்கியதாகப்
புராணம்உண்டு.

இத்தலத்தின்மீது,விராலிக்குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக்
கவிராயர் இயற்றினார்.

பங்குனி உத்திரம்,கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்.

பிள்ளைச் செல்வம் வேண்டுவோருக்கு நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம்

இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், அதை ஆறுமுகனாரிடமே அவரது 

பிள்ளையாகக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது

சிற்றப்பன்மார்கள்ஆறுமுகனாருக்குத்  தவிட்டைக் கொடுத்து பெற்றுச் 

செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது 



                                                திருப்புகழ் பாடல்


பாடல் வரிசை எண்  10     புத்தக வரிசை எண்   200



ராகம் சஹானா      அங்க தாளம்      தக தகிட தகிட தகிட தக திமி 


                                                                   2 1/2         1 1/2    1 1/2      2



இப்பாடலுக்கு  பகுதி 5,6,7,8...3,4 வரிசையில் இசை அமைக்கப்பட்டுள்ளது 
 

1.பாதாள மாதி லோக நிகிலமு
     மாதார மான மேரு வெனவளர்
          பாடீர பார மான முலையினை ...... விலைகூறிப்

2.பாலோடு பாகு தேனெ னினியசொ
     லாலேய நேக மோக மிடுபவர்
          பாதாதி கேச மாக வகைவகை ...... கவிபாடும்

3.வேதாள ஞான கீனன் விதரண
     நாதானி லாத பாவி யநிஜவன்
          வீணாள்ப டாத போத தவமிலி ...... பசுபாச

4.வ்யாபார மூடன் யானு முனதிரு
     சீர்பாத தூளி யாகி நரகிடை
          வீழாம லேசு வாமி திருவருள் ...... புரிவாயே

5.தூதாள ரோடு காலன் வெருவிட
     வேதாமு ராரி யோட அடுபடை
          சோராவ லாரி சேனை பொடிபட ...... மறைவேள்விச்

6.சோமாசி மார்சி வாய நமவென
     மாமாய வீர கோர முடனிகல்
          சூர்மாள வேலை யேவும் வயலியி ...... லிளையோனே

7.கூதாள நீப நாக மலர்மிசை
     சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
          கோலால நாத கீத மதுகர ...... மடர்சோலை

8.கூராரல் தேரு நாரை மருவிய
     கானாறு பாயு மேரி வயல்பயில்
          கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.

                                   சொல் விளக்கம் 


பாதாளம் ஆதி லோக நிகிலமும் ஆதாரமான மேரு என
வளர் பாடீர பாரமான முலையினை விலை கூறி ...


 பாதாளம்முதலிய உலகம் எல்லாவற்றுக்கும் ஆதாரமான மேரு மலை போல்
வளர்ந்துள்ள, சந்தனம் அணிந்த பருத்த மார்பகத்தை விலை பேசி,


பாலோடு பாகு தேன் என இனிய சொ(ல்)லாலே அநேக
மோகம் இடுபவர் ... 


பால், சர்க்கரை, தேன் இவை போன்ற இனிப்பான
சொற்களால் நிரம்ப காம மோகத்தைத் தருபவர்களாகிய
விலைமாதர்களுடைய


பாத(ம்) ஆதி கேசமாக வகை வகை கவி பாடும் வேதாளன்
ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவி அநிஜவன் ...


கால் முதல் கூந்தல் வரை உள்ள உறுப்புக்களை பல விதமான
கவிதைகளைப் பாடும் நான் பேயன், ஞானம் குறைந்தவன், விவேகமுள்ளநாக்கே இல்லாத பாவி, உண்மை இல்லாதவன்,


வீண் நாள் படாத போத தவம் இலி பசுபாச வ்யாபார மூடன்
யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை
வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே ... 


வாழ்நாள் வீணாள்ஆகாமல் காக்கும் அறிவும் தவமும் இல்லாதவன், உயிரைப் பற்றியும்,உலகைப் பற்றியும் பேசிப் பொழுது போக்கும் பதி ஞானம் இல்லாதமூடன், இத்தகைய குணங்களை உடைய நானும் உன்னுடைய இரண்டுசிறப்பு வாய்ந்த பாதங்களின் தூளியாகும் பேறு பெற்று, அதனால் நரகில்விழாமல், சுவாமியே, திருவருள் புரிவாயாக.

தூதாளர் ஓடு காலன் வெருவிடவேதா முராரி ஓட அடு
படைசோரா வலாரி சேனை பொடி பட ... 


தன்னுடையதூதர்களோடு யமன் அஞ்சி ஓடவும், பிரமனும் திருமாலும் அஞ்சிஓடவும், கொல்ல வல்ல படைகள் சோர்ந்து போய் இந்திரனுடைய சேனை பொடிபட்டு அழியவும்,

மறை வேள்வி சோமாசிமார் சிவாய நம என மா மாய வீர
கோரமுடன் இகல் சூர் மாள வேலை ஏவும் வயலியில்
இளையோனே ...


 வேத வேள்விகள், சோம யாகம் செய்யும் பெரியோர்கள்
பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும், பெரிய மாயங்களும் வீரமும்
கோரமும் பொருந்தி போர் செய்த சூரன் இறக்கும்படி வேலாயுதத்தைச்
செலுத்திய, வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே,


கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை ... 


கூதாளப் பூ,கடப்ப மலர், சுரபுன்னை மலர் இவைகளின் மீது சாதாரி (பந்துவராளி),தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான ஆடம்பரமானராக இசைகளைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும்,

கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி
வயல் பயில் கோனாடு சூழ் விராலி மலை உறை
பெருமாளே. ...


 நிரம்பஆரல்மீன்களைக்கொத்தும்நாரைகள்பொருந்தியகாட்டாறுகள்பாய்கின்றனவும், ஏரிகளும் வயல்களும்நெருங்கியுள்ள கோனாடு* என்னும் நாட்டில் உள்ள விராலி மலையில்வீற்றிருக்கும் பெருமாளே.



                            உதவி .....கௌமாரம்  இனைய தளம் .நன்றிகள் பல




                           குருஜியுடன் இணைந்து  அன்பர்கள்  பாடியுள்ள  பாடல்



முருகா சரணம் 

1 comment:

  1. சகல சங்கடங்களையும் மறக்கடிக்கும் சுகமான சஹானா! பதிவிற்கு நன்றி!

    ReplyDelete