Friday 30 January 2015

அருணகிரிநாதரின் திருவகுப்பு



FRIDAY, 30 JANUARY 2015




                                 அருணகிரிநாதரின் திருவகுப்பு

தமிழ் இலக்கியத்தில் பாடல்கள்,கவிதைகள்,செய்யுள் ,துதிப்பாடல்கள் முதலியன
 பிரபந்தம் என்று அழைக்கப்படும் 96 வகை  செய்யுள் வகை பாடல்களின்
தொகுப்பில் அமைந்துள்ளன.பிரபந்தம் என்றால் பொதுவாக ‘இசையோடு கூடியது’
என்று பொருள்.

"சந்த பந்த முந்து விஞ்சை செஞ்சொலிற் பிரபந்த நந்து சங்க மங்கலம்
பொருந்து தமிழ் பாடியே’"


என்ற – அருணகிரியாரின்  பாடல் மூலமாக  அறியலாம்.

பிரபந்தத்தின் பட்டியலைப் பார்ப்போம்


1) சாதகம்2) பிள்ளைக்கவி3) பரணி4) கலம்பகம்5) அகப்பொருள் கோவை
6) ஐந்திணைச் செய்யுள்7) வருக்கக் கோவை8) மும்மணிக் கோவை9) அங்க மாலை
10) அத்தமங்கலம்: அட்டமங்கலம்11) அணுராக மாலை: அநுராக மாலை
12) இரட்டை மணிமாலை13) இணைமணி மாலை14) நவமணி மாலை
15) நான்மணி மாலை: பாரதியின் விநாயக நான்மணிமாலை எடுத்துக்காட்டு.
16) நாம மாலை17) பல்சந்த மாலை18) பன்மணி மாலை19 மணி மாலை
20) புகழ்ச்சி மாலை21) பெருமகிழ்ச்சி மாலை22) வருக்க மாலை
23) மெய்கீர்த்தி மாலை: மெய்க்கீர்த்தி மாலை24) காப்பு மாலை
25) வேணிண் மாலை: வேனின் மாலை (வேனில் மாலை)
26) வசந்த மாலை27) தாரகை மாலை28) உற்பவ மாலை29) தாணை மாலை
30) மும்மணி மாலை: (வள்ளுவ மும்மணி மாலை )
31) தந்தக மாலை: தண்டக மாலை32) வீரவெற்சி மாலை: வீர வெட்சி மாலை
33) வெற்றிக் கரந்தை மஞ்சரி
34) போர்க்கெழு வஞ்சி :( போர்க்கு எழு வஞ்சி என்று பிரித்தால் புரியும்.)
35) வரலாற்று வஞ்சி36) செருக்கள வஞ்சி37) காஞ்சி மாலை: 38) நொச்சி மாலை
39) உள்ளிணை மாலை: உழிஞை மாலை.40) தும்பை மாலை41) வாகை மாலை
42) ஆடோரண மஞ்சரி: வரதோரண மஞ்சரி43) எண் செய்யுள்தொகை நிலைச் செய்யுள்
45) ஒலியல் அந்தாதி46) பதிற்றந்தாதி47) நூற்றந்தாதி48) உலா49) உலாமடல்50) வளமடல்
51) ஒரு பா ஒரு பக்து: 
52) இரு பா இரு பக்து: இருபா இரு ப·து. ஒருபது, இருபது என்றும் சொல்லலாம்.
53) ஆற்றுப் படை: (திருமுருகாற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை என்று சங்க காலத்தில் தொடங்கி எங்க காலம் வரை
ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.)
54) கண்படை நிலை55) துயில் எடை நிலை:56) பெயர் இன்னிசை57) ஊர் இன்னிசை 
58) பெயர் நேரிசை59) ஊர் நேரிசை60) ஊர் வெண்பா61) விளக்கு நிலை:62) புற நிலை
63) கடை நிலை64) கையறு நிலை65) தசாங்கப் பத்து66) தசாங்கட்டியல்:
67) அரசன் விருத்தம்68) நயனப் பாட்டு: நயனப் பத்து.69) பயோதரப் பாட்டு: 
70) பாதாதி கேசம்
71) கேச, கேசாதி பாதம்: கேசாதி பாதம் (மனோன்மணீயத்துல ஒரு கேசாதி பாதம்
வருது. எட்பூ ஏசிய நாசியாய் என்று ஓரிடம் வரும்.)
72) அலங்கார பணிசகம்: அலங்கார பஞ்சகம்73) கைக்கிளை74) மங்கல வெள்ளை
75) தூது76) நாற்பது77) குலமகன்: குழமகன்
78) தாண்டகம்:( திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம்)79) பதிகம்80) சதகம்
81) செவியறிவிரூ: செவியறிஉறூஉ82) வாயுறை வாழ்த்து83) புற நிலை வாழ்த்து
84) பவணிக் காதல்: பவனிக் காதல்85) குறத்திப் பாட்டு86) உளத்திப் பாட்டு: உழத்திப் பாட்டு 
87) ஊசல் 88) எழு, கூற்றிருக்கை: ( திருவெழுகூற்றிருக்கை )89) கடிகை வெண்பா90) சிண்ணப்பூ: சின்னப் பூ (சின்னங்களைக் குறித்தது. சின்னது இல்லை.)91)  விருத்த இலக்கணம் 92) முது காஞ்சி93) இயன்மொழி வாழ்த்து 94) பெருமங்கலம் 95) பெருங்காப்பியம் 96) சிறுகாப்பியம்:


