![](https://scontent-b-cdg.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10891438_789458711141166_7594751472129938589_n.jpg?oh=cfda6320fb73b4924e5096fb6a9a639f&oe=555BD873)
முருகனின் ஆயுதமான வேலின் மகத்துவத்தைப்பற்றி விருத்தம் பகுதியில் கீழ்க்கண்ட சில விளக்கங்களை அறிந்தோம்
செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி
திடர்அடைய நுகரும் வடிவேல்
குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள்
குலையவிடு கொடியவேல்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேல்
அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
அருந்திப் புரந்தவைவேல்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
புங்கவன் செங்கை வேல்
மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
வகைவகையி னிற்சுழலும் வேல்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேல்
முடிவிலா நந்த நல்கும் பதமளித்தெந்த
மூதண்டமும் புகழும் வேல்
தனிநடம் புரி சமர முருகன் அறுமுகன்குகன்
சரவணக் குமரன் வேல்
தன்னைஅன் பொடு பாடி ஆடும ப்ரதாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
கூதாள மலரும் தொடுத்து அணியும் மார்பினன்
கோலத் திருக்கை வேல்
கநகாசலத்தைக் கடைந்து முனை யிட்டுக்
கடுக்கின்ற துங்க நெடுவேல்
மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
வாகைத் திருக்கை வேல்
உடைய கீரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
ஒப்பில் புகழ்பெற்ற வைவேல்
தேவ நந்தனகஜா நந சகோதர குகன்
செம்பொற்றிருக்கை வேல் .
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக்கா வனவும்
நிகழ்கின்ற துங்கநெடுவேல்
சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன்
சண்முகன் தன்கை வேல்
வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல்
உலாவிய நிலாவு கொலைவேல்
விலாழி இனில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைஞன் கை வேல்
வேல் வகுப்பைப்பற்றி .
"வேல் வகுப்பு ஒளஷதம் போன்றது. ஒரு மருந்து நோய்களை தீர்ப்பது போல இந்த வகுப்பு புற நோயை நீக்கும். பிறவிப் பிணியை போக்கும். வேல் ஞானம் ஆதலால் அதைப் படிப்பவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து பேரின்ப வாழ்வைக் கொடுக்கும். முருகன் வேறு வேல் வேறு அல்ல. கந்தக் கடவுள் பவரோக வைத்தியநாதப் பெருமாள் ஆகையினால் வேலாயுதமும் பிறவியை அழிக்கும் பெரிய மருந்து என்பார் தணிகைமணி அவர்கள். மேலும் இவ்வகுப்பு 'ப' - வில் ஆரம்பித்து 'லே' - வில் முடிவதினால், இதை 'பலே' வகுப்பு என்பார் அவர்."
என்ற முன்னுரையுடன் ஆரம்பித்து ,பதம் பிரித்து அருமையாக விளக்கமளிக்கிறார் அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சார்..குரியீட்தை க்ளிக் செய்யவும்.
http://www.kaumaram.com/
இறை தொண்டாக வெளியிட்டுள்ள கௌமாரம் இணைய தளத்துக்கு தலை வணங்குகிறோம
முருகனும் ஒன்றுதான்.வேலும் ஒன்றுதான் .அதனுடன் நாமும் ஒன்றி துதிப்போம்
குருஜியுடன் சேர்ந்து போற்றி துதிப்போம்:
வகுப்பு தொடரும்
முருகா சரணம்!
வகுப்பு தொடரும்
முருகா சரணம்!
No comments:
Post a Comment