Wednesday 28 December 2016

படிவிழா வைபவங்கள்


                                                        படிவிழா வைபவங்கள்


திருத்தணியில் 1917 ஜனவரி முதல் தேதி அன்றே படி விழா  தொடங்கி வைத்தவர் சச்சிதானந்த வள்ளிமலை சுவாமிகள்.அது சுவாரஸ்யமான ஒரு தொடக்கம்.அந்த கால கட்டத்தில்,நம்மவர்கள் நம்மை ஆண்ட ஆங்கிலேய பிரபுக்களை தங்கள் சுயநலம் கருதி அந்த புத்தாண்டு தினத்தில் "துரையே " என வணங்கி பல பரிசுகளை வழங்கி வந்தனர்.

துரைகளுக்கு துரையாக நம்மை வாழ வைக்கும் நம் பெருமானை வணங்காமல் ,அவர்களை போற்றிய மக்களைக்கண்டு மனம் வெதும்பி,அவர்களை திசை திருப்ப "திருத்தணி திருப்புகழ் திருவிழா " என்ற அமைப்பை ஏற்படுத்தி படி விழா தொடங்கினார்.

ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களை களையவும் ,புத்தாண்டு வளமாக அமையவும் பெருமானின் கருணை வேண்டியும் டிசம்பர் 31 இரவு முதல் மறுநாள் புத்தாண்டு காலை வரை படிவிழா இன்று வரை தொடருகிறது.

"துரை" என்ற சொல் சமீப காலத்தில் தான் தமிழில் புகுந்துள்ளது என்று பெரும்பாலானோர் கருத்தில் கொண்டுள்ளனர்.ஆனால், நம் அருணகிரியார்  "துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடது தருவாயே."என்று  "வஞ்சம் கொண்டும்" என்ற திருசெந்தூர் பாடலில் வேண்டுகிறார்.திருத்தணி முருகன் துரை முருகன்  என்றே அழைக்கப்படுகிறார்.

நம் படி விழாக்கள் ஜனவரி மாதத்தில் நாட்டின் பல பாகங்களில் முருகன் திருத்தலங்களில் நடந்து வருகின்றன.குருஜி தொடர்ந்து மும்பையில் ஜனவரி 26ம்நாள் அன்பர்களை படி ஏற்றி  சன்னிதானத்தில் திருப்புகழ் பாக்களை சமர்ப்பணம் செய்து அன்பர்களுக்கு அருளாசி வழங்கி வந்தது மும்பை அன்பர்கள் செய்த பாக்கியம்.


வரும் புத்தாண்டு தொடக்கத்தில் நாட்டின் பல பாகங்களில் நடை பெறவுள்ள படிவிழா வைபவங்களை அன்புடன் வெளியிடுகிறோம்
 

                                                                         
                                                                                   பெங்களூரு 


                                                                                                       
                                                                                         சென்னை 
            


மும்பை 


நகர் வாழ் அன்பர்களும் நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.

இந்த சந்தர்ப்பத்தில் ரிஷிகேஷ் சிவானந்த ஆஸ்ரமத்தில் 1983ம் ஆண்டு நடந்த படி விழா வழிபாடு வைபவத்தை அருளாளர் மாலதி ஜெயராமன் U Tube வடிவத்தில் அளித்துள்ளதை  வெளியிடுகிறோம்.




முருகா  சரணம்  

No comments:

Post a Comment