Thursday 17 December 2015





          பெங்களூர் வைபவம் வள்ளிகல்யாணம் செய்திதொடர் ..2



பெங்களூர் திருத்தலத்தி ல்  டிசம்பர் 24/25 தினங்களில் நடைபெறவுள்ள வள்ளி கல்யாண வைபவம்  பற்றி (கீழ்க்கண்ட குறியீட்டின் மூலமாக )முன்பு அறிவித்துள்ளோம்.





அருளாளர் ஐயப்பனிடமிருந்து தற்போது வந்துள்ள செய்தியினை அன்பர்களுக்கு அளிக்கிறோம்.

முருகா சரணம் 
அன்பர்களே 
மனம் , மொழி , மெய்  இம்மூன்றும் பெங்களூரு வள்ளி கல்யாணத்திலேயே அசைவற்று நிலைத்து விட்டன எனில் அது நிஜமே அனைத்தும் நமது வள்ளி நாச்சியாரின் பெருங்கருணை. அது தாய்மையின் பிரத்தியேக மாண்பு . 

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  இணைப்பை  பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுகிறேன். வள்ளி கல்யாணம் நடக்கும் இடம், நாம் தங்கி இருக்கப்போகும் இடம் அனைத்தையும் காட்டும் வரை படம் அது  . அவசியம் அனைத்து அன்பர்களின் கையில் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பொருள் இது.

இன்னிக்கி விட்டால் இனி எட்டே தினங்களே மத்தியில்.  பறந்து போய்  விடும் பொழுது.செந்திலாண்டவன் நம்முடனே இருந்து கலியாண சுபுத்திரன், குறமாதின் விநோதன் மாப்பிள்ளையாகி நம்மை மகிழ வைப்பான் 

முருகா சரணம்  முருகா சரணம்  முருகா சரணம்  


                                                 ROAD MAP

                                                                               


                                                                           


குறுகியகால அவகாசமே உள்ளதால்கலந்துகொள்ள விழையும்

வெளியூர்அன்பர்கள் விழா அமைப்பாளர்களுக்கு  விரைவில் 

தகவல்களை Google Sheet  மூலம் அளிக்க அன்புடன் வேண்டுகிறோம்.


முருகா சரணம் 




                                                                                          



1 comment:

  1. களை கட்டும் கல்யாண வைபவம். அருளாளர் அய்யப்பன் அனுப்பியுள்ள வரைபடம் அன்பர்களுக்கு அறுதுணை!

    ReplyDelete