Saturday 19 March 2016

பங்குனி உத்திரம் திருவிழா 2016



                                                                                   பங்குனி உத்திரம் திருவிழா  2016


                                                                          


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வயானை அம்மை நாரத மகரிஷியுடன் 


பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம்.
பால்போலவே வான்மீதிலே...: சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.

பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு :

பக்தியுள்ள கணவர் கிடைக்க: தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள். அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி கூறினர். சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை படைப்பதாக கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். 
இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது; 

தாரகாசுரன் வதத்திற்குப்பின் திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்த நன்னாள்  
காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; 
மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது;
ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; 
இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; 
ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது; 
அர்ச்சுனன் பிறந்தது 
தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதரித்த தினம் 
சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான்.
மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள்
மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.
தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.
சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த நாள் 


மும்பையில் பங்குனி உத்திர திருவிழா செம்பூர் சங்கராலயா வளாகத்தில் 23 .3.2016 புதன் கிழமை பிற்பகல் 4.15 மணி அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி இசை வழிபாடு நடை பெற உள்ளது.அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.

அழைப்பிதழ் கீழே 


     




முருகா சரணம் 









1 comment:

  1. பங்குனி உத்திர நன்னாளின் பலவகைச் சிறப்புக்கள் பரவசப்படுத்துகின்றன !

    ReplyDelete