Monday 4 August 2014





                                                     ஆடி பெருக்கு :

பொதுவாக ஆடி மாதத்தையும், மார்கழி மாதத்தையும் பீடை மாதம் என்று சொல்வார்கள். ஆனால், 18ஆம் பெருக்கு என்பது அந்த மாதிரி கிடையாது. ஆறு என்றால் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்பொழுதெல்லாம் பருவ மழை மிகச் சரியாகப் பொழிந்தது. ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப அந்த நேரத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆணி இந்த மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் - ஆடியில் வருவது புதுவெள்ளம், ஐப்பசியில் வருது வேறு வெள்ளம் - இந்த புதுவெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப் பெருக்கு.

இதுமட்டுமல்லாமல், ஆடி பதினெட்டாம் பெருக்கைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள். இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடிவரும் அந்த புதுவெள்ளம், புது நீர் வரும்போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்வது. சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

இந்த மாதிரி 18ஆம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. அதனால் ஆடி 18ஆம் தேதி மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். ஏனென்றால் புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள். சூரியன் பூசம் நட்சத்திரத்தினுடைய டிகிரியில் இருந்து மாறி புதன் ஆயில்ய பாதத்தில் வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடிகளில் பச்சையத் தன்மை சதவிகிதம் அதிகரிக்கும். இதனால்தான் இந்த நாட்களில் இதுபோன்றெல்லாம் செய்வது.

மேலும், இயற்கை உணவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல், காப்பி அரிசி வெல்லமிட்ட காப்பி அரிசி - கைக்குத்தல் அரிசி என்று சொல்வார்களே - பொங்கல் வைத்து அம்மனுக்கு விசேஷப் பூஜைகள் செய்வது, புத்தாடை அணிதல், எல்லைத் தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடத்துதல் இதெல்லாம் பலன் தரும்.


இந்த பீடிகை எதற்கு என்று அன்பர்கள் புருவத்தை உயர்த்துவது  தெரிகிறது 

இந்த ஆடிப்பெருக்கு நன்னாளில் (3..2. 14) திருப்புகழ் இசை வெள்ளம்  அன்பர் ரமேஷ் இல்லத்தில் நடந்த வழிபாட்டில் அன்பர்களை மெய்மறக்கச் செய்தது. இடம் பெற்ற பாடல்கள் குருநாதர்  அருள்வேன்டியே அமைந்தது.குறிப்பாக அன்பர்கள் பாடிய விருத்தங்கள் தெய்வீக நிலைக்கு இட்டுச்சென்றது என்பதில் ஐயமில்லை..

அன்பர் ராதாகிருஷ்ணன் மும்பையில் திருப்புகழ்  அன்பர்கள் அமைப்பு ,வகுப்புக்கள்  நிறுவ அயராது பாடுபட்ட அமரர் சுப்ரமணிய ஐயரையும், அவர் குடும்பத்தையும் புகழ்ந்து உரையாற்றினார்.குடும்பத்தின் இளைய தலைமுறையினரும் தெய்வீக பணியில் ஈடுபட வேப்டினார்.

பதினெட்டாம் பேர் தினத்தில் அறுசுவை உணைவை  தக்கபடி ஏற்பாடு செய்திருந்த அன்பர் ரமேஷுக்கு நன்றிகள் பல..No doubt ,Anbargal felt at Home.

நிகழ்ச்சியின் சில புகைப்படங்கள் அன்பர்களின் பார்வைக்காக.

No comments:

Post a Comment