அருணகிரியாரின்  பாடல்கள் மேற்கூறிய சில அமைப்புகளில் உள்ளன. தற்போதைக்கு
வகுப்பு பற்றி பார்ப்போம்.

ஒரே பொருளை பலவிதமாக வகுத்து, தொகுத்து சொல்லும் நூலுக்கு வகுப்பு என்று
பெயர்.அருணகிரியார் இவ்வகையில் 25திரு  வகுப்புகள் பாடிஅருளியுள்ளார்
ஆனால் அவைகளில் 18 வகுப்புகள் தான் அருணகியாருடையது, மற்ற பாடல்கள்
இடைச்செருகல் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

திருவகுப்பு - பட்டியல்



 1. சீர்பாத வகுப்பு2. தேவேந்திர சங்க வகுப்பு3. வேல் வகுப்பு4. திருவேளைக்காரன் வகுப்பு

5. பெருத்த வசன வகுப்பு6. பூத வேதாள வகுப்பு7. பொருகளத் தலகை வகுப்பு

8. செருக்களத் தலகை வகுப்பு9. போர்க்களத் தலகை வகுப்பு10. திருஞான வேழ வகுப்பு

11. திருக்கையில் வழக்க வகுப்பு12. வேடிச்சி காவலன் வகுப்பு13. சேவகன் வகுப்பு

14. வேல்வாங்கு வகுப்பு15. புய வகுப்பு16. சித்து வகுப்பு17. கடைக்கணியல் வகுப்பு

18. சிவலோக வகுப்பு19. மயில் வகுப்பு20. கொலு வகுப்பு21. வீரவாள் வகுப்பு

22. சிவகிரி வகுப்பு23. திருச்செந்தில் வகுப்பு24. திருப்பழநி வகுப்பு

25. திருப்பரங்கிரி வகுப்பு

திருவகுப்பின் சிறப்புகள்.

அருணகிரியாரின் மற்ற பாடல்களில் இடம் பெற்றுள்ள பெண்ணாசை,வர்ணனை,யம பயம்
முதலியவை இடம் பெற வில்லை.

பெருமானின் திருப்பாதங்கள் பக்தர்கள் ,வேலாயுதம்,பன்னிரு
தோள்கள்,திருக்கரங்கள்,கருணை பொழியும் விழிகள் அருட்பார்வை,குறமாதை
,திருப்புகழ் பற்றி தான் இடம் பெற்றுள்ளன.

அருணகிரிநாதரின் மறு பிறவியாக கருதப்படும் கிளி ரூபத்தில் தான் அவர் பாடி அருளினார்


இதை அவர் பாடல்மூலமாகவே ,ஆதார பூர்வமாக ,அருளாளர் திருப்புகழ் அடிமை
நடராஜன் தன்முன்னுரையில் அளித்துள்ளார


http://www.kaumaram.com/vaguppu/vgp00.html

திரு வகுப்புகளில் நம் குருஜி  12 பாடல்களை வழிபாட்டு நிகழ்சிகளுக்காக
இசையுடன் வழங்கியுள்ளார்கள்.


`விருத்தங்களைத்தொடர்ந்து ,திருவகுப்புகளை பொருளுடன் குருஜியின் குரலில்
வழங்க விரும்புகிறோம்
.


திருவகுப்புகள் தொடரும்.

1 comment:

  1. Great service by Shri Natarajan. my namaskarams to him.

    ReplyDelete