Thursday 19 March 2015





                                       அமரர் அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சார்.

அருணகிரிநாதரின் வேல் விருத்தம் ,மயில்விருத்தம் ,திரு  வகுப்புக்கள்
நம் வலைத்தளத்தில் ,அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சாரின் விளக்க
உரையுடன் அனுபவிப்பதை  நம் பாக்கியம் என்றே கருதவேண்டும்.
இறைபணியாகவெளியிட்டுள்ள கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல.

திருப்புகழுக்கு தன்னையும் தன் குடும்பத்தையும் சமர்ப்பித்துள்ள
எண்ணிக்கையற்ற அடியார்கள் குடத்தில் இட்ட விளக்கை போல் தங்கள் தெய்வீக
பணியை செவ்வனே ஆற்றி வருகின்றனர்.பெருமானின் புகழ் பாடுவதுதான் தங்கள்
வேலை ,தன் புகழ் பாடுவது அற்பமான செயல் ,மற்றவர்களும் தங்கள் புகழ்
பாடலில்  இறங்கக்கூடாது என்ற மேன்மையுடன் வாழ்கிறார்கள் நம் குருஜி தன்னை
திருப்புகழ் தொண்டன் என்றுஅன்பர்கள் கருத விழைந்தார்.நடக்க இருக்கும்
வள்ளி கல்யாண வைபவ அழைப்பிதழில் அமைப்பாளர்கள்" திருப்புகழ் தொண்டனின்
தொண்டர்கள் " என்றே வினயத்துடன் நம்மை அழைக்கிறார்கள்..இவை எல்லாம்
பெருமானை சரணடையும் தத்துவம்தான்..இருப்பினும் அத்தகைய
 அருளாளர்களைப்பற்றி சில சந்தர்ப்பங்களில்நன்றிக்கடன் கருதி குறிப்பிட
 வேண்டிய அவசியம் எழுகிறது. .உதாரணமாக நம்வழிபாடு நூலில் ,
முன்னுரையில் சில அருளாளர்களின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் நடராஜன்சாரைப்பற்றி  சில வார்த்தைகள் கூறவிரும்புகிறோம்.
அன்பர்கள் பொறுத்தருள்க.

அடிமை வாழ்வைப்பற்றி பல விதங்களில் கூறலாம்.ஆனால் இறைவனுக்கு அடிமை
என்பது ஒப்பற்றது .ஏன் இறைவனே அடியார்களுக்கு அடிமையான சம்பவங்களும்
உண்டு சுந்தர மூர்த்தி நாயனார் திருவாரூர் நாயகனுக்கு அடிமையானதின்
பெருமையை எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்


மேலும் தன்னை மீளா அடிமை என்று மற்றொரு பாடலில் உரைக்கிறார்.
அடிமையின் பெருமையை ஓர் அன்பர் எப்படி மிக அருமையாக விளக்குகிறார்
 பாருங்கள்.


"அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், உணர்ந்தும் உணராமலும்

தொடர்வது வாழ்க்கை.இந்தத் தொடர்கதை இன்பம் நோக்கியது. முடிவில் இன்பம் பெறவெனமுயன்றுகொண்டேயிருப்பது.முழுதான இன்பத்தை அது ஒருபோதும் 
தொட்டதில்லை எனும்போது முற்றுப் பெறாதஇந்தத் தொடரின் முடிவுதான் என்ன?


பிறப்பெடுத்த எல்லா உயிர்க்கும் இறப்பு என்பதே முற்றுப் புள்ளியாய்த் தெரிகிறது.

