Wednesday 6 January 2016

குரு மஹிமை இசை பேகடா ராகம்


                                                      குரு மஹிமை   இசை  பேகடா ராகம் 

                                                                         விருத்தம் 

                                                                           

                                                  "  மனத்தின்பம் "  என்று தொடங்கும்  பாடல்                                                                  

 
                                     
                                          "என்னால் பிறக்கவும் "  என்று தொடங்கும்  பாடல்                                                                    
                                                         வயலூர் திருத்தலம் 

இறைவன் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்றாக வயலூரைக் கருதுகின்றனர்.
இக்கோயில் உருவான காலம் குறிப்பாக அறியப்படாவிடினும், தொன்மையானதாகச் சோழர்களின் காலம் தொட்டே இருப்பதாகக் கூறுவர்.

காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ அரசன் (பெயர் அறியவில்லை) தனது தாகம் தணிக்க கண்ணில் பட்ட கரும்பொன்றை உடைத்து அதன் சாற்றினை அருந்த முற்படுகையில் அது மூன்று கிளைகளாக முறிந்து நின்ற அற்புதம் கண்டு வியப்புற்றான். மேலும் முறிந்த கரும்பிலிருந்து குருதியும் உதிரவே, அக்கரும்பு பயிரான வயலைத் தோண்டிப் பார்க்கையில், சிவலிங்கம் இருக்கக் கண்டான்.

கரும்பினைக் கண்ணுற்ற இடத்திலேயே அச்சிவலிங்கத்தை ஆகம விதிகளின்படி நிறுவி கோயில் ஒன்று எழுப்பினான். மூலவரான சிவன் ஆதிநாதர் எனவும், மூலவி ஆதி நாதி எனவும் வழங்கலாயினர். வயலிடை கண்ணுற்ற மூலவர் என்பதனால், வயலூர் என அவ்விடம் வழங்கப் பெறலாயிற்று.

  • பொய்யான வாழ்வின் மாயைகளை அகற்றித் தம்மை நாடி வருபவருக்கு மெய்ஞானம் அருளும் காரணத்தால் இங்கு வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி எனத் துதிக்கின்றனர். இவரது கையில் உள்ள விளாங்கனி, பழத்தின் ஓடு போன்ற மனித உடல்சார்ந்த மாயைகளை நீக்குவதன் உருவகம் எனப் பொருள் கூறுவர்.

  • வயலூரை முத்தித் தலம் எனப் போற்றுவர்.

  • தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி 

  • நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பு.

  • இங்குள்ள சக்தி தீர்த்தம் முருகப் பெருமான் தமது வேலால் குத்தி 

  • உருவாக்கியது எனக் கூறுவர்

  • தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பு.

  • இங்குள்ள சக்தி தீர்த்தம் முருகப் பெருமான் தமது வேலால் குத்தி உருவாக்கியது எனக் கூறுவர்.

  • அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட எம்பிரான் முருகப் பெருமான் வயலூருக்கு அவரை அழைத்து அதன் சிறப்புக்களைப் பாமாலையாகத் தொடுக்க வைத்தான்.


திருப்புகழ் நூலுக்குஅதிகாரபூர்வமாகப் பாடப்பட்ட முதற்பாடல் வயலூர்

விநாயகரைத் துதித்துமுருகனின் சிறப்பம்சங்களை அமைத்து முருகன் 

ஆணையிட்டது போலப் பாடியபக்கரை விசித்ரமணி’ 

திருப்புகழ் பாடல்தான்


                                                                             பாடல்                                                                    

                                                                           

                                             "ஒருபொழுதும் "   என்று தொடங்கும்  பாடல்                                                                  

                                                                               

"                                            எழுதிகழ் புவன"    என்று தொடங்கும்  பாடல்                                                                  
                                                                                       
                                                                                       
                                                                      முருகா சரணம் 

                                                                               
                                                                                                                   

1 comment:

  1. பேரின்பம் தரும் பேகடா ராகப் பாடல்கள்!

    ReplyDelete