புணே தேஹு ரோடு முருகன் பழைய அடியவர் தின வழிபாடு நிறைவு
பெருமானின் கட்டளைப்படி டிசெம்பர் 25ம் நாள் நடைபெறும் வழிபாட்டை "பழைய அடியவர் தினம் " என்று கொண்டாடி அடியவர்களை நினைவில் கொண்டு ,போற்றி பொன்னான புனித தினமாக நிலை நிறுத்தியுள்ளார்கள்.அது மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் கடைபிடிக்க வேண்டும் என்ற மரபையும் வலியுறுத்தியுள்ளார்.அவர்களின் நல்லெண்ணத்தையும்,உணர்வையும் நாம் போற்றி க்கடைபிடிக்க வேண்டியது எல்லா அன்பர்களின் கடமையாகும்.
அடியவர்கள்அதிலும்பழையஅடியவர்கள்ஆழ்வார்கள்,நாயன்மார்கள்,அருணகிரியார்,வள்ளிமலை ஸ்வாமிகள் பாம்பன் ஸ்வாமிகள்,நம் குருஜி போன்றவர்கள்தான்.நாம் அறிந்தது சிலர் .அறியாதது பலர்.
அருணகிரியார் ஒரு பாடலில் எப்படி போற்றுகிறார்? பெருமானை" நீ மட்டும் காட்சி அளித்தால் போதாது.பழைய அடியவர்களுடன் சேர்ந்து காட்சி தர வேண்டுகிறார். பாடல் பழய அடியவ ருடனிமை யவர்கண மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும்
பொருள்
"பழமையான அடியார்களுடன்,தேவர் கூட்டம் இருபுறமும்மிகுந்த தமிழ்ப் பாடல்களையும்வேதகீதங்களையும்பாடிவணங்க,முன்னொருமுறைதிருவண்ணாமலையில் என்முன் வந்ததுபோலஇன்னொரு முறை வந்தருளல் வேண்டும்." மற்றொரு பாடலில் "தூய்மை வாய்ந்தஅழகிய சுத்தமான உன் அடியார்களின் திருவடி சேரும் பாக்கியத்தைப்பெற உனது திருவருளைத் தர வேண்டுகிறேன்.""
பாடல் தூசின் பொற்சர மோடுகு லாயுல கேழும் பிற்பட வோடிடு மூடனை தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய் பொருள்
"நல்ல ஆடைகளாலும், தங்கச்சங்கிலிகளாலும் அலங்கரித்து மகிழ்ந்து,ஏழு உலகங்களும்எனக்குப் பிற்பட்டதாக எண்ணி முந்தி ஓடிடும் மூடனாகிய நான்,தூய்மை வாய்ந்தஅழகிய சுத்தமான உன் அடியார்களின் திருவடி சேரும் பாக்கியத்தைப்பெற உனது திருவருளைத் தர வேண்டுகிறேன்."
நம் அமைப்பின் பெயரே "திருப்புகழ் அன்பர்கள் " உயிரோட்டமுள்ள வாழையடிவாழையாகவந்ததொருதிருக்கூட்டம்.எல்லோரும் அடியார்கள் ,தொண்டர்கள்.நம் அமைப்பை உருவாக்கியவர்கள் இறை தூதர்கள்.நம்மை சத்சங்கத்தில் ஈடு படுத்தியவர்கள்.இறை உணர்வை ஊட்டியவர்கள்.செம்மைப் படுத்தியவர்கள்.நம்மை எல்லா வகையிலும் உயர்நிலையில்நிறுத்தியவர்கள்.மரணபயத்தைஒழித்தவர்கள்.மரணமில்லா பெருவாழ்வு தத்துவத்தை உணர்வித்தவர்கள்.உடல் உபாதைகளால் மனம் தளராது இறைபணி ஆற்ற நம்மை இயக்கியவர்கள் .அவர்களை என்றென்றும் நினைவில் கொண்டும் போற்றியும் வணங்கியும் சரணடைவது நம் கடமை. புணே வழிபாட்டில் அன்பர் ,ஆலய அறக்கட்டளையாளர் சுந்தரராஜன் கடந்த 11 ஆண்டுகளாக மும்பை அன்பர்கள் பல இன்னல்களுடன் வழிபாட்டில் கலந்து கொண்டு வருவதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிப்பிட்டார்.அது அவர்களுக்காக வேண்டும் பிரார்த்தனையாகவே கருதுகிறோம்..அன்பார் ஜவகர் ,இன்றும் நம்மை ஆட்டுவிக்கும் அமரர்களான அன்பர்களை நினைவு கூர்ந்தார். அவர்களில் மும்பை ராதாகிருஷ்ணன் அவர்கள் 2012ம் ஆண்டு வழிபாட்டில் தேஹுரோடு முருகன் மீது சூட்டியுள்ள பாமாலையை சமர்ப் பித்தத்தை யம் நினைவூட்டினார். அன்பர்களின் நினைவுக்காக .கவிதை நயத்தோடு காப்பு,குருவணக்கம்,நூல்,பலன் என்ற மரபோடு சம்பிரதாயமாக அமைந்துள்ள அந்த பாமாலையை அளிக்கிறோம்.
