Monday 24 March 2014

நெடிய மலை முருகன் கோயில்

இது ஒரு மலைக்கோவில், திருத்தணியிலிருந்து சுமார் 20 கிமி தொலைவில் நகரிக்கு பக்கத்தில் உள்ளது. அருணகிரியார் திருத்தணியையும் நெடியத்தையும் சேர்த்தே பாடியுள்ளார் எனை அடைந்தகுட்டம் எனத் தொடங்கும் திருத்தணி திருப்புகழில். முருகப் பெருமானை "  நிலைபெறும் திருத்தணியில் விளங்கி சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே " என்கிறார். நெடியத்தைத் தரிசித்தப் பிறகே திருத்தணியை தரிசிக்க வேண்டும் என்பது ஒரு நடைமுறை வழக்கம்.

அண்மையில் அருளாளர் ஐயப்பன் அன்பர்களுடன் தரிசனம் செய்ததை அபிஷேக ஆராதனைகளுடன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.விஷேசம். குருஜி மும்பை படிவிழாவில் (26.1.1984 )நெஞ்சுருகி  சீர்பாத வகுப்பை விருத்தமாக சிந்து பைரவியில் பாடியுள்ளதை கேட்டுக்கொண்டே நாமும் தரிசனம் செய்வோம்.

அவர் அனுப்பியுள்ள குருஜியின் மற்றொரு குருஜியின் விருத்தத்தையும் கேட்டு அனுபவிப்போம். அருளாளர் ஐயப்பனுக்கு நன்றி கூறத்தேவையில்லை .அருள் வேண்டுவோம்.

No comments:

Post a Comment