சிக்கல் திருத்தலத்தில் வேல் வாங்கும் வைபவம்
வழக்கம் போல் சிக்கல் திருத்தலத்தில் நேற்று இரவு முருகப் பெருமான் அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் வைபவம் மிக அற்புதமாக நடை பெற்றது.வேல்வாங்கியபின் உற்சவ மூர்த்தி பெருமானுக்கு திருமேனி
யெங்கும் வியர்வை பொழிந்த அற்புதம் நிகழ்ந்தது.
அது பற்றி " தின மலர் "'செய்திப் பத்திரிக்கையில் இன்று வெளியாகி யுள்ள செய்தி குறிப்பு கீழே
"திருச்செந்தூரில்இன்றுசூரணைசம்ஹாரம்செய்வதற்காக திருத்தேரி
லிருந்து முருகப் பெருமான் கோயிலுக்குள் வந்து அன்னை வேல் நெடுங்கண்ணி யிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது.
அன்னையிடம் சக்தி வேல் பெற்று தன் சந்நிதியில் அமர்ந்த உற்சவரான முருகப்பெருமானுக்கு மனிதர்களுக்கு வியர்ப்பது போன்று திருமேனி எங்கும் வியர்வை பொழியும் மஹிமை நடந்தது.
முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கி கொள்ள இயலாமல் சன்னதி சுவர்களிலும் வியர்வை துளிகள் அரும்பியிருந்தது.பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது.."..........
அந்த அற்புத காட்சிகள்
வேல் விருத்தம் " வெங்காள கண்டர் கைச் சூலமுந் '
முருகா சரணம்
No comments:
Post a Comment