பிறப்பின் பின் மரணம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் எல்லோரும் அறிந்த இந்த ஒன்றில் அறியாமல் கலந்திருப்பதும்
ஒன்றுண்டு. அது மரணத்துக்குப் பின்னும் ஒரு வாழ்வுண்டு என்பது.
„மரணத்துக்குப் பின் வாழ்வாவது.. அதை அறிந்துவந்து சொன்னவர் யார்?“ எனும்
கேள்விக்கு நம்பத்தகுந்த மாதிரி பதில் சொல்லத் தெரியாமல், தெரிந்தாலும்
தெளிவுபடுத்த முடியாமல் மௌனித்துப் போகிறார்கள் எல்லோரும்.
உணர்ந்தவர்களால் மட்டுமே. இந்த உண்மையைக் கண்டுகொள்ளமுடியும்.
பிறருக்கு அதை உணர்த்தமுடியாமல் போவதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.
ஆனால் உணர்வதற்குத் தன்னைத்தான் உணரத்தலைப்பட்டவருக்கு இயலும்.

தன்னைத்தான் உணர்ந்தவன் பிற உயிர்கள் அனைத்திலும் அன்பு கொள்கிறான்.
அன்பினால் பிறரை இவன் ஆளுகை செய்தபோதிலும் உண்மையில் இவன் 
தன்னையோர்அடிமையாகவே காட்டிக்கொள்கிறான்  அறிந்ததை அறியாததாய்,
 தெரிந்ததை தெரியாததாய், உணர்ந்ததைஉணராததாய் காட்டிக் கொள்ளும்
 சந்தர்ப்பங்கள் எல்லோரது வாழ்க்கையிலும்தான்வருகின்றன.
எல்லாம் எனக்குத் தெரியும்!“ என்ற இறுமாப்பு ஒருவனை வீரனாகக் காட்டலாம்.
சொல்லுங்கள் கேட்கிறேன்!“ என்று பணிவோடு நிற்பவன் அடிமைபோலத் 
தோன்றலாம்.ஆனால் உண்மை வேறானது. அடிமைக் கோலம் என்பது 
பக்தியில் மூழ்கிநிற்பவனுக்கு பரவசம் தருவது.உலக சுகங்களுக்காக
 மற்றவர்க்கு அடிமையாயிருத்தல் என்பது அவமானகரமானது.
தன்னலம் மறுத்து தன் சுகம் வெறுத்து மற்றவர் நலம் நோக்கும் உயரிய
கொள்கைகளோடு பிறருக்காய் வாழ்வதென்பது பார்வைக்கு அடிமைத்தனம் 
எனப் பெயர்கொண்டாலும் அந்த அடிமைத்தனம் உயர்வானது.அன்பினால்
 பிற உயிர்களை ஆண்டுகொண்டே அவர்க்கு அடிமையாய் சேவகம்செய்பவன்

உண்மையில் இறைவனுக்கே அடிமையாகிறான்.
 தன்னலத்துக்காக பிறரைஅடக்கியாளுகின்ற வீரத்தைவிட மற்றவர்கள் 
பணிக்கெனத் தன்னைத்தாழ்த்திக்கொண்டு, „என்கடன் பணி செய்துகிடப்பதே!“ 
என வாழும் அடிமையேஉயர்வானவன்.

அவன் இறைவனின் அடிமை.

அவனுள் இறைவன் வாழ்வதால் ஆள்பவனும் அவனே".

இவை எல்லாவற்றிற்கும் பொருத்தமானவர் திருப்புகழ் அடிமை நடராஜன் சார்
முருக பக்தியில் ஈடு படுத்தியவர்இலங்கையை சேர்ந்த பாலானந்த ஸ்வாமிகள்
அவர் கற்பித்த "..வாசிக்க ஒனாதது"என்று தொடங்கும் திருப்புகழை மந்திர
உபதேசமாக ஏற்று முருக பக்தியில்திளைத்தார். தேவார இசையிலும் தன்னை
 அர்ப்பணித்த அவர் பாபநாசம் சிவன்நடத்திய மார்கழி மாத பஜனைகளில் பல
 ஆண்டுகள் கலந்து கொண்டார்.

