Sunday 9 March 2014

நாடக நடிகராக நம் குருஜி

 நம் குருஜி சகலகலா வல்லவனாகத்திகழ்ந்தார்.என்பது முந்திய தலைமுறை அன்பர்களுக்கு நன்கு தெரியும். தன்  அடக்கம் காரணமாக அன்பர்கள் அதை வெளிப் படுத்துவதில்லை.

குருஜி சாதாரண மனிதனாக குடும்ப வாழ்க்கை கடமைகளை நிறைவேற்றி வெற்றி கண்டார். அகில இந்திய வானொலியில்  Grade .அலுவலகப்பணி களில் சுறுசுறுப்பாக செயல் பட்டார்.பல கட்டுரைகளின் ஆசிரியர்.பல தலங்களுக்கு யாத்திரை.சிகரம்போல் நமது திருப்புகழ்,அபிராமி அந்தாதி பாடல்களுக்கு ஈடு இணை அற்ற  இசை . உலகெங்கும் அன்பர்கள் திருக்கூட்டம். அன்பர்களை அற  வழியில் ஈடுபடுத்தி உத்தமர்கள் ஆக்கியது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அவர் ஒரு சிறந்த நாடக நடிகர் என்று சிலருக்குத்தான் ,குறிப்பாக டெல்லி அன்பர்களுக்குத்தான் தெரியும்.இந்த முன்னுரை எழுதும் அன்பர் இதை அறிந்தார்.அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு  சென்னையில் குருஜியை சந்தித்தபோது ,தைரியமாக  இது பற்றி கேட்டார். அப்போது குருஜி புன்முறுவலுடன் ஆமோதித்தது இன்றும் கண்ணில் நிற்கிறது.

இன்று அருளாளர் ஐயப்பன் அதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப் படங்களோடு U tube  வடிவில் அளித்துள்ளார்கள்.பின்னணி இசையில்.குருஜியின் அருமையான விருத்தமும்    " சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலம் துஞ்சித்திரியாதே " என்ற அருள் ஆணையும் அமைந்தது பெருமானின் அருளே குருஜி ஒரே ஒரு முறை அப்பர் சுவாமிகளாக நாடகத்தில் நடித்துள்ளார் என்ற அரிய செய்தியையும் காணலாம்.

அருளாளர் ஐயப்பனின் பகிர்வை அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியும்,பெருமையும் அடைகிறோம்.

ஐயப்பனின் பகிர்வு கீழே 


முருகா சரணம்
அன்பர்களே
நமது குருஜி எந்தத் துறையிலும் திறமை மிக்கவராகத் திகழ்ந்தார். இவ்வுண்மை அவருடன் நெருங்கிப் பழகின அனைவருக்கும் நன்கு புரியும்
அவர் நடிப்புத்துறையிலும் சிறந்தவராக விளங்கினார்.
இதோ ஒரு சான்று
அவர் நடித்தது ஒரே ஒரு நாடகமே. அதில் அவர் அப்பர் சுவாமிகளின் பாத்திரமேற்று அற்புதமாக நடித்திருக்கிறார்.
அந்த நாடகத்தின் ஒரு சில காட்சிகள் இதோ இங்கே பாருங்கள்.

இதன் பின்ணயில் 1970 ல் டெல்லியில் நடந்த ஒரு பஜனையில் ஹிந்தோள ராகத்தில் ஒரு வித்தியாசமான குருவந்தனத்தைக் கேளுங்கள். சொற்களைச் இணைபபதில் அவருக்கிணை அவரே என்பதும் இதைக் கேட்டால் விளங்கும்
முருகா சரணம்




குருஜி மற்றொரு "மனமே மயங்காதே" என்ற சமூக நாடகத்திலும் 1960 -களில்  நடித்துள்ளார் என்று டெல்லி அன்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment