Tuesday 24 July 2012

Editorial dated 24 July 2012


Mumbai,
Dated: 24 July 2012

ஆடி மாதம்

அன்பர்களே , ஆடி அழைக்கும் என்பார்கள் .தமிழ் நாட்டில் எங்கும்  ஆடி பூரம் ,தேவி பூஜை போன்ற விழாக்கள்கொண்டாடப்படுகின்றன.கேரளாவில் இது ராமாயண மாதம் . ராமாயண ம்,தேவி பாகவதம்,தேவி மகாத்மியம் ,லலிதசஹஸ்ரநாமம் முதலியன பாராயணம் செய்யப்படுகின்றன
 .
அது போல் நம் அன்பர்களும் பாரதம் முழுவதும் பல வழி பாடுகள் அமைத்து முருகப்பெருமானை  வழிபடுகிறார்கள். குறிப்பாக 15-08-12 அன்று பல பகுதிகளில் ஒரே நேரத்தில் நடத்தி சங்கமிக்கிறார்கள்.பெங்களூர் அன்பர்கள் 501 பாடல்களுடன் வழிபடுவதாக செய்தி கிடைத்துள்ளது.  

நம்முடைய  கீழ்கண்ட  நிகழ்சிகள்  வழக்கம்போல் நடை பெறும்: 
  1. 03 -08 -12 .ஆடி  வெள்ளி லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை ,தொடர்ந்து துர்கா சந்திரகலா ஸ்துதி,அபிராமி அந்தாதி, பதிகம் ,திருப்புகழ் பாடல்களுடன்    
  2. 10-08-12. ஆடி கிருத்திகை  வழிபாடு
  3. 15-08-12    அருணகிரிநாதர்  நினைவு விழா.  வழிபாடு (108 பாடல்களுடன் ) அழைப்பிதழ்கள் main பக்கத்தில் பிரசுரமாகி  உள்ளன.
அன்பர்கள் பெருமளவில் ,நம் குருவின் வேண்டுகோளுக்கு இறங்கி ,முன்னரே வந்து பூஜையில் கலந்து கொண்டு முருகனின் அருளைப்பெற அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்சிகளுக்கு முன்னோடியாக  நம் புனே அன்பர்கள் தமது குரு தாரணி ஐயர் மூலம் 108 திருப்புகழ்  பாடல்களை கற்றதை முன்னிட்டு  Pune Dehu Road  முருகன் ஆலயத்தில்  01-07-12 அன்று 108 பாடல்களுடன் வழிபட்டிருக்கிறார்கள்.கேட்பதற்கே பரமானந்தமாக உள்ளது.இதன் சில புகைப்படங்களை  இணைத்துள்ளோம்.நம் புனே அன்பர்கள் தவறாமல் நம்முடைய வழி பாடுகள்,படி விழா நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார்கள் .அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்றுபுனேயில்  நடைபெறும்  வழிபாட்டில் நாமும்  அவர்களுடன்  இணைவதையும் அன்புடன் நினைவு கூர்கிறோம் .


















கந்தர் அனுபூதியில்  "தன்னம் தனி நின்று "பகுதியில் "தனிமைப்பெருநிலையில் நான் பெற்ற பேரின்பத்தை பிறருக்கு விளக்கிச்சொல்லவும் முடியுமோ" என்கிறார் .அதுபோல் நாமும் ஒவ்வொரு வழி பாட்டிலும் பெற்ற பேரின்பத்த்தை  யாருக்கும் சொல்லமுடியாது.பிறருக்கும் வருங்கால சந்ந்ததியாருக்கும் உணர வைக்கும்  சாதனம் vedio/ஆடியோ தான் .எனவே நம் பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.எங்களுடைய  பேராசை என்று கூட சொல்லலாம் .For this noble cause, we expect the Anbargal ,who are involved in audio/vedio expertise to come forward to carryout this project for the benifit all Anbars and future generation.They can also offer suggestion towards ways and means to achieve.

மீண்டும் சந்திப்போம் .  
ஓம் முருகா!



All the Thiruppugazh Anbargal may kindly forward their  constructive suggestions / comments to arunagiriyar@gmail.com  



********

No comments:

Post a Comment