Wednesday 23 December 2015

வள்ளி கல்யாணம்

                                                                                         



                                                                                                       


       

          பெங்களூர் வைபவம் வள்ளிகல்யாணம் செய்திதொடர் ..3


                                      பரவசமூட்டும் மகிழ்ச்சிகரமான செய்தி 

பெங்களூரில் இன்று தொடங்கும் வள்ளி கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ளும அன்பர்கள் மகா பாக்யசாலிகள்.அதேசமயம் உடல் நலக்குறைவினாலும் மற்ற தவிர்க்க முடியாத காரணங்களாலும் வைபவத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று ஆதங்கத்துடனும்,மனக்குறைவுடன் பல அன்பர்கள் உள்ளனர் .இது கருணையுள்ளம் கொண்ட நம் பெருமான் அறியாததா என்ன?

அத்தகைய அன்பர்களின் குறை தீர்த்து,அருள்பாலிக்க பெருமான் அவர்களின் இல்லத்துக்கே தன் பிராட்டியுடன் எழுந்தருளி அன்பர்களை பரவசப்படுத்த விரைகிறான். 

ஆம் . "தாம் பெறும் இன்பம் பெருக இவ்வையகம்" என்ற புனித அன்புள்ளம் கொண்ட அமைப்பாளர்கள்  வள்ளி கல்யாண வைபவம் நிகழ்சிகள் முழுவதையும் நேரடி ஒளிபிரப்பாக WEBCAST மூலம் அளிக்க உள்ளார்கள்.

அத்தகைய பரவசமூட்டும் மகிழ்ச்சிகரமான செய்தியை அருளாளர் வசந்தா பஞ்சாபகேசன் அனுப்பியுள்ளார்கள்.விபரங்கள் கீழே 


"There will be a live telecast of Vallikalyanam on 24th Dec &25th Dec The Web page to log in is


The live streaming times are 

24th Dec  2pm onwards

25th dec 7am onwards "

vasantha panchapagesan    

நம் இல்லம் தேடி நம்மை புனிதப்படுத்த ஓடி வரும் பெருமானையும் பிராட்டியையும்வரவேற்போம்,தரிசிப்போம்,போற்றவோம்,பாடுவோம் ஆடுவோம் ,கல்யாண வைபவத்தில்  கலப்போம்,மற்ற அன்பர்களுடன் சங்கமிப்போம்.உலக நலன்களுக்கு பிரார்த்திப்போம்.

முருகா சரணம் 

1 comment:

  1. வள்ளி கல்யாணம் நேரடி ஒளி பரப்பைக் கண் குளிரக்கண்டோம்! " கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!"

    ReplyDelete