Wednesday 25 December 2013

மரணம் இல்லாப்பெரும் வாழ்வு

இந்த புலப்படாத தத்துவத்தையும்,மரணப்ப்ரமாதம் (கந்தர் அலங்காரம்)போன்ற செய்திகளையும் நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம்.புரிய வில்லைதான் .புரிய வைக்கிறார் வாகீச கலாநிதி கி. வா.ஜ அவர்களின் புதல்வி  அன்பர் உமா பாலசுப்ரமணியம்..மீன் குட்டிக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன?கட்டுரை  ஷண்முக கவசம் ஆகஸ்ட் இதழிலும்,பின்னர் முருகன் பக்தி வலைத்தளத்திலும் வெளிவந்துள்ளது.அதன் குறியீட்டை கீழே கொடுத்துள்ளோம்.


அதுமட்டுமல்ல.அருணகிரியார்   "புவனத்தொரு "பாடலில் விவரிக்கும் நரகத்தில் உயிர் படும் அவதிகளை யும் விளக்கியுள்ளார்.நரகம் ஏழு வகை உண்டாம்."மூல மந்திரம் ஓத லிங்கிளை " பாடலில் கோர கும்பி நரகம் பற்றி குறிப்பிடுகிறார்.இவை பயமுறு த்துவதற்காகவா ?இல்லை.CAUSE AND EFFECT,வினை விதைத்தவன் வினை அறுப்பான்  தத்துவங்கள் நாம் அறிந்ததே.தீவினைகளை அகற்றுவதே அதன் உபதேசம்.குருநாதர் "ஆதி முதனாளி "பாடலில் "பாழ் நரகெய்தாமல் உன்றன் பூவடிகள் சேர அன்பு தருவாயே "என்று இறைஞ்சுகிறார்.

உன் புகழே பாடி நானினி அன்புடன் ஆசார பூசை செய்துய்திட வீணாள் படாதருள் புரிவாயே 

புவனத்தொரு   பாடலை குருஜியின் குரலில் கேட்போம் 


ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்த்துள்ள அன்பர் மாலதி ஜெயராமனுக்கும்,மேலே குறிப்பிட்டுள்ள பத்திரிக்கைகளுக்கும் நன்றிகள் பலபல 

No comments:

Post a Comment