தலம் பலவும் சென்றுநான் சேவித்தேன் -ஆறுபடைத் தலம் பலவும் கண்குளிரக் கண்டுகொண்டேன் என்றன்மனம் பலம்பெறவே கைதொழுது நிற்கின்றேன் நற்றேவர் நலம் பரவும் சந்நிதியே தேஹுரோடின் நாயகனே // 3.
பார் காக்கும் காவலனின் பன்னிருகைக் கோமகனின் சீர்போற்றி நல்லடியார் பாடிமகிழ் வேளையிலே கார்போல் கருணைமழை பொழிவித்து எங்கள் மனத் தேர்மேல் வலம் வருவாய் தேஹுரோடின் நாயகனே // 4.
புவிநாடி வலம்வரு நல புள்ளிமயில் வாகனனைக் கவிபாடிச் சிறு துதியால் வணங்குகிறேன் பார்புகழும் தவஞானியார் பலரும் தொழுதேத்தும் பெருங்கோவே சிவஞானம் தெளிவிப்பாய் தேஹுரோடின் நாயகனே // 5.
ஆலயத்தின் சரித்திரத்தில் இடம் பெற்ற அந்த பாமாலையை ஆலய கல்வெட்டில் பொறிக்க வேண்டும்.
அல்லது வண்ண மயத்த்தில் பெரிய படமாக ஆலய வளாகத்தில் அன்பர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
நிர்வாகிகள் செயலில் இறங்குவார்கள் என்று நம்புவோமாக.அதுதான் பழைய அடியவர் அமரர் ராதாகிருஷ்ணனுக்கு செலுத்தும் கௌரவ மாகும்.
நடந்த வழிபாட்டின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறார் ஜானகி ரமணன் மாமி
" தெகு ரோடு குன்றக் குமரன் கோயிலில் இன்று , மும்பை,புனே திருப்புகழ் அன்பர்கள் இணைந்து கொண்டாடிய , "பழைய அடியவர் தினம்" தந்ததோ புத்தம் புது உணர்வு. அருணகிரியாலிருந்து , குருஜி ராகவன், வரையிலான அடியவர் நினைவுகளை அள்ளிக் கொண்டு வந்து, பக்தியால் பன்னீர் தெளித்த தினம். அவர்கள் காட்டிய வழிகள் அல்லவா நம் விழிகளுக்குத் துணை ! அவர்கள் ஏற்றிய தீபங்கள் அல்லவா ஆன்மீகத் தேடலுக்குத் துணை! சந்தம் எனும் தேனூற்று .ராகம் எனும் தென்றல் . பாவம் (Bhavam) என்னும் கனிவு - எனத் திருப்புகழின் சாரம், பொங்கி வந்ததாலே, நேரம் ஓடியது தெரியவில்லை.. பாடியது மட்டும் தான் நெஞ்சை நிறைத்தது.வடிவழகனோ , தேவியர் இருவருடன் விழி நிறைத்து நின்றான். மொழி மறந்து நின்றோம். அடியார்கள் மூலமாய் அவன் அனுப்பி வைத்த அருள் கொடை அல்லவா இது! விடை பெற மனமின்றி வந்தோம். இனிய நாள் தந்த கந்தா சரணம். அனைவருக்கும் நன்றி . ஜானகி ரமணன்." சில புகைப்பட தொகுப்புக்கள்
பெருமானின் பன்னிரண்டு திருக்கரங்களைப் பற்றி ஒரு ஸ்லோகம்.
விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பசுண்டான்த்விஷத்காலதண்டான் |
ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண செளண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் ||
பாஹு-ன்னா கைகள், முருகப் பெருமானுக்கு நல்ல நீளமான பன்னிரு கைகள். அதைப் பத்தி இந்த ஸ்லோகம்.
விதெளக்லுப்த தண்டான் –
விதி-ன்னா ப்ரம்மா,
விதெள-ன்னா ப்ரம்மாவிடத்தில்,
தண்டம்-ன்னா தண்டனை,
க்லுப்த தண்டான்-னா தண்டனை கொடுத்தார். முருகப் பெருமான் தன் கைகளால் அவர் தலையில குட்டினார், அவர் ப்ரணவத்துக்கு அர்த்தம் தெரியாது-ன்னு சொன்ன போது. அந்தக் கைகள்-னு சொல்றார். ப்ரம்மாவுக்கு தண்டனை கொடுத்த கைகள்.
‘ஸ்வலீலாத்ருதாண்டான்’
அண்டங்களை எல்லாம் விளையாட்டாக ‘ஸ்வலீலா’ வெறும் விளையாட்டாக அண்டங்களை எல்லாம் தாங்கி கொண்டு இருக்கிறார்.
வள்ளி கல்யாணம் நிறைவு நிறைவு என்று பகர்வதில் மனம் ஒப்பவில்லை.அன்பர்கள் மனத்தில் "நிறைவு " என்ற பொருளில் தான் நம் நினைவுகளை வெளிப்படுத்துகிறோம். வழிபாடுகளில் அன்பர்கள் தங்கள் நிலை மறந்து பெருமான் சன்னதியில் பய பக்தியோடு தவயோக நிஷ்டையில் அமர்வது கண் கூடு. ஆனால்பெருமான்வள்ளிகல்யாணவைபவத்தில்அன்பர்கள்பெருமானையும்,வள்ளி பிராட்டியையும் நம்மில் ஒருவராக க் கண்டார்கள்.பயம் மற்ற சப்ரதாயங்கள் ஒன்றும் கிடையாது.நெறிமுறைகள் தளர்ந்த நிலையில் பெருமானையும்பிராட்டியையும்தங்கள்குழைந்தையாகவும்,சிறுவர்களாகவும் மணமக்களாகவும் உரிமையோடு சகஜ நிலையில் கண்டார்கள் கொஞ்சினார்கள்.பாடினார்கள்.கூத்தாடினார்கள் .கும்மியடித்தார்கள்.கோலாட்டம் ஆடினார்கள் போற்றினார்கள். வாழ்த்தினார்கள்.பரவசமுற்றார்கள்.ஜீவாத்மா,பரமாத்மா தத்துவத்தின் படிஇணைந்தார்கள்.சரணடைந்தார்கள்.ஆனந்தம்,பேரானந்தம்,பரமானந்தம்,நித்தியானந்தம்,சச்சிதானந்தம் நிலையை அடைந்து திளைத்தார்கள். கலந்து கொண்ட அன்பர்கள் பாக்கியசாலிகள்.கலந்துகொள்ள இயலாதவர்கள் அதைவிட பாக்கியசாலிகள் என்ற வகையில் அருள் பிசாதமாக விழா அமைப்பாளர்கள் வைபவத்தை நம் கண்கள் குளிர UTUBE வடிவத்தில் 5 பாகங்களாக நம் இல்லங்களுக்கு பெருமான், பிராட்டியை எழுந்தருளச் செய் துள்ளார்கள். வள்ளிகல்யாணம் ஒருநாள் மட்டும்தானா? நம் இல்லங்களிலில் என்றென்றும் கல்யாணம்தான்.மீண்டும் மீண்டும் காண்போம். அனுபவிப்போம்..
அன்பர் ஐயப்பன் குதூகலத்துடன் நன்றி நவில்கிறார்.நமக்காக பிரார்த்தனை செயகிறார்.
