Monday 11 January 2016

36ம் ஆண்டு மும்பை படி விழா .2016



                                    36ம் ஆண்டு  மும்பை படி விழா .2016



படி விழா பல பகுதி ஆலயங்களில் சிறப்பாக நடை பெற்று வருவதை நாம் நன்கு அறிவோம்.ஆனால் அதன் பின்னணியையைப்பற்றி ஒரு சிலரே அறிவர்.மற்றும் சுவாரஸ்யமானதும் கூட.

திருத்தணியில்1917 ஜனவரி முதல் தேதி அன்றே படி விழா  தொடங்கி வைத்தவர் சச்சிதானந்த வள்ளிமலை சுவாமிகள்தான்..அதுசுவாரஸ்யமானஒருதொடக்கம்.அந்த கால கட்டத்தில்,நம்மவர்கள் நம்மை ஆண்ட ஆங்கிலேய பிரபுக்களை தங்கள் சுயநலம் கருதி அந்த புத்தாண்டு தினத்தில் "துரையே " என வணங்கி பல பரிசுகளை வழங்கி வந்தனர்.துரைகளுக்கு துரையாக நம்மை வாழ வைக்கும் நம் பெருமானை வணங்காமல் ,அவர்களைபோற்றியமக்களைக்கண்டுமனம்வெதும்பி,அவர்களை திசை திருப்ப "திருத்தணி திருப்புகழ் திருவிழா " என்ற அமைப்பை ஏற்படுத்தி படி விழா தொடங்கினார்.

ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களை களையவும் ,புத்தாண்டு வளமாக அமையவும் பெருமானின் கருணை வேண்டியும் டிசம்பர் 31 இரவு முதல் மறுநாள் புத்தாண்டு காலை வரை படிவிழா திருத்தணியில்  இன்று வரை தொடருகிறது.

துரை என்ற சொல் சமீப காலத்தில் தான் தமிழில் புகுந்துள்ளது என்று பெரும்பாலானோர் கருத்தில் கொண்டுள்ளனர்.ஆனால், நம் அருணகிரியார்  "துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடது தருவாயே."என்று  "வஞ்சம் கொண்டும்" என்ற திருசெந்தூர் பாடலில் வேண்டுகிறார்.திருத்தணி முருகன் துரை முருகன்  என்றே அழைக்கப்படுகிறார் நம் படி விழா பெருமானின் திரு உள்ளப்படியும் சிருங்கேரி மஹா சன்னிதானத்தின் அருளாசியுடனும் கடந்த 35ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது.


இந்த ஆண்டும் அருவமாய் நம்மை வழி நடத்துவார் என்பதில் ஐயமில்லை.அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது..படி விழாவில் கலந்துகொள்வது நம்கடமை,பாக்கியம்,குருஜிக்கு செலுத்தும் நன்றிக்கடன்,காணிக்கை என்ற உணர்வுடன் அன்பர்கள் முன்னதாகவே வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்..











இத் தருணத்தில் நம் குருஜி மும்பை படிவிழாவில் 2009ம்  ஆண்டு 

அன்பர்களை வழிநடத்திச்சென்றதை இணைக்கப்பட்டுள்ள

புகைப்படங்களில் காணலாம்.



































                                                                                 


                                                                                       


                                                                                      






                                                       






                                                                            







                                                                 




         







                                                                        






மற்றுமொரு மகிழ்ச்சி கரமான செய்தி. .முதன் முறையாக விராலிமலை முருகன் ஆலயத்தில் திருப்புகழ் அன்பர்கள் படிவிழா இதே தேதியில் (26.1.2016)
நடைபெற உள்ளது.


                                                        விராலிமலை திருத்தலம்

                                                                 கோபுர தரிசனம்






                                                                                  
விராலிமலை திருத்தலம் திருச்சியிலிருந்து 28.கிலோ மீட்டர் 

,புதுக்கோட்டையிலிருந்து 40கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.கோயில் 

படிகளில் நடக்கும் போது  பல மயில்களின் அழகிய நடனத்தை கண்டு களிக்கலாம்.

இத்தலத்தில்  ஜனவரி 26 அன்று அன்பர்களின்  படி விழா நடைபெற 

உள்ளது.அருளாளர் பெங்களூர் நாகேஷ் அவர்களிடமிருந்து வந்துள்ள 

மகிழ்ச்சிகரமான செய்தி  கீழே .

"    I have been requested by Mani Sir, Chennai to


 communicate that  Padi Vizha will be held at

 Virali Malai on 26th January 2016
The function will start at 8 AM and likely to be over by 1

 PM."

அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற 

வேண்டுகிறோம்.

முருகா சரணம் 

1 comment:

  1. படி விழாவில் பங்குகொள்ள பக்தர்கள் பரவசத்துடன் காத்திருக்கிறார்கள் !

    ReplyDelete