திருப்புகழில் திளைத்த குகஸ்ரீ ரசபதி (ரத்ன சபாபதி நாயக்கர் )மற்றும்
திருப்புகழ் சதுரர் ராமலிங்கம் பிள்ளை போன்றவர்கள்  அவர்  சிந்தனை
விசாலமாக காரண கர்த்தாக்கள்.ஆம்."யான் பெற்ற இன்பம் பெருக
இவ்வையகம்"  என்றகோட்பாடின்படி திருப்புகழின்  பொருளையும்,அதில்
பொதிந்துள்ளஉபதேசங்கள்.வாழ்க்கை முறை போன்றவைகளை மற்றவர்களுடன் 
பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற பேராவலுடன் வகுப்பை சென்னையில் உள்ள 
கல்யாணிமாமிஇல்லத்தில்தொடங்கினார்.நம்திருப்புகழ்அன்பர்கள்கலந்து கொண்டு,பயின்று,மற்றவர்களுக்கும் இன்றுவரை தங்கள் குரு நாதரைப்போல் 
தொண்டாற்றிவருகிறார்கள் என்று சொல்லத்தேவையில்லை.அருளாளர்கள் 
ஐயப்பன் ,சித்ராமூர்த்தி போன்றவர்கள் குறிப்பிடத்தக்க மாணவர்கள்.

நடராஜன் சார் சாதுராம்சுவாமிகளை அடிக்கடி சந்தித்து ,உரையாடி தன்

ஐயங்களையும் போக்கி உயர்ந்த தத்துவார்த்த நிலையையும் உணர்ந்தார்.

திருப்புகழ் வரிகளைக்கொண்டே சிருங்கேரி மகா சந்நிதானம் அபிநவ
வித்யாதீர்த்த ஸ்வாமிகளைப்பற்றி "இணையில்லாத குரு"  என்ற  ஒரு நூல்
படைத்துள்ளார்.

மற்றும் "மனித வாழ்க்கைக்கு திருப்புகழ் " என்ற நூலை எழுதியதோடு
மட்டுமல்லாமல் ,பல திருப்புகழ் விழா மலர்களிலும் கட்டுரைகள்
அளித்துள்ளார்.

சென்னை வட பழனி திருப்புகழ் திருப்புகழ் சபாவில் பல ஆண்டு தலைவராக
பணியாற்றி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம தேதி அருணகிரிநாதர் நினைவு
விழாதொடந்து  நடத்த காரணமானவர்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தால் போல் ,மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில்
அருணகிரிநாதர் உருவச்சிலை நிறுவ காரணகர்த்தாவும் நிலைத்து
நிற்கிறார்.ஆலயத்தின் கொடிமரம் அருகே தரிசிக்கலாம்.

அண்மையில் பாம்பன் சுவாமிகளின் "குமாரஸ்துவம் " பற்றி விரிவாக
அன்பர்களுடன் வகுப்பில் பகிர்ந்து கொண்டார் அந்த நிலையில் அடுத்த
வகுப்புக்காக குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில்
(12.3.2013)பெருமான் திருவடிகளை சென்றடைந்தார்.

நெஞ்சை உருக்கும் அருளாளர் ஐயப்பனின் அஞ்சலியை கேட்டு மனம்
 உருகாதவர்கள்இருக்கமாட்டார்கள்.


அவருடைய மாணாக்கர்களும் .,அன்பர்களும் அவரது நினைவு நாளை 
அவரதுஇல்லத்தில் இசை வழிபாடுடன் நினைவு கூர்கிறார்கள்.அவரது
இரண்டாம் ஆண்டுநினைவு அஞ்சலி சென்ற 15.3.15 அன்று நடை பெற்றது.

"வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்"

என்ற திருவள்ளுவர் கூற்றுப்படி தெய்வமாகிவிட்டதோடு மட்டும்  அல்லாமல்
நடராஜன் சார்  திருப்புகழிலும் ,அன்பர்கள் இதயத்திலும்என்றென்றும்
உறைகிறார்.

முருகா சரணம்.

No comments:

Post a Comment