"செந்திலாதிபதி ஸ்ரீ சுவாமிநாதனாய் தமது திருக்கல்யாண வைபவத்தை வரலாறு காணாத வகையில் சுவாமி மலையில் நடத்திக் காட்டி அங்கு வந்திருந்த ஒவ்வொரு அன்பர்கள் மனதிலும் நிரந்தர பேரானந்தத்தை அருளினான் . அதை எண்ணும் போதெல்லாம் அடியேன் மனம் பேரானந்தம் அடைகிறது. இவ்வளவு பெரிய வைபவம் நடக்க எத்தனை பேர் உதவினார்கள்? எவ்வளவு அழகாக புஷ்ப அலங்காரம் செய்திருந்தார் அந்தக் கண்ணன் ? . அன்பர்கள் குடும்ப சகிதமாக உள்ளூர் , வெளியூர் , கனடா , அமேரிக்கா , லண்டன் போன்ற நாடுகளில் இருந்து வந்து பேரானந்தம் அடைந்தார்களே இவர்களுக்கெல்லாம் எவ்வாறு நன்றி சொல்வது?. இந்த திருக்கல்யாணம் இவ்வளவு சீரும் சிறப்புமாக நடை பெற பொருளுதவி செய்து அது செலவை விட ரூ 28386/- மிஞ்சும் அளவிற்கு கொண்டு வந்த ( விபரம் நமது கூகிள் ட்ரைவ் சீட்டில் உள்ளது ) அவ்வளவு பேருக்கும் எப்படி நன்றி சொல்ல இயலும் ? . இதற்கு ஒரே வழி இது தான் . இப்படி பிரார்த்தனை செய்வோம். அனைவருக்காகவும் , நமது குருஜியின் உபதேசத்தின் படி , நிறைய நிறைய திருப்புகழ் பாடுவோம் ஏகசித்த மனத்தோடு.
கலியாண சுபுத்திரனாக குறமாது தனக்கு விநோதா !!!!! கவினாரு புயத்தில் உலாவி களிகூரும் உன்னைத் துணை தேடும் எல்லா அன்பர்களுக்கும் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு அருளி , அவர்கள் நினைத்த காரியங்களை அனுகூலமே ஆக்கி , அவர்களை சுகப்படவே வை ஐயா !! அது உனக்கு கனமாகும் ஐயனே முருகா !!!!! அருளாசிகள் நல்கி உதவி புரிய வேணும் ஐயனே !!!!!! முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்" குரு மணி சார் தம் உரையில் "அன்பர்கள் எல்லோரும் உணவு அருந்திய பின் தான் நாங்கள் உணவு அருந்துவோம் என்று கூறிய போது நம் நெஞ்சம் நெகிழ்ந்தது.கண்களில் நீர் கசிந்தது.அவர்கள் நமக்காக பிரார்த்தனை செய்யும் போது மனம் உருகும் நாம் அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்ய வேண்டியது நம் தலையாய கடமை என்று உணர்வோம்.மீண்டும் மீண்டும் பிராத்தனை செய்வோம்.மணிசார் கூறியதுபோல குருஜியின் வழி நடந்தால் மட்டும் போதுமானது.மனோலயம் தானே வரும். அடுத்து திருப்பரங்குன்றம் வள்ளி கல்யாண வைபவத்துக்கு நம்மை தயார் படுத்துவோம். முருகா சரணம்
புணே யில் ( தேஹு ரோடு) திருப்புகழ் இசை வழிபாடு நாள் 25.12.2017 திங்கள்
ஆண்டு தோறும் டிசம்பர் 25ம் நாள் புனே தேஹு ரோடு முருகன் ஆலயத்தில் நம் வழிபாடு நடைபெறுவதை அன்பர்கள் அறிவார்கள். இந்த ஆண்டு 25.12.2017 திங்கள் கிழமை காலை 9.15 மணி அளவில் நடைபெற உள்ளது..மும்பை,புனே அன்பர்கள் பெருமளவில் முன்னதாகவே வந்து அபிஷேகம் அர்ச்சனை பூஜைகளில் கலந்து கொண்டுமுருகனின்திருவருளைஅடைய வேண்டுகிறோம்..அழைப்பிதழ் இனைத்துள்ளோம் .
உன்னை என்றும் போற்றிப் புகழ்பவர்கள் யார் என்று கேட்டால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிகின்ற மும்மூர்த்திகளான பிரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள்.
அந்த அபிராமியை வணங்குபவர்கள், எப்படிப்பட்டவர்கள்? ஒருவர், இந்த உலகைப் படைக்கிறார். ஒருவர், இந்த உலகு முழுக்க வாழக் காக்கும் தொழில் புரிகிறார். இன்னொரொவர், அனைத்தையும் அழிக்கும் சம்ஹார மூர்த்தியாக விளங்குகிறார். அந்த முத்தொழில் புரிவோரையும் இந்த உலகு முழுக்கவே ஏத்திப் பாராட்டுகிறது. ஆயினும், இந்த முதல் மூவரும்கூட, அபிராமியைத் தெய்வமெனப் போற்றுகிறார்கள்.
இங்கே, "கமலாக்ஷ நிஷேவிதா" ,
" ப்ரஹ்ம உபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸமஸ்துத வைபவா "
" ஹரி ப்ரஹ்மேந்த்ர சேவிதா"
"மஹா பைரவ பூஜிதா"
என்ற லலிதா சஹஸ்ர நாமங்களை நினைவு படுத்துகிறார் அபிராமி பட்டர்.
மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே!
மணம் நாறும் நின் தாளிணைக்கு
முத்தேவர்கள் மட்டுமன்றி, மற்றெல்லாரும் வந்து, வணங்கி, வணங்கி, அந்த அபிராமியின் பாத கமலங்களும் கூட மணம் வீசுகின்றன. வேத மாதா முதல், முத்தேவர்கள் வரை அனைவரும் அந்த அணங்கின் பாத கமலங்களில் விழுந்து வணங்குவதனால், அவர்கள் தலையில் சூடிய மலர்கள், அம்பிகையின் பாத கமலங்களில் விழுகின்றன. அந்த பாத கமலங்களும், அந்த அந்த மலர்களின் வாசத்துடன் திகழ்கின்றன.
மும்மூர்த்திகளாலும் தொழப் படுபவள் நீ.. அவர்கள் உன்னை என்ன சொல்லித் துதிப்பார்கள்?? நாமறியோம்... தேவாதிதேவர்களெல்லாம் உன்னை என்ன சொல்லித்துதிப்பார்கள்?? நாமறியோம்.. எம் சிற்றறிவுக்கெட்டிய சிறு சொற்களால்,, என்நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு; நகையுடைத்தே
கீழான சொற்களால் உன்னைத் துதிக்கிறேன்... அதையும் நீ ஏற்றுக் கொள்கிறாயே... இதென்ன நகைச்சுவை... ? என்கிறார். இவ்விடத்து அன்னை அபிராமி எளியோர் சொல்லையும் தம் கவனத்தில் ஏற்கும் கருணையுடைவள் என்ற அவளது பெருமையும், அன்னையைத் துதி செய்ய மிகச்சிறந்த பாடல்களைப் பாடிவிட்டு இதெல்லாம் மிகவும் கீழான சொற்கள் என்று கூறும் அபிராமிப் பட்டரின் எளிமையும் தன்னடக்கமும் இப்பாடலின் மூலம் வெளிப்படுகின்றன..அபிராமிப் பட்டரின் பாடல்களையே அவர் அவ்வாறு சொல்லும்போது, அறியாது விளக்கமளிக்கும் இவ்வடியேனின் சொற்களெல்லாம் எவ்விடம்தான் போகும்?
இவ்விடத்து தனது நாவில் தங்குகின்ற கீழான வார்த்தைகள் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது அபிராமி அந்தாதியை... நமக்கெல்லாம்
அபிராமி அந்தாதியே வேதம்.. அன்னையின் புகழ்பாடும் சிறந்த பாடல் நூல். ஆனால் அதை எழுதிய அபிராமிப் பட்டரோ எளியவன் என் நாவில் இருந்து புறப்பட்ட கீழான வார்த்தைகள் என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்.. ஆனால் அதையும் நீ ஏற்றுக் கொண்டாயே... இது சிறந்த நகைச்சுவை என்கிறார். இப்படிப்பட்ட பாத கமலங்கள், என்னுடைய இனிமை இல்லாத பிதற்றல் மொழிகளையும் கூட ஏற்று விளங்குவது வியப்பான ஒன்றுதானே! இப்படிப்பட்ட சௌலப்யத்துடன் விளங்குகிறாளே இந்த அபிராமி பிராட்டி என்று வியக்கிறார் பட்டர்.
முதல் மூவரும் போற்றும் திருவடிகளுக்கு கீழான எனது பாடல்களும் அணிகலன்களாகப் போனது தான் என்ன வியப்பு? அன்னையின் எளிவந்த தன்மை தான் என்னே? என்று வியக்கிறார் பட்டர்.
பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.